உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இராணுவ வசமுள்ள கிளிநொச்சி காணிகளும் விடுவிக்கப்படும் ஜனாதிபதி வாக்குறுதி !

இராணுவ வசமுள்ள கிளிநொச்சி காணிகளும் விடுவிக்கப்படும் ஜனாதிபதி வாக்குறுதி !

சனிக்கிழமையான ஏப்பிரல் 26 இல் கிளிநொச்சியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். கிளிநொச்சியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும். இது தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் மூடப்பட்ட வீதிகள் திறந்து விடப்பட்டது போன்று கிளிநொச்சியிலும் பொதுமக்கள் பாவணைக்கு தடை விதிக்கப்பட்ட வீதிகள் திறக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். அதேபோன்று போரில் வீடுகளை இழந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளை கட்ட முடியாதுள்ளனர். அம்மக்களுக்கு வீடுகளை கட்டிக்க ஆவன செய்யவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.

பாரம்பரியமாக பயிரிட்டு வந்த மக்களின் நிலங்கள் கூகுள் வரைபடத் துணையுடன் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்துட்டுள்ள விவசாய நிலங்களும் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கிளிநொச்சி மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளூராட்ச்சித் தேர்தலில் வாக்குச் சேகரித்தார்.

கிளிநொச்சிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு புதுக்குடியிருப்பில் தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கைக்கு கடுகளவு சீர்குலைக்க மாட்டோம் என்றும் உணர்ச்சிவசப்பட்டார்.

புதுக்குடியிருப்பில் உரையாற்றிய ஜனாதிபதி இனவாத அரசியல் இனியும் வேண்டாம். எங்களுடைய முதலாவது ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் மீண்டுமொரு தடவை நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தில் பங்குபெறுமாறு புலம்பெயர் தமிழர்களிற்கும் அழைப்பு விடுத்தார்.

 

 

இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வீடொன்றில் வைத்து 15 வயதான சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். தாயின் பராமரிப்பில் வாழும் அச்சிறுமிக்கு இக்கொடுமை 13 வயதிலிருந்து ஆரம்பித்துள்ளது.

இனிப்பு பண்டங்களை கொடுத்து அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒரு கூட்டம், தங்களிடம் சிறுமியின் அந்தரங்க காணொளி இருப்பதாக பயமுறுத்தி தொடர்ந்து பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து வந்திருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த மோசமான செயலில் இரு பெண்கள் பிரதான குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதிலொரு பெண் ரிக்ரொக்கில் பிரபலமானவர் எனவும் கூறப்படுகிறது. குறித்த பெண்ணின் வீட்டிலேயே சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியான இச்சிறுமியை தாயாருக்கு தெரியாமலேயே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெண்கள் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் பெற்று வந்துள்ளனர்.

யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் மாணவி கொடுத்த வாக்கு மூலத்தின்படி மூன்றுபேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதானவர்களில் இரு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக கூறப்படுகிறது. கைதான 45 வயதான ஆண், சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த வருட இறுதியில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் கூட பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள் கைது செய்யப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரி மாணவர்களுக்கும் பாலியல் கல்வியின் அவசியத்தை இவ்வாறான துயர அனுபவங்கள் உணர்த்துகின்றன. பிள்ளைகள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை பாடசாலையிலேயே செலவிடுகின்றனர். மேற்கு நாடுகளில் ஆசிரியர்கள் வகுப்பறையில் அட்டவணைப் பாடங்களை மட்டுமே கற்பிப்பதில்லை. வகுப்பாசிரியரின் கடமை மாணவர்களின் உள, உடல் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இலங்கையில் இன்னமுமே பாலியல் கல்வி மற்றும் பாலியல் சுகாதாரம் தொடர்பில் போதிய விழிப்புணர்வும் அறிவும் பற்றாக்குறையாகவுள்ளது. கிளிநொச்சியில் கனிஸ்ட மகா வித்தியாலயத்தில் 16 ஆண் சிறுவர்கள் அப்பாடசாலை கிரிக்கெட் பயிற்றிவிப்பாளர் அலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான போது கூட பாடசாலை நிர்வாகம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தது.

