ஜெயபாலன் த

ஜெயபாலன் த

TNA பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறும்! ஏகபோகப் பிரதிநிதித்துவத்தை இழப்பர்! : த சோதிலிங்கம் & த ஜெயபாலன்

imagescavpjl09.jpgஇம்முறை தேர்தலில் வடகிழக்குப் பகுதிகளில் எல்லா விதமான தேர்தல் பிரச்சார முறைகள், தந்திரங்கள் யுக்திகளையும், சுதந்திரமாகப் பயன்படுத்தியுள்ளனர். வெறுமனே சுவரொட்டிகள், கூட்டங்கள் என்று மட்டும் இல்லாமல், வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்பதும், தங்கள் சின்னங்களை வாகனங்களில் கொண்டுசென்று ஊர் ஊராக திரிந்து ஒலிபெருக்கி பாவித்து பிரச்சாரங்கள் மேற்கொள்வதுடன், தங்கள் தொகுதிகளில் பெருமளவு கட்சிக் கூட்டங்களையும் நடாத்தியுள்ளனர். தெரு நாடகங்கள் கூட இந்த தேர்தல் பிரச்சாரங்களில் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் பிரச்சாரங்கள் பலவழிகளிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தெருநாடகங்களை பல்வேறு கட்சிகள் நடாத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சகல கட்சியினரும் வீடு வீடாகப்போய் வாக்குக் கேட்பது வழமைக்கு மாறாகவே நடைபெற்றுள்ளது. இன்று (6.4.2010) தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

சுயேட்சைக் குழுக்களைப் பொறுத்த வரையில் அவர்களிடம் பாரிய பணவசதிகள் இருந்திருக்கவில்லை. ஆனால் பெரிய கட்சிகளைப் பொறுத்த வரையில் குறிப்பாக அரசு அரசுசார் கட்சிகள் ஈபிடிபி மற்றும் மக்கள் சுதந்திரமுன்ணணி மிகப் பணப் பலத்தைக் காட்டிய தேர்தல் பிரச்சாரமாக இருந்திருக்கிறது. இதைவிட ரிஎன்ஏ யில் இருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமாரின் கட்சிகூட தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. இந்தத் தேர்தல் பிரச்சாரங்களில் வாகன தொடர் பிரச்சார அணிகள் இயங்கியுள்ளது. அதாவது 6, 7 வாகனங்கள் தொடர்ச்சியாக ஒலிபெருக்கியுடன் வடகிழக்குப் பகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் போய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் குறிச்சிகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. அண்மைய எந்தக் காலத்திலும் இல்லாதளவு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் இதர பகுதிகளில் இதுபோன்ற பிரச்சாரங்கள் நடைபெற்றிருந்த போதும் வடகிழக்கில் நீண்ட காலங்களுக்கப் பின்னர் இதுதான் முதல்தரம் இப்படியான பிரச்சாரங்கள் நடைபெறுகின்றது.

தேர்தல் வன்முறைகள் எனும்போது ஆங்காங்கு சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் சில ஜரோப்பாவில் உள்ள ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டு தேர்தல் வன்முறை என்றும், ஜனநாயக மீறல்கள் என்றும் சித்தரிக்க முற்பட்டுள்ளன. ஆனால் தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாகவே நடைபெற்றுள்ளது முக்கியமாக நாம் இதை கூறுவது என்பது 9 ஆசனங்களுக்கு 324 வேட்பாளர்கள் தேர்தலில் நிற்கும்போது வன்முறைகள் இல்லாதிருப்பதாகவே நாம் இதைக் கருத வேண்டும். சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளது, வாகனங்களுக்கு கல் எறியப்பட்டுள்ளது. இவைகளை பாரிய வன்முறைச் சம்பவங்களாக நாம் சொல்ல முடியாது.

மற்றும் முக்கியமாக ஈபிடிபி மீதும் குற்றம் சாட்டப்பட்டு வெளிவந்த சாகவச்சேரி மாணவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவலாக யாழில் பேசப்பட்டது இதை உதயன் பத்திரிகை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதை ஈபிடிபியுடன் தொடர்புபட்ட சம்பவம் எனவும் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதை ஈபிடிபி முற்றாக மறுத்துள்ளது. மேலும் உதயன் பத்திரிகையின் உரிமையாளர்கள் ரிஎன்ஏயின் முக்கிய வேட்பாளர்களாக இருப்பதால் இந்த செய்தியின் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

சுயாதீனமாக இயங்க வேண்டிய ஊடகங்களைச் சார்ந்தவர்கள், உரிமையாளர்கள் இம்முறை தேர்தலில் குதித்துள்ளனர் குறிப்பாக உதயன் சரவணபவன், வீரகேசரி சிறீகஜன். இதன் காரணமாக பத்திரிகை ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஈபிடிபியை சாகவச்சேரி மாணவனின் கொலையுடன் சம்பந்தப்படுத்தி உதயன் மட்டுமே செய்தி வெளியிட்டிருந்தமை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உதயன் பத்திரிகை தனது கட்சிப் பிரச்சாரத்திற்கான முக்கிய இயந்திரமாக வட கிழக்கில் செயற்படும் போது இப்பத்திரிகைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

வடகிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் தேர்தலில் பாரிய ஆர்வம் காட்டவில்லை ஆனால் வேட்பாளர்கள் கடுமையான பிரச்சாரப் போட்டிகளில் ஈடுபட்டுள்ளனர். 9 வேட்பாளர் தெரிவுக்கு 324 பேர் போட்டியிடுவதை பலபேர் பங்கு பற்றும் ஜனநாயகமாக பார்க்கப்படுகின்ற போதிலும் இந்த அதீததொகையான பங்கெடுப்பு ஒரு ஜனநாயக கேலிக்கூத்தாகவே தெரிகிறது.

பயங்கரவாதம் ஆயுத வன்முறை இருந்தகாலத்தில் மக்கள் அடக்கப்பட்டிருந்ததின் பின்னர் ஜனநாயக சூழ்நிலை ஏற்ப்பட்டபோது மக்கள் தாமே பிரதிநிதித்துவம் கொடுக்க முன்வருகிறார்கள் என்று பார்க்க நாம் முனைகின்ற போதிலும், இந்த தொகையான வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பது ஒரு சமனற்ற நிலைமை உள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கிறது. இது மக்களையும் தேர்தலில் இருந்து என்ன இது? ஏன் இது? என்ற யோசனையை உருவாக்கிவிட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 2 லட்சத்து 50ஆயிரம் வாக்காளர்கள், 324 வேட்பாளர்கள் என்பது ஒரு சிரிப்பாகவே உள்ளது.

யாழ் மற்றும் வட-கிழக்குப் பகுதிகளில் பொலீஸ் இராணுவ பாதுகாப்புப் படையினர் மிகவும் நடுநிலைமையாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாரபட்சமாகவோ அல்லது சார்ந்தோ நடந்ததாக எந்த தகவல்களும் இல்லை. பணபலம் பொருந்திய கட்சிகள் மிகவும் மும்முரமாகவே உதாரணமாக அரசசார்பு கட்சிகள் முன்னணியிலிருந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் அரசினால், பொலீசாரினால், அரச போக்குவரத்து சேவைகளினால், ஈபிடிபியினால் சில இடைஞ்சல்கள் ஏற்ப்படுத்தப்பட்டதாக சில தேர்தல் பிரச்சாரஙகளில் ஈடுபட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தினர். ஆனால் இம்முறை இப்படியான கருத்துக்கள் எழுவதற்க்கு கூட சந்தர்ப்பம் இல்லாமல் அரசு விடயங்களை கவனித்துக் கொண்டுள்ளது. வடகிழக்கில் எந்தப் பகுதிக்கும் யாரும் போகக்கூடிய சூழ்நிலைகள் உள்ளது. இரவிலும் கூட சுதந்திரமாக நடமாட முடிகிறது.

யாழில் ஜனாதிபதி பேசிய விடயம் தமிழர்களை இழிவுபடுத்தியதாக ஜரோப்பாவில் நடைபெறும் பிரச்சாரங்கள் உட்பட மற்றய எந்தப் பிரச்சாரங்களும் இலங்கை வட கிழக்குப்பகுதிகளில் பிரதிபலிப்பை செய்வதாக இல்லை. அரசு மீது தமிழ் மக்கள் எதிர்ப்புணர்வை வைத்திருக்கிறார்கள் அதை பிரதிபலித்து தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கிறார்களே தவிர மற்றும்படி அரச மேற்கொள்ளும் எந்த நடவடிக்கை மீதும் மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அரசு மீதுள்ள வெறுப்பு போன்றே தமிழ் மக்கள் தமிழ் கட்சிகள் மீதும் வெறுப்பாக இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது, இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டாததிற்கும் இந்த தமிழ் கட்சிகள் மீதுள்ள வெறுப்பும் ஒரு காரணமாகவே உள்ளது.

தற்போது இந்த தேர்தலில் நிற்கும் தமிழ் வேட்பாளர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் அல்ல என்ற எண்ணப்பாடு மக்களிடையே பரவலாக உள்ளது. மக்கள் தேர்தலில் ஆர்வமாக இல்லாததிற்கு இதை முக்கிய காரணமாக கூறமுடியும்.

இந்த தேர்தலில் ரிஎன்ஏ ஏகப்பிரதிநிதித்துவத்தை இழந்து விடும். கடந்த தேர்தலில் 22 ஆசனங்களைப்பெற்ற ரிஎன்ஏ இம்முறை பத்து ஆசனங்களுக்கு உள்ளாகவே தமது பிரதிநிதித்தவத்தை பெறும் என்பதே இந்த சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது தெரிகின்றது ஆனால் வடகிழக்கு பகுதிகளில் பெரும்பான்மை ஆசனங்களை ரிஎன்ஏ தான் பெறும் நிலை உள்ளது ஆனால் ஏகப்பிரதிநிதித்துவத்தை இழந்துவிடுவார்கள்.

