கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இரண்டு அடி உயர மாப்பிள்ளையை மணந்த ஐந்து அடி உயர பெண்

marriage.jpgஇரண்டு அடி உயரே ஆன 35 வயது இளைஞர், 5 அடி உயரம் கொண்ட பெண்ணை மணந்துள்ளார்.

இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நேற்று  நடை பெற்றுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் தேவதாஸ். இவர் ஒரு ஓவியர். வயது 35 . இவர் வழக்கமான ஆண்களின் உயரம் கொண்டவரல்ல இரண்டு அடி உயரமே கொண்டவர்.

இந்த இயற்கையின் முரண் காரணமாக திருமணமே நடைபெறாமல் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் 30 வயதான சசிகலா என்ற பெண்ணை சந்தித்தார். இவர் பெண்களின் சராசரி உயரமான 5 அடி உயரம் கொண்டவர். உயரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும்,  இருவரது மனமும் சமன்பட்டது, காதல் மலர்ந்தது, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

தேவதாஸின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். ஆனால் சசிகலாவின் பெற்றோருக்கு துளியும் இதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தேவதாஸும், சசிகலாவும் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் வைத்து நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

ராமர் கோவில் கட்டுவோம்-ராமர் பாலத்தைக் காப்போம்: பாஜக தேர்தல் அறிக்கை

03-advani.jpgபாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். ராமர் பாலத்தை பாதுகாப்போம், இடிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வகை செய்யும் அரசியல் சட்டம் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதை முக்கிய வாக்குறுதியாக பாஜக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது இந்துத்வா கொள்கைக்கு பாஜக புத்துயிர் கொடுத்துள்ளது.

மேலும் இன்று ராமர் நவமி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் ராமர் கோவில் கட்டப்படும், ராமர் பாலம் பாதுகாக்கப்படும் என பாஜக உறுதியளித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்க அமெரிக்க தீர்மானம்

u-s-flag.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது. இதனை ஐநா செயலாளர் பான்.கீ.மூன் வரவேற்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவுடன் வலுவான அடித்தளத்தை மனித உரிமை பேரவையில ஏற்படுத்த உள்ளது.

புஷ் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இணைவதில்லை எனத் தீர்மானித்திருந்தது. உலகில் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தாது, இஸ்ரேலில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாத்திரம் விமர்சிக்கப்பட்டதால், புஷ் நிர்வாகம் அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

இந்த நிலையில் மனித உரிமை பேரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் நடவடிக்கையில் உதவியளிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூசிலாந்து பேரவையில் இருந்து விலகிய பின்னர், குறிப்பிடதக்க மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.

புலிகள் மக்களை வெளியேற்ற மாட்டார்கள் : குமரன் பத்மநாதன் ஹோம்ஸிடம் தெரிவிப்பு

kp-jhooms.jpgதமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விடுதலைப்புலிகள் மக்களை செல்ல விடமாட்டார்கள் என புலிகளின் ச‌ர்வதேச‌ பிரதிநிதி குமரன் பத்மநாதன் ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோ‌‌ம்ஸிடம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வேயின் அனுசரணையுடன் குமார் பத்மநாதன் ஜோன் ஹோம்ஸை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இதன் போது ஜோன் ஹோம்ஸ் முல்லைத்தீவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களை விடுவிக்குமாறு அவரிடம் கோரியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பையடுத்து ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிக்காரவை ஜோன் ஹோம்ஸ் சந்தித்து முல்லைத்தீவில் மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு – இதுவரை இணக்கம் காணப்படாத முக்கிய விடயங்களில் உடன்பாடு

இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றைத் தயாரிப்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே இதுவரை இணக்கம் காணப்படாத முக்கிய விடயங்கள் சிலவற்றுக்கு இவ்வாரம் நடைபெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

எஞ்சிய விடயங்களுக்கு அடுத்தவார கூட்டத்தில் இணக்கப்பாடொன்றை எட்டிவிடலாமென நம்புவதாகவும் பேராசிரியர் விதாரண தெரிவித்தார். அரசியல் தீர்வு யோசனையொன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஏற்கனவே 95% விடயங்கள் தொடர்பில் பொது இணக்கப்பாட்டைக் கண்டுள்ளது.

