எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

vithyathara-01.jpgசுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணி ஊடாகத் தாக்கல்செய்துள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக வித்தியாதரன் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர் அநுர சேனாநாயக்க , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் எ.ஜி.ரி.பி. விஜெரட்ண, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

இந்தியப் பிரதமரின் தலைமைச் செயலாளர் – ஜனாதிபதி இன்று சந்திப்பு

nayar.jpg இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமரின் கொள்கை அமுல்படுத்தலுக்கான தலைமைச் செயலாளர் ரி.கே.ஏ. நாயிர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பின்பேரில் ரி.கே.ஏ. நாயிர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ரி.கே.ஏ. நாயிரின் பாரியார், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோருடன் வெளிவிவகாரம், நிதி, சுகாதாரம், கல்வி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில்! அதில் 20 ச.கி.மீ. பாதுகாப்பு வலயம்!

khegeliya_rampukhala.jpgபுலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதில் 20 சதுர கிலோ மீற்றர் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயமாகும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

படையினரால் புலிகள் இப்போது ஒரு சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டாலும் அவர்கள் பாதுகாப்பு வலயத்திலும் ஊடுறுவி அங்கிருந்தும் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நேற்று அவாகள் அங்கிருந்து இலங்கை விமானப்படையின் பெல்  212 ரக ஹெலிகொப்டர்கள் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் இதற்கான சான்றாகும்.

புலிகளின் செயற்பாடுகள் இப்பொது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களை வெற்றிகரமாக சமளித்துக்கொண்டு படையினர் நிதானமாக முன்னேறுகின்றனர்.

புலிகளிடம் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நலனில் அக்கரையுள்ள சர்வதேச நிறுவனங்கள் இன்று ஆற்றவேண்டிய முக்கியமான பணி என்னவென்றால். புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனித நேய மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்த ஆதரவு வழங்குவதாகும் என்றும் அமைச்சர் ;கூறினார். 

கோவை, கொச்சினுக்கு இலங்கை விமான சேவை ரத்து

sri-lanka-air-lanka.jpgகோவை, கொச்சின் உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்களுக்கான விமான சேவையை இலங்கை ரத்து செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கான விமான சேவையை பாதியாக குறைத்துள்ளது.

இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் முதல் காலிறுதியில் இந்நிறுவனம் சுமார் ரூ. 250 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வைத்திருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஒப்பந்தத்தை முறித்து கொண்டது.

இதையடுத்து இந்நிறுவனம் சிக்கன நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை வாரத்துக்கு 100 எண்ணிக்கையிலிருந்து 50 ஆக குறைத்துள்ளது. கோவை, கொச்சின், கோழிக்கோடு, ஹைதராபாத் ஆகிய நகருக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.

புலிகளின் முக்கிய நான்கு தலைவர்கள் நேற்றைய மோதலில் பலி – பிரிகேடியர் உதய நாணாயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்ற கடும் மோதலென்றில் புலிகளின் முக்கிய நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது.

புதுக்குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மீது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தினர். படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 30 க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களுள் வரதர் அண்ணன், காதர், சூரியன் மற்றும் ஈழவன் ஆகியோர் அடங்குவர்.

கிழக்கில் வாகரைப் பிரதேசத்தில் படையினர் நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது 5 கிலோ கிறாம் எடைகொண்ட கிளேமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது

புலிகளின் பிடியிலிருந்து இதுவரையில் 55286 பொது மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சாலை தெற்குப் பிரதேசத்தில் படையினரின் பயன்பாட்டுக்கான பாலமொன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதன் அமைப்புப் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் பிரிகேடியர் கூறினார்

வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

axman-yappa.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவிய போதிலும் மக்கள் நலன் கருதி அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரிகளை குறைத்ததால் அரசாங்கத்தக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்:

மக்களுக்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதற்கு பொருட்களின் விலை அதிகரிக்காமல் இருக்கச்செய்ய 13 வகையான அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரியை அரசாங்கம் குறைத்தது. பால்மா ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்டு வந்த 96 ரூபா வரி ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டது. பருப்பு ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்ட 36 ரூபா ஆறு ரூபாவாக குறைக்கப்பட்டது. இவ்வாறான வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டது.

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவும் வேளையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேயிலை உரம், உரமானியம் மற்றும் சமுர்தி போன்ற நிவாரண உதவிகளையும் தொடர்ந்து வழங்கியும் வருகின்றோம். இதனால் இலங்கை நடுத்தர நிலையிலான ஒரு நாடாகத் திகழ்கின்றது.

