ஐ.தே.க. எம்.பி., பாலித ரங்கபண்டாரவை விசாரணைக்கு சி.ஐ.டி.அழைப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கபண்டாரவை விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்துள்ளனர்.

அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு வருமாறு கோரியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீரவை போன்று வாக்கு மூலங்களை பெறுவதற்கே அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மங்கள சமரவீர நேற்று முன்தினம் வியாழக்கிழமை வாக்குப்பெறப்பட்ட அதேவேளை,அவரது கட்சியின் செயலாளர் டிரான் அலஸும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *