கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

செல்போன் மூலம் துப்பு துலங்கியது; நால்வரின் படங்களும் வெளியீடு

20090302.jpgபாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் மொத்தம் 12 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கு முன்பு தீவிரவாதிகள் பயன்படுத்திய செல்போன் எண் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதைவைத்து துப்பு துலக்கி இருக்கிறார்கள் பாகிஸ்தான் பொலிஸார்.

அந்த செல்போன் ரஹீம் யார்கான் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் பிடித்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் தவிர மேலும் 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் குவெட்டா நகரைச் சேர்ந்தவர்கள். 3 பேர் லாகூரையும், 2 பேர் கராச்சியையும் சேர்ந்தவர்கள்.

இது பற்றி மூத்த பொலிஸ் அதிகாரி ஹபிபூர் ரகுமான் கூறும் போது, “நாங்கள் லாகூரிலும் பக்கத்து மாவட்டங்களிலும் சோதனை நடத்தி சிலரை கைது செய்து இருக்கிறோம். அவர்களைப் பற்றிய விவரங்களை இப்போது வெளியே சொல்ல முடியாது. ஆனால் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன” என்றார். லாகூரில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில் பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அங்கு இரத்தக்கறை படிந்த ஆடைகள் கிடைத்தன. இது தீவிரவாதிகள் ஆடை என்று கருதுகின்றனர்.

எனவே இந்த தாக்குதலில் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மாணவர்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் முடிந்த பிறகு தீவிரவாதிகள் இங்கு சிறிய நேரம் தங்கியிருந்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒருவர் கமராவில் பதிவு செய்து இருந்தார். இந்த படம் ஏற்கனவே வெளியானது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கமராவில் இந்த காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் துப்பாக்கியுடனும் சாவகாசமாக நடந்து வருவதும், தாக்குதல் நடத்துவதும் தெளிவாக பதிவாகி இருக்கிறது.

தாக்குதல் முடிந்த பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்கின்றனர். அதுவும் கேமராவில் பதிவாகி உள்ளது. 12 தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியதாக கருதப்பட்டது. இதை கேமராவில் பதிவாகி இருக்கும் படங்களை பார்க்கும் போது 14 தீவிரவாதிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

அவைக்காற்றுக் கழகத்தின் மரணத்துள் வாழ்வு ஒரு அலசல் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Balendra_Kநாடகம் : மரணத்துள் வாழ்வு
நெறியாள்கை : க பாலேந்திரா
நடிப்பு: மனோகரன் மனுவேற்பிள்ளை, க பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா
பிரிதியாக்கம் : சி சிவசேகரம் மனோகரன் மறுவேற்பிள்ளை

இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீதியோரத்தில் ஸ்ரீலங்கா படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களில் ஒருவராக இருந்து பின்னர் விடுதலையாகி லண்டன் வந்து வழமையான குடும்ப சக்கரத்தில் ஈடுபடுகிறார் மாலினி. மாலினியின் கணவர் உலகமறிந்த ஒரு மனித உரிமைவாத சட்டத்தரணி (தமிழ் சட்டத்தரணி).

கொடுமையான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் பலியாகி அந்த மனவடுக்களுடன் மனஉளைச்சலுடன் துன்பப்படும் மாலினி நாளடைவில் ஒரு உணர்வற்ற நடைபிண வாழ்க்கையை முன்னெடுக்கிறாள். மாலினியின் நிலமை இப்படி பரிதாபகரமாக இருக்க, அவரின் கணவர் ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முனையும் ஒரு சர்வதேச சட்ட நிபுணர்கள் குழுவின் முக்கிய சட்டத்தரணியாக சர்வதேச நீதி உலகில் பவனிவருகிறார். வாகனம் பழுதுபட்டு வீதியோரத்தில் நிற்க தமிழ் சட்டத்தரணிக்கு எதேட்சையாக உதவி செய்கிறார் ஒரு தமிழ் டொக்டர் ராஜரட்ணம்.

