கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமே இல்லை – சச்சின் டெண்டுல்கர்

sachin-tendulkar.jpgகப்டன் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தலைசிறந்த அணிகளுள் ஒன்று என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியில் “மேட்ச் வின்னர்கள் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது அணியில் அதிக அளவில் மேட்ச் வின்னர்கள் வந்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதன் ரகசியம் இதுவே.

துடுப்பாட்டத்திலோ அல்லது பந்து வீச்சிலோ திறமையானவர்கள் அணியில் இருக்கும் போது அணிக்கு வெற்றி நிச்சயம்தான். இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது. போட்டியின் போது குறைகள் அங்கொன்றும்,  இங்கொன்றுமாக இருந்தன. இருந்தபோதும் மொத்தத்தில் இந்தியா சிறப்பாக விளையாடியது.

கடந்த 20 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். இதில் தோனி தலைமையிலான இந்திய அணி தலைசிறந்த அணிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. நான் யாருடைய தலைமையையும் ஒப்பிட்டுப் பேசவில்லை. ஏற்கெனவே சிறந்த அணிகள் இருந்துள்ளன. அதில் ஒன்றுதான் இது என்று கூறுகிறேன்.

36 வயதில் நான் 44 வது சதம் அடித்துள்ளேன். இலங்கை மூத்த வீரர் சனத் ஜயசூரியா 40 வயதிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வயது என்பது ஆண்டுகளின் எண்ணிக்கைதான். வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமே இல்லை. எந்த வயதிலும் சிறப்பாக விளையாடி சாதனை படைக்க முடியும். அணிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம்.  நீங்கள் அணிக்காக சாதனை படைத்தீர்களா என்பது முக்கியம்.

என்னுடைய இந்த 44வது சதம் மறக்க முடியாத சதங்களுள் ஒன்றாகிவிட்டது. இதை என்னுடைய சிறப்பான சதம் என்று சொல்வேன். இலங்கையில் இறுதி ஆட்டத்தை விளையாடுவது கடினமாக இருந்தது. அங்குள்ள சீதோஷ்ண நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதிகப்படியான வெப்பத்தால் விளையாடுவதற்கு சிரமப்பட்டோம். ஆனால் அதையெல்லாம் நாங்கள் உடைத்தெறிந்து விளையாடினோம்.

நீங்கள் மனதளவில் உறுதியாக இருக்கும்போது நீங்கள் நிச்சயம் ரன் குவிக்க முடியும். அதைத்தான் நான் இலங்கையுடனான ஆட்டத்தில் செய்தேன்.நான் இன்னும் எத்தனை நாட்கள் விளை யாடுவேன் என்ன லட்சியத்தை கொண்டுள்ளேன் என்பது முக்கியமல்ல. கிரிக்கெட்டை எந்த அளவுக்கு நேசித்து அதை விளையாடுகிறேன் என்பதுதான் முக்கியம். இலங்கையுடனான இறுதி ஆட்டத்தின் போது நாங்கள் 319 ஓட்டங்கள் குவித்தோம். ஆனால் இலங்கையின் துவக்கம் அதிரடியாக அமைந்தது.

டென்னிஸ்: தரவரிசையில் கிலிஸ்டர்சுக்கு 19வது இடம்

150909kilista.jpgபெல்ஜியம் வீராங்கனை 26 வயதான கிம்கிலிஸ்டர்ஸ் குழந்தை பெற்றுக்கொண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் டென்னிசுக்கு திரும்பினார். நீண்ட நாள் டென்னிசை விட்டு விலகியதால் அவர் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் டென்னிசுக்கு திரும்பிய அமெரிக்க ஒபனை வென்று சாதனை படைத்த அவருக்கு தரவரிசையில் 19வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் டாப் 10க்குள் நுழைவதை அவர் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.

