கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பன்றிக் காய்ச்சல் அபாயம் இலங்கையும் முன்னெச்சரிக்கை

swine-flue.jpgமெக்ஸிக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் அதிவேகமாகப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரச தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் இந்நோய் தொற்றாமல் தடுப்பதற்கு சகல சுகாதார நிலையங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அரச தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

* பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன அது எங்கிருந்து தோற்றம் பெற்றது?

சுவாச உறுப்புகளில் ஒருவகைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவிதமான காய்ச்சலே பன்றிக் காய்ச்சல் ஆகும்.

இக்காய்ச்சல் பொதுவாக பன்றிகளுக்கே ஏற்படும் ஆனாலும் மனிதர்களுக்கும் தொற்றக் கூடிய தன்மை கொண்டது.

இவ்வாறு மெக்ஸிகோவில் பன்றி ஒன்றில் தாக்கி வைரஸ் மனிதர்களையும் தாக்க ஆரம்பித்தது இதுவே பன்றிக் காய்ச்சலின் ஆரம்பமாகும்.

* பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து முகமூடிகள் பாதுகாத்துக் கொள்ளுமா?

பன்றிக் காய்ச்சலிலிருந்து முகமூடிகள் அணிவதன் மூலம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளது. இருந்தாலும் அதன் முடிவுகள் சர்ச்சைக்குரியது.

* பன்றிக் காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் என்ன?

சாதாரண காய்ச்சலுக்கு எவ்வாறான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அவையே பன்றிக் காய்ச்சலுக்கும் தோன்றும்.

அதாவது இருமல், தடிமன், தலையிடி, உடல்வலி, நடுக்கம், சோர்வு ஆகியவற்றுடன் சில வேளைகளில் வயிற்றுப் போக்கு வாந்திபேதி என்பனவும் காணப்படலாம்.

* பன்றிக் காய்ச்சலுக்குள்ளானவர்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்பது தொடர்பாக எவ்வாறு அறிய முடியும்?

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் வசிப்பவராகவோ அல்லது மெக்ஸிகோவிலிருந்து அண்மையில் வந்திருந்தவராகவோ இருந்தால் கட்டாயம் மருத்துவ அறிவுரையை பெற வேண்டியது அவசியம்.

ஆனால், இந்நோய் தோற்றுவதைத் தடுக்காமல் இருக்க நோயாளர் வீட்டை விட்டு வெளியேறாமல் மருத்துவரை வீட்டுக்கு அழைத்து சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.

* பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?

ஆம், ரமிபுளு அல்லது ரிலன்ஹா மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும் ஆனால், காய்ச்சலுக்கான வழமையான மருந்துகளால் சிகிச்சையளிக்க முடியாது.

* பன்றிக் காய்சலுக்கு ஊசி மருந்து உள்ளதா?

இல்லை, ஓர் ஊசி மருந்தினைக் கண்டு பிடிக்க 3 முதல் 6 மாதம் வரையான காலப்பகுதி தேவைப்படலாம்.

* பன்றிக் காய்ச்சலிலிருந்து எம்மை நாமே பாதுகாக்க முடியுமா?

பொதுவான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதாவது தும்மும் போதோ இருமும் போதோ திசுக்களால் முகத்தை மூடி தும்மியபின் திசுக்களை உடனடியாக வேறு இடங்களிற்கு அப்புறப்படுத்த வேண்டும்.

நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் வீடுகளிலேயே தங்கிக் கொள்ள வேண்டும். சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் தொடர்பாக மேற்குறிப்பிட்ட தகவல்கள் அரச தொற்று நோய் தடுப்புப் பிரிவால் பொதுமக்களின் நலன்கருதி வெளியிடப்பட்டதாகும்.

சென்னையில் மர்ம ஆசாமி ஓட்டிய ரயில் -சரக்கு ரயில் மோதல்: 7 பேர் பலி

29-train.jpgசென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை ஒரு மர்ம நபர் இயக்கினார். அந்த ரயில் வியாசர்பாடி அருகே நின்று கொண்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் ரயில் மீது மோதியதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டன. இதில் 7 பேர் பயணிகள் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பயணிகள் ரயிலை இயக்கிய நபரும் பலியானார்.

சென்னை-திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.15 கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. ஆனால், 4.50 மணியளவி்ல் ரயிலின் டிரைவர் அதில் ஏறும் முன்பே திடீரென அந்த ரயில் கிளம்பியது. அப்போது அந்த ரயிலில் 20 பயணிகளே இருந்தனர். இதைக் கண்ட பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் டிரைவர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். வேகமாகச் சென்ற அந்த ரயில் சென்ட்ரலை அடுத்த பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.

