உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

மக்களின் அழைப்புக்களுக்கு பதிலளிக்கவும் என்.பி.பி அமைச்சர்களுக்கு உத்தரவு !

மக்களின் அழைப்புக்களுக்கு பதிலளிக்கவும் என்.பி.பி அமைச்சர்களுக்கு உத்தரவு !

முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தின் போது அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி அனுர குமார

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

இலங்கை கடல் எல்லையின் தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கு முன் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய மீனவர்களுக்கு உச்ச அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கியருந்தது. எதிர்காலத்தில் இந்த அபராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்டுத்த முடியும். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எல்லை தாண்டும் மீன்பிடி தொடர்பில் புதிய சட்டமூலங்களையும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதினூடாக எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பது ஒரு லாபமற்ற செயல் என்பதை எல்லைதாண்டி வரும் மீனவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் வடக்கின் கடல் மற்றும் மீன் வளத்தை முழுமையாக சூறையாடும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகள் மீன்களின் இயக்க சமநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதையும் கடல் வள நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதேவேளை விரைவில் வெளி நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

கட்சிகள் மட்டுமல்ல தமிழ் தேசிய மாணவர் ஒன்றியமும் பிளவுபட்டுள்ளது !

கட்சிகள் மட்டுமல்ல தமிழ் தேசிய மாணவர் ஒன்றியமும் பிளவுபட்டுள்ளது !

கலைப் பீடாதிபதி ரகுராமின் முன்னாள் செல்லப் பிள்ளையாக அறியப்பட்ட எஸ் சிவகஜன் அணியினர், பரமேஸ்வரா ஆலயத்தின் அருகில் உள்ள கல்லாசனத்தில் போதைப்பொருள் பாவித்து வந்ததாகவும், அந்த வழியால் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியான வசையாடல்களுடன் கூடிய சொற்களை பாவித்து தொல்லைகள் கொடுத்ததாகவும் கலைப்பீடாதிபதி ரகுராமின் தற்போதைய செல்லப்பிள்ளைகள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ் சிவகஜன் அணியினர், தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பேரவை கவனத்தில்கொள்ளாது மாணவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்பு வழங்கியுள்ளது என ரகுராமின் தற்போதைய செல்லப் பிள்ளைகள் கொந்தளித்துள்ளனர்.

எஸ் சிவகஜன் தீவர தமிழ் தேசியத் தொண்டன். யாழ் பல்கலைக்கழகத்தில் புத்திஜீவிகள் இணைந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என ஊடக அறிக்கையை வெளியிட்ட போது, அதில் கையொப்பமிட்ட அப்பேராசிரியர்களுக்கு எதிராக, கேலிச் சித்திரங்கள் வரைந்து அவர்களைக் கேவலப்படுத்திய போது கலைப்பீடாதிபதி ரகுராம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எஸ் சிவகஜன் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரித்தவர். அதற்காகத் தீவிர பிரச்சாரங்களிலும் ஈடுபட்டவர். அப்படியானால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகுதான் எஸ் சிவகஜனின் அணி இந்த போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கு பாலியல் ரீதியான வசைபாடல்கள் எல்லாம் செய்கின்றனரா?

கலைப்பீடாதிபதி ரகுராமின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் விடுவிக்கப்பட்ட மாணவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரகுராம் மீண்டும் பதவியேற்கும் வரை தாம் போராடப்போவதாகவும் ரகுராமின் தற்போதைய செல்லப்பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராமுக்கு ஆதரவாக தமிழ்தேசியம் பேசும் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவுக்குரல்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் We Stand with Raguram என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பீடாதிபதி ரகுராம் சுயலாபத்துக்காக போதைப்பொருள் பாவனையாளர்களாக முத்திரைகுத்தி, தன்னை நியாயப்படுத்துகின்றார் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் தேசியம் எப்படி சின்னாபின்னமாகச் சிதறுண்டதோ அதுபோல் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைக்குஞ்சுகளும் ராகுராமின் செல்லப் பிள்ளைகளிடையே எழுந்துள்ள பனிப் போரில் சிக்குண்டு உள்ளனர்.