பணம் இருந்தாலும் தேவையானபோது தேவையான பொருளை கொள்வனவு செய்யமுடியாது  என்ற நிலையை உணர்ந்ததால் விவசாய உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதன் பயனாக தற்போது நாட்டுக்கு எட்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிறுப்பில் உள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்க் கட்சிகள் பொருட்களின் விலை அதிகரிக்கப் போவதாக பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3.2 பில்லியனை கடனாகப்பெற உரிமை இருக்கின்றுது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அந்த நிதியத்திடமிருந்து கடன் எதுவும் பெறப்படவில்லை. உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நெறுக்கடியை கவனத்தில் கொண்டே இந்தக்கடனை எடுக்க முற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு முல்லைத்தீவுக்கு 1000 மெ. தொன் உணவுப் பொருட்கள்!

sb_diwarathnass.jpg தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அடுத்த வார இறுதியில் முல்லைத்தீவு பிரதேசத்துக்கு 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார்.

இவை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு முல்லைத்தீவு பிரதேசத்துக்கு ஒரே தடவையில் அனுப்பப்படும் ஆகக் கூடுதலான அளவு உணவுப் பொருள் தொகுதி இதுவாகும். இதேவேளை, யாழ். குடாநாட்டுக்கு ஏ-9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி நேற்று கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

உணவு மற்றும் துணி வகைகள் அடங்கிய 300 மெற்றிக் தொன் அளவான இந்தப் பொருட்கள் 20 லொறிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் அப்பிரதேசத்துக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

‘சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவேயே நாம் இன்று எதிர்கொள்கிறோம்.’ அபுயுசுப் சிறி – ரெலோ பேச்சாளருடன் நேர்காணல் : த ஜெயபாலன்

Apuysef_Sri_TELO._._._._._. 

கொம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து பின்னர் ஈபிஆல்எல்எப் இல் இணைந்து கிழக்கு மாகாணசபையின் அமைச்சராக செயற்பட்ட அபுயூசவ் தற்போது சிறி – ரெலோ அமைப்பின் பேச்சாளராக செயற்படுகிறார். மார்ச் 10 அன்று இவர் வவுனியாவில் தனது அலுவலகத்தில் இருந்த வேளை தொலைபேசியூடாக மேற்கொள்ளப்பட்ட செவ்வி இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

தேசம்நெற்:உங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் செயற்ப்பாடகள் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் ?

அபுயுசுப் : நாங்கள் தற்போது கொழும்பிலும் வட- கிழக்கு மாகாணங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். மாவட்டக் குழுக்கள் அமைத்து அந்த மக்கள் மத்தியில் செயற்;பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேசம்நெற் : எவ்வாறான அரசியல் வேலைத் திட்டங்களை முன் வைத்து செயற்படுகிறீர்கள் ?

அபுயுசுப் : ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் ஓர் தீர்வு கண்டு தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது என்ற திட்டத்துடன் அரசியல் முயற்ச்சியுடன் செயற்ப்படுகிறோம்.

ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் – 3 தசாப்த்தங்களின் பின்னர் தமிழீழம் கேட்டுப் போராடி இன்று தமிழ்பேசும் மக்கள் எங்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள்? இயக்கங்கள் மக்களை வழிநடாத்தி போராட்டம் எப்படி வந்து நிற்கிறது என்பதை தெட்டத் தெளிவாக ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு சேதாரம் இல்லாமல் மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் தமது ஜனநாக உரிமைகளுடன் வாழக்கூடிய போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்றும் நீண்டகால மூலோபாயம் என்ன அதற்காக தற்போது செய்ய வேண்டியது என்ன என்ற தெளிவும் முக்கியமாக அரசியற் கட்சிகளுக்கு தேவை.

ஆயுதப் ஆபாராட்டத்திற்கு முன்பு செய்யப்பட்ட ஜனநாயக போராட்ட அனுபவங்களில் இருந்தும் எமது தற்போதய புதிய ஜனநாயக வழிவகைகளை மூலோ பாயங்களை கண்டறிந்தாக வேண்டும். தற்பேததுள்ள வன்னிப் பிரதேசம் வட – கிழக்கு பிரதேசம் நாடுதழுவிய தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றியும் கருத்திற் கொண்டே இந்த மூலோபாயத்தை கண்டறியும் போராட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேசம்நெற் : தமிழ் மக்களுக்கான போராட்ட அமைப்புக்கள் தான் தமிழ் மக்களுக்கு தீங்கு இழைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்hபக ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் கடத்தல் கப்பம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச் சாட்டுக்கள் உண்டு.