வடகிழக்குப் பிரதேசங்களில் 25 சதவிகித ஆசனங்களை தமிழ் மக்கள் இழப்பர் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பெரும்பாலும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி போன்ற பிரதேசங்களில் 5 அல்லது 6 ஆசனங்களை முஸ்லீம் அல்லது சிங்கள பிரதிநிதிகளுக்கு இழந்து விடுவர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது தமிழர்களில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அண்ணளவாக 25 சதவிகித்ததால் குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளது. மக்கள் பல்வேறு கிராமங்களுக்கு மீள் குடியேற்றப்படாமலும் அரசின் உத்தரவை எதிர்பார்த்தும் உள்ளனர். இம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு திட்டவட்டமான கால அட்டவணை அரசு வழங்காமல் இருப்பது அந்த மக்களுக்கு அரசுமீது மிகுந்த வெறுப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

முகாம்களில் உள்ள கிளிநொச்சி மக்கள் தமிழ் அரசியற் கட்சிகள், தமிழ் தேர்தல் வேட்பாளர்கள் மீது மிகவும் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்கள், தமிழ் அரசியல்வாதிகள் மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளனர். என்றுமே தங்களிடம் வராத கட்சிகள் வேட்பாளர்கள் தமது முகாம் நிலைமைகளை கவனத்தில் கொள்ளாதவர்கள் எல்லோரும் இன்று தமது வாக்கு தேவைக்காக, தமது சுயநலத்திற்காக தம்மிடம் படையெடுத்து வந்துள்ளதாக கோபம் கொண்டுள்ளனர். இம்மக்களைப் பொறுத்தவரையில் இத்தமிழ் வேட்பாளர்கள் தமது சுயலாபத்ததிற்காகவே தேர்தலில் நிற்பதாகவும் மக்கள் நலன் என்பது இவர்களின் வேசம் என்றே கருத்துத் தெரிவித்தனர்.

இந்த தேர்தலின் போக்கில் முக்கிய கருத்தாக உள்ள வேறு ஒருவிடயம் என்னவெனில் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் ரிஎன்ஏயிலிருந்து பிரிந்து தேர்தலில் நிற்கும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (காங்கிரஸ்) மீதும் மிகப்பெரும் அதிருப்தி உள்ளது. இந்த காங்கிரசின் தேர்தல், புலம்பெயர் மக்களின் அரசியலை நிர்ணயிக்கிற தேர்தலாகவும் இத்தேர்தல் அமையப்போகிறது. அதாவது புலம்பெயர் மக்களின் அரசியல் ஆதரவு கொண்ட இந்த தமிழ்தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வட கிழக்கில் தமிழ்மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதே உண்மை.

இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மீது மிகுந்த சந்தேகம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ளது இலங்கை அரசு பல்வேறு சுயேட்சைக் குழுக்களை தேர்தலில் நிறுத்தியுள்ளது. அரசு நிதியினை வழங்கி தேர்தலில் போட்டியிட வைத்துள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதே குற்றச்சாட்டு இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மீதும் உள்ளது. இலங்கை அரசின் ஆதரவுடன் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிக்கவே போட்டியிடுகிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது.

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவப்படுததும் கட்சியாக ரிஎன்ஏ தான் உள்ளது. காரணம் மாற்று, புதிய மாற்றுக்கட்சிகள் இல்லாததால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் ரிஎன்ஏ தான் என்ற எண்ணப்பாடு மக்களிடம் உள்ளது. இதனால் அரசு ரிஎன்ஏயை இந்நிலையிலிருந்து வீழ்த்த பல வழிகளிலும் முயற்ச்சிக்கின்றது. இதன் ஒரு நிலையே ரிஎன்ஏயை தடைசெய்ய வேண்டும் என்று கூறுவதும் ரிஎன்ஏ யை விடமோசமாக பிரிவினை கூறும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற (காங்கிரஸ்) கஜேந்திர குமாரின் கட்சியைப்பற்றி எதுவுமே பேசாமல் இருப்பது வெளிப்படையாகவே மக்களுக்குப் புரிந்துள்ளதை இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மக்களிடமிருந்து அன்னியப்பட்டவர்களாகவே தெரிகிறது. இவர்கள் இந்தத் தேர்தலில் முற்றாக இழக்கும் வாய்ப்புக்கள் உண்டு. சில சமயங்களில் ஒரு ஆசனம்கூட கிடைக்காமலும் போகலாம்.

சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் உட்பட இடதுசாரி முன்னணி மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளனர். இன்று மிக முக்கிய போட்டியாளர்களாக யுஎன்பி, ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஈபிடிபி உட்பட), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ரிஎன்ஏ இவர்களுக்கிடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. சுயேட்சைக் குழுக்களில் யாரும் முன்னணியாளர்களாகத் தெரியவில்லை. இவர்களை அரசு வாக்குகளை சிதறடிக்கவே பயன்படுத்துகிறது. தமிழ் மக்களின் பாராளுமன்றப் போராட்டம் பயனளிக்காமல் ஆயுதமேந்திப் போராடித் தோற்ற பின்னரும் இன்றைய தேர்தல் நிலைப்பாட்டை நோக்கையில் தமிழ் மக்கள் இலங்கை அரசு மீதான நம்பிக்கையை இழந்திருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. ஆயுதப் போராட்த்தின் தோல்வியும் இயலாமையும் ஒரு காரணம் எனலாம். இவ்வளவு இழப்பினாலும் பெறாத அரசியல்த்தீர்வை இந்தத் தேர்தலால், அரசியலால் பெற முடியும் என தமிழ்மக்கள் நம்பவில்லை. இந்த ஒட்டுமொத்த விரக்தி தமிழ்மக்களை அரசியலில், தேர்தலில் ஆர்வமற்ற போக்கை உருவாக்கியுள்ளது.

இத்தேர்தலில் உள்ள அடுத்த முக்கிய விடயம் சாதிய அடிப்படையிலான தேர்வுகளாகும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஈபிடி கட்சி சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவே பார்க்கப்பட்டும் அறியப்பட்டும் வந்துள்ளது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவு முழுமையாக ஈபிடிபிக்கும் கல்விநிலையில் வளர்ந்த மற்றவர்கள் ஈபிடிபியை ஒதுக்கிப் பேசும்நிலையும் மிகவும் வெளிப்படையாகவே யாழ்ப்பாணத்தில் தென்படுகிறது. இது யாழ்ப்பாணத்தில் ஒரு முக்கிய விடயமாக இருப்பதற்கு இந்த 9 ஆசனங்களுக்கான தேர்தல் போட்டியும் ஒரு முக்கிய காரணமாகும்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் சாதிரீதியாக ஒடுக்கப் பட்டவர்களின் சார்பாகப் போட்டியிடுவது ஈபிடிபிக்கு ஒரு போட்டியாக இருக்குமோ என்ற நிலை எழுந்துள்ள போதிலும் இந்த சிறுபான்மை தமிழர் மகாசபையினர் சுயேட்சையாகப் போட்டியிடுவது வாக்கு வங்கியில் பெரிய பங்கினைப் பெறமுடியாதவர்களாகவே உள்ளனர். இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தை யாழில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர் சந்திரகுமாரும் கொண்டிருந்தார். சந்திரகுமார் ஈபிடிபி 4 ஆசனங்களைப் பெறும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்த போதிலும், ஈபிடிபி பெரும்பாலும் ஓரிரு ஆசனங்களைப் பெறும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் இம்முறை தேசியப் பட்டியலில் கிடைக்கும் ஆசனங்கள் பெரும்பாலும் ஈபிடிபியினர்க்கே கிடைக்கும். ஈபிடிபியினரின் வாக்குவங்கி சிதைவடையாமல் இருப்பதுவும், தமிழ்த் தேசிய கூட்டணியினரின் வாக்குவங்கி சிதைவடைந்து இருப்பதையும் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.

வடக்கில் பெரும்பான்மை ஆசனங்களை ரிஎன்ஏயும் (10 அல்லது அதற்குக்குறைவாகவும்) ஈபிடிபி இரு ஆசனங்களையும், யுஎன்பி இரு ஆசனங்களையும், அரசுசார் மக்கள் தேசிய முன்னணி இரு ஆசனங்களையும் பெறும் சந்தர்ப்பங்கள் உள்ளது. கிழக்கில் தமிழ் மக்கள் புலிகள் இரு ஆசனங்களையும், திருகோணமலையில் ஒரு ஆசனம் சம்பந்தருக்கும், மற்றைய ஆசனங்கள் சிங்களவர்களுக்குமே போகலாம். (திருகோணமலையில் இரு தமிழ் ஆசனங்கள் இருந்திருந்தன.) வன்னியில் 3, 4 ஆசனங்கள் ரிஎன்ஏக்கும், சித்தார்த்தனுக்கு ஒரு ஆசனமும், பதியுதீனுக்கு ஒரு ஆசனமும் கிடைக்கலாம்.

TNA உள்ள ரெலோவை ஓரம்கட்டவே – வன்னியில் போட்டியிடும் செல்வம் அடைக்கலநாதனை தோற்கடிக்கவே – சூசைதாசனை வன்னியில் ரிஎன்ஏ நிறுத்தியதாக கருத்து உள்ள போதிலும் செல்வம் அடைக்கலநாதன் வன்னியில் வெற்றிபெறும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது.

இந்தத் தேர்தலில் நிற்கும் பல வேட்பாளர்கள் இன்று தமிழ் மக்களிடம் போகின்றார்கள், மக்களிடம் தீவிரமாகப் போகின்றார்கள், பணம்விரயம் செய்து போகின்றார்கள், எல்லாமே தங்களின் தேர்தல் லாபத்திற்க மட்டுமே, இந்த வேட்பாளர்கள் தங்கள் சுயநலத்திற்காகவே செய்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை இதை மக்கள் மிக உன்னிப்பாக அவதானித்தும் அதற்கேற்றாற்போல் நடந்தும் கொள்கிறார்கள். மக்கள் ஏமாளிகள் அல்ல என்பது இனிவரும் காலங்களில் நன்றாகவே தெரியவரும்.