மிக இறுக்கமாக மூடிய நிலையில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் திறந்த புத்தகமாக, பொறுப்புக் கூறலுடன் செயற்பட வேண்டுமாயின், அதற்கு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து புது இரத்தம், சிந்தனை பாய்ச்சப்பட வேண்டும். அதற்கு அடுத்த துணை வேந்தர் இலங்கைக்கு வெளியே சர்வதேச பல்கலைகழகங்களிலிருந்தும் கோரப்பட்டு கல்வித்தகுதி மற்றும் அவர்களுடைய கல்விச் செயற்பாட்டு திறமையுடன் கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பிரதமரும் உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய Clean University of Jaffna தொடர்பில் கவனம் செலுத்துவது மிக அவசியம்

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா? சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்து

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா?

சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒரு உரையாடல்

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

ஆட்டை கடித்த நாய் ஒன்றை பெண் ஒருவர் தூக்கிலிட்டு கொலைசெய்த சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

சம்பவம் தொடர்பில் தேசம்நெட் அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பெண் ஒருவருக்குச் சொந்தமான ஆட்டை, அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இது தொடர்பில் அயல்வீட்டாருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குறித்த பிரச்சினை அப்பகுதி மத்தியஸ்த சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாயை வளர்க்கும் பெண்ணின் வறுமையை கவனத்தில் கொண்டு இணக்க சபையினர், இறந்த ஆட்டுக்கான இழப்பீட்டை அந்தப் பெண்ணால் முடியாது என தெரிவித்துள்ளனர். இழப்பீட்டுக்கு பதிலாக குறித்த நாயை வழங்குமாறு ஆட்டின் உரிமையாளர் கோரியிருந்துள்ளார்.

இணக்கசபையினரும் நாயை வழங்குமாறு கூறிய நிலையில் நாயை பெற்றுக்கொண்ட பெண் அதனை சுருக்கிட்டு கொலை செய்துள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை சில சமூக வலைத்தள கணக்குகளில் இணக்கசபையினர் நாயை தூக்கிட்டு கொலை செய்யுமாறு கட்டளையிட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இது பற்றி கருத்துப் பதிவு செய்துள்ள சமூக அரசியல் செயற்பாட்டளர் தம்பையா சோதிலிங்கம், “சமூகத்தின் சிந்தனை முறையில் வன்முறை – எதிர்ப்பு – வெறுப்பு எவ்வளவு வெறுப்பு வேரூன்றியிருக்கின்றது என்பதை இச்செயல் எடுத்துக் காட்டுகின்றது” எனப் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் குதிரை தூக்கில் தொங்குவது காட்சிப்படுத்தப்பட்டது. அது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஆனால் உயிரோடு இருந்த வாய்பேச முடியாத பிராணியை தூக்கிட்ட மனநிலை பலரையும் தூக்கிவாரிப் போட்டுள்ளது. வடக்கில் மாதம் 3 படுகொலைகள் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சகிப்புத்தன்மையற்ற மனநிலை படுகொலைகளை நோக்கியே மனிதர்களை நகர்த்துகிறது.

உள்ளூராட்சி தேர்தல்கள் ஏப்ரலில் !

உள்ளூராட்சி தேர்தல்கள் ஏப்ரலில் !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் சாத்தியமாகும் என குறிப்பிட்ட தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவித்துள்ளார்.

 

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னதாக பாடசாலைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என் றும் அரசியல்வாதிகள் பாடசாலை விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்.

இந்தநிலையில் கல்வி அமைச்சரின் அறிவிப்பையும் மீறி அமைச்சர் சந்திரசேகர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றனர்.

கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அடக்குமுறையை பிரயோகிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் ஜனவரி 24 மாணவர் ஒன்றியத்தினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் அவருக்கு வாக்களித்த காமுக விரிவுரையாளர்களுக்கும் எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக கேள்வி கேட்டதற்காக 9 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் என்பதும் அதில் உள்ளடங்கும்.

