பாகிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக ஹகிமுல்லா மெஹ்சுத் நியமிக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் தலிபான்களின் துணை தலைவரான மெளல்வி ஃபக்விர் மொஹமது தெரிவித்துள்ளார்.
புதிய தலைவர் ஹகிமுல்லா மெஹ்சுத் முன்னாள் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத்துடன் நெருக்கமானவராக இருந்தார் என மெளல்வி ஃபக்விர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கின்ற ஒரக்சாய் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாதத்தின் முற்பகுதியில் இடம்பெற்ற அமெரிக்க ஆளில்லா விமானத்தின் தாக்குதலில் பெய்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் உயிரோடு இருப்பதாக கூறி வரும் தலிபான்கள், தற்போது புதிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.