::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

ஒருநாள் தொடரும் இலங்கை வசம்

0308mahela.jpgபாகிஸ் தானுடனான ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடரில் நேற்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்மூலம் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரையும் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் இலகுவாக கைப்பற்றிக்கொண்டது. இலங்கை மண்ணில் பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் தொடரொன்றை இலங்கை அணி வெற்றி கொண்டமை இதுவே முதற்தடவை.

நேற்றைய போட்டியில் முதல் விக்கட்டுக்காக வேண்டி மஹேல ஜயவர்தன உபுல் தரங்க ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதலாவது விக்கட்டுக்கான 202 ஓட்டங்களை இணைப்பாட்ட ஓட்டமாக பெற்றனர். பாக்கிஸ்தான் முதலாவது விக்கட்டுக்கான பெறப்பட்ட கூடிய இணைப்பாட்டமாக இதேநேரம், தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் ஒரு அணி பெற்ற கூடுதலான ஓட்டமாக 289 ஓட்டத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டது. இம் மைதானத்தில் ஒருநாளில் இரு அணிகளும் 577 ஓட்டங்களைப் பெற்றன. இதுவும் தம்புள்ளை மைதான சாதனையாகும்.

ஏற்கனவே இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இலங்கை வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 07ஆம், 02ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தின் ஸ்கோர் விபரம் வருமாறு:

PAKISTAN

Kamran Akmal c Sangakkara b Mathews 45
Nasir Jamshed c Samaraweera b Thushara 1
Younus Khan run out 44
Shoaib Malik c Sangakkara b Fernando 12
Umar Akmal b Muralitharan 66
Fawad Alam c and b Mathews 13
Shahid Afridi b Muralitharan 32
Abdul Razzaq c Jayawardene b Kulasekara 30
Rana Naved not out 30
Mohammad Aamer not out 4

EXTRAS: (b1, w10) 11
TOTAL (for 8 wkts, 50 overs) 288
Did not bat: Saeed Ajmal.

Fall of wickets: 1-9 (Jamshed), 2-80 (Akmal), 3-101 (Malik), 4-107 (Younus),
 5-149 (Alam), 6-190 (Afridi), 7-226 (Naved), 8-266 (Razzaq).
Bowling: Kulasekara 10-0-74-1, Thushara 10-0-46-1 (w7), Fernando 10-1-62-1, Mathews 10-0-41-2, Muralitharan 10-0-64-2 (w3)

SRI LANKA

U. Tharanga lbw b Ajmal 76
M. Jayawardene c Alam b Razzaq 123
K. Sangakkara not out 37
T. Samaraweera c and b Ajmal 0
T. Kandamby b Aamer 32
C. Kapugedera not out 8

EXTRAS:(B-1, LB-4, W-8) 13
TOTAL (for 4 wkts, 46.3 overs) 289
Did not bat: Angelo Mathews, Nuwan Kulasekara, Dilhara Fernando, Muttiah Muralitharan, Thilan Thushara.

FALL OF WICKETS:1-202 (Tharanga), 2-210 (Jayawardene), 3-212 (Samaraweera), 4-268 (Kandamby).

BOWLING: Aamer 9.3-1-45-1 (w2), Razzaq 9-0-62-1 (w1), Naved 7-0-41-0, Afridi 6-0-45-0 (w1), Ajmal 9-0-54-2 (w1), Malik 6-0-37-0 (w3)

உலக ரெபிட் செஸ் சம்பியன் ஷிப் போட்டி: ஆனந்த் பின்னடைவு

viswanathananand.jpgஜெர் மனியில் நடக்கும் உலக ரெபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் நகரில் உலக ரெபிட் செஸ் சம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஆனந்த் (இந்தியா), அரோனியன் (அர்மேனியா), நெபோனியாட்சி (ரஷ்யா), நெய்டிட்ச் (ஜெர்மனி) உள்ளிட்ட நான்கு வீரர்கள் விளையாடுகின்றனர்.

நடத்த முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஆனந்த், அரோனியன் மற்றும் நெபோனியாட்சியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் நெய்டிட்சை வீழ்த்தினார். இதன் மூலம் ஆனந்த் ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அரோனியன் மற்றும் நெபோனியாட்சி 2.5 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இத் தொடரில் பத்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்த், இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாக போராட வேண்டிய கட்டா யத்தில் உள்ளார்.

