செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மருத்துவக் குழுவை அனுப்புகிறது இலங்கை

பிரதமர் கிலானியுடன் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ இலங்கை முன்வந்துள்ளது.பாகிஸ்தான் பிரதமர் யூசுவ் ரஸா கிலானியுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ மருத்துவக் குழுவையும் மருந்துவகைகளையும் அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளத்தால் உயிர், உடைமைகளை இழந்தோருக்கு தனது அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்திருப்பதாக ஏ.பி.பி.செய்திச் சேவை தெரிவித்தது.பாகிஸ்தான் அரசுக்கும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மத்தியில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேயிலையையும் இலங்கை அனுப்பவுள்ளது. இலங்கையின் நல்லெண்ண நடவடிக்கைகளுக்காகப் பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அவசர கால சட்டம் 83 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

parliament.jpgஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று 83 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டினார் மேர்வின்

gggg.jpgபெருந் தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த வாரம் முன்னெடுக்கத் தவறிய அதிகாரி ஒருவரை மாமரம் ஒன்றில் கட்டினார். ஊடகவியலாளர்களின் முன்னிலையிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டது.

படுகொலைச்சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம்

kattankudy.jpgகாத்தான்குடி பள்ளிவாசல்களில் கடந்த 1990ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச்சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல், குஸைனியா பள்ளிவாசல் ஆகியவற்றில் புனித இஸாத்தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் 325பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தின் 20 ஆவது நினைவு தினமான இன்று காத்தான்குடி பிரதேசத்தில் முழுமையான துக்கதினம் அனுஸ்டிக்கப்படுவதுடன், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி 1 இலட்சம் படையினரை குடியேற்ற ஏற்பாடு – தமிழ் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

வடக்கில் பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்தி ஒரு இலட்சம் படையினரை குடியமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் குடித்தொகைப் பரம்பலை தலைகீழாக மாற்றும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தளபதி அண்மையில் கண்டி மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்த போது கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடபகுதியில் ஒரு இலட்சம் படைவீரர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த ஒரு இலட்சம் இராணுவ வீரர்கள் இங்கு குடியமர்த்தப்படும் போது அவர்களது குடும்பத்தினர்களின் எண்ணிக்கையுடன் பார்க்கும் போது சுமார் 4 இலட்சமாக காணப்படலாம்.

இத்திட்டம் வடக்கில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தைத் திட்டமிட்டு வீழ்த்தும் ஒரு சதியாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஜனாதிபதி ஒரு விதமாகவும் பசில் ராஜபக்ஷ இன்னொரு விதமாகவும் எம்மை தாஜா பண்ணிக் கொண்டிருக்க மறுபுறத்தில் ஊடக அமைச்சரும் இராணுவத் தளபதியும் திட்டமிட்ட வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கம் இந்த மறைமுக சதிமுயற்சியை உடன் கைவிட வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் இந்த கபட நாடகத்தை நாம் இந்தியா உட்பட சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லி இருக்கின்றோம்.

அரசின் இந்த நடவடிக்கையால் அங்குள்ள சனத்தொகை விகிதாசாரம் 30 வீதத்தால் மாற்றமடையலாம். இது திட்டமிட்ட துரோகச் செயலாகும். இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறியுள்ளது.

சியத்த ஊடக நிறுவனத்தின் மீதான தாக்குதலினால் 500 லட்ச ரூபா நட்டம்

siyatha.jpgசியத்த ஊடக நிறுவனத்தின் மீதான தாக்குதல்களினால் 500 லட்ச ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக முகாமைத்துவப் பணிப்பாளர் ரொசாந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.

வதிரியிலும், அல்லாரையிலும் – இரு தொழிலகங்கள் டக்ளஸினால் திறந்து வைப்பு

devanand-a.jpgவதிரி தோல்பொருட்கள் மத்திய சேவை நிலையம் சாவகச்சேரி அல்லாரை தும்புத் தொழில் மத்திய நிலையம் ஆகியவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 14, 15ம் திகதி களில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

இதன் மூலம் கரவெட்டி வதிரி கிராமப்புற தோல்பொருட்கள், உற்பத்தி யாளர்கள், சாவகச்சேரி அல்லாரை பிரதேச தும்புத் தொழில் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெறாவரெனவும் மேற்படி நிலையங்களுக்கான சகல உபகரணங்க ளையும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார்.

இந்த நிலையங்கள் இரண்டையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றை சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்க சமாஜத்திற்குக் கையளிக்கவுள்ளதாகவும் இந் நிலையங்களில் செயற்பாடுகள் அதற்கூடாக மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கரவெட்டி வதிரி கிராமம் தோல்பொருட்கள் உற்பத்தியில் பிரசித்திபெற்ற கிராமமாகும். தற்போது வீழ்ச்சியடைந்துள்ள இத் தொழில்துறையை மேம்படுத்தவும் உற்பத்தியாளர்களுக்கு சேவைகளை வழங்கவும் மேற்படி தோல்பொருட்கள் மத்திய நிலையம் உறுதுணையாக அமையும். சாவகச்சேரி அல்லாரைத் தும்புத் தொழில் நிலையம் தும்புத் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விமான ஆசனத்தின் கீழ் 12 கோடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் டுபாய்க்கு செல்ல ஆயுத்தமான நிலையிலிருந்த விமானத்தின் ஆசனம் ஒன்றின் கீழ் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு நாணயங்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த வெளிநாட்டு நாணயங்கள் 12 கோடி ரூபா பெறுமதியென தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து சேவை மேம்பாடு; மேலும் ஐந்நூறு பஸ் வண்டிகள்

ctb-bus.jpgபொது மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 500 பஸ்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று (02) காலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே மேற்கூறிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன் முதற் கட்டமாக 100 பஸ்களை உடனடியாக தருவிப்பதற்கு மேற்படி கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்து சபையின் மூலம் மக்களுக்கு சீரான சேவையை பெற்றுத்தருவதுடன் சபை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமென்றும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார். அத்துடன் சகல டிப்போக்களிலும் உள்ள குறைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சோமாலிய கொள்ளையரால் பனாமா கப்பல் கடத்தல்- இலங்கையரும் இருப்பதாகத் தகவல்

இலங்கை யர்களும் ஊழியர்களாக பணியாற்றும் கப்பலொன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய யூனியனின் கடற்படை நேற்று பிற்பகல் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பனாமா கொடியைதாங்கிய எம்.வி.சுயஸ் எனும் இக்கப்பல், சோமாலிய கடற் கொள்ளையர்களின் ஆயுதத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சில நிமிடங்களின் பின்னர் அக்கப்பலுக்குள் கடற் கொள்ளையர்கள் ஏறியதாகவும் அவ்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலின் பின்னர் அக்கப்பலுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் ஐரோப்பிய யூனியன் கடற்படை தெரிவித்துள்ளது. 17300 தொன் எடையுள்ள அக்கப்பலில் இலங்கை, இந்திய, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளனர். இக்கப்பல் சீமெந்து பைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.

அக்கப்பல் தாக்கப்பட்ட போது சர்வதேச ரீதியாக சிபாரிசு செய்யப்பட்ட பகுதிக் கூடாக பயணம் செய்து கொண்டிருந்தது. தாக்குதல் பற்றிய முதல் தகவல் கிடைத்தவுடன் ஹெலிகொப்டர் ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பிய போதிலும் கடற்கொள்ளையர்கள் ஏற்கெனவே கப்பலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. நிலைமையை அவதானித்து வருவதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய யூனியனின் கடற்படை தெரிவித்துள்ளது.