செய்திகள்

செய்திகள்

செய்திகள்

லைக்கா சாமியார் ஐந்து மில்லியன் பவுண்கள் பிணையில் விடுதலை! “நானோ லைக்காவோ சாமியாரை பிணை எடுக்கவில்லை” லைக்கா துணைத் தலைவர் பிரேம்! : காணொலி

பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய காரணங்களுக்காக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓம் சரவணபவ என்ற ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணன் செப்ரம்பர் பிற்பகுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐந்து மில்லியன் பவுண்கள் பெறுமதியான வீட்டை பிணை வைத்தே இந்தப் போலி ஆசாமியை லைக்கா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமி என்றழைக்கப்படும் பிரேம் பிணைமீட்டுள்ளார். இது தொடர்பாக ஒக்ரோபர் 21 லைக்கா துணைத் தலைவரோடு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் இச்செய்தி இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சட்டக்குழுவினூடாக தேசம்நெற்க்கு கிடைக்கப்பெற்றது. மேலும் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரனின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இது பற்றிய தேசம்திரை காணொலி வெளியான சில மணி நேரங்களில் தேசம்நெற்றை தொடர்புகொண்ட லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் “நானோ லைக்காவோ சாமியைப் பிணை மீட்கவில்லை என்று அறுதியிட்டுத் தெரிவித்திருந்தார். அப்படியானால் உங்களின் பினாமிகளுடாக பிணை எடுத்தீர்களா என்று கேட்டபோது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனப் பிரேம் சினந்தார். தங்களுக்கு வேறு நெருக்கடிகள் விடயமாக அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற போது எங்கள் ஊடகம் தங்களை தொடர்ந்தும் தொந்தரவு பண்ணுவதாக குற்றம் சாட்டினார். தங்கள் சட்டத்தரணிகள் குழுவினுடாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் தமிழர்கள் என்பதால் தான் நேரடியாகத் தொடர்பு கொண்டதாக பிரேம் இந்த உரையாடலில் தெரிவித்தார். ஈழத் தமிழ் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீங்கள் எதற்காக ஆதரவு வழங்குகின்றீர்கள் அவர் சம்பந்தப்பட்ட சட்ட விடயங்களுக்கு ஏன் ஆதரவளிக்கின்றீர்கள் என்று கேட்ட போது, தங்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை என்றும் அதனுடன் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் தெரிவித்தார்.

லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் உரையாடலை நிறுத்திய சில நிமிடங்களிலேயே இச்செய்தி வெளியான யூரியூப் சனல் இடைநிறுத்தப்பட்டது. இச்செயலைக் கண்டிக்கும் வகையில் வெவ்வேறு சமூக வலைத்தளங்களில் இந்த லைக்கா சாமியார் தன் ஆண்குறியை வெளியே எடுத்து உருவுகின்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டு இருந்தது. கணணிக் காட்சி உரையாடலில் லைக்கா சாமியார் தன் ஆண்குறியை தன் கைகளால் உருவுவதும் உரையாடுவதும் அவருடைய முகபாவனைகளோடு வெளியாகி உள்ளது.

ஆனால் இவ்வாறான, குழந்தைகளை இளம் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் பேர்வழிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் புல்லுருவிகளும் ஈனர்களும் சமூக வலைத்தளங்களில் தாராளமாக வலம் வருகின்றனர்.

கேரளாவில் மோசடிப் பேர்வழியாக அறியப்பட்ட புலிக்கள் முரளிகிருஸ்ணன் எப்படி லைக்கா சாமியானார் என்பதும் லைக்காவின் லைக்குகளை வாங்கினார் என்பதும் ‘பணம் – பக்தி – பாலியல் ஓம் சரவணபவ!’ என்ற தலைப்பில் தேசம்திரை காணொலியாகி வெளி வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து லைக்கா மோபைல் துணைத் தலைவரை யூலை நடுப்பகுதியில் சந்தித்து மேற்கொண்ட பதிவு ‘போலிச்சாமியார் ஓம் சரவணபவவிற்கு முண்டுகொடுக்கவில்லை’ என அவர் தெரிவித்த கருத்தைத் தாங்கி வெளிவந்திருந்தது.