இந்த விடயம் ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்த போது எம்பி சிவஞானம் சிறிதரனின் அரசியல் செல்வாக்கால் மூடி மறைக்க பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரின் முயற்சியால் அலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பிடோபைஃல் (PEDOPHILE) தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வட்டுக்கோட்டையில் கைதான 45 வயது ஆண் கூட பிடோபைஃல் ஆக இருக்க சந்தர்ப்பம் உண்டு. எனவே வட்டுக்கோட்டை பகுதியில் வேறு சிறுவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்களாக என பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். வட்டுக்கோட்டைச் சம்பவத்தில் கைதான பெண்கள் வேறு சிறுமிகளையும் இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு விற்றுள்ளார்களாக என போலீசார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறுமியை தமது பராமரிப்பில் எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறுமியின் எதிர்காலக் கல்வி மற்றும் சிகிச்சை தொடர்பில் வேண்டிய உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது சமூகம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இணைய வலையில் மெய்நிகர் உலகத்தில் ( virtual world ) ஈழத்தமிழ்ப் பெண்கள் மீதான ஒடுக்குமுறை எகிறுகிறது !

இணைய வலையில் மெய்நிகர் உலகத்தில் ( virtual world ) ஈழத்தமிழ்ப் பெண்கள் மீதான ஒடுக்குமுறை எகிறுகிறது !

பா உ அர்சுனாவின் வழிகாட்டலில், தனியார் கல்வி நிறுவனத்தின் கலைவிழாவில் நடனமாடிய மாணவியை பாலியல் தொழிலாளியாக சித்தரிக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் அட்டூழியம். நிஜ உலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள், வீட்டு வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மேலாக இணையத்தில் மோசமான கருத்தியல் ரீதியான வன்முறைகள் நாள்தோறும் நடக்கின்றன.

எம்பி அர்ச்சுனா இராமநாதனின் பினாமிகளால் நடத்தப்படும் ஊழல் ஒழிப்பு வன்னி அணி என்னும் போலி முகநூலின் பின்னால் மறைந்து கொண்டுள்ள ஒரு பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்மையவாத கூட்டம் சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் பெண்கள் மீதான மோசமான தாக்குதலை மேற்கொள்கின்றது.

யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கில் வாழும் இளம் தலைமுறைப் பெண்களை இலக்கு வைத்து இந்த இணைய மொப்பிங் ( Mobbing ) வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஊடகப்பரப்பில் செயற்பட்டு வருகிற பெண்களை இலக்கு வைத்த இக் காட்டுமிராண்டி குழு. இப்போது பொது நிகழ்சிகளில் அல்லது கல்வி நிறுவன நிகழ்வுகளில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தும் பெண்களையும் தங்களது நாசகார வலைக்குள் கொண்டு வந்துள்ளது.

கடந்த நாலைந்து தினங்களாக யாழில் தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் சிறந்த முறையில் நடனமாடி பாராட்டுப் பெற்ற இளம்பெண்ணை ஊழல் ஒழிப்பு அணி வன்னி பாலியல் தொழிலாளி என கேவலப்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் படங்களை வெளியிட்டு அவதூறு பரப்புகிறது. துணைக்கு தலைவர் இருந்திருந்தால் அந்த இளம்பெண்ணை மண்டையில் போட்டிருப்பார் என விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் இழுத்து அந்த அமைப்பையும் கேவலப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் தம்மிடம் தனது காதலியைப் பற்றி எழுத வேண்டாம் என கெஞ்சுவதாகவும் கூறி மார் தட்டுகிறது. நடனமாடிய யுவதியின் படத்தைப் போட்டு ஒரு இரவிற்கு 20,000 ரூபாய் எனவும் பதிவிட்டுள்ளது.

வாய்கிழிய தமிழ்த் தேசியம், தமிழர் அடையாளம், பண்பாடு, மரபு வழித் தாயகம் , தமிழ் மண் என்று கூவிக் கூவிக் அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி எந்த அக்கறையும் இல்லை. பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகளால் மட்டுமே தலைமை தாங்கி நடத்தப்படுகின்றன. அக் கட்சிகளில் ஓரிரு பெண்களும் ஆண்மையவாத கருத்தியலுக்குள் அடங்கிக்கிடக்கிடக்கின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் ஈழத்தமிழ்ப் பெண்கள் அடுப்படிக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் பிரதமராக இருக்கின்ற நாட்டில் சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆளும் என்பிபி அரசாங்கம் இன்னும் கூட காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு தினங்களுக்கு முன்னர் தான் யாழில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு திறப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதனால் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வடக்கு புலனாய்வு போன்ற போலி முகநூல் கணக்களால் தாக்குதலுக்குள்ளான பெண்கள் யாழ்ப்பாண இணையக் குற்ற அலுவலகத்தை நாடி உடனடியாக தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறான போலி முகநூல்களை முடக்க வேண்டும். அவ்வாறான முகநூல்களில் வரும் அவதூறான பதிவுகளுக்கு பின்னூட்டல் இடும் நபர்களின் பதிவுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படியானவர்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்பட வேண்டும். போலி சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக குற்றங்கள் புரிபவர்களை அவர்களது ஆள் அடையாளத்துடன் அம்பலப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் இவ்வாறான துணிகரமான கருத்தியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுக்கலாம். ஆளும் என்பிபி அரசாங்கம் இணையக்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட சட்டம் வினைத்திறனாக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இணையத்தில் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு தகுந்த சட்ட மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டமொன்றை மகளீர் விவகார அமைச்சு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறான பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டுமெனில் பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். பெண்கள் தமது விகிதாசாரத்திற்கு ஏற்ப அரசியலில் ஈடுபட வேண்டும். பெண்களை அரசியலில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கட்டுநாயக்காவில் துப்பாக்கி சூடு !

