உலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் பெர்லினில் நடைபெறும் உலக தடகள அமைப்பின் உலக சாம்பியன்ஷிப் 200மீ ஓட்டப்பந்தயக்தில் 19.19 வினாடிகளில் இலக்கை எட்டி மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார்.
ஏற்கனவே பெர்லினில் 100மீ. சாம்பியன் பட்டத்தை உலக சாதனையுடன் வென்றார் உசைன்போல்ட்.
சரியாக ஒரு ஆண்டிற்கு முன் உசைன் போல்ட் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 200மீ. ஓட்டத்தில் 19.30 வினாடிஅக்ள் என்று உலக சாதனையை நிகழ்த்தினார். ஆனால் நேற்று மேலும் 11 வினாடிகளை மிச்சம் பிடித்தார் உசைன் போல்ட்.
இவருக்கு அடுத்தபடியாக பனாமா வீரர் அலான்சோ எட்வர்ட், 0.62 வினாடிகள் கூடுதல் எடுத்துக் கொண்டு இலக்கை எட்டி இரண்டாவது இடம் வந்தார்.
அமெரிக்க வீரர் வாலஸ் ஸ்பியர்மன் 3-வது இடம் பிடித்தார். ஐ.ஏ.ஏ.எஃப். சாம்பியனான டைசன் கே காயம் காரணமாக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.