செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஐ.தே.க. எம்.பி., பாலித ரங்கபண்டாரவை விசாரணைக்கு சி.ஐ.டி.அழைப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கபண்டாரவை விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்துள்ளனர்.

அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு வருமாறு கோரியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீரவை போன்று வாக்கு மூலங்களை பெறுவதற்கே அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மங்கள சமரவீர நேற்று முன்தினம் வியாழக்கிழமை வாக்குப்பெறப்பட்ட அதேவேளை,அவரது கட்சியின் செயலாளர் டிரான் அலஸும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தலைவராக பத்மநாதனின் நியமனம் முக்கியமற்றதொரு விடயம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

rambukella.jpgவிடு தலைப்புலிகளின் தலைவராக செல்வராசா பத்மநாதன் நியமிக்கப்பட்டிருக்கும் விடயம் முக்கியமற்றதொன்று என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் சேகரித்திருந்த பெருந்தொகையான பணத்துக்கு உரிமை கோருவதற்காக தலைமைப்பதவியை குமரன் பத்மநாதன் ஏற்பார் என்பது குறித்து தாங்கள் நன்கு அறிந்திருந்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். ஆனால், இயங்க முடியாத அளவுக்கு புலிகளின் பயங்கரவாதம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் பத்மநாதனின் நியமனம் தொடர்பாக அச்சுறுத்தல் குறித்து அரசு அச்சம் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை தற்போதும் கடுமையான முறையில் அமுலில் இருப்பதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தளச் சேவைக்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று வெள்ளிக் கிழமை தெரிவித்துள்ளார்.

புத்தளம் அநுராதபுரம் வீதி புனரமைப்பு இன்று

25sri-lankan-road.jpgபுத்தளத் திலிருந்து அநுராதபுரம் வரையிலான ஏ12 வீதியின் 50 கிலோ மீற்றர் தூரத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பமாகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் .ஏக்கநாயக்க வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கின்றார்.

கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான ஏ3 வீதியில் நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் வரையிலான பகுதி முழுமையாக கார்பட் போடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு அப்பால் உள்ள அநுராதபுரம் ஹொரவ்பத்தானை திருகோணமலை வரையிலான ஏ12 வீதி புனரமைக்கப்படவில்லை.இவ்வீதி ஊடான  வாகனப் போக்குவரத்து அதிக அளிவில் இடம்பெறுவதுடன் வாகன நெரிசலும் நிலவி  வருகின்றது.

இந்தப் பகுதியை புனரமைப்பதன் மூலம் மேற்கு, வடமத்தி, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்துக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்தரணி சிவானந்தன் லண்டனில் காலமானார்

பிரபல சட்டத்தரணியும் சிவானந்தன் அன்ட் அசோசியேட்ஸ் சட்ட நிறுவனத்தின் நிறுவுனருமான கந்தையா சிவானந்தன் அவரது 74 ஆவது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார்.  யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவானந்தனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்ற வாஸுக்கு ஒருநாள் அணியில் இடமில்லை

chaminda-vass.jpgபாகிஸ் தானுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸுக்கு இடம் கிடைக்கவில்லை. எனினும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மாலிங்க பண்டார ஆகியோருக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. அத்துடன் காயத்தினால் அவதிப்பட்டு வந்த முத்தையா முரளிதரன் மற்றும் லசித் மாலிங்க ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் இணைக்கப்பட்டனர்.

இதில் காயத்துக்கு உள்ளாகியுள்ள அதிரடி ஆட்டக்காரர் டி.எம்.டில்ஷான் சேர்க்கப்படவில்லை. பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உபுல் தரங்க மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று முடிவடைந்த பாகிஸ்தானுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற 35 வயதான சமிந்த வாஸ் வரும் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி வரை இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

எனினும் அவருக்கு தொடர்ந்து இலங்கை ஒருநாள் அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. வாஸ். எஸ்.எஸ்.சி. டெஸ்டில் ஒரு விக்கெட்டை மாத்திரமே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் 32 வயதான திலன் சமரவீர இலங்கை ஒருநாள் அணியில் இணைக்கப்படுவது நான்கு ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். அவர் கடைசியாக 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதேபேõன்று சுழற்பந்து வீச்சாளர் மாலிங்க பண்டார அணிக்கு திரும்புவது இரண்டு ஆண்டுகளின் பின்னராகும்.