கட்டுநாயக்காவில் துப்பாக்கி சூடு !

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. காயமடைந்த நபர் முதலில் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு தினமும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்று சனிக்கிழமை 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

யாழில் தலைத்தூக்கும் சிக்கன்குனியா !

யாழில் தலைத்தூக்கும் சிக்கன்குனியா !

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம்
தொடர்பில் கூடுதலான அவதானத்தைச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

உள்ளூராட்ச்சித் தேர்தல் சட்டங்களை மீறியோர் மீது கடும் நடவடிக்கை !

உள்ளூராட்ச்சித் தேர்தல் சட்டங்களை மீறியோர் மீது கடும் நடவடிக்கை !

உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 106 அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டவிதிகளை மீறி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 26 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 237 முறைப்பாடுகளும் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 170 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

இனிமேல் சிங்களவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வைக்கட்டும் !

இனிமேல் சிங்களவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வைக்கட்டும் !

வவுனியாவில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் எம்பி சத்தியலிங்கத்திடம் ஆனையிறவு உப்பிற்கு சிங்களப் பெயர் வைத்த விவகாரம் தொடர்பில் கேட்டபோது அவர் விரசமாக பதிலளித்தார். சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்தநாயக்க ஆனையிறவு உப்பின் பெயரை பார்க்காதீர்கள், உப்பின் சுவையை பாருங்கள் என்று கூறிய கருத்திற்கு எம்பி சத்தியலிங்கம் பதிலடியாக இப்படி பேசினார்.

தமிழ் அடையாளங்களுடன் தமிழர்களாக வாழ வீட்டிற்கு வாக்களிக்க முன்னாள் எம்பி சார்ள்ஸ் கோரிக்கை !

தமிழ் அடையாளங்களுடன் தமிழர்களாக வாழ வீட்டிற்கு வாக்களிக்க முன்னாள் எம்பி சார்ள்ஸ் கோரிக்கை !

தமிழர்களாகிய நாங்கள் எங்கள் அடையாளங்களுடன் தமிழர்களாக வாழ வேண்டும். எமது வரலாற்றை கொண்டு செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. எனவே மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் வீட்டுச் சின்னத்திற்கு தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கும்படி வன்னி மாவட்ட முன்னாள் எம்பி இ. சாள்ர்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நானாட்டான் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி சாள்ர்ஸ் நாட்டில் ஜனாதிபதியாக அநுரகுமார திஸ்ஸநாயக்க இருக்கட்டும். ஆனால் உள்ளூராட்சி என்பது எமது தமிழரசு. அங்கே தமிழர்களாகிய நாங்களே எங்களை ஆள வேண்டும். அப்போது தான் எங்களுடைய அடையாளங்களை பாதுகாக்க முடியும். ஆகவே தமிழர்களாகிய நாங்கள் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 

 

வறுமைக்குள் செல்லும் இலங்கை !

வறுமைக்குள் செல்லும் இலங்கை !

இலங்கை 2024 ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி கண்டிருந்தாலும், மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதி தற்போதும் வறுமையில் அல்லது மீண்டும் வறுமைக்குள் செல்வதற்கான அபாயத்திலும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கி பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் என்ற இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்பு நிலை சிறப்பாக இருப்பதாகவும், 2024 இல் 5% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னதாகக் கணிக்கப்பட்ட 4.4% வளர்ச்சியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக தொழில்துறை மற்றும் சேவைத் துறைகள், குறிப்பாக கட்டிடத் துறை மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனினும், உலக வங்கி எச்சரிக்கையின்படி, இந்த வளர்ச்சி எல்லோருக்கும் சமானமாக பயனளிக்கவில்லை. குறிப்பாக வறுமையில் வாழ்பவர்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வறியவர்களுக்கு உதவும் கொள்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில், உலகளாவிய பொருளாதார நிலைமைகள், எதிர்பாராத வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், மற்றும் உள்ளக கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக இலங்கையின் வளர்ச்சி 3.5% வரை குறைவடையும் என இந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.