இந்த டொக்டர் ராஜரட்ணம் தான் கதையின் கிளைமாக்ஸ்…….. இவர் தான் சிங்கள இராணுவத்தினரால் மாலினி பாலியல் வன்செயலுக்கு உட்படுவதற்கு  உடந்தையாக இருந்தவர். அத்துடன் மாலினியை வன்முறைக்கும் உட்படுத்தியவர். மாலினியின் கணவரின் கார் பழுதுபட உதவிக்கு வந்த இந்த டொக்டர் ராஜரட்ணம் சட்டத்தரணியுடன் சேர்ந்து தண்ணியடிக்க வீட்டுக்கு வந்து மாலினியிடம் அகப்பட்டுக் கொள்கிறார். மாலினியின் அடிமனதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வேதனைகள் இங்கிலாந்தில் கடற்கரையோரத்தில் உள்ள வீட்டில் துப்பாக்கி சண்டைகளாக வெடிக்கின்றன. ஆப்பிழுத்த குரங்கின் கதை போல வீட்டினுள் மாட்டிக் கொள்கிறார் டொக்டர் ராஜரட்ணம்.

உலக மனித உரிமை சட்டவாதியின் மனைவி வீட்டினுள் துப்பாக்கியை ஒழித்து வைத்திருந்து அட்டகாசம் பண்ணும் சம்பவங்களும், தலைவிரி கோலமாக துப்பாக்கியுடன் திரியும் மனைவியுடன் சமரசம் செய்யும் உலகம் தெரிந்த தமிழ் சட்டவாதியும், ஸ்ரீலங்கா இராணுவத்தில் வைத்தியராக இணைந்திருந்து தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் தமிழ் வைத்தியரும், வீதியில் உதவி செய்ய வந்து மாட்டிக் கொள்ளும் டொக்டர் ராஜரட்ணமும்………… இங்கிலாந்து வீட்டில் இடம்பெறும் இச்சம்பவங்கள் யதார்த்தத்திற்கு முற்றும் விலகி நிற்கின்றன.

ஓர் நியாயமான யதார்த்தமான கருவை யதார்த்தமற்ற சம்பவங்கள் நியாயப்படுத்த தவறியதால் கரு அடிபட்டுப் போனது போன்ற உணர்வு தென்படுகின்றது.

ஒலி, ஒளி, நடிப்பு வழமைபோல் உயர்தரத்தில் இருந்தாலும் இப்படைப்பை கதைச் சூழ்நிலைகளும் சம்பவங்களும் நியாயப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தக் காரணத்தால் க பாலேந்திராவின் ஏனைய நாடகங்களில் இருந்த தாக்கம் மரணத்தில் வாழ்வு நாடகத்தில் இருக்கவில்லை என்றே கூறவேண்டும்.

தண்ணி அடித்து நியாயம் பேசும் நடுத்தர வயது லண்டன் தமிழ் வைத்தியர், மனைவியை சமாதானப்படுத்துவதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் தமிழ் சட்டத்தரணி…………… லண்டனில் உள்ள சகஜ நிலமையை மனக்கண் முன் கொண்டு வருகிறது. மாலினியாக நடித்த ஆனந்தராணியின் நடிப்பு தரமாக இருந்தாலும் அந்த திறமையை பாத்திரம், சம்பவங்கள் நியாயப்படுத்தவில்லை.

ஓர் ஆழமான அரசியல் நியாயத்தை கூற முற்பட்ட இந்த படைப்பு யதார்த்தமற்ற கற்பனைகளால் மூழ்கடிக்கப்பட்டதைப் போன்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது. 

இலங்கை அணிமீதான தாக்குதல் வெட்கக் கேடானது : இம்ரான்கான்

imran-khan.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து தான் மிகுந்த கவலையும் வெட்கமும் அடைவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அணிக்குப் பாகிஸ்தானில் வைத்து அளிக்கப்பட்ட பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பல்வேறு தீவிரவாத அச்சுறுத்தல்கள் லாகூரில் இருந்தமையை கருத்திற் கொண்டு இலங்கை அணிக்கான பாதுகாப்பை அரசாங்கம் மேலும் பலப்படுத்தியிருக்கவேண்டும் ” என்றார்.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து 387 சிவிலியன்கள்கப்பல் மூலம் திருமலைக்கு

vanni-injured.gif முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 387 பேர் நேற்றிரவு கிறீன் ஓஷன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சசு அறிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட 57 பேரும், காயமடைந்துள்ள 87 பேரும், இரு கர்ப்பிணிகளும் மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 162 பேருமே இவ்வாறு திருமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 45 ச.கி.மீ. பிரதேசத்தையும் அவதானத்துடன் மீட்க ஆலோசனை – இராணுவத் தளபதி

