கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஈழ தமிழர்களின் துயர்நீக்கும் விடிவு விநாயக சதுர்த்தி-அர்ஜூன் சம்பத்

ராஜதந்திரம் என்ற பெயரில் நாடகமாடிய கருணாநிதியை ஈழத்தில் மண்ணாகி போன அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்காது. இந்த ஆண்டு விநாயக சதூர்த்தி ஈழ விடிவு சதுர்த்தியாக கொண்டாடப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி…

தமிழக முதல்வர்  கருணாநிதி, ஈழத்தில் பிஞ்சு குழந்தைகள் கொன்றழிக்கப்பட்ட கொடூரத்தைக்கூட கண்டு கொள்ளாமல், பதவி நாற்காலியை பார்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவர். இதை நன்றாக பயன்படுத்தி கொண்ட இலங்கை அரசு ஈழத்தையே எழவு காடாக்கிவிட்டது.

கருணாநிதி தமிழகத்தின் தலைமகனாக இருந்தும் இந்திய அரசின் ஆயுத உதவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும், இலங்கையின் மனிதத் தன்மையற்ற வெறித்தனத்தை தட்டிக் கேட்க தைரியமில்லாமல் இருந்ததால்தான், இன்றைக்கு ஈழத் தமிழர்கள்  நாதியற்றுப் போய்விட்டனர்.

ஆனால், அதற்காகத் தமிழகத்திலிருந்து ஒலிக்கத் தொடங்கி இருக்கும் ஒப்பாரிக் குரல்களைக்கூட நசுக்குவது போல், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தவறு என திடீரென தமிழக அரசு மிரட்டல்  அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறில்லை என உச்ச நீதிமன்றமே பலமுறை சொல்லி இருக்கிறது. அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், 1968-ம் ஆண்டு சட்டத்தை நினைவூட்டி தமிழக அரசு மிரட்டுகிறது.

விடுதலைப் புலிகளை அடியோடு நசுக்கி அழித்துவிட்ட பிறகும், எதற்காக இந்த அரசு பயப்பட வேண்டும்?

அரசு எத்தகைய மிரட்டலை அறிவித்தாலும், இந்த வருட சதுர்த்தியை இரத்தமும் கண்ணீருமாகச் செத்தழிந்து கிடக்கும் ஈழத்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஈழ விடிவு சதுர்த்தியாகவே வழிபடுவோம். பிரபாகரனையோ புலிகளையோ நாங்கள் துதி பாடவில்லை.

ஆனாலும், ஈழத்தின் பெயரால் நாங்கள் ஏற்பாடு செய்யும் சதுர்த்தி விழாவைத் தடுப்பதற்காக தமிழக அரசு அவசர கதியில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தமிழகம் முழுக்க எழும் தமிழ் ஈழம் என்கிற பெயரில் கட்-அவுட்களையும் பேனர்களையும் வைத்திருக்கிறார். திசையெங்கும் சிறுத்தைக் கொடியும் புலிக் கொடியும் பறக்கிறது.

பிரபாகரனும் திருமாவளவனும் ஒருசேர போஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிறது. ஆனால், இதெல்லாம் கருணாநிதிக்கு தெரியாது.

தோல்வியடையும் நிலையில் அவுஸ்திரேலியா

eng0000.jpgஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாளான இன்று அவுஸ்திரேலியா  அணி சற்று முன் வரை தன் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தோல்வியை தவிர்க்க அவுஸ்திரேலியா மேலும் 443ஓட்டங்கள் பெற வேண்டும்

கிலானி, ஷபாஸ் ஷெரீப்பை கொல்ல தாலிபான்கள் திட்டம்

shahbazsharif.jpgபாகிஸ் தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மற்றும் பஞ்சாப் மாகாண முதலமைச்சரும், நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரைக் கொல்ல தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவத்தின் கடும் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலைக்கிடையேயும், மேற்கூறிய கொலைத்திட்டத்தை தாலிபான்கள் வகுத்துள்ளதாக பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இந்த கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 50 பேரை தாலிபான் இயக்கம் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் இஸ்லாமாபாத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

பலமான நிலையில் இங்கிலாந்து

cri0000.jpgஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று இங்கிலாந்து அணி தன் இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 373 ஒட்டங்கள் எடுத்து 545 ரன்கள் முன்னிலை பெற்று பலமான நிலையில் உள்ள போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

ஆஸ்திரேலியா – நேற்று இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் ஆட்டமுடிவின் போது விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள் பெற்றிருந்தது. வாட்சன்  ஆட்டம் இழக்காமல் 31 ஒட்டங்கள் கடிச்  ஆட்டம் இழக்காமல்  42 ஒட்டங்கள்  பெற்றிருந்தனர்.