இதையடுத்து அந்த ரயில் படுவேகத்தில் 5.00 மணியளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது தண்டையார்பேட்டையில் பெட்ரோலியம் நிரப்புவதற்காக டேங்கர் சரக்கு ரயில் ஒன்று லூப்லைனில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

எதிர் திசையில் பயங்கர வேகத்தில் ரயில் வருவதை பார்த்த சரக்கு ரயிலின் டிரைவர் ஆறுமுகம், உதவி டிரைவர் பிரதாப், கார்டு கில்பர்ட் ஆகியோர் ரயிலிலிருந்து குதித்து ஓடினர். அவர் ஓடிக் கொண்டிருந்தபோதே டேங்கர் ரயில் மீது பயங்கர வேகத்தில் பயணிகள் ரயில் மோதியது. இதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டதோடு தடம் புரண்டன. மோதிய வேகத்தில் மின்சார ஒயர்கள் அறுந்து அந்தப் பகுதியில் மின்சாரமும் தடைபட்டது.

பயணிகள் ரயிலை இயக்கியது ரயில்வே என்ஜின் டிரைவரோ, ரயில்வே மெக்கனிகல் ஷெட் ஊழியரோ இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த ரயிலை இயக்கிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் தீவிரவாதியா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது

ராமதாஸ், வைகோவுக்கு ஈழத்தமிழர்கள் முக்கியமல்ல:திருமாவளவன்

thirmavala.jpgஈழத் தமிழர்கள் மீதான அக்கறையைவிட திமுக எதிர்ப்புதான் ராமதாஸ் மற்றும் வைகோவுக்கு முக்கியம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடும் அணிதான் எங்கள் அணி என்று சொல்லி டாக்டர் ராமதாஸ் என்னை அதிமுக அணிக்கு அழைத்தபோது, ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்தான் ஜெயலலிதா.

எனவே ஒருபோதும் அதிமுக அணி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது என்று கூறி அந்த அணிக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தமிழர் நலனில் உள்ள அக்கறையைவிட இந்தத் தேர்தலில் திமுகவை தோல்வியடைய செய்வதுதான் முக்கியமாக உள்ளது என்றார்.

புலிகளின் ஆமர்பிளேட் வாகனமும் 9 சடலங்களும் மீட்பு – பாதுகாப்பு அமைச்சு தகவல்

armoplate_vehicle.pngபுலிகளால் பாவிக்கப்பட்டு வந்த ஆமர்பிளேட்களினால் மறைக்கப்பட்ட ட்ரக் வண்டி உட்பட மேலும் பல வாகனங்கள் பலவற்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வாழையர்மடம் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 600 மீட்டர் நீளமான மண் அணைக்கட்டுக்களை நேற்றுக் கைபற்றிய இராணுவத்தின் 53ஆம், 58ஆம் படைப் பிரிவினரே இந்த வாகனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

புலிகள் தமது உயர்மட்டத் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்த வாகனங்களைப் பயன்படுத்தி வந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

மண் அணைக்கட்டுக்களைக் கைபற்றிய பின்னர் அங்கு தேடுதல் மேற்கொண்ட படையினர் எல்.ரி.ரி.ஈ. யினரின் 9 சடலங்களையும் ரி-56 ரக துப்பாக்கிகள் 15,  ஒரு ஸ்ணைபர் துப்பாக்கி, 11 கிளேமோர்கள்,  1கிலோ கிராம் எடையுள்ள சீ-4 ரக வெடிபொருள்,  75 டெட்டனேடர்கள்,  53 அருள் குண்டுகள், 47 கைக்குண்டுகள் மற்றும் 2 ஐகொம் தொடர்பு சாதனங்கள் உட்பட பெருமளவான ஆயுதங்களையும் கன்டெடுத்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

armoplate_vehicle.png

உடனடி யுத்தநிறுத்தத்திற்கு பிரித்தானிய-பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் அழைப்பு: அரசு மறுப்பு

British_French_Foreign_Ministersஇலங்கை அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட் வலியுறுத்தியுள்ளார். எனினும் இக்கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை விடுவிப்பதற்காகவும், அவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்கும் பொருட்டும் இந்த உடனடி யுத்த நிறுத்தம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள வேண்டி சர்வதேசம் அழுத்தங்களை மேற்கொண்டு வருவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்காக அல்ல என அவர் தெரிவித்தார்.

பொது மக்களைப் பாதுகாக்கும் பொருட்டே இவ்வாறான யுத்த நிறுத்தம் தேவைப்படுவதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார்.  அத்துடன் மூன்று முக்கிய கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் பொருட்டு தமது இலங்கை விஜயம் அமைந்ததாக அவர் இதன் போது தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தினது அழுத்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிப்பது குறித்தும் அதன்படி நடப்பது குறித்தும் இதன்போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் பொதுமக்கள் மோதல் பிரதேசங்களிலும் அதற்கு வெளியே இடைத்தங்கல் முகாம்களிலும் அவலப்படும் நிலைமை குறித்து கவலை வெளியிட்டதுடன் இவை தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மூன்றாவதாக இலங்கை அரசாங்கம், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணங்கி செயற்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திரமானதும், அமைதியானதுமான வாழ்க்கை முறைமையை உறுதி செய்வது தொடர்பிலேயே தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார்.

அதேவேளை, இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் இந்த விஜயம் தொடர்பான அறிக்கையினை வெளியிடவிருப்பதாகவும் இந்தச் சந்திப்பின் போது டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது, பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்ணரும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்.

