செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சட்டத்தரணியின் வீட்டின் முன் வவுனியா பெண் தற்கொலை – மகளுக்கும் நஞ்சூட்டி கொலை செய்ய முயற்சி

வவுனியாவில் நெலும்குளம் பிரதேசத்தில் இருந்து தனது மகளுடன் கொழும்புக்கு வந்த தாய் பொல்ஹேன்கொட கிருலப்பனை பிரதேசத்தில் வசித்து வந்த பிரபல சட்டத்தரணியின் வீட்டின் முன்னால் தனது மகளுக்கு நச்சு விதையை உட்கொள்ள கொடுத்ததுடன் தானும் நச்சு விதையை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். ஆனால் 11 வயதான அவரது மகள் கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா நெலும்குளம்வைச் சேர்ந்த 36 வயதான புஷ்பராணி பத்ரகெளரி என்ற பெண்ணாவார். கிருளப்பனை பொல்ஹேன்கொட 162/11 என்ற இடத்தில் உள்ள வீட்டுக்கு தான் செல்வதாக வவுனியாவில் உள்ள பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடொன்றை செய்த பின் அப்பெண் நேற்று (19) ஆம் திகதி காலை மேற்குறிப்பிட்ட சட்டத்தரணியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

குறிப்பிட்ட சட்டத்தரணி வவுனியாவில் இருந்த காலத்தில் உயிரிழந்த பெண்ணின் காணி வழக்கொன்றில் நீதிமன்றத்தில் தோன்றியுள்ளார்.

அப்போது சட்டத்தரணிக்கும் அப்பெண்ணுக்கும் ஏற்பட்ட உறவு காரணமாக அப்பெண் கர்ப்பம் அடைந்ததாகவும், அதற்கு நஷ்டஈடாக 5 இலட்சம் ரூபா வேண்டுமென்று அப்பெண் கேட்டுள்ளதாகவும், சட்டத்தரணி 2 இலட்சம் ரூபாவை கொடுக்க முன்வந்த போதும் அது போதாது என்று அப்பெண் கேட்டதாகவும் சட்டத்தரணி இதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே அவரது வீட்டின் முன் நச்சு விதையை உட்கொண்டு அப்பெண் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று ஆலோசனை குழுக் கூட்டங்கள்

பாதுகாப்பு அமைச்சு மற்றும் துறைமுக அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டங்கள் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றன. குறித்த அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆலோசனை குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

முதலாவது குழு அறையில் நடைபெற்ற அமைச்சுக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முப்படை தளபதிகள், குறித்த அமைச்சுக்களின் அமைச்சர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்.பிக்களின் போசன அறையில் ஆளும், எதிர்க் கட்சி எம்.பி. களுடன் ஒன்றாக பகல் போசனத்திலும் கலந்துகொண்டார்.

நல்லூர் உற்சவம்: தென் பகுதியிலிருந்து பெருமளவு பக்தர்கள் வருகை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாக்களுக்கு பக்தர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டுமல்ல தென் பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களைக் கண்காணிக்க தினமும் 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர், தீர்த்தம், பூங்காவனம் உற்சவ காலங்களில் அடியார்களின் வருகை கூடுதலாக இருக்குமாகையால் இத்தினங்களில் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவார்களென யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

பெருந்தெருக்கள் அமைச்சின் செயலகத்திற்கு அடிக்கல்

ma.jpgஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 1,100 மில்லியன் ரூபா செலவில் பத்தரமுல்லையில் நிர்மாணிக்க ப்படவுள்ள பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி அமைச்சின் பொதுச் செயலகத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோக பூர்வமாக நாட்டிவைத்தார்.

நேற்றுக் காலை இந்நிகழ்வு இடம்பெற் றதுடன் பத்தரமுல்லை டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தையில் எட்டு மாடிகளைக் கொண்டதாக இக்கட்டடம் அமையவுள்ளது. இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ள இச்செயலகத்தின் முதற்கட்ட நடவடிக்கைள் 600 மில்லியன் ரூபா செலவிலும் இரண்டாம் கட்டப் பணிகள் 500 மில்லியன் ரூபா செலவிலும் இடம்பெறவுள்ளன.

நேற்றுக் காலை பத்தரமுல்லைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி செயலகத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன் அது தொடர்பான பெயர்ப் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அதன்பின்னர் அச்செயலகம் நிர்மாணிக்கப்படவுள்ள பகுதியையும் கட்டிடத்தின் மாதிரி வடிவமைப்பையும் பார்வையிட்டார்.