மக்கள் கஷ்டப்பட்ட காலங்களில் மக்களுக்காக எதுவுமே செய்யாமல், மக்களுக்காக போராடாமால், தமது பதவிகளைத் துறந்து அரசுக்கு எதிர்ப்புக் காட்டாமலும், இன்று தமது நலனுக்காக மக்களிடம் போகிறார்கள் என்பது, வெட்கக்கேடான அரசியலில் இவர்களுக்குள்ள அக்கறையையே இது காட்டுகிறது. இவர்களது அரசியற் கூட்டங்களுக்கு மக்கள் போகாமல் இருப்பதற்கும், அக்கறையற்று இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணமாகும். இவர்களின் அரசியற் கூட்டங்களுக்கு சில நூற்றுக்கணக்கில் மக்கள் வந்தால் அது மாபெரும் கூட்டம் என்று சொல்லும் நிலையே உள்ளது. பெரும்பாலும் 100 பேர் மட்டிலேயே பெரிய கூட்டங்களுக்கு மக்கள் போயுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் வேட்பாளர்களின் மிகநெருங்கிய உறவினர்களும் ஆதரவாளர்களுமாவர்.

வன்னி முகாமிற்கு வேட்பாளர்கள் வராதிருந்தமை பற்றியும், தங்கள் கஷ்டங்களில் பங்குகொள்ளாத நீங்கள் இப்போது ஏன் எம்மிடம் வருகின்றீர்கள் என்றும், பல வேட்பாளர்களிடம் மக்கள் நேரிடையாகவே கேள்வி கேட்கப்பட்டமை முக்கியமானதொன்று. மக்கள் வெளிப்படையாக யாரையும் நிராகரிக்கின்ற போக்கு இல்லாமல் மிக புத்திசாதுரியமாக இந்த வேட்பாளர்களை கையாளுகின்றனர் என்றே கருதுகின்றோம். இந்தத் தேர்தல் பலருக்கும், பல கட்சிகளுக்கும் ஒரு பாடம் கற்பிக்கும்
.
தீவுப் பகுதிகளில் நடைபெற்ற 3 தேர்தல் பிரச்சாரங்களின் கூட்ட முடிவில் அந்த மக்களிடம் பேசிப் பார்த்தபோது இத்தீவுப் பகுதி மக்கள் வெளிப்படையாகவே ஈபிடிபியினை ஆதரிப்பதை வெளிப்படுத்தினர். தமது கஷ்டமான காலங்களில் ஈபிடிபியும் தலைவரும் நேரடியாக வந்து தமக்கு உதவிகள் ஒத்தாசைகள் வழங்கியதையும் கூறுகின்றனர். இது இதர யாழ் பகுதிகளிலிருந்து வேறுபட்ட நிலையாகும். ஈபிடிபி தீவுப் பகுதிகளில் தமது கோட்டையாக வளர்த்தெடுக்கப் பட்டுள்ளனதை இது எடுத்துக் காட்டுகிறது.

** இந்த தமிழ் தேர்தல் வேட்பாளர்களில் பலர் மக்கள் வன்னி முகாம்களில் இருந்தபோது அரசுக்கெதிராக எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடவில்லை. அன்றும் இன்றும் தமது ஏகபோக, சுயநல அரசியலுக்காகவே செயற்படுவதாகவே எமக்குத் தென்படுகிறது.

** ஜக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர்கள்- ‘நீங்கள் யாருக்கும் வாக்களியுங்கள், ஆனால் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்குப் போட வேண்டாம்’ என்பது, அரசு பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்ற பயப்பாடு கொண்டுள்ளதையும், அதனால் முயற்சி செய்து 2 /3 பெரும்பான்மையை தவிர்க்கப் பார்ப்பதாகவே தெரிகிறது.

** தமிழ் தேர்தல் வேட்பாளர்களில் சிலர் ஊடகங்களில் பணிபுரிபவர்கள். இதன் காரணமாக ஊடகங்களின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குள்ளாகியதை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறோம்.

** தேர்தல் வாக்குச் சீட்டில் வாக்காளர்களது அடையாள அட்டை இலக்கம் பதித்தே வாக்குசீட்டு வருவதாலும் அதன் அடையாளத்தை நிரூபிக்க அடையாள அட்டை பாவிக்கப் படுவதாலும் தேர்தலில் கள்ளவாக்குகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுவதாகவே எமக்குத் தெரிகிறது.

‘அம்பாளின் 700 சுலோகங்களை பாராயணம் செய்தால் உயர் பதவிகள் கிட்டும், புத்திர சௌபாக்கியம் கிடைக்கும், பரீட்சையில் சித்தி கிட்டும், சீக்கிரம் விவாகம் நடந்தேறும்!!!’ என்பீல்ட் நாகபூசணி ஆலய நிர்வாகத்தின் ஜில்மால்

Kamalanatha_Kurukkalசில இந்து மத ஆலயங்கள் முற்றாக வருமானம் ஈட்டும் வியாபார நோக்கங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் தனி நபர்களாலும் குழுக்களாலும் வியாபார நோக்கங்களுக்காக ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்கள் தனிநபர்களின் வர்த்தக நிறுவனங்கள் போன்றே செயற்படுகின்றன. அவற்றின் வருமானங்கள் தனிநபர்களையே சென்றடைகின்றது. ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் என்பன அரசியல் நோக்கங்களுக்கு வருமானத்தைப் பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் அரசியல் பிளவுக்குள் சென்ற போது அதனை ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகம் ந சீவரட்ணம் கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சி பலனளிக்கவல்லை. இது நீதிமன்றம் வரை சென்று ரூற்றிங் முத்தமாரி அம்மன் ஆலயத்திற்கு பல்லாயிரம் பவுண்கள் நஸ்டம் ஏற்பட்டது.

ஆலயங்கள் ஆன்மீகத்தையும் மனஅமைதிக்கான சூழலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணத்தினைக் குறியாகக் கொண்டு செயற்படுகின்ற தன்மை பரவலாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகின்ற விடயம். பல்வேறு கஸ்டங்கள் மத்தியிலும் ஆலயம் செல்பவர்கள் இறைவனுடன் தங்கள் கஸ்டங்களைப் பகிர்ந்துகொண்டு மனநிறைவை வேண்டிச் செல்கின்றனர். ஆனால் ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்களும் நிர்வாகிகளும் மனுக் காட்டைக் கொடுத்து என்ன மீல் வேண்டும் என்பது போல அர்சனை விலைப் பட்டியலை வழங்கி செலவான அர்ச்சனைகளைச் செய்ய அடியார்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு தனது பிறந்ததினத்தன்று வழிபட்டுவிட்டு வரச் சென்ற பெண்ணுக்கு அர்ச்சகர் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்வதற்கு அழுத்தம் கொடுத்து மறுக்க முடியாமல் அப்பெண் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்துள்ளார். மிகுந்த கஸ்டத்தில் வாழ்கின்ற அப்பெண் அன்று ஆலயத்திற்குச் சென்றது அவருக்கு பெரும் பணச் செலவை ஏற்படுத்தி இருந்தது. அப்பெண் இதனை தனது நண்பிக்கு போன் எடுத்துக் குறைப்பட்டுள்ளார்.

அதே என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அர்ச்சகர்கள் தங்கள் ஆலயத்திற்கு வந்த வழிபட்டால் பல்வேறு நோய்கள் நீங்கும், மகப்பேறு கிடைக்கும், பரீட்சையில் சித்தியடையலாம் என்பது போன்ற அறிவிப்புக்களையும் விளம்பரங்களையும் மேற்கொண்டு வந்துள்ளனர். கீழே பெப்ரவரி 28 மாசி மகத் திருவிழா தொடர்பாக என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் வெளியிட்ட தூண்டுப் பிரசுரம் இவ்வாறு சொல்கின்றது:

Nagapoosani_Ad‘வட இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் துணைநிற்க மார்க்கண்டேய முனிவர்களால் அருளிச் செய்யப்பட்ட தேவி மகாத்மியம் என்னும் 700 சுலோகங்களை அம்பிகையின் திருவருள் வேண்டி யார் பாராயணம் செய்கிறார்களோ  அவர்களின் துன்பங்கள் நீங்கி, நோயற்ற வாழ்வும், ஐஸ்வரியமும், உயர் பதவிகளும் பெறவும், கிரக பீடைகள் நீங்கவும், புத்திர சௌபாக்கியமும், பரீட்சையில் சித்தி பெறவும், சீக்கிரம் விவாகம் நடந்தேறவும், கவலைகளும் கஸ்டங்களும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். எனவே அடியார்கள், என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் வேண்டி வெள்ளி தோறும் ஆலயத்திற்கு வருகை தந்து கீழ்காணும் சுலோகங்களை 9 தடவைகள் பாராயணம் செய்து பாலாபிசேகம் செய்து அர்ச்சனை வழிபாடு ஆற்றி நல்வாழ்வு வாழப் பிரார்த்திக்கின்றோம்.’