இது தவிர, ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் சகலதுறை ஆட்டக்காரர் பார்வீஸ் மஹ்ரூபிற்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் தம்புள்ளையில் வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அணி விபரம்

சங்கக்கார (தலைவர்/வி.கா), முத்தையா முரளிதரன், சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, சாமர கபுகெதர, அன்ஜலோ மத்தியூஸ், நுவன் குலசேகர, லசித் மாலிங்க, அஜந்த மெண்டிஸ், திலின கண்டம்பி, மாலிங்க பண்டார, திலான் துஷார, இஸுரு உதான, உபுல் தரங்க.

பேருவளையில் முஸ்லிம் குழுக்களிடையே கலவரம் : இருவர் பலி; 9 பேர் காயம்

beruwela.jpgபேருவளை பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம் சமூக குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் வரை காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

பள்ளிவாசலும் தீயிடப்பட்டதாகவும், இதையடுத்து, தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்க உதவி அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

us_ass_sec.pngஅமெரிக் காவின் சனத்தொகை,  அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான உதவி அமைச்சர் எரிக் பி.ஸ்க்வார்ட்ஸ் இன்று இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்க உதவி அமைச்சர் வடக்கிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை நேரில் சென்று பார்வையிடவுள்ளதுடன், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இவர் சுனாமி அனர்த்தத்தின் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளுக்கான ஐ.நா. வின் விசேட பிரதித் தூதுவராக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

யாழ். ரயில் சேவை விஸ்தரிப்பு பணிகள் துரிதம்

railway_lines.jpgதாண்டிக் குளம் வரையில் விஸ்தரிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவையை ஓமந்தை வரையில் விஸ்தரிப்பதற்காக ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வர்த்தக அத்தியட்சர் விஜய சமரசிங்க தெரிவித்தார். தண்டவாளங்கள்,  ரயில் நிலையம் மற்றும் ரயில் சமிக்ஞை விளக்குகள் என்பன சீரமைக்கப்பட்டவுடன் இன்னும் மூன்று மாதத்தில் இந்தசேவை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலிகளுடனான போர் நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து வடக்கிற்கான ரயில் போக்குவரத்துச் சேவைகள் தாண்டிக்குளம் வரை விஸ்தரிக்கப்பட்டன. அச்சேவையை ஓமந்தைவரை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கின் நண்பன் வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கிற்கான ரயில் போக்குவரத்து சேவைகள் முழுமையாக விஸ்தரிக்கப்படவுள்ளன. இதற்காக 14 பில்லியன் ரூபா செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய முகாம் மதுனுஸ்கா படுகொலை விவகாரம்: பெண் வேஷமிட்டு தப்ப முயன்ற குற்றவாளி பொதுமக்களால் அடித்துக் கொலை

mathu.jpgமத்திய முகாம் மதுனுஸ்காவின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மத்திய முகாம் 4ம் கொலனியைச் சேர்ந்த 12 வயது மாணவியான மோகன் மதுனுஸ்காவின் ஊரைச்சேர்ந்த மேற்படி சந்தேக நபரான ‘பாவா’ என அழைக்கப்படும் கனகரெத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா (வயது 29) என்பவரே இவ் விதம் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டவராவார்.  அவரது மரண விசாரணையும் நேற்று மத்திய முகாம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த புதனன்று மாலை 3ம் கொலனிக்கு முட்டை விற்கச் சென்ற மதுனுஸ்கா குரூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அருவருப்பான முறையில் கொலைசெய்யப்பட்டமை தெரிந்ததே. அதனையடுத்து பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் நடத்தினர்.