இங்கிலாந்து – முதலாவது இன்னிங்ஸ் – 90.5 ஓவர்கள்  332 ஒட்டங்கள் 
ஆஸ்திரேலியா – முதலாவது இன்னிங்ஸ் – 52.5 ஓவர்கள்  160 ஒட்டங்கள் 
இங்கிலாந்து – இரண்டாவது இன்னிங்ஸ் –  95 ஓவர்கள்  373 ஒட்டங்களுக்கு ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
ஆஸ்திரேலியா – இரண்டாவது இன்னிங்ஸ்  – 20 ஓவர்கள்  விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள்

ஆஸ்திரேலியா வெற்றி இழக்கு 546 ஒட்டங்கள்

இலங்கை கிரிக்கெட் அணி 202 ஓட்டங்களால் வெற்றி

thilakarathna-dilshan.jpgஇலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் காலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 202 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

30/1 என்று  5-ஆம் நாள் ஆட்டத்தை துவங்கிய நியூஸீலாந்து அணி மென்டிஸ், முரளிதரன், துஷாரா ஆகியோர் பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறி நியூஸீலாந்து உணவு இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

குப்டில் 18 ஓட்டங்களுக்கும், டெய்லர் 16 ஓட்டங்களுக்கும், மேகின்டோஷ்  ஓட்டங்கள்  எதுவும் எடுக்காமலும், ஓரம் 21  ஓட்டங்களுக்கும் பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். இந்த 4 விக்கெட்டுகளையும் குலசேகரா, துஷாரா, மென்டிஸ், ஜெயவர்தனே ஆகியோர் வீழ்த்தினர்.

உணவு இடைவேளை முடிந்தவுடன் 24  ஓட்டங்கள்  எடுத்த ரைடர், முரளிதரன் பந்தில் வீழ்ந்தார். அதன் பிறகு மெக்கல்லம் 29  ஓட்டங்களையும் படேல் 22  ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.கேட்ப்டன் டேனியல் வெட்டோரி மட்டும் ஒரு முனையில் மிகச்சிறப்பாக விளையாடி 67  ஓட்டங்கள் எடுத்து மென்டிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 71.5 ஓவ ர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியில் முரளிதரன் 3 விக்கெட்டுகளையும், மென்டிஸ் 2 விக்கெட்டுகளையும், துஷாரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

திலகரத்னே தில்ஷான் முதல் இன்னிங்சில் 72 பந்துகளில் 92  ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி 123  ஓட்டங்களையும் எடுத்து இலங்கை வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். அதனால் அவருக்கு ஆட்ட நாய்கன் விருது கிடைத்துள்ளது.

இந்த தொடரை இலங்கை 2- 0 என்று கைப்பற்றி, ஆஸ்ட்ரேலியா இங்கிலாந்திடம் ஆஷஸ் தொடரை 1- 2 என்று இழக்க நேரிட்டால் இலங்கை டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்.

பாகிஸ்தான் தலிபான்களுக்கு புதிய தலைவர்

பாகிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக ஹகிமுல்லா மெஹ்சுத் நியமிக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் தலிபான்களின் துணை தலைவரான மெளல்வி ஃபக்விர் மொஹமது தெரிவித்துள்ளார்.

புதிய தலைவர் ஹகிமுல்லா மெஹ்சுத் முன்னாள் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத்துடன் நெருக்கமானவராக இருந்தார் என மெளல்வி ஃபக்விர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கின்ற ஒரக்சாய் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதத்தின் முற்பகுதியில் இடம்பெற்ற அமெரிக்க ஆளில்லா விமானத்தின் தாக்குதலில் பெய்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் உயிரோடு இருப்பதாக கூறி வரும் தலிபான்கள், தற்போது புதிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆப்கான் தேர்தலில் முறைகேடுகள் – கண்காணிப்பாளர்கள் புகார்

vote000.jpgஆப்கா னிஸ்தானில் கடந்த வியாழன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்திய கண்காணிப்புக் குழுவான்று, வாக்குப் பெட்டிகளை நிரப்புதல், ஒருவர் பல வாக்குகளை அளித்தல், உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் பரவலாக இடம்பெற்றமைக்கு சான்றுகள் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

