செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிளிநொச்சியில் நூறு வீடுகளை அமைக்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உதவி.

red-cross.jpgகிளி நொச்சியில் 50 வீடுகளை அமைப்பதற்கான முதற்கட்ட உதவிகளை இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்கும் ஆரம்பப் பணிகளுக்காக தலா 50 ஆயிரம் ரூபா நிதியுதவி செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசப் பிரிவில் நூறு வீடுகளை அமைப்பதற்கு செஞ்சிவைச்சங்கம் திட்டமிட்டுள்ளது. இவை கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள விவேகானந்தநகர், அனந்தபுரம்,  கணேசபுரம்  ஆகிய கிராமங்களில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலி தமிழகத்தில் குண்டுத்தாக்குதல்

track.gifவிடுதலை புலிகளின்  ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தமிழ் நாட்டின் விலுபுரம் மாவட்டத்தில் உள்ள புகையிரத தண்டவாளம் ஒன்றில் குண்டு வெடிக்க செய்துள்ளனர். இச்சம்பவம்  இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பு காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டமையை கண்டித்தே இக்குண்டு வெடிப்பு  இடம்பெற்றதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  இக்குண்டு வெடிப்பு காரணமாக சென்னைக்கான பல புகையிரத சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன

வடமாகாண சபை அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைக்க ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

cha.jpgவட மாகாணசபை அலுவலகத்தை கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது திருகோணமலையில் இயங்கிவரும் இந்த அலவலகம் வடமாகாணத்தின் மையப்பகுதியில் அமைக்கப்படுவதே பொருத்தமானது என கருதப்படுவதால்ää கிளிநொச்சி நகருக்கும் இரணைமடுச்சந்திக்கும் இடைப்பட்டää ஏ-9 விதிக்கு மேற்காக அமைந்துள்ள அறிவியல்நகர் இதற்குப் பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் முன்னர் விடுதலைப்பலிகளால் அமைக்கப்பட்டுள்ள பல கட்டடங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிமாவட்டங்களில் தற்காலிகமாக வசிக்கும் கிளிநொச்சி மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர அழைப்பு.

நிவாரண முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளிமவாட்டங்களில் வசித்துவரும் கிளிநொச்சி மாவட்ட கண்டாவளைப் பிரதேசச் செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் சோந்த மக்களும் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்வதற்கான ஆயத்தநிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பதிவுகளை உரிய பகுதிகளில் நீக்கம் செய்து விட்டு எதிர்வரும் 21, 22 அகிய திகதிகளில்  கிளிநொச்சி தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் காலை 9 மணிதொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வருகை தந்து மீள் குடியமர்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் கோரியுள்ளார்.

மேலும் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சிää சிவிக்சென்ரர், மாயவனூர்,  இராமநாதபுரம்ää ஆகிய கிராமசேவை அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் தாங்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் இடங்களிலுள்ள பதிவுகளை நீக்கிவிட்டு எதிர்வரும் 22ம் திகதி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் தங்கள் பதிவகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணிபுரிய வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கான உதவிப்பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களை அனுமதிக்குமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் வன்னியில் 3000 அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வந்தன எனவும், அவை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் எனவும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் இந்நிறுவனங்கள் வன்னியில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வன்னியில் போரினால் அழிவடைந்துள்ள பொதுமக்களின் வீடுகளைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை என அரசாங்கம் வெளிப்படையாகவே அறிவித்துவிட்ட நிலையில் அரசசார்பற்ற வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் உதவி அத்தியாவசி தேவையாக இருப்பதனை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 12 கூரைத்தடுகளினால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிப்பது சிரமமானதாக உள்ளமையை வன்னியில் மீளக்குடியமர்நதுள்ள மக்களின் நிலையை நேரில் பார்வையிடுகின்ற பொது தெரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. தற்போது  இடைக்கிடையே பெய்து வருகின்ற மழையினால் அவதிப்படுகின்ற இம்மக்கள் எதிர்வரும் பருவமழையின் போது பெரும் அவலங்களை எதிhகொள்ள வேண்டிவரும் என்பதும் குறிப்படத்தக்கது.

நெடுங்கேணி கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சுட்டிற்கு இலக்கானவர் உயிரிழந்தார்.