வியாழனன்று காலை அங்கு பொலிஸாரால் கொண்டு வரப்பட்ட மோப்ப நாய் சம்பந்தப்பட்ட கொலையாளியின் அக்காவின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து கொலையுண்ட மதுனுஸ்காவின் உடையையும், கொலையாளியின் அடையாள அட்டையையும் சாறனையும் வாயினால் கவ்வி வெளியே கொணர்ந்தது. இதனையடுத்து ஊரார் மத்தியில் கொலையாளி அவர் தான் என்பது ஊர்ஜிதமாயிற்று. இதேவேளை அவர் அங்கிருந்து தலைமறைவாகியிருந்தமையும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இந்நிலையில், அன்று பிற்பகல் அவர் வயலுக்குள் பெண் வேஷத்துடன் கதிர் பொறுக்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து 3ம் 4ம் கொலனியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான தமிழ், சிங்கள மக்கள் அங்கு சென்று அவரை சரமாரியாக நையப்புடைத்தனர்.  அவ்வேளை பொலிஸாரும், படையினரும் விரைந்து அவரை கொண்டு செல்ல நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனிடையே மதுனுஸ்காவின் உடல் வியாழனன்று மாலை வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு நேற்றுவரை ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர். தாய், தந்தை, உறவினர்கள் கதறியழுதமை நெஞ்சை நெகிழவைத்தது.

நேற்று வெள்ளிக்கிழமை அவர் கற்ற 4ம் கிராமம் வாணி வித்தியாலயம் வெறிச்சோடிக் காணப்பட்டது. வித்தியாலய அதிபர் ச. சரவணமுத்து, மதுனுஸ் காவின் வகுப்பாசிரியை திருமதி ச. மதிவதனி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் மலர்மாலையுடன் சென்று அஞ்சலி செலுத்திய போது, தாயார் அழுத காட்சி சகலரையும் தேம்பி அழவைத்தது. பொலிஸ் அதிரடிப் படையினர் அவரது வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்கினர். நீதிவான் விசாரணையும் நேற்று இடம்பெற்றது. மக்கள் சாரிசாரியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இலங்கை அணி தொடர் வெற்றி – ஆட்டநாயகன் சங்கக்கார; தொடர்நாயகன் நுவன் குலசேகர

srilanka-cri.jpgஇலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடர் வெற்றியைக் கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தேல்வியின்றி முடிவடைந்தது. இலங்கை அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 391 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டியை இடைநிறுத்திக் கொண்டது.

இதுவரை எந்த அணியும் 4 வது நாளில் 492 ஓட்டங்களைச் சேர்த்து வென்றதாக சரித்திரம் இல்லை. இதற்கு முன்னர் 7 விக்கெட்டுக்கு 418 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றி பெற்றதே சாதனை இருந்து வருகிறது அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2003ல் மேற்கிந்தித் தீவுகள் அந்தச் சிறப்பைப் பெற்றது.

இலங்கை, பாகிஸ்தானுக்கிடையிலான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 30ம் திகதி தம்புள்ளையில் நடைபெறும்.

PAKISTAN
1ST INNINGS: 299
SRI LANKA
1ST INNINGS: 233
PAKISTAN
2ND INNINGS:
425-9 decl
SRI LANKA
2ND INNINGS

T. Paranavitana c Alam b Malik   73
M. Warnapura c Malik b Kaneria   31
K. Sangakkara not out   130
M. Jayawardene c Akmal b Kaneria   2
T. Samaraweera c Akmal b Ajmal   73
A. Mathews not out    64
Extras: (b1, lb7, nb9, w1)   18
Total (for 4 wkts, 134 overs)  391
To bat: Tillakaratne Dilshan, Rangana Herath, Chaminda Vaas, Thilan Thushara, Nuwan Kulasekera.
Fall of wickets: 1-83 (Warnapura), 2-139 (Paranavitana), 3-155 (Jayawardene), 4-277 (Samaraweera).
Bowling: Gul 12-0-65-0 (nb5), Aamer 21-5-46-0 (nb1), Younus 8-0-25-0 (w1),
Ajmal 43-9-95-1, Malik 14-1-38-1 (nb3), Kaneria 36-3-114-2.