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் துண்டுப் பிரசுரம்

 இந்தப் பால் குடம் ஒன்றின் விலை 10 பவுண்கள். அர்ச்சனை வேறு விலைகளில் உள்ளது. பெரும்பாலும் ஆலயங்கள் எல்லாமே தாங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையிலேயே வழிபாடுகளை நடாத்துவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த வழிபாடுகளால் ஈட்டப்படும் வருமானம் ஊருக்கு செலவு செய்யப்படும் விபரங்கள் பற்றிய வெளிப்படையான கணக்கு விபரங்களை ஆலயங்கள் வெளியிடுவதில்லை. அதனால் அவ்வாலயங்கள் பற்றிய நம்பகத் தனமை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

தவறான விளம்பரங்களைச் செய்து பலவீனமான நிலைப்பட்டவர்களிடம் பணம் பறிக்கின்ற விடயம் இந்துமதத்திற்கு மட்டுமான பிரச்சினையல்ல. வௌ;வேறு மதநிறுவனங்களும் இதனைச் செய்கின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சமூகப் பத்திரிகைகளில் இவற்றுக்கான விளம்பரங்களுக்கு குறையிருப்பது இல்லை. ஆனால் இவை பிரித்தானிய வர்த்தக மதிப்பீட்டு முகவரகத்தின் விதிமுறைகளுக்கு அமைவதில்லை. இதுதொடர்பாக வர்த்தக மதிப்பீட்டு முகவரகம் பிபிசி க்கு தெரிவிக்கையில் இப்பிரச்சினை பரவலாகக் காணப்படுவதாகவும் அதன் பாதிப்பின் ஆழம் அளவிடமுடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்ற பயத்தினாலும் சிலர் வெட்கம் காரணமாகவும் முறையிடுவதில்லை என அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

மலேசிய இந்தியர்களின் எழுச்சியும் ஹின்ட்ராப் அமைப்பின் தோற்றமும் : வேதமூர்த்தி பொன்னுசாமி

Wethamoorthy_HINDRAFவேதமூர்த்தி பொன்னுசாமி Hindu Rights Action Force – HINDRAF முன்னணி உறுப்பினர். 2007 நவம்பர் 25ல் மலேசியாவில் இடம்பெற்ற மலேசிய இந்தியர்களின் மாபெரும் எழுச்சிக்குப் பின் மலேசியாவை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளில் தங்கள் போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டியவர். டெல்லி, சென்னை, லண்டன், வோசிங்டன், நியூயோர்க், புரூசல்ஸ், ஜெனிவா என உலக நாடுகளுக்குச் சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார். அவர் லண்டனில் தங்கி இருந்த போது 2009 மே 13ல் தேசம்நெற் சார்பாக அவரைச் சந்தித்து உரையாடி இருந்தேன். அப்பொது வன்னி யுத்தம் மிக உச்சத்தில் இருந்த சூழலில் இந்த நேர்காணலை உடனடியாக வெளியிடுவது பொருத்தமற்றதாக இருந்தது. அதனால் தற்போது இவ்வுரையாடலின் ஒரு பகுதியைப் பிரசுரிக்கின்றோம். இப்பகுதியில்  HINDRAF அமைப்பின் தோற்றம் செயற்பாடுகள் பற்றிய விடயங்களை வேதமூர்த்தி பொன்னுசாமி பகிர்ந்துகொள்கின்றார். அவருடைய நேர்காணல் அடுத்த இதழில் வெளிவரும்.

HINDRAF- Hindu Rights Action Force இது ஒரு சிறு அமைப்பு. ஆரம்பகாலங்களில் ஒரு 50 பேர் உள்ள அமைப்பு.

ஒரு மதமாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதாவது இந்து ஒருவர் முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இறந்த பிறகு இவர் முஸ்லீம் மதத்தில் சேர்ந்து விட்டார் என்று கூறி அவருடைய உடலை முஸ்லீம் மதத்தினருடைய இடத்திற்கு எடுத்துப் போய் விட்டார்கள். இந்த விடயம் கோட்டுக்கு போனபோது கோடு சொல்லியது இது முஸ்லீம் மதம் சம்பந்தப்பட்டது இதை நீங்கள் செரியா கோட்டுக்கு எடுத்துப் போக வேண்டும் என்று. ஒரு இந்து எப்படி இஸ்லாமிய முறைப்படியான ‘செரியா’ கோட்டுக்கு நீதி விசாரணைக்கு போக முடியும் என்ற யோசனை இல்லாமலே இப்படி தீர்ப்பளிக்கப்படுகிறது.

அவர் மதம் மாறினாரா இல்லையா என்பது முதலில் civil courtல் தீர்மானம் கொள்ளட்டும். அதில் அவர் முஸ்லீமை திருமணம் செய்திருந்தால் அதற்குப் பிறகு ‘செரியா’ கோட்டுக்குப் போகட்டும். ஆனால் civil court judge எடுத்தவுடனேயே இது முஸ்லிம் சம்பந்தப்பட்டது. ‘நாங்கள் தலையிட முடியாது. அங்கே போங்கோ’ என்கிறார். இது Judiceryயோட advocations of power என்பது அவங்கள் தங்கள் கடமையை தவறிவிட்டார்கள் (civil court). இவ்வாறான பல சம்பவங்கள் நடந்து நீதி மறுக்கப்பட்டதானாலேயே HINDRAF அமைக்கப்பட்டது. இந்த கோர்ட் முடிவு எல்லா முஸ்லிம் அல்லாதவர்களையும் பாதிக்கும். ஏறத்தாழ 45 வீத மக்களைப் பாதிக்கும். சீனர்கள் பௌத்தர்கள் கௌசிஸ் கிறிஸ்தவர்கள் எல்லோரையும் பாதிக்கும்.

இதுற்றி பேச இவர்கள் எல்லோரையும் அழைத்த போது இவர்கள் வரமாட்டேன் என்றார்கள். காரணம் மதம் பற்றிப் பேசினால் National Security Actஜ பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனை தருபவர்கள் என்ற மிரட்டலுக்கு உள்ளாக வேண்டிவரும். இப்படி அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாங்க.

இது மதம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி வசப்படக்கூடிய விடயம் என மற்றவங்க வரவில்லை. எனவே நாம் HINDRAF என்ற அமைப்பை உருவாக்கி விட்டோம். உருவாக்கும்போது 50 இந்து இந்தியா சம்பந்தப்பட்ட இயக்கங்கள் வந்தாங்க. திராவிடக் கழகங்களும் வந்தாங்க. வந்த இரண்டு வாரத்தில எல்லாரும் போய்விட்டாங்க.  இப்ப நாங்க தனியா இருக்கிறோம்.

Temple_Destruction_in_Malaysiaஎன்னுடைய மூத்த அண்ணர் உதயமூர்த்தி பொலிஸ் அராஜகத்திற்கு எதிரான நடவடிக் கைகளை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, தமிழர்கள் பொலிஸ் ரிமாண்டில் சாவது, அடித்துக் கொல்லப்படுவது போன்ற வழக்குகளை அவர் எடுத்துக் கொண்டிருந்தார். அவர்  எமக்கு உதவ முன்வந்தார். ஆகவே அவரை எமது HINDRAFக்கு சட்ட ஆலோசகராக்கினோம். 2005 டிசெம்பர் 28ம் இவ்வமைப்பை ஆரம்பித்தோம். 2006 ஜனவரி 16ம் போராடப் போனோம். அத்துடன் எல்லாரும் எம்மைவிட்டுப் போறாங்கள். பின்னர் மார்ச் மாதம் 100 வருடத்திற்கு மேற்ப்பட்ட ஒரு ஆலயத்தை உடைப்பதாக தகவல் வந்தது. வழக்கமாக கோயிலை உடைத்தால் எல்லோருமே பேசாமல் இருப்பாங்க. ஆனால் நாங்க போய் அவர்களிடம் பேசி வழக்கு எடுப்போம் என்று சொல்லி பொலிசில் புகார் செய்து, சர்வதேச நிருபர்களை கூப்பிட்டு பிரச்சினையாக்கினோம். இது ஒரு சர்வதேச விடயமாகிவிட்டது.

இப்ப இந்த விடயம் பெரிதாகிவிட்டது. இப்போ இது வழக்குத் தொடரப்பட உள்ள போது எல்லோரும் இந்த அமைப்பு யார் என்ன என்று பார்க்கிறாங்க. இந்த விடயம் சர்வதேச ரீதியாக வெளிவந்ததும் உள்ளுர் செய்தி ஸ்தாபனங்களும் வெளியிட வேண்டியதாயிற்று. (இல்லாவிட்டால் உள்ளுரில் செய்தி போட மாட்டாங்க.)

உடனே மக்களிடம் இவ்வளவு நாளும் இந்த அநியாயங்கள் நடக்குது யாரும் கேட்கவில்லை. இப்ப இதை முன்னின்று செய்பவர்கள் யார் என்ற விடயம் அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்லோரும் HINDRAFஜ பார்க்கிறாங்க. அதுக்குப் பிறகு ஒவ்வொரு பிரச்சினையாக எம்மிடம் வருகிறது. எல்லா இடங்களிலுமிருந்து எங்கெங்கு கோயிலை இடிக்கிறாங்க என்ற செய்தியுடன் எம்மை தொடர்பு கொள்கிறாங்கள்.

எங்களை கூப்பிடுவாங்க. அங்க போனால் புல்டோசர் நிக்கும். எந்தவொரு வழக்கறிஞரும் உங்களை கோவிலை இடித்தால் கோட்டில்தான் சந்திப்பாங்க. கோயிலை இடிக்கிற இடத்திலல்ல. ஆனால் ஏழை மக்களின் கோயில் தொழிலாளர்களுடைய கோயில் அவர்களுக்கென்று குரல் கிடையாது. தமது உரிமையை தட்டிக் கேட்கத் தெரியாதவர்கள். அவங்கள் ஏழையானதால் ஆதரவு இல்லாததால் அரசு எதுவும் செய்யும். 150, 200 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் colonial timeல் காடுகளை வெட்டி plantation செய்தாங்கள். அந்தநேரம் கோயிலை கட்டினாங்கள். இந்த plantion landஜ உருவாக்கிய தொழிலாளர்களிடமிருந்தும் அந்த நிலங்களை அரசு திரும்பவும் பெறுகிறது. அந்த நேரம் இந்தக் கோயில் சட்டவிரோதமானது என்று கூறி அரசு கோயில்களை இடிக்கிறது. இப்படித்தான் பிரச்சினைகள் எழுகின்றது.

அந்த நிலத்தை மீள எடுக்கும் போது அரசு அந்த மக்களுக்கு நிவாரணம் கொடுத்து வேறு இடம் கொடுத்து வசிப்பதற்கு வீடு கொடுக்க வேண்டிய அரசாங்கம், எதுவுமே கொடுக்காமல் துரத்துகிறது. (நிலத்தின் சொந்தக்காரர்கள்) கோயில்களையும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களையும் அடித்து உடைப்பார்கள்.

Temple_Destruction_In_Malaysiaஇப்படியாக சில வேலைகளை நாம் செய்யச் செய்ய எம்மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகமாகிக் கொண்டு வந்தது. காரணம் நாங்கள் பேசுவதில்லை. புல்டோசரின் முன்னால் நாங்கள் தான் நிற்போம். அந்த கஸ்ரப்பட்ட மக்களுக்காக நாம் போராடாமல் என்ன செய்ய முடியும். இப்படி நாங்கள் lawyers கோயில் உடைப்பில் கைது செய்யப்பட செய்திகள் பெரிதாக வெளிவரும். இப்படிச் செய்திகள் வெளிவர மக்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு வந்தது.