sarath_fonseka.jpgஇராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் நேற்று வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். விசேட ஹெலி மூலம் வவுனியாவைச் சென்றடைந்த இராணுவத் தளபதியை வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற விசேட கலந்துரையாடலின் போது வன்னியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை இராணுவத் தளபதி கள தளபதிகளிடம் கேட்டறிந்துள்ளார். அதிகூடிய முன்னெச்சரிக்கையுடன் புலிகளிடம் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் மீட்டெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேசமயம், படையினரின் போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக யாழ்-கண்டி ஏ-9 வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும் புலிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எந்தவித தாக்குதல்களையும் நடத்தாத வகையில் அந்த வீதி ஊடாக செல்லும் படையினரின் வாகன தொடரணிக்குத் தேவையான போதிய பாதுகாப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி இந்த விஜயத்தின் போது உத்தரவிட்டுள்ளார்.

10ம் தேதி சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரதம்

05-jayalalitha.jpgஇலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும் வருகிற 10ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் பல்வேரு விதங்களில் போராடி வருகின்றன. திமுக மற்றும் பாமக தலைமையிலான பல்வேறு கட்சிகள் தனித் தனியாக அமைப்புகளைத் தொடங்கி பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.

ஆனால் அதிமுக பெரிய அளவில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக போராட்டம் எதையும் நடத்தாமல் அமைதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தக் கோரி பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்

uk-050309.jpgஇலங்கையில் போர்நிறுத்தம் வந்து அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இலண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

லண்டனில் வாழுகின்ற சில நூறு தமிழர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரிட்டனில் தமிழர்கள் வாழும் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினார்கள்.

பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயலணிக்குழுவின் மாநாடு இங்கு நடைபெறும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு அலுவலக்த்துக்கு முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு என்ற அமைப்பு செய்திருந்தது.

தமது தொகுதி மக்களின் உறவினர்கள் இலங்கையில் இன்னல்களை சந்திப்பதனாலேயே, அவர்களுக்காக குரல் கொடுக்க தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனா தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கின்ற இந்த பொதுநலவாய அமைச்சர்கள்மட்ட செயலணிக்குழு உறுப்பினர்கள், பொதுநலவாய நாடுகள் எங்கிலும் மனித உரிமை நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என்று என்பீல்ட் வடக்கு பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் ரையன் கூறினார்.

முல்லைத்தீவிலிருந்து திங்கள் இரவு திருமலைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் விபரம்

