செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கரண்ணாகொடவை விட பொன்சேகாவுக்கே அதிக பாதுகாப்பு

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரண்ணாகொடவை விட முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கே அதிக பாதுகாப்பும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று தெரிவித்தது.

அட்மிரல் வசந்த கரண்ணாகொட தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளராகவும் அரசாங்கத்தின் உயர் பதவியை தொடர்ந்தும் பதவி வகித்து வருகின்றபோதிலும் ஜெனரல் பொன்சேகாவுக்கே பாதுகாப்பு அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவைவிட அட்மிரல் வசந்த கரண்ணாகொடைக்கு பாதுகாப்பும், வாகனங்களும் அதிகமாக வழங்கப்பட்டுள் ளதாக சில ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புரம்பானது என்று அவர் மேலும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் லக்ஷ்மன் ஹுலுகல்ல மேலும் தகவல் தருகையில், ஜெனரல் பொன்சேகாவுக்கும் அட்மிரல் கரண்ணாகொடைக்கும் ஒரே ஒரு வித்தியாசமே உள்ளது. ஜெனரல் பொன்சேகா ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரி. அட்மிரல் கரண்ணாகொட தொடர்ந்தும் அரசின் இரு உயர் பதவிகளை வகித்து வருபவர். எனினும் பொன்சேகாவுக்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குண்டு துழைக்காத கார்-01, மோட்டார் சைக்கிள்- 04, டிபென்டர் ஜீப் வண்டிகள்- 04, வான்- 01, கடற்படை அதிகாரிகள் – 02, மற்றும் கடற்படை வீரர்கள் 40 பேர் என்ற அடிப்படையிலேயே கரண்ணா கொடைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் நானே உண்மையான பொது வேட்பாளர் – ஜனாதிபதி

mahinda0.jpgஇலங் கையில் வாழும் சகல சமூகத்தினதும் அங்கீகாரத்தைப் பெற்ற நானே நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்றுக் காலை அரசாங்க மற்றும் தனியார்துறை ஊடக முக்கியஸ்தர்களுடனான   சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “வடக்கு,  தெற்கு என்றில்லை அனைவரும் எனது மக்களே. சகல மக்களினதும் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு”. இந்த வகையில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அவர்களும் வாக்களிப்பதற்கான உரிமையைக் கொண்டவர்கள்

நாட்டின் அபிவிருத்தியே எமது பிரதான இலக்கு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்து நாம் மக்கள் ஆணையைப் பெற்றோம். மஹிந்த சிந்தனை அபிவிருத்திக் கருத்திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் பத்தாண்டு திட்டமாக அதனை முன்னெடுப்பதே எமது நோக்கம்.

வதந்திகள், சேறு பூசுதலை பெருவாரியாகக் கொண்டதாகவே இம்முறை தேர்தல் அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். இதற்கான திட்டமிட்ட முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. எம்மைப் பொறுத்தவரை எவருக்கும் சேறு பூச வேண்டிய அவசியம் எமக்கில்லை.

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தவும் அபிவிருத்தி தொடர்பாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றவும் என்னால் முடிந்துள்ளது. இது எமக்கான பெரும் வெற்றியாகும். மக்கள் எம் பக்கமே உள்ளனர். மக்கள் எமக்கே தமது ஆதரவை வழங்குவர். நாம் நூற்றுக்கு 95 வீதம் என்ற ரீதியில் வெற்றி பெறுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

புதுக்குடியிருப்பில் விமான உபகரணங்கள் ஆயுதங்கள் மீட்பு!

புலிகளின் விமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை விமானப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகள் மிகவும் சு10ட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே விமானப் படையினர் நடத்திய தேடுதலின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கு பொருத்தப்படும் அதிசக்தி வாய்ந்த என்டனாக்கள் – 02, வி 8000 ரக தகவல் பரிமாற்ற கருவிகள் – 04, கனரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் – 300,  பிஸ்டல்கள் – 02,  9 மி.மி. ரக துப்பாக்கி ரவைகள் இரவு நேரத்தில் பயன்படுத்தும் தொலை நோக்கிகள் என்பன மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) விஞ்ஞானப் பிரிவில் தமிழ் மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

mythili.jpgஇன்று வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற தமிழ்மாணவி அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று  சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள யாழ்.மாவட்டம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவனான, அன்டன் கிறிஸ்டர்ஸ் ஜோன் நிராஜ் கணிதப் பிரிவில், அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது பொன்சேகா மட்டுமல்ல – இராணுவத் தளபதி

jagath_jayasuriya.jpgவிடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள சரத்பொன்சேகா மட்டுமல்லாது அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாடுபட்டுள்ளனர் என்றும் பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பான பொன்சேகாவின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, இராணுவத்தின் 58ஆவது படையணியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளராக சரத் பொன்சேகா- ஸ்ரீ.ல.சு.க.மக்கள் பிரிவு – ஐ.தே.க. தீர்மானம்

sara-pon.jpgஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் கூட்டு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன.

இன்று இடம்பெற்ற கட்சியின் உயர்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பு

puli_kural.jpgபுலிகளின் குரல் வானொலி சேவையின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பை சிற்றலை, செய்கோள் மற்றும் இணையம் ஊடாக கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
 
இது தொடர்பில் புலிகளின்குரல் வானொலி சேவையினர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மதிப்புக்குரிய தமிழீழ மக்களே! தமிழக உறவுகளே!  புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே! உலகவாழ் எம்முறவுகளே! தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில் எமது இணைய தளத்திலும், செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம். மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5.00 மணி தொடக்கம் 22.00 மணி வரை pulikalinkural.comல் ஒலிக்கவுள்ளது

செய்கோள்
அலைவரிசை விபரம்:
Name: NTR- Tamil
Satellite: Eurobird 9
Frequency: 11919
Polarization: Vertical
Symbol Rate : 27500
Fec : 3/4

அதே நேரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய நாட்களில் சிற்றலையூடாக தமிழீழம், இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஒலிக்கவுள்ளது அதன் அலைவரிசை விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

புதன்,வியாழன் ஆகிய நாட்களில் தாயக நேரம் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும், 18.30மணி தொடக்கம் 19.30மணிவரை 11510 என்ற அலைவரிசையில் எமது சிறப்பு ஒலிபரப்புக்களை கேட்கலாம்.

வருகின்ற மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பினை பிற்பகல் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்
18.30மணி தொடக்கம் 20.30மணி வரை 11510 என்ற அலைவரிசையிலும்
20.30மணி தொடக்கம் 23.30மணி வரை 6225 என்ற அலைவரிசையிலும் மாவீரர் நாள் ஒலிபரப்புக்கள் ஒலித்து நிறைவு பெறும்.

தமிழீழத்தின் தேசிய நாளான மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை மேற்கூறப்பட்ட அலைவரிசைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்

இவ்வண்ணம்
புலிகளின்குரல் நிறுவனம்
info@pulikalinkural.com

புதிய பிரதேச செயலகப் பிரிவுகள்!

sarath_amunugama.jpgஅரச நிர்வாகம் அபிவிருத்தி மற்றும் மக்கள் தேவைகளை அடிப்படையாகக்கொண்டு புதிய நிர்வாக அலகுகளை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி புதிய பிரதேச சபை பிரிவுகள் புதிய கிராம சேவகர் பிரிவுகள் போன்றவற்றை அமைக்கவும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட பிரிவுகள் தொடர்பாக வர்த்தமானி மூலம் அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நபியவர்களின் பெயரில் பத்திரிகையில் படம் வெளியானமைக்கு ஜனாதிபதி ஆழ்ந்த கவலை! – பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura.jpgஇலங் கையின் தமிழ் தேசிய நாளிதல் ஒன்றில் கடந்த செவ்வாயன்று வெளியான முகம்மது நபி (ஸல்) அவர்களுடையதென பிரசுரிக்கப்பட்ட படம் ஒன்று தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிர்ச்சியடைந்ததாகவும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது முஸ்லிம்களின் கலாசாரத்தில் உருவப்படத்துக்கு முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை. அதிலும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை எங்கும் காணமுடியாது.

இந்த உருவப்படம் வெளியான தகவல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள,  பிரமுகர்களினாலும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துகு கொண்டுவரப்பட்டபோதே ஜனாதிபதி இது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்

அந்தப் பத்திரிகை நிறுவத்தின் தவறு காரணமாக இச்செயல் இடமபெற்றிருந்தாலும் அதனால் பாதகமான வேறு விளைவுகள் ஏற்படக்கூடாதென்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகு உத்தரவிடடுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

விக்ரமபாகு கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்

karunaratne.jpgபுதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாமை மற்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எதிர்த்தே தாம் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகள் தலையிடுவதன் காரணமாக, நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் இழக்கப்பட்டுள்ளன.
 
இந்தநிலையில் இந்திய மற்றும் உலகளாவிய இராணுவத்தினரை ஈடுபடுத்தி, தமிழ் மக்களை போராட்டத்தை இந்த அரசாங்கம், நசுக்கியுள்ளது. இதனை வெற்றியாக அரசாங்கம் தெரிவித்தாலும், அது தேசத்தை நாசமாக்கும் செயற்பாடு என விக்கிரமபாகு குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழர் தாயகக்கோட்பாட்டை, சீர்குலைத்து, தமிழ் மக்களை பிரித்தாளும் முறையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக, தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதுடன், பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
 
சிங்கள பிரதேசத்திலும் மக்கள் கொல்லப்படுவதுடன், தமிழர்களுக்காக குரல்கொடுக்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது. இந்தநிலையில் வாழ்க்கை சுமையும் அதிகரித்துள்ளமையால், சிங்கள இளைஞர்களே ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.