இப்படியாக கோயில் பிரச்சினைகளிலிருந்து தொழிலதிபர்கள் பிரச்சினை, தங்களுடைய தொழிலகங்களை இப்படி உடைக்கிறாங்கள், என்று பின்னர் வீட்டு உரிமையாளர்கள் பிரச்சினை, வேலைவாய்ப்புப் பிரச்சினை, மாணவர்கள் தமக்கு பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சினை இப்படி பலவிடயங்களை எடுத்துப் போராட்டமாக செய்ய இது கிட்டத்தட்ட இரு வருடங்களில் இந்த HINDRAF பெரிய விடயமாக செய்திகள் வர ஆரம்பித்து விட்டது.

பின்பு 50 வருட மலேசிய சுதந்திரத்திற்கு முன்பே 18 கோரிக்கைகளை முன்வைத்து 50 வருடங்களாக எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறியள் எண்டு கேட்க ஆரம்பித்தோம். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் போது பெரும் திரளாக 5000 பேர் மட்டில் வந்தாங்க. முன்பெல்லாம் இப்படி போராட்டங்கள் செய்யும்போது 20,  30,  50  பேர்தான் வருவாங்கள். இந்த 18 கோரிக்கைகளை முன்வைத்த போது 5000 பேர் வந்தது ஒருபெரிய விடயமாகிவிட்டது. 18 கோரிக்கைகளையும் அரசிடம் பிரதம மந்திரியிடம் கொடுத்தோம். அரசும் கண்ணைத் திறந்து விட்டார்கள். அதிலிருந்து எங்களை கண்காணிக்க தொடங்கி விட்டார்கள்.

இதைத் தொடர்ந்து 31 ஆகஸ்ட் 7007 மலேசிய 50வது சுதந்திர தினத்திற்கு முதல்நாள் 30ம் திகதி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்துவிட்டு அமெரிக்கா போனேன். அங்கு. AFP செய்திஸ்தாபனம் இதை பெரிய செய்தியாக்கியது. மலேசியாவில் மக்கள் ஒரு பெரிய விடயம் நடந்ததாகப் பார்த்தார்கள்.  இந்த விடயங்கள் எல்லாத்தையும் தமிழில் விளக்கமாக ஒரு பிரசுரம் அடித்து மக்களுக்கு கொடுத்தோம். காரணம் பத்திரிகைகள் செய்தியை மேலோட்டமாகவே போடுவார்கள். மக்களுக்கு விளங்காது. இப்படிக் கொடுத்தால் மட்டுமே மக்கள் விபரமாக படித்துக் கொள்வார்கள்.

செப்ரெம்பர் மாதம் தொடக்கம் ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக கூட்டங்கள் போட்டு விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கினோம். முதல் கூட்டத்திற்கே 3000 பேர் வந்தார்கள். இப்படியே 5000, 6000 12000 மக்கள் கூட்டத்திற்கு வந்தார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள். நாங்களும் உரிமைக்காக போராடுவோம் என்ற உணர்வு வந்தது.

பின்பு 25 நவம்பர் 2007 ‘நாங்கள் பிரிட்டிஷ் மகாராணியிடம் மனு கொடுப்போம் : இதுபற்றி பொது அறிவிப்பு செய்ய வேண்டும் என அழைத்த போது  நாம் எதிர்பார்த்தது 10 000 பேரை. ஆனால் வந்தது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள். 50 வருடமாக தூங்கியிருந்த மக்கள் விழித்துக் கொண்டார்கள். அரசாங்கத்திற்கு அவர்களின் விஷேட பிரிவு விளக்கமாக ஒரு பெரிய பிரச்சினை எழுந்துள்ளதாக . எல்லாம் சொல்லிவிட்டது.   2007 நவம்பர் 22ம் திகதி கோலாலம்பூர் நகரத்தை பொலிஸ் காவல் போட்டு தமிழர்கள் உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளனர். 25ம் திகதிக் கூட்டத்திற்கு தமிழர்கள் வரவிடாமல் தடுத்தார்கள். அதையும் மீறி பலர் 24ம் திகதி கோவிலுக்குப் போய் பூஜையில் கலந்துவிட்டு அங்கிருந்து அடுத்தநாள் கூட்டத்திற்கு போகவிருந்தார்கள். இந்த நேரம் கோயிலுக்குள் புகுந்து பொலிஸ் தண்ணியடித்து மக்களுக்கு பெரிய பிரச்சினைகளைக் கொடுத்து 1000 க்கு மேற்பட்டோரை கைது செய்தார்கள்.

November 23 2007ல் என்னையும் மற்றவர்களையும் பிடித்தாங்க. மக்கள் பயந்து விட்டாங்கள். எல்லோரையும் கைது செய்து விட்டாங்கள். 345 பேர் வரைக்கும் கோட்டுக்கு கொண்டுபோய் குற்றம் சாட்டி மாலை 6 மணிவரை இழுத்தடித்து இவர்களுக்கு Bail கொடுக்க முடியாமல் உள்ளே வைத்திருந்தால் போராட்டம் தொடர முடியாமல் போகும் என நம்பினார்கள். காரணம் HINDRAFல் 4 அல்லது 5 பேர்தானே உள்ளோம். நான் எனது அண்ணர் மற்ற  இரண்டு சட்டத்தரணிகள் இந்த நாலு பேரையும் உள்ளே போட்டால்  எல்லாம் அடங்கிப் போய்விடும் என்று நம்பினாங்க. ஆனால் இந்த 4 பேருக்கமாக இந்த நாடே எழும்பி வந்தது.

யார் யாரோ எல்லாம் அடுத்த நாள் கோட்டுக்கு வந்தாங்க. பெரிய சனக் கூட்டம் கோட்டுக்கு வெளியே நின்று விடுதலை செய்! தலைவர்களை விடுதலை செய்! என்று சத்தம் போட்டாங்கள்.  நீதிபதியும் மிகக் குறைந்த பணத்துடன் bail out பண்ண முன்வந்தார். மக்கள் அந்த இடத்திலேயே காசுகள் எல்லாம் சேர்த்து bail out  பண்ண ரெடி. ஆனால் நான் என்ன செய்தேன் என்றால் கொடுத்த bail outஜ நிராகரித்துதேன். bail outஜ நிராகரித்தது மலேசிய வரலாற்றில் முதன் முறையாக நடைபெறுகிறது.

இப்படி ஏன் செய்யப்பட்டது என்றால்
1 நாங்கள் உங்கள் சிறைகளைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. அது ஒரு பிரச்சினையில்லை.
2. இது ஒரு சமாதானப் போராட்டம். இல்லாவிட்டால் சுற்றியுள்ள மோசமான கிரிமினல்களை அனுப்பி கலவரத்தை உண்டு பண்ணியிடுவாங்கள்.
3  தலைவர் இல்லாமலே போராட்டம் நடக்கும்.
மூன்று நாட்களாகளுக்கு முன்பு நான் lockupல் உள்ளேன். மக்கள் தானாகவே நடக்கிறார்கள். மஞ்சள் துணி கொண்டு கொடி கட்டுறார்கள். காந்தி படத்துடன் வந்தாங்க. November 25 2007ல் போராட்டம் நடந்தது. ஆனால் அரசாங்கம் மட்டும் கலவரத்தை. பிரச்சினைகளை உண்டு பண்ணியது.

அமைதியாக இருந்த மக்களை போலீசாரே அடித்தனர் மக்கள் தலைவர் இல்லாமலே தானாகவே எல்லாவற்றையும் செய்தார்கள். இது largest hindu upraise out side to the India. அதற்கு அடுத்த நாள் எங்களை விடுவித்தனர். அதன் பிற்பாடே நான் மலேசியாவில் இருந்து வெளியேறினேன்.

Budtha_Destruction_In_malaysiaஇந்துக் கோயில்களுக்கு நடந்தது மாதிரி கிறீஸ்தவ தேவாலயங்களுக்கும் புத்த விகாரைகளுக்கும் பிரச்சினைகள் உண்டா? எப்படி என்றால் கிறீஸ்தவ மதத்தினர்க்கு ஏற்கனவே காலணி ஆதிகாலத்தில் நகரத்தில் எல்லாம் கட்டப்பட்டதால் பிரச்சினையில்லை. ஆனால் மற்றும் Evangalicn Church போன்ற நிறைய பணத்துடன் உள்ள இவர்கள் ஒரு துண்டு நிலம் வாங்குவது என்றால் பிரச்சினை. நிலம் வாங்கவே முடியாது. அரசு அனுமதிக்காது. கிறீஸ்தவ மதத்தை எதிர்காலத்தில் பிரச்சினையான மதமாக பார்க்கிறார்கள்.

பல பிரச்சினைகளின் பின் எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவ சேர்ச்சிற்கு 25 வருடம் கழித்து சேர்ச் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கடைகளுக்கு மேலே இருந்த இடங்களிலேயே தமது சேர்ச்சை நடத்தி வந்தார்கள். புத்த மதத்தவர்களுக்கும் பாரிய பிரச்சினையில்லை. காரணம் ஆரம்ப காலத்தில் குடியேறிய சீனர்கள் தமது தலங்களை town இலேயே கட்டிவிட்டார்கள். அதனால் பிரச்சினையில்லை.

இந்துக்களுக்கே பெரிய பிரச்சினை. காரணம் இந்திய வம்சாவழியினரான நம்மவர்கள் காட்டை அழித்து வயல் ஆக்கினர். கோயில் கட்டினர். எல்லாமே கிராமப் புறங்களாகவே இருக்கும். இப்ப அரசாங்கம் இந்த நிலங்களை சுவீகாரம் செய்யும்போது இந்துக் கோயில்களை சட்டவிரோதம் என்று இடித்து அழிக்கிறார்கள். இதற்கு நாம் என்ன சொல்கிறோம் என்றால் நாம் developmentக்கு எதிரானவர்கள் அல்ல. நீங்கள் நிலச் சுவீகரிப்பு செய்வது பிரச்சினையல்ல. ஆனால் இதற்கு மாற்றீடான நிலத்தை எமது சமூகத்திற்கு கொடுங்கள் எனக் கேட்கிறோம். மக்கள் கிராமம் எங்கே மாற்றப்பட்டதோ அங்கேதான் இந்தக் கோயிலும் மாற்றப்பட வேண்டும் என்பது. இதுதான் இங்குள்ள பிரச்சினை அதை அரசு செய்வதில்லை.