vanni-injured.gif
67. ராசலிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 66),
68. எஸ்.பரமேஸ்வரி, முல்லைத்தீவு, செல்வபுரம், (வயது44),
69. ஆர்.தங்கராணி, புதுக்குடியிருப்பு, (வயது 70),
70. எஸ்.தவமலர் முள்ளியவளை, (வயது61),
71. ஏ.முத்தையா, மாத்தளன், (வயது63),
72. எஸ்.கனகசபாபதி, யாழ்ப்பாணம், அளவெட்டி (வயது75),
73. சுஜா, முல்லைத்தீவு, பொக்கணை (வயது 12),
74. ரி.சிவபாக்கியம், முல்லைத்தீவு, பொக்கணை, (வயது57),
75. எஸ்.சிதம்பரம், கருணை நிலையம், (வயது52),
76. எஸ்.ருக்மணி, வட்டக்கச்சி, (வயது 46),
77. எம்.ராசகுகன், மாதலன், (வயது 56),
78. எஸ்.ராமு.முல்லைத்தீவு, வவுனிக்குளம், (வயது64),
79. வி.பேரின்பராணி, கிளிநொச்சி, உதயநகர், (வயது30),
80. விஜக்ஷா ராகுலன், மாதலன், (வயது03),
81. பிதுஷண, யாழ்ப்பாணம், நல்லூர், (வயது02),
82. எஸ்.ரமேஸ்குமார், யாழ்ப்பாணம், நல்லூர், (வயது38),
83. பி.நடராசா, இலுப்பைக்கடவை, (வயது85),
84. கலைவாணி, யாழ்ப்பாணம், (வயது24),
85. யதுசனன், யாழ்ப்பாணம், (வயது 7 1/2),
86. எஸ்.சீதாலட்சுமி, மாதலன், (வயது70),
87. ஆர்.சோபனா, அல்வாய் கிழக்கு, (வயது7),
88. ஆர்.கலைவாணி, அல்வாய் கிழக்கு (வயது32),
89. வனிதாதேவி, மாதலன், (வயது61),
90. விஜயராகவன், மாதலன், (வயது2.5),
91. வி.லட்சுமி, வவுனியா, (வயது60),
92. எம்.யோகதாஸ், பெரியவிளான், இளவாலை (வயது28),
93. கே.கோபாலசிங்கம், முள்ளியவளை (வயது61),
94. நந்தாவதி மெண்டிஸ், கிளிநொச்சி, (வயது44),
95. ஏ.சிவரஞ்சனி, கிளிநொச்சி, (வயது25),
96. இறப்புபெயர் தரப்படவில்லை,
97. கே.பொன்னம்மா, கிளிநொச்சி, (வயது90),
98. என்.சத்தியரூபன், வட்டக்கச்சி, (வயது13),
99. செவிப்புலன், பேசும் சக்தி அற்றவர்,
100. ஏ.ராசலிங்கம், மாங்குளம், (வயது59),
101. மகேஸ்வரி, வல்லிபுரம் (வயது51),
102. சிறிமா, கருணை நிலையம், (வயது84),
103. பௌத்தமணி, (வயது48)
104. அந்தனி, திரேஸா, கருணை நிலையம், (வயது35),
105. குழந்தை, முள்ளியவளை, (வயது74),
106. கிருஷ்ணகுமாரி, கிளிநொச்சி, (வயது15),
107. கே.முத்துவேற்பிள்ளை, திருகோணமலை, கிரியாய், (வயது56),
108. தீபா, கருணை இல்லம், (வயது12),
109. ஜே.தம்மிகா, அம்பலன், பொக்கணை, (வயது04),
110. எஸ்.ஜேயசீலன், அம்பலன், பொக்கணை, (வயது34),
111. ஹம்ஸிகா, அம்பலன், பொக்கணை, (வயது10),
112. ஜே.சுகந்தினி, அம்பலயன், (வயது33),
113. அனுஜா, அம்பலயன், (வயது29),
114. கே.ரோசா, அம்பலன், (வயது06),
115. கே.யோகராணி, அம்பலயன், (வயது54),
116. ஐ.மகேந்திரன், கிளிநொச்சி, (வயது49),
117. எஸ்.சிவசோதி, சிவபுரம், கிராஞ்சி, (வயது4),
118. பி.அருளானந்தம், முள்ளியவளை, (வயது53),
119. பி.கந்தசாமி, நீதிமன்ற வீதி, யாழ்ப்பாணம், (வயது33),
120. ஏ.யோகேஸ்வரன், கிளிநொச்சி, கணேசபுரம், (வயது72),
121. ஜே.ஜில்லிபுஷ்பா, மாதலன், (வயது61),
122. பி.மகேஸ்வரி, கிளிநொச்சி, (வயது58),
123. பி.ராணி, மாதலன், (வயது58),
124. எஸ்.சிவகுமார், யாழ்ப்பாணம், புங்குடுதீவு, (வயது45),
125. சிவகாமுகானி, மன்னார், (வயது76),
126. டி.தவராஜா, விளாங்குளம், வவுனிக்குளம், (வயது60),
127. துலக்ஷன், விளாங்குளம், வவுனிக்குளம், (வயது10),
128. வி.சகுந்தலா, வற்றாப்பழை, (வயது29),
129. வி.மதுஷா, வாற்றாப்பழை, (வயது5),
130. வரதராணி, வற்றாப்பழை, (வயது7),
131. எஸ்.பிரியா, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது2),
132. ஜனுஷா, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது6),
133. எஸ்.இராசமலர், பொக்கணை, (வயது55),
134. எஸ். நேசம்மா, மட்டக்களப்பு, (வயது61),
135. எம்.ஜெயராணி, கிளிநொச்சி, (வயது51),
136. விஜயலட்சுமி, கருணை நிலையம்,
137. வி.துரைராஜசிங்கம், உடையார்தட்டு (வயது60),
138. கமலாம்பிகை, ஆனைக்கோட்டை, (வயது78),
139. எஸ்.மயில்வாகனம், தர்மபுரம்,
140. ஜே.சரஸ்வதி, பண்டங்கண்,
141. ஏ.உதயராணி, பரந்தன் வீதி, புதுக்குடியிருப்பு(வயது34),
142. ஏ.தாரண்யா, புளியங்குளம், (வயது08),
143. ஏ. தாரகன், புளியங்குளம், (வயது10),
144. சுமித்திராதேவி, பண்டாவெளி,(வயது49),
145.கே. ராசம்மா, பண்டங்கண்டி,(வயது 57),
146. தெய்வானை/ கிளி, உருத்திரபுரம்,(வயது66),
147. கே.மதுரம்,யா/தாளையடி, (வயது51),
148. கே.சத்தியவதி,தாளையடி, (வயது 21),
149. என்.ரோபிசியா,காத்தான்குளம்,மன்னார், (வயது 36),
150. தமிழ்வினி, காத்தான்குளம்,மன்னார், (வயது 01),
151. எல்.மகேஸ்வரன், காத்தான்குளம் ,மன்னார், (வயது 35),
152. தாரணி, காத்தான்குளம் ,மன்னார், (வயது03),
153. செவிப்புலனற்றவர் கருணை இல்லம்,
154. பி.கிருபாகரன், யாழ்ப்பாணம், புளியங்கூடல்,
155. ஏ.சொக்கலிங்கம், வவுனிக்குளம், (வயது 73),
156. வள்ளிப்பிள்ளை, முரசுமோட்டை, (வயது75),
157. எஸ்.சின்னம்மா,பேராளை, பளை, (வயது69).