ரஷியாவின் தினரா சபீனா முதலிடத்திலும், அமெரிக்காவின் செரீனா, வீனஸ் முறையே அடுத்த இரு இடங்களிலும் உள்ளனர். இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா 74வது இடத்தில் இருந்து 63வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

ஆண்கள் தர வரிசையில் பெடரர் தொடர்ந்து நம்பர் – 01 அரியணையில் உள்ளார். 2வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் அன்டி முர்ரே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்க பகிரங்கத்தில் 4வது சுற்றிலேயே வெளியேறியதால் முர்ரேவுக்கு இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது- 3வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் ரபெல் நடால் மீண்டும் 2வது இடத்துக்கு வந்துள்ளார். அமெரிக்க பகிரங்கத்தில் பட்டத்தை வென்ற ஆர்ஜன்டினாவின் டெல்போட்ரோ ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பெற்றுள்ளார்.

அமெரிக்க பகிரங்க ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்தியாவின் லியாண்டர் பயசின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து 8 வது இடத்திலேயே நீடிக்கிறார். அவருடன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மற்றொரு இந்திய வீரர் மகேஷ் பூபதி 6வது இடத்தில் உள்ளார்.

காசா தாக்குதல்: இஸ்ரேல் போர்க்குற்றங்கள் செய்ததாகக் கூறுகிறது ஐ.நா.விசாரணை

170909gazaviolence.jpgகாசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலிய சிப்பாய்கள்
இஸ்ரேல் இந்த ஆண்டின் துவக்கத்தில் காசா நிலப்பரப்பு மீது நடத்திய தாக்குதலின்போது, போர் குற்றங்களைப் புரிந்ததாகவும், சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறியதாகவும் ஐ.நா.வின் விசாரணை கூறியுள்ளது.

இஸ்ரேல் பொது்மக்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி
பாலத்தீன ஆயுதக் குழுக்களும் போர் குற்றங்களைப் புரிந்ததாகவும், இந்த விசாரணைக்கு தலைமை வகித்த யுத்த குற்றங்கள் குறித்த முன்னாள் சட்ட நடவடிக்கை அதிகாரி ரிச்சர் கோல்ட்ஸ்டோன் கூறியுள்ளார்.

இந்த விசாரணையுடன் ஒத்துழைக்க இஸ்ரேல் மறுத்து விட்டது. இதற்கு உத்திரவிட்ட ஐநாவின் மனித உரிமை கவுன்சில் பாரபட்சமாக செயல்பட்டது என்று இஸ்ரேஸ் கூறியது.

ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று ஆரம்பம் – 12 நாடுகள் பங்கேற்பு

1509fiba-news203a.jpgஇந்தியா வில் 23வது ஆசிய பெண்கள் போட்டி இன்று சென்னையில் ஆரம்பமாகின்றது. இப்போட்டி இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 24ம் திகதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறு கிறது.

அதன் விபரம் வருமாறு:

ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு இந்தப் போட்டி கொரியாவில் நடந்தது.

24வது ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி இன்று 17ந் திகதி முதல் வருகிற 24ந் திகதிவரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங் கில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் மொத்தம் 12 நாடு கள் பங்கேற்கின்றன. தர வரிசையின் அடி ப்படையில் பிரிவு 1, பிரிவு 2 என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 1- இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்து ஆகிய நாடுகளும், பிரிவு 2- கஜகஸ்தான், லெபனான், மலேசியா, பிலிப்பைன்ஸ். இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

பிரிவு 1ல் ஒவ்வொரு அணியும் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

புள்ளிகள் அடிப் படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். பிரிவு 1ல் 5வது 6வது இடங்களை பிடிக்கும் அணிகளும் பிரிவு 2ல் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 5 முதல் 8வது இடங்களுக்கான போட்டியில் விளையாடும்.

ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி யில் இதுவரை கொரியாவே அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. இந்த அணி 12 முறை சாம்பியன் (தங்கப் பதக்கம்) பட்டம் பெற்றுள்ளது. 8 வெற்றியும், 2 வெண்கலமும் பெற்றுள்ளது. சீனா 9 முறையும் ஜப்பான் ஒருமுறையும் பட்டம் பெற்றுள்ளன. அணி அரை இறுதியில் நுழைய கடுமையாக போராட வேண்டும்.

இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ், மலே சியா அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து லெபனான், உஸ்பெகிஸ்தான், இலங்கை, கஜகஸ்தான் அணிகள் மோதுகின்றன. தொடக்க விழா நேற்று நடைபெற்றது

ஈரான், ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தைகள் துருக்கியில் ஒக்டோபர் 01ம் திகதி ஆரம்பமாகலாம்

170909iran-flag.jpgஈரானுடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகள் துருக்கியில் நடைபெறும் என ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைவர் ஜாவியர் சொலனா தெரிவித்தார். பெரும்பாலும் இப்பேச்சுக்கள் ஒக்டோபர் 01ம் திகதி ஆரம்பமாகும். யுரேனியம் செறியூட்டல் வேலைகளுடன் அணுஆயுதங்களை விருத்தி செய்யும் ஈரானின் முயற்சிகளில் மேற்கு நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.

இவை பற்றித் தெளிவான விளக்கங்களை ஈரான் இப்பேச்சுவார்த்தையின் போது வெளியிடும். உலக வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகளும் ஈரான் பிரதிநிதிகளும் இப் பேச்சுக்களில் பங்கேற்பர். பேச்சு நடைபெறும் இடம்பற்றி இன்னும் இறுதி முடிவில்லை.

ஷவ்வால் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு

ramadan-mosque.jpgஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (19) சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.09 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கின்றது.

அவ்வாறு ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 0112390783, 2432110, 2434651, மற்றும் 0777366099 தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறி யத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸாவியாக்கள், தக்கியாக்கள் ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாவோயிஸ்டுகளிடம் இந்தியா தோற்கிறது: மன்மோகன் சிங்

170909ndianmaoistnaxal.jpgஇந்தியா வில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தாங்கள் தோல்வியடைந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்களிடையே மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், மாநில காவல்துறை தலைவர்களிடையே உரையாற்றிய போதே மன்மோகன் சிங் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ஏழைகளின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் மத்தியப் பகுதியில் பெருமளவிலான நிலப்பரப்பில் அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்சியையும் அவர்களே நடத்தி வருகிறார்கள்.

மீண்டும் புத்துணர்வு பெற மாவோயிஸ்டுகள் எடுத்துவரும் போராட்டங்களின் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆறு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈரான்

170909iran-flag.jpgஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும்,  6 நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் துருக்கியில் நடைபெறவுள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை வகுக்கும் பிரிவின் தலைவர் ஜாவியர் சொலோனர் தெரிவித்தார்.  இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா,  ரஷ்யா, பிரிட்டன்,  பிரான்ஸ்,  சீனா மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் பங்கேற்பர். ஈரான் சார்பில் அதன் அணுசக்தித் திட்ட முக்கிய அதிகாரியான சய்யீத் ஜலிலி பங்கேற்பார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தையின் போது உலக நாடுகளுடனான வர்த்தகம்,  பொருளாதாரத் தடை குறித்த விஷயங்களும் விவாதிக்கப்படும் என்றார் அவர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பிறகு, ஈரானுடன் நடைபெறவிருக்கும் முதலாவது உயர் நிலையிலான பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரான் விஷயத்தில் வெளிப்படையான கொள்கையைப் பின்பற்றுவதற்கான முயற்சிகளை ஒபாமா மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ராஜீயத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடைசியாக கடந்த ஆண்டு,  ஜூலை மாதம் ஜெனீவாவில் ஈரானுக்கும்,  அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வல்லரசு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பிரேமதாச மைதானத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டெண்டுல்கர்

sachin-tendulkar.jpgகொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் 138 ஓட்டங்கள் சேர்த்தார். அவர் 42 ஓட்டம் எட்டிய போது இந்த மைதானத்தில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.