மலேசிய Heritage சட்டத்தின்படி எதுசரி 100 வருடங்கள் இருந்திருந்தால் அது பாதுகாக்கப்பட வேண்டியவைகள். ஆனால் 150 வருடங்களாக உள்ள கோயில்களை உடைக்கிறார்கள். காரணம் மலேசியாவில் ஒரு மசூதி தான் 100 வருடமாக உள்ளன. அவர்களிடம் மிக பழமையான மசூதிகள் இல்லை. எமக்கு ஆயிரக் கணக்கான இந்துக் கோயில்கள் 150 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டவை. முருகன், அம்மன் கோயில்கள் பிரதானமான கோயில்கள்  மற்றும் முனீஸ்வரர் காளியம்மன் சங்கிலி கறுப்பன் குலதெய்வ கோயில்களுமுண்டு. இவையெல்லாம் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் கட்டப்பட்டது.

நாம் என்ன சொல்கிறோம் என்றால் 100 ஏக்கர் காணிகளில் 20 கோயில்கள் இருக்கும் புதுநிலம் கொடுக்கப்படும்போது கோயிலுக்கு பெரிய நிலம் தரப்பட்டால் இந்த 20 கோயில்களையும் பெரிய 4 கோயில்களாக்கலாம். நாம் இந்த 20 கோயில்களும் வேணும் என்று கேட்டதே கிடையாது. அரசை மாற்றீடு தீர்வு வைக்கும்படி கேட்டுள்ளோம். மனு கொடுத்துள்ளோம். கெஞ்சிக் கேட்டுள்ளோம். எல்லா வழிமுறைகளிலும் கேட்டுள்ளோம். பிரதமரிடம் நீதியாசர்களிடம் கேட்டுள்ளோம். Attorny of General எம்மை ஒரு meetingகுக் கூப்பிட்டார்கள். நிறையவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாலேயே கூப்பிட்டார்கள். எல்லாம் நல்லாவே பேசுவார்கள். எம்மை அனுப்பிவிட்டு அடுத்த நாளே கோயிலை உடைக்க ஆட்களை அனுப்புவார்கள்.

இவர்கள் தங்களுக்கு உள்ள Agendதaபடி வேலை செய்கிறாங்கள். ஆரம்பத்தில் நாங்கள் நினைத்தோம் இதை விளங்காமலேயே செய்கிறாங்கள் என்று. இவர்களுக்கு ஒரு திட்டவட்டமான திட்டம் ஒன்று உண்டு. அதாவது இவர்களுடைய கோயில்களை பழமையான கலாச்சாரத்தை உரிமையை முஸ்லிம்களுக்கு இல்லாத நீண்ட பாரம்பரியத்தை உள்ள இந்து மக்களின் பாரம்பரியத்தை அவர்களின்  உரிமைகளை அழிப்பதே நோக்கம். இது திட்டவட்டமாக எமக்குத் தெரிகின்றது.

நண்பனை படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு மரணம்!

Ugarajan_Swaminathanதன்னுடைய பிளற்றில் வாழ்ந்த நண்பன் உகாராஜன் சுவாமிநாதனை (34) கோடாலியால் பலமுறை கொத்திக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஜஸ்டின் சந்திரகாந்தன் (31) மார்ச் 5ல் அவர் சிறை வைக்கப்பட்டு இருந்த அறையில் தூக்கிட்டு மரணித்துள்ளார். ஜனவரி 13ல் உகாராஜன் சுவாமிநாதன் தான் தங்கியிருந்த கரோ ரவுன் சென்ரரில் உள்ள ஆர்எப்சி எக்ஸ்பிரஸ் சிக்கின் கடைக்கு மேலே வைத்து படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இக்கொலை தொடர்பாக 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

ஜஸ்ரின் சந்திரகாந்தன் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஹென்டன் மஜிஸ்ரேற் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார். ஏப்ரலில் இவருடைய வழக்கு விசாரணை ஓல்ட் பெய்லிக்கு வர இருந்த நிலையிலேயே அவர் தூக்கிட்டு மரணித்துள்ளார்.

இம்மரணம் சிறையில் நிகழ்ந்தள்ளதால் இதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எச்எம் பிறிசின் சேர்விஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்விரு மரணங்களுக்குமான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.

பணம் 1200 பவுணைக் கேட்டு மிரட்டியவருக்குத் தண்டனை!

வெம்பிளியைச் சேர்ந்த ஜெகதீசன் குணராஜா (20) என்ற இளைஞர் கிங்ஸ்பறியைச் சேர்ந்த பிரேம் என அறியப்பட்ட பிரனானந் கணேஸ்நாதனை பயமுறுத்தி மிரட்டி பணம் பறிக்க முயன்றதற்காக குற்றவாளியாகக் காணப்பட்டு உள்ளார். நீதிபதி கிரகாம் அரன் தலைமையில் 12 ஜூரிகளுடன் வழக்கு நடைபெற்றது.

1200 பவுண்களை வழங்காமல் விட்டால் பிரேமின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசப்போவதாக ஆறு பேரைக் கொண்ட குழு மிரட்டியாதாக பிரேம் குற்றம்சாட்டி இருந்தார். 2009 செப்ரம்பரில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு ஹரோ கிறவுண் கோர்ட்டில் நடைபெற்று 2010 பெப்ரவரி 15ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திவீகன் குகநாதனுக்குச் சொந்தமான காரை பிரேம் காப்புறுதி இன்றி ஓட்டியதால் வாகனம் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால் ஏற்பட்ட நஸ்டத்திற்காக 1200 பவுண்களை தன்னிடம் கேட்டு மிரட்டியதாக நீதிமன்றத்தில் பிரேம் தெரிவித்து இருந்தார். தன்னை தனது விருப்பத்திற்கு மாறாக கிங்ஸ்பறியில் உள்ள தனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து பலவந்தமாக வானில் ஏற்றி வொன்ஸ்வேத் செயின்ஸ்பறி கார் பார்க்குக்கு கூட்டிச் சென்று தாக்கியதாக பிரேம் நீதிமன்றில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த கடத்தல் நாடகம் நான்கு மணிநேரம் நீடித்ததாகவும் பிரேம் தெரிவித்து இருந்தார்.

மருத்துவரினால் முகத்தில் உள்ள காயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவற்றுக்கு தாங்கள் காரணமல்ல என சந்தேகநபர்கள் வாதிட்டனர். மேலும் பணம் கேட்டதை ஒத்துக் கொண்டவர்கள் தாங்கள் கையால் தட்டியதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனர். பணத்திற்காகப் பயமுறுத்தவில்லை எனவும் தெரிவித்து இருந்தனர்.

ஜெகதீசன் குணராஜ் உடன் குற்றம்சாட்டப்பட்டு இருந்த பின்வருவோர் மீதான குற்றச்சாட்டுகள்  நிராகரிக்கப்பட்டது
சுதர்சன் சிறீதரன் (22) – மில்ரன் கீன்ஸ்
சுதாகரன் ராசலிங்கம் (21) – வெம்பிளி
வேணுசங்கர் லம்பொதரராஜா (20) – வெம்பிளி
சிவகுமார் தினேஸ்குமார் (19) – ஹரோ
தீவிகன் குகநாதன் (திவான்) – ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது.

புலத்தில் வேகாத பருப்புகள் இலங்கைத் தேர்தல் களத்தில்

Seveal_K_JHC_in_Jaffnaயாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – யுகே யின் தலைவர் க செவ்வேள் யாழில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார். பெரும்பாலும் ஆளும்கட்சியின் பட்டியலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட க செவ்வெள் தற்போது சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அல்லது களம் இறக்கப்பட்டு உள்ளார்.

தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்தும் க செவ்வேள் லண்டனில் சட்டத்தரணி அல்ல என்றும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார்.ஆனால் க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருந்தார். இவர் படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த வேளையில் இவரது பொறுப்பில் இருந்த அரசியல் தஞ்ச வழக்குகள் சில பாதிக்கப்பட்டு இருந்தது.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவரான இவர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு விசனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அது அவருடைய அரசியல் தெரிவு என்ற அடிப்படையிலும் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்ற கடப்பாட்டை கொண்டிராததால்  க செவ்வேளிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் சிலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
க செவ்வேளை விடவும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் அருளர், முன்னால் தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் கிறிஸ் சரவணன் ஆகியோரும் லண்டனில் இருந்து சென்று தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

வெம்பிளியில் இளைஞர்களின் குழு மோதல்!! ஐவருக்கு மார்ச் 24ல் தண்டனை!!!

Lancelot_Roadதமிழ் இளைஞர் குழுக்களிடையே வெம்பிளியில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட ஐவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு உள்ளனர். மார்ச் 1இல் ஓல்ட்பெயிலியில் இவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை மார்ச் 24ல் வழங்கப்பட இருக்கின்றது.

2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற இளைஞர் குழுக்களிடையேயான மோதல் தொடர்பாகவே இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஹரோ குழுவினர் சவுத் ஹரோ பார்க்கில் ஜக் டானியல் அருந்திக் கொண்டு இருந்துவிட்டு ஈலிங் றோட்டில் உள்ள பாம் பீச் ரெஸ்ரோரன்ருக்கு சென்றுள்ளனர்.

வழியில் லான்ஸ்லொட் வீதியில் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முறுகல் உருவானது. ஹரோ குழுவினர் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவினரை கொல்லப் போவதாகப் பயமுறுத்தினர். அருகில் இருந்த கார் தரிப்பு நிலையத்திலிருந்து டிஎம்எக்ஸ் குழுவினரது எண்ணிக்கை பெருத்தது. இது அருகில் உள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது. இது நீதிமன்றில் யூரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.

இம்மோதலில் வாகீசன் பரமலிங்கத்தின் தாடை உடைக்கப்பட்டதுடன் முகத்திலும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். 

அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்:

ஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் : ஐங்கரன் ஆயுதம் (இரும்புக் குற்றி) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

அருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : அருள்முருகன் செபமாலை ஆயுதம் (கிரிக்கட்பற்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் திட்டமிட்ட நோக்குடன் உடற்காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாவாளியாகக் காணப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் இருந்து அருள்முருகன் தவிர்க்கப்பட்டார்.
 
பார்த்தீபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் : பார்தீபன் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் (போத்தல்) வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

வாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : வாகீசன் ஆயுதம் (பிக்காஸ்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

மதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : ஆயுதம் (கூரிய ஆயுதம் கத்தி) வைத்திருந்ததற்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். மதுசூதன் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர்களுடன் கென்ரனைச் சேர்ந்த அஜித்குமார் தர்மராஜா (26) இவரின் தந்தை கந்தையா தர்மராஜா (48) இருவர் மீதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அஜித்குமார் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற அஜித்குமாரும் தந்தையும் அங்கு உருவான பதட்டத்தை தணிக்க முயன்றமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு அவர்களுடைய குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

காஸ்ச் பொயின்றில் பணம் எடுக்க முற்பட்டவரிடம் பணம் பறிமுதல்!

லண்டன் றெட் பிறிஜ் பிகைவ் லேனில் உள்ள பார்க்ளேய்ஸ் வங்கி காஸ்ச் பொயின்ரில் பணம் எடுக்க முற்பட்டவரின் பணத்தை இளைஞர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். மார்ச் 11 காலை பதினொரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் வங்கியின் CCTVயில் தெளிவாகப் பதிவாகி இருந்ததுடன் அவ்வாதாரங்கள் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளைச் செயலாளர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார். தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முற்பட்ட போது காஸ்ச் பொயின்ரில் இருந்து வந்த 300 பவுண்களையும் ஏற்கனவே அவர் வங்கியில் இருந்து எடுத்திருந்த 400 பவுண்களையும் அவரது வொல்லற்றையும் பறிகொடுத்துள்ளார் பொன் சிவசுப்பிரமணியம்.

தான் எதிர்பார்த்திராத வகையில் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்த இந்தச் சம்பவத்தால் தனது வங்கிக் நடவடிக்கைகளை வங்கி உறைநிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார் பொன் சிவசுப்பிரமணியம். CCTVயில் சம்பவம் பதிவாகி இருந்த போதும் சம்பந்தப்பட்டவரைக் கைது செய்து தனது பணத்தை மீளப்பெற முடியுமா? என்பது சந்தேகம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

ஏப்ரல் தேர்தலில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் 25 வீதத்தால் வீழ்ச்சி அடையலாம்!!! : த ஜெயபாலன்

gajendrakumar_ponnampalamSambanthan_R_TNAஏப்ரல் 8ல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படும் தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் வாக்குகள் பெருமளவில் சிதறிச் செல்கின்ற நிலையில் உள்ளதால்  2010 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2004 தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து 23 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றிருந்தனர். இவர்களில் 22 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் ஒருவர் ஈபிடிபி யின் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். இத்தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படக் கூடிய தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஆயுத முனையில் இடம்பெற்ற போட்டி பெரும்பாலும் இருமுனையினதாக அமைந்ததால் தமிழ் வாக்குகள் சிதறுண்ணாமல் இருந்தது. அதனால் ஜனநாயகமற்ற அரசியல் பலம்வலுவானதாக அமைந்தது. ஆனால் இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் (ஜீனியர் விகடனில் மட்டுமே வாழ்கின்றனர்.) ஆயுத பலத்தினால் அவர்கள் கட்டியிருந்த ஒற்றுமை சிதறி அவர்களுடைய அரசியல் ஆதரவுத் தளம் ஈடாடியுள்ளது. அதனால் தமிழ் வாக்குகள் மிகவும் சிதறிப் போயுள்ளது.

2004 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் 9 ஆசனங்களுள் 9 ஆசனங்களும், வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுள் 5 ஆசனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுள் 4 ஆசனங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுள் 2 ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுள் ஒரு ஆசனமும் தமிழ் பிரதிநிதிகளுக்கு அதாவது ஈபிடிபி கட்சிக்கு ஒரு ஆசனமும் ஏனையவை விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிடைத்தது. வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்குரிய 31 ஆசனங்களுள் 23 ஆசனங்கள் தமிழ் பிரதிநிதிகளுக்குக் கிடைத்தது. இம்முறை 15 ஆசனங்களாகக் குறைந்துவிடலாம் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக மே 18க்குப் பின்னான அரசியலில் ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இருந்து ஓரம்கட்டியது. அதனால் அவர்களில் கிசோர் சிவநாதன், கனகரத்தினம், க தங்கேஸ்வரி ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணிக்குச் சென்றனர். ந சிறிகாந்தா, எம்கே சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஜனாதிபதித் தேர்தலின் போதே இடதுசாரி முண்ணணியுடன் இணைந்து கொண்டனர். ஏனையவர்கள் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டனர். இவர்கள் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் கட்சியின் பட்டியலில் போட்டியிடுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இந்த முன்னணியின் குறிப்பான நபர்கள். குறிப்பாக வன்னி யுத்தத்தின் போது வெளிநாடுகளில் தங்கி இருந்து வெளிநாட்டில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரண்டறக் கலந்த இவர்களுக்கு வடக்கு கிழக்கில் ஆதரவுத் தளம் இருக்கின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் பலமான ஆதரவுத் தளம் உள்ளது.

போட்டியிடுகின்ற கட்சிகள்:

தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் (தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி), தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட், ஈழவர் ஜனநாயகக் கட்சி, இடதுசாரி முன்னணி, என தமிழர் தரப்பு கட்சிகளும் அத்துடன் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி உட்பட சிங்கள கட்சிகளிலும் பல தமிழர்கள் போட்டியிடுகின்றனர். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் போட்டியிடுகிறது.

தேர்தல் களம்:

யாழ் மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 324 வேட்பாளர்கள், 15 அரசியல் கட்சிகளிலும்; 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 250 000 குறைவானவர்களே யாழ் மாவட்டத்தில் வாக்களிக்க கூடியவர்களாக உள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 253 வேட்பாளர்கள் 16 அரசியல் கட்சிகளிலும் 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2 66 976.

திருகோணமலை, மூதூர், சேருவல தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 217 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும், 14 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 241,133 வாக்காளர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.

கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 360 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும் 28 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பு  மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333 644 ஆகும். 

அம்பாறை மாவட்டத்தில் 7 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 660 வேட்பாளர்கள் 18 அரசியல் கட்சிகளிலும் 48 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 420 835.

இலங்கையிலேயே அதிகூடுதலான பிரிவுகள் போட்டியிடுகின்ற மாவட்டமாக அம்பாறையும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பும் உள்ளது.

யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் துரத்தியடிக்கப்பட்டதால் இழக்கப்பட்ட அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் இத்தடவை அவர்களுக்கு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டி:

வடக்கு கிழக்கில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்த ஏகபிரதிநித்ததுவம் இத்தேர்தலில் அடிபட்டுப் போய்விடும் நிலையே உள்ளது. இருந்தாலும் வடக்கு கிழக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 முதல் 10 வரையிலான ஆசனங்களை வடக்கு கிழக்கில் தக்க வைக்கும் என எதிர்வு கூறல்கள் உள்ளது. தமிழ் தேசியத்திற்கான முன்னணி ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் சவாலாக அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாங்கள் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த ஆர் சம்பந்தனை திருகோணமலையில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தீவிரமாக உள்ளது. இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவு ஊடகங்கள் பெரும் ஆதரவை வழங்கி உள்ளன. புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளத்தால் உருவாக்கப்பட்ட புதிய துரோகியாக ஆர் சம்பந்தன் உள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர் குரலை தாயக மக்கள் செவிமடுக்கின்றார்களா என்பதும் இத்தேர்தலில் தெரிந்துவிடும்.

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன்

Psychologyஉடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன் பதலளிக்கின்றார்.

பகுதி 1

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன?
ஒருவருக்கு இரண்டு விதமாக உளவியல் பிரச்சனைகள் வரலாம். ஓன்று அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றையது அவர் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனைகள்.

1)அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள்:
உதாரணமாக மரணம்- நெருங்கிய உறவினரோ நண்பரோ இறப்பது, வேலை இல்லாமல் போதல் போன்ற நிகழ்வுகள்.
2) ஒருவர் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனைகள்:.
உதாரணமாக, ஒரு நிலபரத்தை எதிர்நோக்கும்போது, அதைக் கையாளும் முறையால் வரக்கூடிய மனநெருக்கடி, இதனால் உறவு முறைகளில் சங்கடங்கள், ஒரு விஷயத்தை தீர்மானிக்க முடியாத மனக்குழப்பநிலை போன்றவை எற்படலாம். காரணம்- முக்கியமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாத நிலை. ஆகவே உளவியல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணம் ஒருவரது மனவலிமை மனத்திடத்தைப் பொறுத்தது.

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகளை எவ்வாறு அடையாளம் காணலாம்?