விடுதலை சிறுத்தைகள் தொண்டர் தீக்குளித்து சாவு

srithar.jpgசென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்து இறந்தார். அவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர் குடும்பச் சண்டை காரணமாக அவர் தீக்குளித்தார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சூளை கே.எம்.கார்டனைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (30). தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழும்பூர் பகுதி அமைப்பாளராகவும் உள்ளார். இவருக்கு லட்சுமி (21) என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். தமிழ் மீது அதிக பற்று கொண்ட இவர் தனது குழந்தைகளுக்கு தமிழ்செல்வன், ஈழச்செல்வன் என பெயரிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த `நாம் தமிழர்’ நடைப் பயணத்தில் பங்கேற்று விட்டு நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டில் இன்னும் சமையல் செய்யவில்லை என்று கூறி லட்சுமி சாப்பாடு வாங்குவதாக கூறிவிட்டு கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதர் வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதற்கிடையில் கடைக்கு சென்ற மனைவி லட்சுமி வீட்டிற்கு திரும்பி வந்தார். கணவன் உடல் தீப்பற்றி எரிவதைப் பார்த்த லட்சுமி கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்து ஸ்ரீதரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து நிருபர்களிடம் கூறும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஸ்ரீதர் எழும்பூர் பகுதி அமைப்பாளராக இருந்து வருகிறார். இன்று பெரம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நாம் தமிழர் நடைபயணத்தில் பங்கேற்ற அவர் சோகமாக காணப்பட்டார். இடையில் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லாத போது ஸ்ரீதர் இலங்கை தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே தீக்குளித்து தற்கொலை முயன்றுள்ளார் என்றார். ஆனால் இதை மறுத்த போலீஸார், மனைவி லட்சுமியுடன் ஏற்பட்ட குடும்பசண்டை காரணமாகத்தான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை வினைத்திறனுடன் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது -பிரிட்டிஷ் பிரதமர்

20090302.jpg
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிரவுண் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், பயங்கரவாதிகளின் பிரச்சினையை பாகிஸ்தான் கையாளவேண்டிய அவசியம் உள்ளதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை வினைத்திறனுடன் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  “இது மனித இருப்புக்கான யுத்தம். நாம் தோற்றால் அது உலகின் தோல்வி. தோல்வி இதில் தெரிவு அல்ல’ என்று வோல் ஸ்ரீட் கேர்னலுக்கு கோல்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தானின் பலம் வாய்ந்த இராணுவத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றால் அவரின் நிலைப்பாடு பலவீனப்படுத்தப்பட்டுவிடுமென்று மேற்குலக இராஜதந்திரிகள் அச்சப்படுகின்றனர். ஏனெனில், பாகிஸ்தான் இராணுவமும் ஐ.எஸ்.ஐ. யும் லஷ்கர் இ தொய்பா மற்றும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர் என்று “லண்டன் டைம்ஸ்’ பத்திரிகை கூறுகிறது.