நெடுங்கேணி கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கிச்சு10ட்டிற்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் உயிழந்தார். கடந்த 9ஆம் திகதி நெடுங்கேணியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் பெண்ணொருவரின் கைகளைத்தண்டித்து அவரது நகைகளை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனா. அப்பெண்ணின் கணவரான இராசலிங்கம் (வயது 64) என்பவரை துப்பாக்கியாலும் சுட்டனர். கைத் துண்டிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மருத்துவ சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த பெண்ணின் கணவரான இராசலிங்கம் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான விக்னேஸ்வரி கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் புளியங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். நகரில் முறையற்ற நடைபாதை வியாபாரிகள் மீது நடவடிக்கை.

யாழ். நகரப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இடங்களில் நடைபாதை வியாபாரம் செய்த வந்த 24 பேர் Jun 10 2010ல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்ட்டவர்களின் விற்பனைப் பொருட்களும் அகற்றப்பட்டன. பழவகைகள். உடைகள், ‘பான்ஸி’ பொருட்கள் என்பனவற்றை விற்பனை செய்த நடைபாதை வியாபாரிகள் மீதே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு  நீதிமன்றத்தினால்  தலா 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. சில பொருட்கள் மீள ஒப்படைக்கப்பட்டன. சில பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. ஏனையோர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

போர் முடிவடைந்து ஏ-9 பாதை திறந்த விடபட்டதன் பின்  தென்னிலங்கையிலிருந்து வந்த பெருமளவிலான நடைபாதை வியாபாரிகள் யாழ்.நகரை முற்றுகையிட்டு கண்ட இடங்களிலும் தங்கள் வியாபரத்தை மேற்கொண்டனர். யாழ. பஸ்நிலையம் உட்பட பல இடங்களிலிருந்த இவ்வியாபார நடவடிக்கைகள் அகற்றப்பட்டுள்ள போதிலும் மேலும் பல இடங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய,  சுகாதாரமற்ற வியாபார நடவடிக்iகைகளை சில வியாபாரிகள் மேற்கொண்டு வருகின்றனா. இவ்வாறு வியாபாரா நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள. மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

புலிகள் தொடர்பான படங்களை கைத்தொலைபேசியில் வைத்திருந்ததாக வவனியாவில் ஒருவர் கைது.

கைத்தொலைபேசியில் புலிகள் தொடர்பான விடியோ காட்சிப் படங்களை வைத்திருந்தாகக் கூறி வவனியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பாவற்குடாப் பகுதியில் வைத்து இவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் பற்றிய வீடியோ காட்சிகள், புகைப்படங்கள், பாடல்கள் என்பன அவரது கைத்தொலைப்பேசியில் காணப்பட்டதாகக் கூறியே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேலதிக விசாரணகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவுடன் அரசியலில் ஈடுபட்ட படைவீரர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர்.

இராணுவத்தில் முக்கிய பதவிகளில் வகித்த ஓய்வுபெற்ற படை வீரர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தொகுதி அமைப்பாளர்க ளாக, மாவட்ட இணைப்பாளர்களாக பல பதவிகளை வகித்து வந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்ந்தும் இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்த அவர்கள் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பியினரின் கைப்பொம்மையாக செயற்படுகிறார். நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களின் நலன் பற்றியோ சிந்திக்காமல் செயற்படுகிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்களிடம் ஒரு கேள்விக்காக 31,500 ரூபா செலவிடப்படுகிறது சபையில் ரவி கருணாநாயக்க

பாராளு மன்றத்து எதிர்க்கட்சி எம்.பி.களினால் அமைச்சர்களிடம் ஒரு தடவை கேட்கப்படும் கேள்வி ஒன்றுக்கு 31,500 ரூபா செலவிடப்படுவதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போதே ரவி கருணாநாயக்க எம்.பி இதனை சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் நேற்று ரவி கருணாநாயக்காவின் வாய்மூல விடைக்கான 3 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் ஒன்றுக்கு பதிலளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கால அவகாசம் கேட்டனரே தவிர பதில் அளிக்கவில்லை.

இதனால் விசனமடைந்த ரவி கருணாநாயக்க எம்.பி. பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கேள்வி ஒன்றை ஒரு தடவை கேட்க 31,500 ரூபா செலவாகின்றது.இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது செலவு இன்னும் அதிகரிக்கின்றது.

எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாகவே பதில் வழங்கக் கூடிய நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு நடந்து கொண்டால் மக்களின் பணத்தை வீணடிக்க வேண்டிய தேவையில்லை.