உளவியல் பிரச்சனைகள் என்று நீங்கள் கூறுவது ‘மனஉழைச்சல்’ அல்லது ‘மன நெருக்கடி’ என்று நினைக்கிறேன்.
மன உழைச்சலால் ஒருவர் கஸ்டப்படுகிறார் என்ற அடையாளங்களைக் கூறமுன், stress-மனநெருக்கடி: depression- மனஉழைச்சல்:
மனஉழைச்சல் என்னும்போது pressure. ஓரளவு pressure இருந்தால் ஒருவர் காரியங்களைச் செய்து முடிப்பதற்கு ஒரு motivation ஆக இருக்கும். மற்றும், கட்டாயம் கவலை தரக்கூடிய சம்பவங்களால்தான் ஒருவர் மனநெருக்கடியை அனுபவிக்கக் கூடும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக புதுவீடு மாறும்பொழுது, பிள்ளைப்பேறு நாட்கள், திருமணம், பிறந்ததின விழா ஏற்பாடு செய்யும்போதுகூட ஒருவர் stress அனுபவிக்கக்கூடும். stressன் அளவு கூடும்போது மனஉழைச்சல் (depression) வரக்கூடும். ஒருவருக்கு மன உழைச்சல் கூடினாலோ அல்லது கூடியகாலம் நீடித்தாலோ அது அவருடைய மனநிலையையோ அல்லது உடல்நிலையையோ பாதிக்கக்கூடும்

மனஉழைச்சலை அனுபவிப்பவர்களுக்கு இருக்கக்கூடிய சில அறிகுறிகள்: (symptoms)
நித்திரையின்மை, பசியின்மை அல்லது மாறாக கூடியளவு நித்திரை, அளவுக்கதிகமான பசிகூட வரலாம், விரக்தி, எதிலும் நாட்டமின்மை, மனக்குழப்பநிலை, அதிகூடிய களைப்பு, பயம், ஒரு முடிவு எடுக்க முடியாத மனநிலை, மற்றவர்கள்மீது பிழை காண்பது, அதிவிரைவில் அதிகூடிய கோபம், தன்னம்பிக்கை குறைதல், தனிமையை நாடுதல், தோற்றுவிட்டதுபோல் உணர்வு.

உடல்நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
தொடர்ந்து தலை இடிப்பது (migraine), தலைநோ, தலை எரிவு, நெஞ்சு படபடப்பு, இருதயநோய்கள், வயிற்றில் அல்சர் உண்டாவது, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கோளாறுகள் (irritable bowel syndrome) வாய் காய்ந்து போதல், muscle tension போன்றன.

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகளுக்கு எவ்வாறான உதவிகள் பெறக்கூடியதாகவுள்ளது?

உளவியல் பிரச்சனை அல்லது மன உழைச்சல் இருக்கிறது என்று அறிந்தால் முதலில் தங்கள் குடும்ப வைத்தியரை நாடி ஆலோசனை பெறவேண்டும். ஒருவர் தனக்கு உளவியல் பிரச்சனை இருக்கிறது என்று அறிந்து அதற்கான உதவியை நாடுவது அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான ‘முதல்படி’ என்று கூறலாம்.

counselling சம்பாஷனைகள் மிகவும் உதவி செய்யும். counselling சம்பாஷனையின்போது மனம்திறந்து கதைத்துக் கொண்டே வருவதால் ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள் என்பன ஆழமாக அலசப்பட்ட பிரச்சனைகளைப்பற்றி ஒரு சீரான முறையில் தெளிவாக யோசிக்கக் கூடிய மனநிலை உருவாகும். இது அவருடைய வாழ்க்கையை திருப்திகரமான முறையில் கொண்டு செல்வதற்கு உதவும். Helplines மூலமும், அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற சேவைகள் மூலமும், நிபுணர்கள் மூலமும் உதவிகளைப் பெறலாம்.

லண்டன் குரல்: உள்ளத்தை எவ்வாறு ஆரோக்கியமானதாக வைத்திருக்க முடியும்?

நிறையுணவு ( balanced diet) ஒழுங்கான தேகாப்பியாசம், சரியான முறையில் மூச்சுப்பயிற்சி செய்தல், ஓடுதல், நடத்தல், நீந்துதல், relaxation, யோகாப்(பயிற்சி)பியாசம், meditation போன்றவை உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மனதிற்குள் எல்லாப் பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதால் மனநிலை, உடல்நிலை என்பன பாதிக்கப் படலாம். ஆகவே உதவியை நாடுவது மிகவும் அவசியம்.

பகுதி 2

லண்டன் குரல்: புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உளவியல் பிரச்சினைகள் உள்ளனவா? அவர்கள் மத்தியில் உள்ள குறிப்பான உளவியல் பிரச்சினைகள் என்ன?

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக இருக்கக்கூடிய உளவியல் பிரச்சினைகள்:
1) தாயகத்தில் ஏற்பட்ட அனுபவங்களால் உண்டான தீர்க்கப்படாத உணர்வுகளின் தாக்கங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள்.
2) கலாச்சார வேறுபாட்டால் பெற்றோருக்கும் ஜரோப்பிய நாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்.
3)தனிமை- கணவன் கூடிய நேரம் வேலை செய்யும் இடத்தில் செலவிட்டால் வீட்டுவேலை பிள்ளைகளின் அலுவல்கள் நாளிலும் பொழுதிலும் செய்யும் மனைவிக்கு வரக்கூடிய நெருக்கடி.
4) காசுப் பிரச்சனையால் வரக்கூடிய தாக்கங்கள்.
5) Imigratiom status பிரச்சனைகள்
6) எங்கள் சமூகத்தினரால் ஏற்படக்கூடிய அழுத்தம். (pressure)

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகள் என்பது குறிப்பிட்ட வயதினர் மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினையா? அல்லது அனைத்து வயதினர்க்கும் ஏற்படக் கூடிய பிரச்சினையா?

உளவியல் பிரச்சனைகள் சிறுவர் முதல் பெரியோர்வரை அனுபவிக்கக்கூடும்.

லண்டன் குரல்: உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலை, வன்முறை, குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. இவற்றுக்கும் உளவியலுக்கும் தொடர்புகள் உள்ளதா?

முக்கியமாக உளவியல் பிரச்சனைகளால் தான் தமிழ் மக்கள் மத்தியில் கூடுதலான தற்கொலை, வன்முறை போன்றவை நடக்கின்றன

லண்டன் குரல்: தாயகத்தில் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகள் புலம்பெயர்ந்த சமூகத்தில் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகளில் இருந்து வேறுபபட்டதா? புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இது நாட்டுக்கு நாடு வேறுபாடு உள்ளதா?

தாயகத்தில் இருக்கும் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் புலம்பெயர்ந்த சமூகத்தின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் சில வேறுபாடுகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தாயகத்தில் சொந்தக்காரர், பக்கத்து வீட்டுச் சினேகிதர் என்று ஒவ்வொரு நாளும் கண்டு கதைத்து கவலைகளையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. ஜரோப்பிய நாட்டு வாழ்க்கை முறையில் சினேகிதரையோ, உறவினரையோ பார்ப்பதென்றால் ரெலிபோன் பண்ணி அவர்களின் சௌகரியத்தைப் பொறுத்துத்தான் சந்திக்கக் கூடியதாக இருக்கிறது.

மற்றும் அங்குள்ள பெற்றோரின் சிந்தனைகளும் நம்பிக்கைகளும் பிள்ளைகளின் சிந்தனைகளும் நம்பிக்கைகளும் மாறுபட வாய்ப்பில்லை ஏனெனில் கலாச்சார முரண்பாடு இல்லாததே காரணம்.

லண்டன் குரல்: தமிழ் மக்கள் ஒரு சமூகமாக அவர்கள் எதிர்நோக்குகின்ற உளவியல் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகள் வெளியில் கதைத்து disscuss பண்ணி இவை வராமல் எப்படித் தவிர்க்கலாம் என்று அதற்கான செயல்களைச் செய்ய வேண்டும். பிரச்சனைக்கான விடயங்களைக் கண்டறிந்து அந்தந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு சொற்பொழிவு மூலமும் வேறு வழிகளிலும் மக்களிற்கு விழிப்புணர்ச்சியைக் கொண்டுவந்து விபரீதங்களைக் குறைப்பதற்காக ஆவண செய்ய வேண்டும்.

லண்டன் குரல்: Counselling சம்பாஷணைகளால் ஏற்படக்கூடிய பயன்கள் என்ன?

கவலைதரும் சம்பவங்கள் அதனால் ஏற்படக்கூடிய எண்ணங்கள் உணர்வுகளை Counselling சம்பாஷணைகள் ஒத்துக் கொள்ளக்கூடிய மனநிலையைக் கொடுக்கிறது. இதனால் ஒருவருடைய தன்னம்பிக்கை கூடுகிறது. மனதில் சாந்தம் ஏற்படுகிறது. தன்னால் முடியும் இன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்னும் மனஎழுச்சி ஏற்படும். மனநிலையிலும் உடல் நிலையிலும் உள்ள பாதிப்புக்கள் குறையும் அல்லது நீங்கும்.

கவலையால் வரக்கூடிய விளைவுகளைக் குறைப்பதற்கு Counselling சம்பாஷணைகள் உதவுகின்றன.

ஒருவரது வாழ்க்கையை ஒரு சீரான முறையில் அணுகக்கூடிய மன வலிமையைக் கொடுக்கிறது. Counselling அனுபவமும் அதனால் ஏற்படக்கூடிய விழிப்புணர்ச்சியும் ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை சீரானமுறையில் அணுகுவதற்கான மனவலிமையைக் கொடுத்து பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய மனதைரியத்தைக் கொடுக்கிறது.

லண்டன் குரல்: Counselling சம்பாஷணைகள் எவ்வாறு நடைபெறும்?

Counsellorம் உதவியை நாடுபவரும் முதலில் சந்திக்கும்போது Counsellor எத்தனை தடவைகள் சந்திக்க வேண்டும் ஒவ்வொரு சந்திப்பும் எவ்வளவு நேரம் நீடிக்கும் கநநள என்ன என்பன போன்ற விஷயங்களை விளங்கப்படுத்தி ஒரு conttraact எழுதி ஒத்துக் கொள்வார்கள்.

சந்திப்புகளின்போது Counsellor ஒருபோதும் உதவியை நாடுபவரை எடைபோட மாட்டார். அறிவுரைகூற மாட்டார். குறைகூற மாட்டார். எல்லாவற்றையும் கவனமாகக்கேட்டு தகுந்தமாதிரிக் கதைத்துக்கொண்டு வருவார். தகுந்த கேள்விகள் கேட்பதன் மூலமும் ஆதரவான முறையில் கதைப்பதன்மூலமும் உதவி செய்வார்.

சில சமயங்களில் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப மனம்விட்டுக் கதைப்பதால் ஒருவருடைய உணர்வுகள் எண்ணங்கள் அனுபவங்கள் என்பன மிகவும் ஆழமான முறையில் அலசப்பட்டு எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரியத் தொடங்கும். இது ஒருவருக்குத் தேவையான எதிர்கால இலக்குகளை நிர்மாணிப்பதற்கு உதவுகிறது.