ஏனெனில், ஐ.எஸ்.ஐ. யின் முன்னாள் தலைவர் ஒருவர் இந்தத் தாக்குதல் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடுமென்று தனது ஊகத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு இந்தியப் புலனாய்வுத் துறையின் பின்னணி இருந்திருக்கக்கூடும் எனவும் மும்பைத் தாக்குதலுக்கு பதிலடியாக இதனைச் செய்திருக்கலாமென்றும் அவர் கூறியிருந்தார்.  “இது இந்திய உளவுத்துறையின் வேலையென்பது இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது’ என்று ஓய்வுபெற்ற ஜெனரல் ஹமீட் குல் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக போதியளவு ஆதாரமில்லையாயினும் இந்த மாதிரியான விடயங்கள் சாதாரண பாகிஸ்தானியர் இலகுவாக நம்பக்கூடிய விடயங்களாகிவிடுமென கூறப்படுகிறது. பல தரப்பினரும் செறிந்து வாழும் லாகூரில் இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறித்து பாகிஸ்தானியர் குழப்பம் அடைந்துள்ளனர்.

அத்துடன் விளையாட்டானது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதொன்றாகும். பாகிஸ்தானியரால் இதனை செய்திருக்க முடியாதென்று சாஷியா சர்தாரி (வயது 28) என்ற குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறாயினும் பாகிஸ்தானில் உள்ள தீவிரமாக சிந்தித்து கருத்து கூறுபவர்கள் “இந்தியாவின் சதி’ என்று கூறப்படும் கதைகளை நிராகரித்துள்ளதுடன், பாகிஸ்தானின் புகழை நாசமாக்கியுள்ள தீவிரவாதிகள் தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.  அரசு மறுத்துவிடும் நிலைமைக்குச் சென்றால் அது மோசமான விடயமாகும். பாகிஸ்தானை அழித்துவிடும் நிகழ்ச்சித்திட்டத்துடன் நாம் வைத்திருக்கும் குழுக்கள் தொடர்பாக எவ்வளவு காலத்துக்கு நாம் மறுக்கப்போகின்றோம் என்று “டெய்லி டைம்ஸ்’ பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

இது இவ்வாறிருக்க, லாகூரில் கடாபி விளையாட்டரங்கின் வெளிப்புறத்தின் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதல் லஸ்கர்இதொய்பா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒத்தது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். மும்பையில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இக்குழுவே சூத்திரதாரியென குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் , இதில் “வெளிநாட்டுக் கரம்’ இருப்பதாக பலர் சூசகமாக கூறுகின்றனர். மும்பைத்தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக முழுமையான போதிய ஆதாரங்கள் இல்லாமல் சாதாரண பாகிஸ்தானியர் மத்தியில் ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. பஞ்சாப் பொலிஸின் குற்றவிசாரணை திணைக்களம் கடந்த ஜனவரியில் எச்சரிக்கை விடுப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இந்திய உளவுத்துறை முகவரமைப்பானது கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கக் கூடுமென்றும் எச்சரிப்பதாக பிழையான அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

22 ஜனவரி 2009 திகதியிடப்பட்ட அறிக்கையில் , இந்தியாவின் ரோவானது இலங்கை கிரிக்கெட் குழுவினரை இலக்கு வைக்குமாறு தனது முகவர்களுக்கு பணித்துள்ளதாகவும் விசேடமாக அவர்கள் ஹோட்டலுக்கும் விளையாட்டரங்கிற்கும் பயணம் செய்கையில் இலக்குவைக்க பணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் குற்றப்புலனாய்வு திணைக்கள மேலதிக பொலிஸ்மா அதிபர் மலிக் முகமட் இக்பால் கையெழுத்திடப்படவிருந்ததாக தென்படுகின்றது. இதேவேளை அந்த அறிக்கை தொடர்பாக “த ரைம்ஸ்’ இக்பாலுடன் தொடர்பு கொண்ட போது அவர் உறுதிப்படுத்துவதையோ அல்லது மறுப்பதையோ நிராகரித்துவிட்டார். “கசிந்துவிட்டதொன்று’ புலனாய்வு விடயங்கள் தொடர்பாக நான் கருத்து கூறமுடியாது’ என்று அவர் தெரிவித்துவிட்டார்.