செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – காசாவில் இருந்து சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்வு !

இஸ்ரேல் மற்றும் காஸா இடையே போர் ஆரம்பமானதில் இருந்து காஸாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

பலஸ்தீன எல்லை பகுதியில் உள்ள ஐநா-வின் OCHA அமைப்பு தலைவர் andrea di domenico காசாவில் சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

1.7 மில்லியன் பேர் இடம்பெயர வாய்ப்புள்ளதாக கணித்திருந்த போதிலும், கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து இதுவரை காசா எல்லையில் பத்தில் ஒன்பது பேர் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கணித்துள்ளதாக தெரிவித்தார்.

இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வடக்கில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் வரை சிக்கிக் கொண்டு தெற்கிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பொது தேர்தல் 2024 – ஆரம்பத்திலேயே ரிஷிசுனக் தரப்புக்கு பின்னடைவு !

பிரித்தானிய பொதுத்தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான தொழிலாளர் கட்சி 43 ஆசனங்களையும் ரிஷி சுனக் (Rishi Sunak ) தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

மொத்தமாக 650 நாடாளுமன்ற ஆசனங்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த முறை தொழிலாளர் கட்சி பெரும்பாண்மையான ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே பிரித்தானியாவின் (UK) எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, தற்போதைய கன்சர்வேடிவ் கட்சியை வீழ்த்தி, மிகப்பெரிய நாடாளுமன்ற பெரும்பான்மையை வெல்லும் என அண்மைய தரவுகளை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்தியாவில் மத சடங்கில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் இறப்பு – 02 இலட்சம் இழப்பீட்டு தொகை அறிவித்த அரசாங்கம்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற மத சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத நிலையில் அந்த சடங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள்,குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று(02) இடம்பெற்ற இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றது.

நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். நெரிசலில் சிக்கி 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் என 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

“பிரித்தானியாவிலும் ஜனநாயகம் இல்லை – விருப்பம் இன்மையை தெரியப்படுத்துவதே ஜனநாயகம்” – ரவி சுந்தரலிங்கம்

பிரித்தானிய பொது தேர்தல் தொடர்பாக ரவி சுந்தரலிங்கம் அவர்களுடனான தேசம் திரை நேர்காணல்..!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் 2024 – வன்முறை போராட்டங்கள் அதிகரிப்பு!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்.என். கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்.என்.கட்சியின் மரைன் லெ பென் (Marine Le Pen)

தெரிவித்துள்ள அதேநேரம், பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான் அனைத்து பிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்.என். கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதற்கு எதிராக தீவிர இடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரிசில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதால், அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறைகளில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டுள்ள சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பரீசின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்த அவுஸ்திரேலியா !

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அதன்படி, 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த விசா கட்டணம் தற்போது 1,600 டொலராக அதிகரித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தலைமையிலான அரசாங்கம், மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விசா கட்டண உயர்வு, சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைக்கவும், சிறப்பாகவும் மாற்ற அவுஸ்திரேலியாவிற்கு உதவும் என, அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த முடிவு சர்வதேச மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பொருளாதாரம் இரண்டுக்கும் உகந்ததல்ல என, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகக் குழுவின் தலைவர் லூக் ஷீஹி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளை விட அவுஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி, கடந்தாண்டு செப்டம்பர் வரை அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 வீதத்தால் உயர்ந்து 5 இலட்சத்து 48 ஆயிரத்து 800 பேரை எட்டியுள்ளதாகத் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்திற்குள் மட்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 239 இந்திய மீனவர்கள் 32 படகுகளுடன் கைது !

Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் 25 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 239 இந்திய மீனவர்கள் 32 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்றிரவு(30) இராமேஸ்வரத்தில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற கடற்படை வீரரொருவர் உயிரிழந்தமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் தமது அதிருப்தியை வௌியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷெனுக செனவிரத்ன இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரை சந்தித்தபோது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இந்த வி்டயம் தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவித்ததாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஆர் சம்பந்தன் காலமானார்: மரணம் யாரையும் மன்னிப்பதில்லை!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் தமிழர்களின் முக்கிய அரசியல் தலைவருமான இரா சம்பந்தன் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் தனது 91வது வயதில் மரணத்தை தழுவியுள்ளார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் என தன் நீண்ட அரசியல் பயணத்தைத் தொடர்ந்த இரா சம்பந்தன் இலங்கை அரசியலிலோ தமிழ் அரசியலிலோ ஒரு ஆளுமையாக உருவாகவில்லை. அ அமிர்தலிங்கத்தின் மரணமும் வி ஆனந்தசங்கரிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாடும் அவரைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பன்முக அரசியல் தன்மையைக் காட்ட வெளிப்படுத்திய முகம் தான் இரா சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரானது. எஸ் ஜெ வி செல்வநாயகம், அ அமிர்தலிங்கம் வரிசையில் அடுத்து வந்த இரா சம்பந்தன் தமிழ் அரசியல் வரலாற்றில் போராடாத தோற்றுப் போன ஒரு தலைவராகவே பார்க்கப்படுவார். அவருடைய மரணத்துடன் குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் தமிழரசுக் கட்சியும் மரணத்தைத் தழுவும் வாய்ப்பே நிறைய உள்ளது.

ட்ரம்ப் – பைடன் இடையேயான பொது விவாதம் – “திணறிய பைடன்“ !

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கிடையிலான விவாதத்தில் ட்ரம்பை எதிர்கொள்ள முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகின்றது.

இதனால் அவரது கட்சி ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்ததோடு பைடனை விலக்கி வேறு வேட்பாளரை களத்தில் இறக்க மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கமான விடயமாகும். இந்த விவாத நிகழ்ச்சிகளின்போது வெளியுறவு கொள்கைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள்.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் நேற்று (28) நடைபெற்றது.

விவாத நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகியதோடு மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த விவாதத்தில் ட்ரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவாதத்திலேயே, ட்ரம்பை எதிர்கொள்ள முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகின்றது.

ஏற்கெனவே பைடனின் வயது தேர்தலில் பேசு பொருளான நிலையில் அவரது உடல் தளர்ச்சி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பிலும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்கள்.

 

இத்தேர்தலில் முக்கிய நிகழ்வாக இரு கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்று இருவரும் காரசார விவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அமெரிக்க பொருளாதாரம், குடியேற்றம், உக்ரைன், இஸ்ரேல் விவகாரம், அரசின் பல்வேறு சட்டங்கள் குறித்து ட்ரம்ப் வாதத்திற்கு பதிலடி தர முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகிறது.

தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி   ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பிலும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்கள்.

இத்தேர்தலில் முக்கிய நிகழ்வாக இரு கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்று இருவரும் காரசார விவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அமெரிக்க பொருளாதாரம், குடியேற்றம், உக்ரைன், இஸ்ரேல் விவகாரம், அரசின் பல்வேறு சட்டங்கள் குறித்து ட்ரம்ப் வாதத்திற்கு பதிலடி தர முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் – அமெரிக்க வெளியுறவுத்துறை விசனம் !

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார்.

சமீபகாலாமாக இந்தியாவில்  சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றத் தடைச் சட்டம், வெறுப்புப் பேச்சு,  அவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசிய ப்ளிங்கென் தெரிவித்ததாவது..

” இந்தியாவில், சிறுபான்மையினரின் மதச் சுதந்திரம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், உலகெங்கிலும் மக்கள் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர்.  இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் சில மாநிலங்களில் திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் இந்தியாவில் உள்ள மதச் சுதந்திரக் குறைபாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு, வன்முறைகளில் இருந்து சிறுபான்மையினரைப் பாதுகாப்பது, சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றங்களை விசாரிப்பது, சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்த விஷயங்களில் சில சிறுபான்மைக் குழுக்கள் நமது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதங்களுக்குத் தனி சட்டம் இருப்பதை மாற்றி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பிரதமர் மோடியின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இஸ்லாம், சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பழங்குடியின மக்களும், சில மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்கான முயற்சியாக இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர் “ என வெளியுறவுத்துறை ஆண்டறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அறிக்கையை வரவேற்றுள்ள இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் மதச் சுதந்திர நிலைமையைக் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.