நேற்றைய இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் ஸ்யாவோ ஷாவோ, அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, பிரதி அமைச்சர் நிர்மலகொத் தலாவல, அமைச்சின் செயலாளர் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உலகில் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை

உலகின் சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கை 66 ஆம் இடத்தில் இருக்கின்றது என்று அமெரிக்காவில் இருந்து வெளியாகும் (News week) சஞ்சிகையின் ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தில் உள்ள நூறு நாடுகளிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தராதரம், பொரு ளாதாரம், அரசியல் சூழ்நிலை ஆகிய 5 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சிறந்த நாடுகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.

பிரிட்டனிலிருந்து இலங்கை திரும்பிய இளைஞன் பொலிஸாரினால் கைது!

Stop_the_War_on_Asylumபிரிட்டனில் இருந்து இலங்கைக்கு வந்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டனிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் (வயது 30) என்பவரே பெரிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவர் 12 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தார் எனவும். இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இவரை நாடு கடத்துவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் கைது செய்யப்பட்டு  தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை எனவும், இவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம் இவருக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாம். இதனையடுத்து இவர் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல சம்மதித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தமிழ் வர்த்தகர்கள் கைது!

கடந்த 16ம் திகதி கொக்குவில் பகுதியில் முன்று சிங்கள வர்த்தகர்கள் வாள்வெட்டுக்குள்ளான சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மூவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிங்கள வர்த்தகர்கள் யாழப்பாணத்திற்கு வந்து இங்குள்ள வர்த்தகர் ஒருவருக்கு மொத்தாமாக தளபாடங்களை விற்பனை செய்து விட்டு அந்த வர்த்தகருக்குத் தெரியாமல் பாவனையாளர்களுக்கும் தளபாடங்களை நேரடியாக விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக இருதரப்பிற்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்தே சிங்கள வாத்தகர்கள் வாள்வெட்டிற்குள்ளாகியுள்ளனர் என சந்தேகிக்கப்படுகின்றது.

முன்னைய செய்தி:  யாழ்ப்பாணத்தில் மூன்று சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர்!

இதே வேளை, கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதிகளில் படையினர் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் நேற்று புதன்கிழமையும் காலை தொடக்கம் இரவுவரை சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன. இதில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டனர். அப்பகுதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களும் சோதனைகளுக்குள்ளாகின.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் யாழ்.விஜயம்.

Asian_Development_Bankஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் சியாவோயூ சாவோ இன்று 19-08-2010 காலை யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்திருக்கும் இவர் இன்று யாழ். கோட்டை, பொது நூலகம் அகியவற்றைப் பார்வையிடுவதோடு, பிற்பகல் 4 மணிக்கு யாழ். செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்திலும் கலந்து கொள்வார்.

நாளை சாவகச்சேரியில் மின்விநியோக நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து வைப்பதுடன். கிளிநொச்சிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச, நிதிதிட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம, மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

வன்னியில் பெற்றோர் பராமரிப்பற்ற 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு.

Vavuniya_SriAhilandeswariArulahamவன்னிப் பிரதேசத்தில் பெற்றோரின் பராமரிப்பற்ற நிலையில் உள்ள 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண அளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரவித்துள்ளார். கிளிநொச்சி. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட இச்சிறுவர்கள் வடமாகாணத்திலுள்ள அங்கீகாரம் பெற்ற நான்கு சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட 1200 சிறுவர்களும் எதிர்வரும் september மாதத்திலிருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நான்கு சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர். 12 வயதுக்கட்பட்ட இச்சிறுவர்களின் பாராமரிப்புச் செலவிற்கான நிதியை வடமாகாணசபையின் ஊடாக ஒதுக்கத் தீர்மானித்துள்ளதாக வடமகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Vavuniya_SriAhilandeswariArulaham(படத்திலுள்ள குழந்தைகள் மார்ச் 2010ல் படம் எடுக்கப்பட்ட போது 10 மாதங்களையே கடந்திருந்தன. இக்குழந்தைகள் யுத்தத்தின் காரணமாக அனாதரவானவர்கள். தற்போது வவுனியாவில் உள்ள சிறி அகிலாண்டேஸ்வரி அருளகத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான உதவிகளை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.)

இது இவ்வாறிருக்க. வன்னியில் நடைபெற்ற போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்களின் தொகை மேலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

100% அபராதமும் 1 போட்டித் தடை

randiv.gifவீரேந்திர செவாக்கின் சதம் பெறுவதை தடுக்கும் விதமாக வீசப்பட்ட “நோபோல்” பந்து வீச்சிற்கான, சுராஜ் ரண்டீவ் குறித்து இடம்பெற்ற சர்ச்சை காரணமாக இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அவரது கொடுப்பனவில் 100% அபராதமும் 1 போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு,  திலகரத்ன டில்ஷானிற்கு கொடுப்பனவுகளில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.