“கூடியிருந்து விஸ்கி அடித்த லைக்கா குழுமம், லைக்கா சாமியாருக்கு முன் கூடி, அவர் காலைக் கழுவிய தண்ணியை அடிக்க, அவர் அப்படி என்னத்தைத்தான் காட்டினார் ?” என வினவுகின்றார் கற்பக விநாயகர் அடியவர் எம் ஜி கிருஸ்ணன். ஈழத் தமிழ் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சாமியாரை ஐந்து மில்லியன் பவுண்கள் பிணை செலுத்தி வெளியே எடுத்துள்ளார் லைக்காவின் துணைத் தலைவர் பிரேம். பிரேம் தன்னுடைய மனைவி சாமியாரில் மிகுந்த பக்தியுடையவர் எனத் தெரிவித்து இருந்தார். பிரேம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர். அச்சமயத்திலேயே தெய்வதீஸ்வரி செல்வேந்திரனால் லைக்கா குழுமத்தினருக்கு சாமியார் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தார். மருத்துவ சிகிச்சையின் பயனாக பிரேம் குணமடைந்த போதும், சாமியின் காலைக் கழுவிக்கு குடித்தால் தான் புற்றுநோய் குணமானது என பிரேம் குடும்பத்தினர் நம்புகின்றனர். அது தேசம் ஜெயபாலன் பிரேமுடன் உரையாடியதில் வெளிப்பட்டு இருந்தது. ஈழத் தமிழ் பெண்களை சாமியால் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததை அச்சந்திப்பில் பிரேம் கண்டிக்கவில்லை. ஆனால் சாமியாரை லைக்காவோடு தொடர்புபடுத்துவது பற்றியே விசனம் தெரிவித்து இருந்தார்.

சாமியாரின் வழக்குடன் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தானோ லைக்காவோ அவருக்காக வாதாடவோ அவருடைய வழக்குச் செலவுகளை ஏற்கவோ இல்லை என அறுதியிட்டுத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது லைக்காவின் துணைத் தலைவர் பிரேம் ஐந்து மில்லியன் பவுண் பிணையில் சாமியாரை வெளியே எடுத்துள்ளார் எனத் தெரிய வருகின்றது. சாமியாருக்கு கட்டப்பட்ட கோவிலுக்கான நிதியையும் இவரே வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பணம் – பக்தி – பாலியல் ஆகிய மூன்று அம்சங்களும் ஒருங்கிணைவது சமூகச் சீரழிவுக்கு வழிகோலுகின்றது. இவ்வாறான அயோக்கியர்களுக்கு லைக்கா போன்ற அமைப்புகளும் ஆலயங்களும் உறுதுணையாக இருப்பது மிக ஆபத்தான நிலையைத் தோற்றுவித்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் உள்ள பணம் படைத்த வர்த்தகப் புள்ளிகள் தங்களிடம் பணம் இருப்பதால் தங்களை தட்டிக் கேட்க யாராலும் முடியாது என்ற தோரணையுடன் ரவுடிகளாகச் செயற்படுகின்றனர். தங்கள் கைகளில் ஊடகங்களையும், அடியாட்களையும், மொட்டைக்கடிதம் எழுதுபவர்களையும் வைத்துக்கொண்டு இவர்கள் எதிர்கால சமூகத்தையே சீரழித்து வருகின்றனர். தவறணை நடத்துவது அதற்கு ஆட்களை வரவழைக்க போதைப்பொருள் விற்பனைகளை மறைமுகமாக அனுமதிப்பது என இந்தக் கூட்டத்தின் அடாவடித்தனங்கள் சொல்லில் அடங்கா.

இதனைத் தட்டிக்கேட்டால் தங்கள் ஏவலாளிகளைக் கொண்டு முகநூலை முடக்குவது, குடும்பத்தை இழுத்து மொட்டைக்கடிதம் எழுதுவது, ஒருபடி மேலே சென்று இணையத்தை ஊடுருவி – ஹக் பண்ணி முடக்குவது எனப் பல்வேறு அடாவடித்தனங்களைச் செய்கின்றனர். இவ்வாறான அநியாயங்களுக்கு தேசம்நெற் மற்றும் தேசம்திரை ஊடகங்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வருகின்றன.