இப்போராட்டத்தின் பின்னணி தொடர்பில் ஊடகங்களுக்கு மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கங்களை கொடுத்துள்ளனர். அதன்படி கடந்த வருடம் மேமாதம் விஞ்ஞான பீடமாணவர்கள் விரிவுரை மண்டபத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது வேண்டுமென்றே விரிவுரையாளர் ஒருவர் மண்டபத்தை வெளியிலிருந்து பூட்டியுள்ளார். பின்னர் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் பூட்டை உடைத்து மாணவர்களை மீட்க வேண்டியேற்பட்டது. விரிவுரையாளர் மண்டபத்தை பூட்டிய சமயம் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் எவ்வளவு ஒரு பெரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதில் பூட்டை உடைத்து காப்பாற்றிய மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் புதுமுக மாணவர்களுடைய வட்ஸ் அப் குழு உரையாடல்களை சட்டத்திற்குப் புறம்பாக ஒட்டுக் கேட்டதோடு நிற்காமல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்கள் தாம் கற்க விரும்பும் பாடங்களை கற்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காதபட்சத்தில் போராட்டங்கள் மூலம் தமது கோரிக்கைளை முன்வைப்போம் என்று தமக்கிடையே வட்ஸ் அப் குழுவில் கலந்துரையாடியுள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. பேராசிரியர் கணேசலிங்கம் போன்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்களை தமது அரசியல் சுயலாபங்களுக்கு பொங்கு தமிழ் போன்ற போராட்டங்களுக்கு அணிதிரட்டியவர்கள் . அப்படியிருக்க கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமான முதல் நாள் விரிவுரைகளுக்கு சமூகமளிக்காதபடி மாணவர்களுக்கு தடை விதிப்பது அதிகார துஸ்பிரயோகம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் பல்கலைக்கழகத்தினுள் இருந்த 5 கல்லாசனங்களை கலைப்பீடாதிபதி ரகுராம் உடைத்தெறிந்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ரகுராம் தரப்பில் கூறப்படுவதாவது அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவர்கள் சிலர் இரவில் போதையில் கல்லாசனத்திலிருந்து வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை அங்கு வந்த கலைப்பீடாதி ரகுராம் மாணவர்களின் செயலால் கோபமடைந்து சினிமா பாணியில் கல்லாசனத்தை உடைத்துள்ளார். இது தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நீடிக்கும் இப்பிரச்சினைகளில் மாணவர்கள் நலன்சார்ந்து பேச வேண்டிய மூத்தவை மற்றும் பேரவை என்பன மௌனமாகவுள்ளன. ஊழலும், முறைகேடுகளும் மலிந்து போயுள்ள வினைத்திறன் அற்ற யாழ்ப்பல்கலைக்கழக நிர்வாகத்தை தட்டிக் கேட்கவே மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் எனக் கூறுகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபரிலேயே 10 கல்லாசனங்கள் கலைப்பீடாதிபதியின் அனுசரனையில் பொருத்தப்பட்டதாக கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய முகநூலில் பதியப்பட்டுள்ளது.

அந்தவகையில் பின்வரும் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓன்று: விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும்.
இரண்டு: போராடுதல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மூன்று: விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகள் பாரபட்சமின்றி விசாரணை செய்யப்பட வேண்டும்
நான்கு: மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்யப்பட வேண்டும்.

பத்து ஆண்டுகள் நீடிக்கும் அநுர ஆட்சி முன்னாள் யுஎன்பி எம்பி ஆருடம்

பத்து ஆண்டுகள் நீடிக்கும் அநுர ஆட்சி முன்னாள் யுஎன்பி எம்பி ஆருடம்

அநுர தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் நற்பணிகளை ஆதரிப்பதாக முன்னாள் யுஎன்பி எம்பி டொக்டர் ஆஷூ மாரசிங்க கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், எந்த கொமிஷனும் இல்லாமல் பாதுகாப்பாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு10 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்பளித்தால், அவர்களைப் பார்த்து 100 பேர் வருவார்கள் என்கிறார். இதுவரையான என்பிபியின் ஆட்சிக் காலத்தில் எத்த தவறுகளும் நடக்கவில்லை என கூறும் மாரசிங்க அநுர இன்னும் 10 வருடங்கள் இலங்கையை ஆளுவார் என கட்டியம் கூறுகிறார்.

