கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இந்திய ரசிகர்களிடம் தோனி மன்னிப்பு

t20-world-cup.jpgஇருபது20 உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்காக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். தோல்விக்கு பின்னர் தோனி கூறியதாவது,

நாங்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டோம். இதனால் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய ரசிகர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். இது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் அடுத்த உலகக் கிண்ணத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுப்போம் என்று உறுதியளிக்கிறேன். 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் (50 ஓவர்) நாங்கள் தோற்றது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமயமானது ஏமாற்றத்தை தந்தது. அதே போன்று தற்போது ஏமாற்றம் அடைகிறேன். பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை மிகவும் சிறப்பாக செய்தனர். துடுப்பாட்ட வீரர்கள்தான் எடுபடவில்லை. 154 ஓட்ட இலக்கு என்பது எளிதானதுதான். துடுப்பாட்ட வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதுவே தோல்விக்கு காரணம்.

டுவென்டி-20 உலக கோப்பை : அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான்

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடக்கும் இருபதுக்கு 20  உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் ’எப்’ பிரிவில் அயர்லாந்து பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.. பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 9விக்கெட்டுகளை இழந்து 120ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி 35 ஓட்டங்களால் அயர்லாந்தை வெற்றி கொண்டதால் அரையிறுதிக்கு தகுதிபெற்றது 

உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டித் தொடரின் மிக முக்கியமான சுப்பர் எட்டு 2வது ஆட்டத்தில் ’இ’ பிரிவில் இங்கிலாந்து வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் மோதுகின்றன.

முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் விபரங்களை திரட்ட ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக்கிளை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்டக் கிளையின் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.இப்றாஹிம் விடுத்துள்ள அறிக்கையில்;

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனும் கலந்துரையாடவுள்ளார். அதனால் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சரியான விபரங்கள் தேவைப்படுவதனால் அதன் விபரங்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அநுராதபுரம், கண்டி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பத் தலைவர்கள், அரச ஊழியர்கள், உலமாக்கல் அதற்குரிய விண்ணப்பங்களைப் பெற்று நிரப்பி அனுப்புமாறும் இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு 0718232462, 0714494040, 0312226710 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர் மௌலவி எம்.ஐ.கைசர்கான் ஹிஜ்ராமாவத்த, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் அரையிறுதிக் கனவு கலைந்தது – தொடரை விட்டு வெளியேறுகிறது

t20-world-cup.jpgஉலகக் கிண்ணத்துக்கான 20 ஓவர் கிரிக்கெட் சுப்பர்-8 சுற்றில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டி ஒன்றில் நடப்புச் சாம்பியன் இந்தியாவும், இங்கிலாந்தும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் சந்தித்தன. இரு அணிகளுக்குமே இது ஒரு பலப்பரீட்சையாக  அமைந்ததால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
 
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இர்பான் பதான், பிரக்யான் ஓஜாவுக்கு பதிலாக ஆர்.பி.சிங்,  ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நாணயற் சுழற்சியில்; வென்ற இந்திய கேப்டன் டோனி, முதலில் பந்து வீச முடிவெடுத்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களை எடுத்தது.

இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளயும்,  ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சஹீர்கான், ஆர்.பி.சிங் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர. ஆதனைத் தொடர்ந்து  154 ஓட்டங்கள்; எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ஓட்டங்களை எடுத்து  3 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்தியா ஏற்கனவே சுப்பர்-8 சுற்றின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம்  தோற்று இருந்தது. இனி தனது கடைசி ஆட்டத்தில் நாளை தென்ஆப்பிரிக்காவை வென்றாலும் அதற்கு பலன் கிடையாது. அதே சமயம் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

இந்த ஆண்டு 81 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை

அமெரிக்க இராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008ல் தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது.  ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங் கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து 1980 க்கு பின் இந்த ஆண்டுதான் அதிக அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரில் பங்கேற்ற பின்னர் தான் வீரர்களிடம் இந்த தற்கொலை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பணப் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, மனைவியை விட்டுப் பிரிந்தது, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட வையும் இந்த தற்கொலை அதிகரிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க வீரர்களின் தற்கொலை அதிகரிப்பு குறித்து அமெரிக்க இராணுவத்தின் துணைத் தளபதி பீட்டர் சியாரெலி கூறுகையில் :தற்கொலைத் தடுப்பு திட்டங்கள் உரிய முறையில் பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஏன் அது தோல்வி அடைந்தது என்பது குறித்து விரிவாக ஆராயப் பட வேண்டும் என்றார்.

இரான் தேர்தல் முடிவு குறித்து அமெரிக்க துணை அதிபர் கருத்து

baiden.gifஇரானிய அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து தமக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

என்.பி.சி. என்னும் ஊடகத்துக்கு வழங்கிய நீண்ட செவ்வி ஒன்றில், இந்த விடயத்தில் நியாயமான ஒரு முடிவுக்கு வருவதற்கான போதுமான தரவுகள் இன்னமும் தமக்கு கிடைக்கவில்லை என்று பைடன் கூறியுள்ளார். முன்னதாக, இந்த தேர்தல் முடிவுகள் இரானிய மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் என்று அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாக, அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தல்; இடம்பெயர்ந்த வாக்காளர் 26வரை விண்ணப்பிக்க அவகாசம்

election_ballot_.jpgயாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பம் செய்வதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் புத்தளம் அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஏற்கப்படவுள்ளன. யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் உள்ளனர். புத்தளத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்பித்தால் குறித்த பிரதேசங்களில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும் இது தொடர்பான விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதி தேர்தல் செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுமணசிறி கூறினார்.

20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் -மீதியான நேர அட்டவணை

t20-world-cup.jpgஜூன் 15, இங்கிலாந்து மேற்கிந்தியா, மாலை 6 மணி

ஜூன் 15, அயர்லாந்து பாகிஸ்தான், இரவு 10 மணி

ஜூன் 16, நியூஸிலாந்து இலங்கை, மாலை 6 மணி

ஜூன் 16, இந்தியா தென் ஆபிரிக்கா, இரவு 10 மணி

ஜூன் 18, முதலாவது அரையிறுதி , இரவு 10 மணி

ஜூன் 19, 2 வது அரையிறுதி, இரவு 10 மணி

ஜூன் 21, இறுதிப் போட்டி, இரவு 7.30 மணி

புலிகளின் மற்றொரு நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடலில் மீட்பு

தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை முல்லைத்தீவு, வெள்ளை முள்ளி வாய்க்கால் பகுதிக்கு அண்மித்த கடலில் புலிகளின் மற்றொரு நீர் மூழ்கியொன்றை கண்டெடுத்திருப்பதாக இரா ணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரி யொருவர் தெரிவித்தார்.

நான்கு அடிகள் உயரமும், 24 அடிகள் நீளமும் கொண்ட இந்த நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தின் கரையிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கடலிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

இராணுவத்தின் எட்டாவது விசேட படையணிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. இந்நீர்மூழ்கி ஏற்கனவே பாவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3 ஓட்டங்களால் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

t20-world-cup.jpgசுப்பர் 8 சுற்றில் இந்திய  மற்றும் இங்கிலாந்து  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய  இந்திய  அணி 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.