கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வட கொரியாவுடன் பேச்சு நடத்த தயார் : யு.எஸ்.

தங்களுடன் நேரடியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற வடகொரியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலக அளவில் அணு ஆயுதங்களை ஒழிக்க நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் வட கொரியாவும் பங்கேற்க வேண்டுமானால், அமெரிக்கா தங்களுடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும் என்று அந்நாடு கூறியிருந்தது. இந்நிலையில், வட கொரியாவின் இந்த கோரிக்கையை ஏற்க அமெரிக்கா தயாராக இருப்பதாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பி.ஜே. கிரவ்லி தெரிவித்தார்.

முன்னதாக அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக ஆறு நாடுகளடங்கிய குழுதான் வடகொரியாவுடன் பேச்சு நடத்தும் என்று அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜிவ் சிலை உடைப்பு

நாகர் கோவில் அருகே முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கூடி போராட்டம் செய்ய முயன்றதால் லேசான பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயநகரில் பகுதியில் நடந்துள்ளது.

இன்று காலை இப்பகுதியிலிருந்த ராஜீவ்காந்தி சிலையின் மூக்கு பகுதி உடைத்து தூண்டாக கிடந்தது. மேலும், தலைப்பகுதி தாக்கப்பட்டு, கீறல் விழுந்திருந்தது. இன்று காலை இதை கண்ட காங்கிரஸார் அதிர்ச்சியடைந்தனர். ராஜீவ்காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரி  போராட்டம் நடத்த ஆயத்தமானார்கள்.

இதையடு்தது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காங்கிரஸ் கட்சியினரை சாமாதனப்படுத்தினர். சிலை உடைப்பு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து காங்கிரஸார் போராட்டத்தை கை விட்டனர்.  இது குறித்து . போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தரப்படுத்தலில் இந்தியா மூன்றாமிடத்திற்கு…

110909-india.jpgகொழும்பு ஐ. சி. சி. ஒரு நாள் போட்டிக்கான தரப்படுத்தல் பட்டியலில் தோனி தலைமையிலான இந்திய அணி, முதலாமிடத்தை மிக விரைவாக பறிகொடுத்துள்ளது. முத்தரிப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்திய போது தரப்படுத்தல்.

பட்டியலில் முதலிடத்தை முதல் முறையாக பெற்றது. நேற்று முன்தினம் இலங்கையிடம் தோல்வி அடைந்ததன் மூலம் முதலிடத்தை 24 மணி நேரத்தில் இழந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் முதலிடம் பெற்றதை கொண்டாடக் கூட நேரம் கிடைக்கவில்லை.

கடந்த 2007 முதல் ஒவ்வொரு அணியும் பங்கேற்ற போட்டிகளின் அடிப்படையில் தரப்படுத்தல் கணக்கிடப்படுகிறது. இதன்படி தற்போது தென் ஆபிரிக்கா (18 போட்டி, 127 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் வென்ற அவுஸ்ரேலியா (26 போட்டி, 125 புள்ளி) இரண்டாம் இடம்பெறுகிறது. அவுஸ்திரேலியாவோடு ஒப்பிடுகையில் கூடுதலாக இரண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி (28 போட்டி, 125 புள்ளி) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

நடுவரை திட்டிய நடப்பு சாம்பியன் செரீனா அமெரிக்க ஓபனில் இருந்து வெளியேற்றம்

serena-williams.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தண்டனை புள்ளியால் தோல்வியை சந்தித்தார். இதன்மூலம் இரண்டு ஆண்டுகளின் பின் டென்னிஸ் களம் திரும்பிய பெல்ஜியத்தின் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 13 ஆவது நாளான நேற்று முன்தினம் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் 2 ஆம் நிலை வீரõங்கனை செரீனா வில்லியம்ஸுடன் கிம்கிளிஜ்ஸ்டர்ஸ் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் வெற்றிபெற இரண்டு புள்ளிகள் தேவைப்படும் நிலையில் செரீனா வில்லியம்ஸ் எல்லை கோட்டைத் தாண்டி விளையாடியதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த செரீனா நடுவரை மோசமான வார்த்தையால் திட்டினார். இதனைத் தொடந்து நடுவர் இது குறித்து போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட அவர் தண்டனை புள்ளியாக கிம் கிளிஜ்ஸ்டர்ஸுக்கு ஒரு புள்ளியை வழங்க செரீனா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தார். இதன்போது செரீனா தன்னை கொலைசெய்து விடுவதாக குறிப்பிட்டார் என்று நடுவர் குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே இந்த போட்டியின் முதல் சுற்றின்போது செரீனா ஆடுகளத்தில் மோசமாக நடந்துகொண்டார். இதற்காக அவர் நடுவரின் எச்சரிக்கைக்கு உள்ளான நிலையிலேயே மீண்டும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்படி கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிரோலின் வொஸ்னிக்கை சந்திக்கவுள்ளார்.

குழந்தை வயிற்றில் குழந்தை

130909baby.jpgசீனாவில் ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள ஆபூர்வம் நடந்துள்ளது.

அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.

இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை- ரஜினி

13-rajini.jpgஅரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று மீண்டும் அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கவிஞர் வாலி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த கருத்தரங்குக்கு சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் அண்ணா அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்குள்ள கலைஞர் கருவூலத்தை சுற்றிப் பார்த்த ரஜினி, “கலைஞர் கருவூலத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. இதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளவும் ஒரு நாள் போதாது’ என்றார்.

காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “அவரது அழைப்புக்கு நன்றி. அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போது இல்லை. அரசியல் வாழ்க்கை பற்றி முடிவெடுத்தால் அது பற்றி யோசிப்பேன்’ என்றார் ரஜினிகாந்த்.

பின்னர் முதல்வர் கருணாநிதிக்குப் பக்கத்தில் அமர்ந்தபடி இரண்டரை மணிநேரம் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தார். திமுகவை உரசும் விதத்தில் ராகுலின் சமீபத்திய சென்னை விசிட் அமைந்திருந்தது. ரஜினியை காங்கிரசில் சேர அழைத்திருந்த ராகுல், அடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் என்றார்.

ராகுலுக்கு சரியான பதிலடி தரவே ரஜினியை அறிவாலயத்துக்கு அழைத்து, அவர் வாயாலேயே காங்கிரஸ்காரர்களுக்கு பதிலும் சொல்ல வைத்தார் கலைஞர் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் யோசனையை பரிசீலிக்க ஐசிசி முடிவு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள நடைமுறையை முறையை மாற்றி இரு அணிகளுக்கும் தலா ஒரு இன்னிங்ஸ் என்பதற்கு பதிலாக, 25 ஓவர்களாக பிரித்து 2 இன்னிங்ஸ் வழங்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் யோசனை பரிசீலனை செய்ய உள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் அதிரடியான பிரபலத்தால் 50 ஓவர் (ஒருநாள்) போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதனால் 50 ஓவர் போட்டியை மேலும் விறுவிறுப்பு ஏற்படுத்தும் வகையில் இரண்டு 25 ஓவர்களாக பிரித்து விளையாட வேண்டும் என்று ஒரு சில நாட்களுக்கு முன் டெண்டுல்கர் யோசனை தெரிவித்திருந்தார். இந்த யோசனைக்கு ஒரு சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவும், கபில்தேவ் உள்ளிட்ட ஒரு சிலர் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் சச்சினின் யோசனை குறித்து சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐ.சி.சி) மேலாளர் (கிரிக்கெட்) ரிச்சர்ட்சன் கூறுகையில், சச்சினின் யோசனை நல்லது தான். இந்த யோசனையை தென்ஆப்ரிக்கா பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். பகலிரவு போட்டியை பொறுத்தமட்டில் ஒரு அணிக்கு பகலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும், மற்றொரு அணிக்கு இரவில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இதனால் ஒரு அணிக்கு சாதமாக சூழலும், எதிரணிக்கு சாதகமற்ற சூழலும் ஏற்படுகிறது. பூவா-தலையா ஜெயித்து முதலில் ஆடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதை முன்கூட்டியே கணித்து விட முடிகிறது.

சச்சினின் யோசனை குறித்து ஐ.சி.சி. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் போட்டி பிரபலத்தால் 50 ஓவர் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அதே நேரத்தில் 25 ஓவர்களாக பிரித்து ஆடுவதால் பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்க முடியாத நிலையும் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

‘ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் முடிந்தது

13-jet-airways.jpgஐந்து நாட்களாக நடந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமானங்கள் இயங்கத் துவங்கியுள்ளனர். சில மூத்த பைலட்டுகளை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பைலட்டுகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்டிரைக் என்று அறிவிககாமல் அவர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றதால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முடங்கியது.

இதனால் நாடு முழுவதும் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். செத்த வீட்டில் புடுங்குவது மாதிரி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜய் மல்லையாவின் கிங்பிஷ்ஷர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்கள் ஐந்து மடங்காக உயர்த்தி தங்கள் குறுகிய புத்தியைக் காட்டின. இந் நிலையில் ஜெட் நிர்வாகம், மத்திய விமானத்துறை அதிகாரிகள், பைலட்டுகள் இடையே நேற்று இரவு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது. சுமார் 7 மணி நேரம் நடந்து பேச்சுவார்த்தையில் சுமூகமான நிலை எட்டப்பட்டது.

இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமான சேவைகள் மெல்ல மெல்ல மீண்டும் துவங்கியுள்ளன. இதில் சர்வதேச விமான சேவைகளும் அடக்கம்.

பேச்சுவார்தையில் எந்த வகையான சமரசம் ஏற்பட்டது என்பதை இரு தரப்பும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களை ஜெட் நிர்வாகம் மீண்டும் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டதாகவும், அதே போல ஜெட் விமானிகள் சங்கம் அமைப்பதை தவி்ர்க்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் மழையால் பாதிப்பு

அமெரிக்காவில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முக்கிய போட்டிகள் கனமழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் இப்போட்டிகள் மழை காரணமாக நேற்று முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நாளையும், இறுதிப்போட்டி 14ஆம் தேதியும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகளும் ஒத்திவைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூவான் அல்மெய்தா காலமானார்

130909.jpgகியூப புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா இதய நோயால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82.

கியூபாவின் துணை அதிபரான யூவான் அல்மெய்தா, ஃபிடல் மற்றும் ராவூல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியின் ஆரம்பகாலங்களின் போது போராடியிருந்தார்.

இந்த போராட்டத்தின் முடிவாக ஃபல்கேன்சியோ பாட்டிஸ்டாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியில் தூக்கி எறியப்பட்டது.

ஹவானாவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யூவன் அல்மெய்தா, புரட்சியாளர்கள் தலைமை பீடத்தில் இருந்த ஒரே கறுப்பினத்தவர் ஆவார்