 

கிளி கண்டாவளையில் 2 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக நோய் ! யாழில் ஆய்வுகள் வேண்டும் !

கிளி கண்டாவளையில் 2 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக நோய் ! யாழில் ஆய்வுகள் வேண்டும் !

கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் 2 சதவீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் இருப்பதாக சூழலியல் ஊடகவியலாளர் முருகையா தமிழ்செல்வன் தெரிவிக்கின்றார். கண்டாவளை மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் வேறு கிராமங்களிலும் யாழ் மாவட்டத்திலும் குடி நீரால் வருகின்ற பிரச்சினை காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் கள்ள மண் தொடர்பிலும் கண்டாவளையின் பெயர் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கின்றது. கண்டாவளை பா உ சிறிதரனின் வாக்கு வங்கிகளில் ஒன்று. நெடுந்தீவைப் பூர்விகமாகக் கொண்ட சிவஞானம் சிறிதரன் வட்டக்கட்சியில் வாழ்ந்தவர். கண்டாவளையில் மணம் முடித்தவர். தற்போது யாழ் நகருக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.

யாழ் மற்றும் கிளி மாவட்டங்களில் குடிநீர் பாரிய பிரச்சினையாகி வருகின்றது. அதனால் மக்கள் பாராதூரமான நோய்களுக்கு சிறுநீரகக் கோளாறுகளுக்கு இலக்காகியும் வருகின்றனர். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட தனபாலன் ரவி, “என்னுடைய சகோதரி வட்டக்கட்சியில் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு தனது 20வது வயதில் மிகத்துன்பப்பட்டு காலமானார். சில ஆண்டுகளுக்கு முன் எனது இன்னுமொரு சகோதரியின் கணவர் சிறுநீராக நோயினால் வட்டுக்கோட்டையில் காலமானார். தற்போது அவருடைய மகளுக்கு 30வது வயதில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மாற்றுச் சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உயிர்பிழைத்துள்ளார்” எனத் தெரிவித்தார். இதைவிடவும் எனது உறவுகளுக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பலரும் உள்ளனர். மாற்றுச் சிறுநீரக சிகிச்சையை மேற்கொள்ள ஒரு கோடி 50 லட்சம் வரை செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் நிலத்தடி நீரோடு கலந்து கிணறுகளை வந்தடைகிறது. யாழில் உள்ள சுண்ணாம்புக்கற் கொறைகளினூடாக மலசல மற்றும் கழிவுகளும் கிணற்று நீரை அடைகின்றது. நீரால் ஏற்படுகின்ற சிறுநீரகக் கோளாறு மற்றும் பல்வேறு நீர் சம்பந்தமான நோய்களுக்கும் இதுவே காரணமாகின்றது.

இதன் காரணமாகவே குழாய் மூலமாக குடிநீரை வழங்க ஆசிய அபிவிருப்பி வங்கி இருபது ஆண்டுகளுக்கு முன்னரேயே நிதியை வழங்கி அதற்கான திட்டங்களை ஆரம்பிக்க உதவியது. துரதிஸ்டவசமாக ஊழல் மோசடி யாழ் – கிளி அரசியல் வாதிகளாலும் அதிகாரிகளாலும் பணத்தை வாரிக் கொண்டு சென்றதைத்தவிர குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு வைக்கப்பட வில்லை.

தற்போது பாராளுமன்றம் சென்றுள்ள உறுப்பினர்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இதற்கான தீர்வொன்றை வைக்க வேண்டும். இவர்கள் யாழ் – கிளி குடிநீர்ப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப் போகின்றார்கள் எனபதைத் தெரியப்படுத்த வேண்டும். வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு மக்களுக்கு தங்களுடைய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.