டெண்டுல்கர் இங்கு 27 ஒரு நாள் போடியில் ஆடி 4 சதம் உட்பட 1096 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த மைதானத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜயசூரிய, அத்தபத்து, அரவிந்த டி சில்வா, ஜயவர்தன, சங்கக்கார ஆகியோர் ஏற்கனவே 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளனர். அந்த வரிசையில் டெண்டுல்கர் 6 வது இடம் பெற்றுள்ளார்.

* டெண்டுல்கர் நேற்று முன்தினம் அடித்தது அவரது 44 வது ஒரு நாள் போட்டி சதமாகும். இலங்கைக்கு எதிரான 8வது சதமாகும்.

* இலங்கை அணி கப்டன் சங்கக்கார வித்தியாசமான முறையில் (ஹிட் விக்கெட்) ஆட்டம் இழந்தார். அவர் ஆர். பி. சிங் வீசிய பந்தை முன்னால் இறங்கி அடிக்க முற்பட்டார். அப்போது பேட் கையில் இருந்து நழுவி தலைக்கு மேல் பின்னோக்கி சென்று ஸ்டம்பில் விழுந்தது.

* இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கண்டுள்ளது. கடைசியாக 1998 ம் ஆண்டு கொழும்பில் நடந்த சிங்கர் – அகாய் நிடாஹாஸ் கோப்பைக்கான 3 நாடுகள் இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்று இருந்தது.

அதன் பிறகு இந்திய அணி, இலங்கையுடன் 7 இறுதிப் போட்டிகளில் மோதியதில் 5ல் தோல்வி கண்டுள்ளது. 2002ம் ஆண்டு நடந்த சம்பியன்ஸ் கோப்பையின் இரண்டு இறுதிப் போட்டியும் மழையால் ரத்துச் செய்யப்பட்டது. இதனால் இரு அணிகள் இணைந்து சம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

* முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற பிறகு இந்திய அணி கப்டன் டோனி கூறுகையில், ‘இந்த வெற்றியை சமீபத்தில் மறைந்த இந்திய கிரிக்கெட் சபை முன்னாள் தலைவர் துங்கர்பூருக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்றார்.

அவுஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது மீண்டும் தாக்குதல்: மூவர் காயம்

அவுஸ்திரேலியாவில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 30 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

கடந்த மாதம் அவுஸ்திரேலியா சென்ற அமைச்சர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம், இனிமேல் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவுஸ்திரேலியா உறுதி அளித்தது.

இந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு மாதம் முடிவதற்குள் அங்கு மீண்டும் 3 இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அவர்களில் சுக்தீப் சிங் (வயது 26), அவரது சகோதரர் குர்தீப் சிங் ஆகியவர்கள் மாணவர்கள். இன்னொருவர் இவர்களின் உறவுமுறையைச் சேர்ந்தவர்.

மெல்போர்ன் நகரின் கிழக்கு புறநகர் பகுதியில் இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒரு மதுபான விடுதியில் நடந்த விளையாட்டில் கலந்துகொண்டனர். அப்போது அங்கு விருந்தில் கலந்துகொண்டிருந்த 70 இளைஞர்கள் அவர்களிடம் வந்து வம்பு இழுத்து, ஒழுங்காக உங்கள் நாட்டுக்கு போய்விடுங்கள் என்று எச்சரித்ததுடன், கேலியும் கிண்டலும் செய்தனர்.

இந்தியர்கள் உடனே எதற்கு வம்பு என்று நினைத்து தங்கள் கார்களில் ஏறிச்செல்ல முயன்றனர். அப்போது 70 பேரும் மாணவர்கள் இருவர் மற்றும் அவர்களது உறவினர் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.

இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த போலிஸார் 70 பேரில் 6 பேரை கைது செய்தனர்.