வாக்குப் பதிவு வீதத்துக்குப் புறம்பாக, ஆப்கன் மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் இந்த தேர்தலை வெற்றிகரமானது என அறிவித்துள்ளனர்.ஹெல்மான்ட் போன்ற மாகாணங்களில் பதிவான 5 வீதம் போன்ற குறைந்தளவான வாக்குப் பதிவுகளால் இந்த தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகியுள்ளதாக காபூலில் உள்ள பி.பி.சி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

இந்தியாவில் ஸ்வைன் ஃபுளூ: மேலும் 3 பேர் பலி! உயிரிழந்தோர் எண்ணிக்கை 50

10092009.jpgஇந்தியா வின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவரும் ஏ (எச்1 என்1) நுண்ணியிரித் தாக்குதலினால் உண்டாகும் நோய்க்கு நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்வைன் ஃபுளூ என்றழைக்கப்படும் இந்நோய்க்கு மிக அதிகமானோர் உயிரிழந்த புனே நகரில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். தமிழ்நாட்டிலும், கோவா மாநிலத்திலும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 2,600ஐ கடந்துள்ளது.

புனே நகரில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இநநகரிலுள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சென்னை நகரில்  இந்நோயால் பாதிக்கப்பட்ட 45 வயது ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இவரையும் சேர்த்து தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி உயர்கல்விக் கூடங்களில் பயின்றுவரும் 3 மாணாக்கர்களுக்கு இந்நோய் தாக்கியுள்ளது தெரியவந்ததையடுத்து அங்கு படித்துவரும் மாணாக்கர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மேலும் 4 பேருக்கு இந்நோய் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்நோய் மிகக் கடுமையாக பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் ஹமீட் கர்ஸாய் மாபெரும் வெற்றி

vote000.jpgஆப்கானிஸ் தான் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயே முன்னிலையில் உள்ளதாகவும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பொன்றை எதிர்கொள்ள அவசியமற்ற வகையில் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று உள்ளதாகவும் அவரின் பிரசார தலைவர் டீன் மொஹமட் தெரிவித்தார்.

அதேசமயம் ஹமீட் கர்ஸாயின் பிரதான போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும் தானே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உரிமை கோரியுள்ளார்.  உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் தேர்தல் வெற்றி தொடர்பில் இவ்வாறு தகவல்கள் வெளியிடுவது தொடர்பில் அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேற்படி உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளிவர இரு வாரங்கள் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நிறைவு பெற்று விட்டதாக ஆப்கான் தேர்தல் ஆணையகம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வத் தேர்தல் முடிவுகளை எதிர்வரும் வாரம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையக அதிகாரியான ஸெக்ரியா பராக்ஸாய் கூறினார்.

மின்னல் வேக உசைன் போல்ட் 200மீ. உலக சாதனை

17-husain-bolt222.jpgஉலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் பெர்லினில் நடைபெறும் உலக தடகள அமைப்பின் உலக சாம்பியன்ஷிப் 200மீ ஓட்டப்பந்தயக்தில் 19.19 வினாடிகளில் இலக்கை எட்டி மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார்.

ஏற்கனவே பெர்லினில் 100மீ. சாம்பியன் பட்டத்தை உலக சாதனையுடன் வென்றார் உசைன்போல்ட்.

சரியாக ஒரு ஆண்டிற்கு முன் உசைன் போல்ட் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 200மீ. ஓட்டத்தில் 19.30 வினாடிஅக்ள் என்று உலக சாதனையை நிகழ்த்தினார். ஆனால் நேற்று மேலும் 11 வினாடிகளை மிச்சம் பிடித்தார் உசைன் போல்ட்.

இவருக்கு அடுத்தபடியாக பனாமா வீரர் அலான்சோ எட்வர்ட், 0.62 வினாடிகள் கூடுதல் எடுத்துக் கொண்டு இலக்கை எட்டி இரண்டாவது இடம் வந்தார்.

அமெரிக்க வீரர் வாலஸ் ஸ்பியர்மன் 3-வது இடம் பிடித்தார். ஐ.ஏ.ஏ.எஃப். சாம்பியனான டைசன் கே காயம் காரணமாக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.