“மோதல் பிரதேசங்களில் தற்போதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பலரும் பல்வேறு கருத்தினை வெளியிடுகின்றனர். ஆனால் அங்கு உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்து எமக்குத் தெரியவில்லை. எவ்வாறாயினும் அங்கு உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் மீட்கப்பட வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோளாக இருக்கிறது” என அவர் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் மோதல் பிரதேசங்களிலும், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமெனத் தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். எனவே மோதல் பிரதேச தொண்டு பணியாளர்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதன் மூலமே பொதுமக்களின் உண்மையான நிலவரம் குறித்து வெளியுலகத்திற்குத் தெரிய வருவதுடன், அவர்களின் உண்மையான தேவை அறிந்து சேவை செய்யவும் முடியும் என குஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு விஜயம் செய்ததன் பின்னர், தங்களது உண்மையான நிலைப்பாடுகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தாம் கருத்து வெளியிடுவதாக அவர் தெரிவித்தார். முகாம்களுக்குச் சென்று நேரடியாக அவர்களைப் பார்வையிடுவதன் மூலமாகவே உண்மையில் பொது மக்களின் நிலையினை அறிய முடியும், அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆராய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்க நுவரெலியா பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

flee0009.jpgவன்னி மோதல் நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பதற்கு நுவரெலியா பிரதேச சபை தீர்மானித்துள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் சுதாகர் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நுவரெலியா பிரதேச சபை அமர்வின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மக்களிடமிருந்து சேகரிக்கப்படவுள்ள நிவாரணப் பொருட்களை வவுனியா பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களுக்காக கோவை இளைஞர்கள் 2009 கி.மீ. சைக்கிள் பயணம்

கோவை மாவட்டம், காரமடை, மருதூரை சேர்ந்த அமர்நாத் செல்வம், பரமானந்தம் ஆகிய இருவரும் இலங்கை தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்து, அஞ்சலி செலுத்த வேண்டும் என நினைத்தனர். தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து, இதை நிறைவேற்ற முடிவு செய்தனர். இருவருக்கும் தேவையான உதவிகளை செய்ய, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன் வந்தது. கோவை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை உறுப்பினர்கள் இவர்களது பயணத்தை செஞ்சிலுவை சங்கம் முன் துவக்கி வைத்தனர்.

மணிக்கு 20 கி.மீ., வேகத்தில், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பயணம் செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர். இதன்படி, கோவையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். மதுரையிலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்கின்றனர். ஏப்., 30ல், கன்னியாகுமரியிலிருந்து, திருச்செந்தூர் வழியாக, தூத்துக்குடி செல்கின்றனர்.

மே 1ல், தூத்துக்குடி, மதுரை வழியாக, திருச்சி செல்கின்றனர். அடுத்த நாள், திருச்சியிலிருந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். மே 3ல், நாகையிலிருந்து புதுச்சேரிக்கும், மே 4ல், அங்கிருந்து சென்னைக்கும் செல்கின்றனர்.

மே 5ல், சென்னையிலிருந்து வேலூர் சென்று, அடுத்த நாள், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக, சேலம் செல்கின்றனர். மே7ல், சேலத்திலிருந்து ஈரோடு, திருப்பூர், அவினாசி, மேட்டுப்பாளையம், காரமடை வழியாக, கோவை செஞ்சிலுவை சங்கம் வரை வந்து 2009 கி.மீ., பயணத்தை முடிக்கின்றனர்.

தன்னையும், தமிழக மக்களையும் ஏமாற்றுகிறார் கருணாநிதி:நெடுமாறன்

nedumaran1.jpgஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தன்னையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றி வருகின்றார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.   இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது தனது உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்சினை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாநிலை இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதனையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் சரண் அடைய வேண்டும்: ப.சிதம்பரம்

chidambaram1.jpg
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சரண் அடைய வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனி, இலங்கை ராணுவத்தினர், பாதிக்கப்பட்ட தமிழர்களை பத்திரமாக மீட்கும் பணியிலும், அவர்களுக்கு உதவும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்று இலங்கை அரசு கூறி இருக்கிறது. இந்தநிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் இருப்பவர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரண் அடைய வேண்டும். நீண்டகால பிரச்சினை பற்றி பேச்சு நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்ய முன்வந்தால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

பிரபாகரன் பிடிபட்டால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. முதலில் அவர் சரண் அடைய முன்வரட்டும். நான் எதையும் ஊகித்து கொண்டு கூற முடியாது. இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற தகவலை சிலர் பரப்புகிறார்கள். இது தவறான தகவல். இந்தியா அவ்வாறு நடக்க வில்லை என்றார்.

பாதுகாப்பு வலயத்தில் 24 மணி நேரத்தில்; ஏழு தற்கொலைத் தாக்குதல்கள் – பிரிகேடியர் தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புலிகள் ஏழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 4 மனித குண்டுகளும் 2 மோட்டார் சைக்கிள் குண்டுகளும், வெடி மருந்து நிரப்பபட்ட கெப் வாகன குண்டு ஒன்றும் இத்தற்கொலைத் தாக்குதலில் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாகவம் அவர் தெரிவித்தார்.