இதில் ஏனைய விடயங்களிலும் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வாரா வாரம் கூடி கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் இவ்வாரம் நடைபெற்ற கூட்டத்தில் மேலும் சில விடயங்களுக்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

மீதமாகவுள்ள விடயங்களுக்கும் பொது இணக்கம் ஏற்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக பேராசிரியர் விதாரண தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்தக் கட்சிகளினதும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் உள்ளடக்கி தீர்வுத் திட்ட வரைவொன்றைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் மோதல்களில் காயமடைந்தவர்களில் 60 பேர் திருமலையில் உயிரிழப்பு

green-ocean.jpgமுல்லைத் தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார். முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்குக் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

ரஸாக் மலேசியா பிரதமராகிறார்

najib-razak.jpgகடும் எதிர்ப்புகள், அதிருப்திகளுக்கு மத்தியில், தனது பிரதமர் பதவியை முகம்மது அப்துல்லா படாவி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதையடுத்து துணைப் பிரதமர் நஜீப் ரஸாக் பிரதமராக பதவியேற்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த மலேசியத் தேர்தலில் ஆளும் கூட்டணியான உம்னோவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சாதாரண மெஜாரிட்டியுடன்தான் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அடக்குமுறை நடவடிக்கை காரணமாக அவரது கட்சிக்கு பெரும் அடி விழுந்தது. இதனால் படாவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

ஆரம்பத்தில் விலக முடியாது என பிடிவாதமாக கூறி வந்தார் படாவி. இருப்பினும், பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டு விரைவில் பதவி விலகுவேன், நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் என்று அறிவித்தார் படாவி. அதன்படி சமீபத்தில் அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நஜீப் ரஸாக் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது பிரதமர் பதவியையும் படாவி ராஜினாமா செய்துள்ளார். இதை அந்த நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதைத் தொடர்ந்து ரஸாக் பிரதமராக வழி ஏற்பட்டுள்ளது.

1957ம் ஆண்டு முதலே உம்னோ கூட்டணிதான் மலேசியாவில் ஆட்சி புரிந்து வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக படாவி தலைமையிலான உம்னோ அரசுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்திய வம்சாவளியினர் குறித்த பிரச்சினையை படாவி அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியதே அந்த கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய அடிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. நாளை நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் வேலைத் திட்டம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் ரோஹித

rohitha_bogollagama_.jpgபயங்கர வாதத்தைத் தோற்கடித்து பொதுமக்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய சேவையைப் பூர்த்தி செய்யும்போது நாட்டின் இறைமை,  ஆட்புள ஒருமைப்பாடு மற்றும் மக்களின் சுதந்திரத்தைக் காட்டிக்கொடுக்க அரசாங்கம் தயாரில்லை. சுமார் 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பை சர்வதேச சமூகம் வற்புறுத்தும் அளவுக்கு அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்பட்டன.

இந்தியா,  சீனா, ரஷ்யா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கைக்காக நேரடியாகக் குரல் கொடுக்கின்றன. இலங்கையின் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை என அந்த நாடுகள் எப்போதும் கூறி வருகின்றன. இலங்கை அதன் நட்புறவு நாடுகளோடு மிகவும் ஒத்துழைப்புடனும் வெளிப்படையாகவும் செயற்பட்டு வருதே இதற்குக் காரணமாகும். இதன் ஓர் அங்கமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் லிபியாவுக்குப் பயணமாகவுள்ளார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்தியாவசியப் பொருட்களுடன் ‘சிட்டி ஒப் டுப்லின்’ முல்லைத்தீவை அடைந்தது

1029 தொன் பொருட்கள் அடங்கிய ‘சிட்டி ஒப் டுப்லின்’ என்ற கப்பல் முல்லைத்தீவைச் சென்றடைந்துள்ளதாகக் கடற்படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இக்கப்பலில் மருத்துவ மற்றும் அவசர சுகாதார உடைகள் , கூடாரங்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கு வாக்களிப்பு வசதி

duglas_devanandass.jpg
பார்வையற்றவர்கள் தேர்தல்களின்போது வாக்களிப்பதற்காக நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரைத் தம்முடன் அழைத்துச் செல்லும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக  அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.