உலக நீச்சல் போட்டி முடிவில் 43 உலக சாதனைகள் முறியடிப்பு

pelps2.jpgஇத்தா லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி 43 உலக சாதனைகளோடு முடிவடைந்தது.இத்தாலியின் ரோம் நகரில் நேற்று முடிவடைந்த இந்த போட்டிகளுள் 8 நாட்கள் நடந்த நீச்சல் போட்டிகளில் 43 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதில் பெரும்பாலான உலக சாதனைகள் சர்ச்சைக்குரிய உயர் தொழில்நுட்பத்திலான நீச்சல் உடையை பயன்படுத்தி முறியடிக்கப்பட்ட உலக சாதனைகளாகும். இந்த நீச்சல் உடைக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் தடைவிதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீற்றர் பிரீ ஸ்டைல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் போட்டி முடிவில் 5 தங்கப்பதக்கங்களை தட்டிச்சென்றார். அவர் 100, 200 மீற்றர் பட்டர்பிளை, ரீலே போட்டிகளில் அமெரிக்காவுக்கு தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்தார்.

இறுதியில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனா 11 தங்கப்பதக்கங்களை வென்று முதலாம் இடத்தை பகிர்ந்துகொண்டன. அடுத்ததாக ரஷ்யா 8 தங்கப் பதக்கங்களை வென்று 2 ஆவது இடத்தை பிடித்ததோடு ஜெர்மனி 7 தங்கப்பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தை பிடித்தது.

இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி – மஹேல ஆட்ட நாயகன்

0308mahela.jpgபாகிஸ் தானுடனான 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பு செய்ய முடிவு எடுத்தது

முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி  50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 288 ஓட்டங்களை பெற்றது. கம்ரன் அக்மல் 45 ஓட்டங்களையும்,  யூனுஸ் கான்  44 ஓட்டங்களையும்,  உமர் அக்மல் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் குலசேகர  10  0  74  1, மிரண்டோ  10  0  46  1, பெர்னாண்டோ  10  1  62  1, மதேவ்ஸ்  10  0  41  2,  முரளிதரன்  10  0  64  2,

பின்னர் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 46.3 ஓவர்களில் 289 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. அதிகபட்சமாக மஹேல 123 ஓட்டங்களையும்,  தரங்க 76 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் கபுகெதர ஆட்டம் இழக்காமல் 08 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மொதம்மாத் ஆம்  9.3  1  45  1,  அப்துல்  9  0  62  1,  சகிட் அபிரிடி  6  0  45  0 , அஜ்மல்  9  0  54  2,  மாலிக்  6  0  37  0  

மஹேலக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

35 ஆவது தேசிய விளையாட்டு போட்டியின் கூடைப்பந்தாட்ட போட்டி மட்டக்களப்பில்

basketball.jpg35 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டம் மற்றும் ஜூடோப் போட்டி என்பன கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாகக் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த அணிகள் மட்டக்களப்பை வந்தடைந்த நிலையில், ஜூடோ போட்டி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் கூடைப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மைதானத்திலும் சென் மைக்கல்ஸ் தேசிய பாடசாலை மைதானத்திலும் ஆரம்பமானது.

இந்நிகழ்வுகளை அமைச்சர் வி.முரளிதரன் ஆரம்பித்து வைத்ததுடன் 35 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு புனித சிசிலியா புதிய பெண்கள் பாடசாலை, சென்.மைக்கல் தேசிய பாடசாலையிலும் கூடைப்பந்தாட்ட மைதானம் புனரமைப்புச் செய்ததுடன் கிரான் மகா வித்தியாலயத்தில் புதிய கூடைப்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற 35 ஆவது தேசிய விளையாட்டு விழா ஆரம்ப வைபவத்தில் புனரமைக்கப்பட்ட மைதானத்தை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் திறந்து வைத்ததுடன் விளையாட்டினையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன் விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டீ.வீ.தஸா நாயக்க, அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் உட்பட பல உயரதிகாரிகள், அரச அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீச்சலில் 5 நாட்களில் 29 புதிய சாதனைகள்!

pelps2.jpgஇத்தாலி யில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் ஐந்து நாட்களில் 29 உலக சாதனைகள் முறியடிக்கப்படடன. தொடர்ந்து உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. போட்டியின் 5 ஆவது நாளான நேற்று மாத்திரம் 7 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை புதிதாக 29 உலக சாதனைகளின் நிலைநாட்டப் பட்டுள்ளன.  போட்டிகளில் மேலும் 3 நாட்கள் எஞ்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 200 மீற்றர் மெட்லே போட்டியில் அமெரிக்காவின் ரயான் லொச்டே 1 நிமிடம் 54.10 வினாடிகளில் போட்டித் தூரத்தை நீந்தி முடித்து ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்பிஸின் உலக சாதனையை முறியடித்தார். பெல்ப்ஸ் இம்முறை தொடரில் பறிகொடுக்கும் இரண்டாவது உலக சாதனை இதுவாகும்.