லைக்கா சாமியாரை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உறுப்பினர் ஆர் ஜெயதேவன் குறிப்பிடத்தக்கவர். லைக்கா சாமியாருக்கு எதிராக சாட்சியம் அளித்த சிலர் பின்நாட்களில் வெளி அழுத்தங்கள் காரணமாகவும், அவர்களுக்கு எதிரான மொட்டை கடிதங்கள் அழுத்தங்கள் காரணமாகவும் சாட்சியமளிக்க பின் வாங்கினர். நீண்ட காலமாக லைக்கா சாமிக்கு பிணை மறுக்கப்பட்டதற்கும் அவருடைய பிணைக்கு மிகப் பெரும் நிதி பிணையாகக் கோரப்பட்டதற்கும் இதுவே காரணம். ஆர் ஜெயதேவன் இந்த வழக்குத் தொடர்பில் லைக்கா சாமியாருக்கு எதிராக உறுதியாக நின்றதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலியல் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட பின்னும்இ தங்கள் குடும்பத்தினர் அந்த ஆசாமியின் கோவிலுக்குச் சென்று வருவதாகத் தெரிவித்த லைக்கா பிரேம் தான் கோவிலுக்குச் செல்வதால் சாமியை ஆதரிப்பதாக குற்றம்சாட்ட முடியாது எனத் தெரிவித்தார். தற்போது சாமியார் மீது குற்றம்சாட்டுகின்றவர்கள் சாமியின் அடியார்களாக இருந்ததாகவும் லைக்கா பிரேம் தெரிவித்தார். சாமியாரின் சுயரூபம் தெரியாதவரை அவருக்கு அடியாராக இருந்தமை சரி என்று கொண்டாலும் சாமி ஆண்குறியை உசார்ப்படுத்தும் விடியோக்கள் வெளியான பின்னரும் ஏன் இவர்கள் அங்கு செல்கின்றனர் லைக்கா சாமியின் லிங்க பூஜையின் சிறப்பு என்ன என்பது மார்ச் 15 2024 ஹரோ நீதிமன்றில் தெரியவரும்.

குற்றம்சாட்டப்பட்ட நிரூபிக்கப்பட்ட பின்னும் தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் மற்றும் திருமதி பிரேம் போன்ற சில பெண்கள் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தொடர்ந்தும் துணை போவது ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக லைக்கா குடும்பத்தினர் இன்னமும் பாலியல் குற்றவாளியான புலிக்கள் முரளிகிருஸ்ணனின் காலைக் கழுவி தீர்த்தம் குடிக்க ஆசைப்படுவது ஏன்? இனிமேல் லைக்கா காட் வாங்கினால் லைக்கா சாமியின் தீர்த்தம் இலவசமாகக் கிடைக்குமோ?

“றமேஷ் வேதா” – லண்டன் தமிழ் ஆளுமையின் மறைவு !

நகைச்சுவை கலைஞர் றமேஷ் வேதநாயகம் இன்று அதிகாலை 22 ம் திகதி ஒக்ரோபர் இயற்கையை எய்தினார். அவர் மோட்டோ நீயுரோன்ஸ்- நரம்பு தொடர்பான நோயினால் இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல்

பாதிக்கப்பட்டிருந்தவர்.
மிக அரிதானதும் இலட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் இந்நோயானது படிப்படியாக உடலின் ஒவ்வொரு அவயங்களாக செயலிழக்கச் செய்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக றமேஷ் வேதாவும் இந்நோயினால் பாதிக்கப்பட்டு இயற்கையை எய்தினார்.

புலம்பெயர் தொலைக்காட்சிகளில்,, “பிடிக்கல பிடிக்கல” என்ற நாடக தொடர் மூலமும் பல குறும்படங்கள் ஊடாகவும் மற்றும் முழு நீள திரைப்படங்கள் ஊடாகவும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர் ஒரு சிறந்த நகைச்சுவை நாடகக் கலைஞரும் ஆவார்.