இதனிடையே இம்முறை உலக சாதனைகள் முறியடிக்கும் வேகம் அதிகரிப்பதற்கு வீர, வீராங்கனைகள் உயரிய தொழிநுட்பத்திலான நீச்சல் உடைகளை பயன்படுத்துவதே காரணம் என்று பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு முன்னாள் நீச்சல் வீரர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இம்முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் உலக சாதனைகள் முறியடிக்கப்படாமல் முடிவடைந்த போட்டிகள் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும

இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

pakisthan-cri.jpgபாகிஸ் தானுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வெற்றியீட்டியது.

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பாகிஸ்தான்  அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. கடைசி வரிசையில் முதம்மத் 24 ஓட்டங்களையும், அஜ்மல் 16 ஓட்டங்களையும், பெற்றதன் மூலம் பாகிஸ்தான்  அணி சற்றுக் கூடிய ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்களில் 169 ஓட்டங்களைப் பெற்று  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றியீட்டியது. அதிகபட்சமாக கபுகெதர  ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களையும்  சமரவீர  ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும்  பெற்றனர். கபுகெதரக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

3வது போட்டியிலும் பங்களாதேசம் வெற்றி

shakib-al-hassan.jpgமேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியிலும் பங்களாதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகளையும் வென்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பட்டை நாமம் போட்டுள்ளது.

சகலதுறை ஆட்டக்காரர் முகமதுல்லா 51 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த பங்களாதேச அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகளி்ல் ஆடியது. இதில் இரண்டிலும் வென்று தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

பின்னர் ஒரு நாள் போட்டிகள் தொடங்கின. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றி மேலும் ஒரு சாதனையைப் படைத்தது. இந்த நிலையில் பாசதீரேவில் நடந்த 3வது போட்டியிலும் வென்று பெரும் சாதனை படைத்து விட்டது. ஒரே நேரத்தில் பங்களாதேச அணி இப்படி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை அமோகமாக கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

இப்போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேசம்  வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பட்டை நாமம் போட்டு விட்டது. சகலதுறை ஆட்டக்காரர்  முகமதுல்லா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்கள் எடுத்தும், 2 விக்கெட்களை வீழ்த்தியும் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆட்ட நாயகனாக முகமதுல்லாவும், தொடர் நாயகனாக பங்களாதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் தேர்வு செய்யப்பட்டனர்.

இலங்கை பாகிஸ்தான் இன்று 2 வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம்.

cricket1.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 36 ரன் வித்தியாசத்தில் வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.

சூறாவளி பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஓய்வு பெறுகிறார்

murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரும், உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளவருமான முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளார்.

இதுகுறித்து முரளீதரன் கூறுகையில், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் எனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும். அப்போது எனக்கு 38 வயதாகி விடும். எனவே இதுதான் ஓய்வு பெற சரியான சமயம் என நான் கருதுகிறேன். இருப்பினும் ஒரு நாள் போட்டிகள், டுவென்டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

அடுத்த உலகக் கோப்பைப் போட்டி வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு டுவென்டி 20 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்றார் முரளீதரன். 1992ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் முரளீதரன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பெரும் சாதனையாளர் முரளீதரன். முரளிக்கும், ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னுக்கும் இடையில் உலக சாதனை படைப்பதில் கடும் போட்டா போட்டி நிலவியது.

இதில் முதலில் சாதனை படைத்தவர் ஷான் வார்ன். இருப்பினும் 2007ம் ஆண்டு வார்னின் சாதனையை (708 விக்கெட்கள்) முறியடித்து புதிய சாதனை படைத்தார் முரளீதரன். தற்போது 127 போட்டிகளில் ஆடி 770 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிரார் முரளீதரன். இவரது பந்து வீச்சு சரசாரசி 22 ஆகும். 800 விக்கெட்களை வீழ்த்தக் கூடிய திறமை இன்னும் முரளியிடம் உள்ளது.

ஒரு நாள் போட்டிகளிலும் முரளீதரன்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளஆர். ஒரு நாள் போட்டிகளில் முரளிதரன் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 507 ஆகும். இலங்கை அணியின் அசைக்க முடியாத சொத்தாக இருப்பவர் முரளீதரன். அவரது ஓய்வு நிச்சயம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழர் முரளீதரன் என்பது குறிப்பிடத்தக்கது.