இலங்கையில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த பல தசாப்தங்களாக லண்டனில் வாழ்ந்தவர். கணக்கியளாளராக பணியாற்றிய இவர் நடிப்புத் துறை மீதான ஈர்ப்பினால் கலைத்துறையில் முழு ஆர்வத்தோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது நகைச்சுவை நடிப்பினாலும் குணாதிசயத்தாலும் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.

2023 ஆம் ஆண்டு சிவஜோதி ஞாபகார்த்த விருது – ” நகைச்சுவை தென்றல்” என்ற பட்டத்தை காலஞ் சென்ற றமேஷ் வேதாவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருந்ததாக “லிட்டில் எயிட்டின்” நிர்வாக இயக்குநர் ஹம்சகௌரி தெரிவித்திருந்தார்.

விருது வழங்கும் விழா நவம்பர் 18 இல் நடைபெற இருந்த நிலையில் சடுதியாக றமேஷ் வேதாவின் மரணச் செய்தியை கேட்டு தான் அதிர்ச்சியும் மிகுந்த கவலையும் அடைந்ததாக தெரிவிக்கும் ஹம்சகௌரி லிட்டில் எயிட்டின் சார்பாக றமேஷ் வேதாவின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்தார்.

ஒரு நல்ல மனிதரை, நல்ல கலைஞரை மற்றும் நல்ல நண்பரை தான் இழந்து தவிப்பதாக இவர் நடித்த படங்களையும் நாடகங்களையும் இயக்கிய கலைத் தம்பதியினர் றஜிதா மற்றும் பிரதீபன் அவர்களும் தேசம்நெட்டுக்கு தெரிவித்தார்கள்.
என்றும் ஆர்வம் குன்றாத றமேஷ் வேதா எமது திரைகுழுமத்திற்கு மிகப்பெரும் பலமாகவும் ஊக்கியாகவும் இருந்தவர். அவருடைய மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எமக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என ஈழத்தமிழ் முன்னணி இயக்குநரான ஆர். புதியவன் தேசம்நெட்டுக்கு தெரிவித்தார்.

தேசம்நெட் மற்றும் தேசம்திரையுடன் நீண்ட காலமாக உறவைக் கொண்டிருந்தவர் றமேஷ் வேதா. இவருடைய பிள்ளைகள் சிறுவர் தேசம் பகுதியில் எழுத்தாளர்களாகவும் இருந்தவர்கள். றமேஷ் வேதாவின் மறைவுச் செய்தி ஈழத்தமிழர்களுக்கு நகைச்சுவை உலகில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் தேசம் ஜெயபாலன் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறான நல்ல மனிதருக்கு இக் கொடியநோய் ஏற்பட்டதும் அவருடைய திடீர் மறைவும் இயற்கை இழைக்கும் அநீதியின் மீது கோபத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

நகைச்சுவை கலைஞர் றமேஷ் வேதநாயகத்தின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினரின் பிரிவுத்துயரில் கலைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றனர். நகைச்சுவைகலைஞர் றமேஷ் வேதாவின் இறுதி நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இஸ்ரேலால் முடக்கப்பட்டது சர்வதேச ஊடகமான அல் ஹசீனா !

ஹமாஸுடனான போருக்கு மத்தியில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் பணியகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அனுமதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அந்நாட்டின் அரசாங்க செய்தி தொடர்பாளர் அயூப் காரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“அல் ஜசீரா அலுவலகங்களை மூடுவதற்கும் அவர்களின் வேலையைத் தடைசெய்வதற்கும் அரபு நாடுகளின் நடவடிக்கையின் அடிப்படையில் எங்கள் முடிவை மேற்கொண்டுள்ளோம்.

 

வன்முறையை மேற்கொள்ளும் முகமாக இந்த ஊடகம் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன” என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை, அந்நிறுவனம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து தனது தூதரக அதிகாரிகளை மீளப்பெற்றது கனடா !

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுவிட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில்,

“தங்கள் நாட்டில் உள்ள எங்களின் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேற்றப்படாத அதிகாரிகளின் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் ஒருதலைபட்சமாக இந்தியா கூறியிருந்தது. இந்த முடிவு உரிய காரணம் இல்லாதது, முன்னெப்போதும் நிகழ்ந்திராதது, தூதரக அதிகார உறவுகள் குறித்த வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தூதரக அதிகார விவகாரங்களின் விதிகளை உடைக்க நாம் அனுமதித்தால், இந்த கிரகத்தில் எந்த ஓர் இடத்திலும் எந்த தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்த காரணத்துக்காக நாங்கள் இந்தியாவுக்கு எந்த பதிலடியும் கொடுக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடனாவின் 41 தூதரக அதிகாரிகளும், 42 உதவியாளர்களும் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் அனைவருமே திரும்ப பெறப்பட்டுள்ளனர்.

 

“பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து அனுப்பும்” – இந்திய பிரதமர் மோடி

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் பேசி இந்திய பிரதமர் மோடி, காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://x.com/narendramodi/status/1714986693097664745?s=20

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்

“பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். இந்த உரையாடலின்போது, பாலஸ்தீன பகுதிகளில் வன்முறையினால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், பயங்கரவாம் குறித்த கவலைகளை பகிர்ந்துகொண்டோம். மேலும் இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாடும் மஹ்மூத் அப்பாஸிடம் தெரிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து அனுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

 

 

நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் ராக்கெட் குண்டு தாக்குதல்தான் இதற்கு காரணம் என ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டினர். ஆனால், இத்தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தவில்லை என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பட தெரிவித்தார்.

“பாலஸ்தீனமும் – இலங்கையும் – காலனித்துவச் சிந்தனையில் தார்மீக உணர்விழந்த மேற்குலகமும் ! ” – தேசம் திரை காணொளி !

பாலஸ்தீனமும் – இலங்கையும் – காலனித்துவச் சிந்தனையில் தார்மீக உணர்விழந்த மேற்குலகமும் !

வரண்டு போன அமேசன் – இறந்துபோன நூற்றுக்கணக்கான டொல்பின்கள் !

பிரேசிலில் மழைக்காடுகளின் வழியாக ஓடும் அமேசான் நதியின் கிளை நதிகள் வரண்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வரட்சி காரணமாக அமேசானின் கிளை நதிகள் வரண்டுள்ளன.

இதன் காரணமாக அந்த நதிகளின் வழியாக தொலை தூர கிராமங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான டொல்பின்களும் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், ஏராளமான படகுகள் தரைத்தட்டி கிடக்கின்றன. இதுதொடர்பான ட்ரோன் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

 

காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் – கடுமையான போர்க்குற்றம் என எம்.ஏ. சுமந்திரன் சாடல் !

காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதல் கடுமையான போர்க்குற்றம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2009 இல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே போன்றே நொண்டிச்சாட்டை தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அதனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

https://x.com/MASumanthiran/status/1714476352613798120?s=20

பாலஸ்தீன் மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் பிரேரணை ஐ.நா பாதுகாப்பு அவையால் நிராகரிப்பு!

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தொடர்ந்து 11 ஆவது நாளாக நடந்து வருகிறது.

 

இதற்கிடையே, போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் எனும் பிரேரணையை ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா கொண்டு வந்தது.

 

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவின் வரைவு பிரேரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை நிராகரித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

இங்கு கொண்டுவரப்படும் ஒரு தீர்மானம் நிறைவேற 9 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரஷ்யா கொண்டு வந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்யாவின் பிரேரணைக்கு ஆதரவாக சீனா, கபோன், மொசாம்பிக், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் வாக்களித்தன. அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா, ஸ்விட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால், இந்த பிரேரணை தோல்வி அடைந்தது.

 

முன்னதாக, இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் தொடர்பாக ரஷ்ய பிரேரணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதனை ஆதரிக்க முடியாது. ஹமாஸ் அமைப்பின் செயலை கண்டிக்காததன் மூலம் அத்தகைய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அப்பாவி மக்களை கொன்றுள்ளது, கடத்திச் சென்றுள்ளது. இதில், அமெரிக்கக் குடும்பங்களும் உள்ளன. காஸா மக்கள் தற்போது சந்தித்து வரும் துயரங்களுக்குக் காரணம் ஹமாஸ்தான், என குறிப்பிட்டார்.

 

இதேபோல், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தூதர்களும் ரஷ்ய பிரேரணைக்கு எதிராக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.