அபுயுசுப் : சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவே அன்றி வேறேதும் இல்லை. தனி நாட்டைப்பெற்று உரிமைகளை நிலைநாட்டுவோம் என்று ஆயுதம் ஏந்திப் போராடினர். ஆயுதம் ஏந்தியது பலாத்காரத்தை செய்வதற்காகவா? பலாத்காரத்தை எதிர் கொள்வதற்காகவா? என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள தவறி விட்டோம்.

ஆயுதங்களைக் கொண்டு மக்களை அடக்கி விட்டோம் என்பதும் ஆயுதங்களால் மக்களின் அபிலாசைகளை  நிலைநிறுத்தவில்லை என்பதே இந்த நீண்ட போராட்டத்தின் கசப்பான அனுபவம். அதன் காரணமாகத்தான் பல பிரச்சினைகள் தோன்றின. ஆட்கடத்தல் கொலை கொள்ளை கப்பம் போன்ற விடயங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு அரசியல் இல்லாமல் ஆயுதம் ஏந்தியதன் விளைவேயாகும்.

தேசம்நெற் : அதை நிறுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ?

அபுயுசுப் : ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழியில் மக்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் சக்தியினை நம்பி மக்கள் உரிமைக்காக போராடுவோம். கடந்த கால அரசியல் இராணுவ போராட்டங்கள் தற்போது எமக்கு அரசியல் பாசறைகளாக உள்ளன. இந்த அனுபவங்களைக் கொண்டு இனிமேல் புதிய நடைமுறைகளை வழிமுறைகளை கண்டு போராட வேண்டும் என்பதேயாகும்.

தேசம்நெற் : இந்தப் பாடத்திற்கு கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம் 100 000 க்கு மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்துள்ளோம்.

அபுயுசுப் : உண்மை. உண்மை. தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதானால் போராட்டத்தை ஆரம்பித்த தங்கத்துரை அவர்கள் சர்வதேசம் போராட்டம் ஆயுதம் இவைபற்றியே சர்வதேச பாடங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்தார். போராட்டத்தை ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அவர் உயிர் துறந்தார். அவர்கள் நினைத்த மாதிரி இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு தவறவிடப் பட்டுவிட்டது. அவர்கள் எப்படி மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தார்களோ அவையாவும் வெளிவர முன்பே அவர்கள் உயிர் நீத்ததும் ஒரு காரணமாகும். அதன் பின்னர் ஆரப்பித்த ஆயுதப் போராட்டம் சித்தாந்த தெளிவில்லாமல் போனதால்தான் அதனுடைய அத்தனை விளைவுகளையும் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். லட்சக் கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்திருக்கிறோம். நிர்க்கதியாகி இருக்கிறோம்.

தேசம்நெற் : இப்போ நீங்கள் குறிப்பாக ஒருவிடயத்தை சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தை வைத்துள்ளீர்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கெதிராக நடந்த செயற்பாடுகளால் குறிப்பாக புலிகளால் முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டனர். பின்பு முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற தங்கள் அடையாளத்தை நிராகரித்தனர். ஆனால் நீங்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடனேயே முஸ்லீம்களை பார்க்கிறீர்கள் ?

அபுயுசுப் : தான் எந்த இனம் என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றோ தமிழன் என்றோ தீர்மானிப்பது எப்படிப்பட்ட நிலையில் தீர்மானிக்கப்படும் என்றால் மொழிதான் தீர்மானிக்கும். மொழி மூலம்தான் சிந்திக்கிறார்கள். மொழிமூலம் தங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தான் தமிழன் அல்ல முஸ்லிம் என்று தமிழ் மொழியில்தான் சொல்கிறார். ஆகவே இது இடையிலே ஏற்பட்ட விபத்தும் விபரீதமானதுமாகும். இந்த நாட்டிலே நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் மொழி அடிப்படையிலேதான் வஞ்சிக்கப்பட்டோம். தமிழ் மொழி பேசியதால் தான் வஞசிக்கப் பட்டோம். ஆகவே விமோசனம் தமிழ்பேசும் மக்களின் விமோசனமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர தமிழர்கள் முஸ்லிம்கள் என்று தனித்தனியாக இருக்க முடியாது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே அடிப்படையில்தான் இருக்க முடியும்.

முஸ்லிம் என்பது இனம் அல்ல. அது ஒரு மார்க்க அடையாளம் மட்டுமே. இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் போராட்டம் முஸ்லிம்களுக்கான போராட்டம் அல்ல. பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அங்கே அரபுக்களுக்கும் – யூதர்களுக்குமான பிரச்சினையே தவிர அது முஸ்லிம் போராட்டமாக பார்க்க முடியாதே.

இதைவிட எதுசரி எப்படி பிரச்சினைகளை தீர்ப்பது அதற்கான சரியான நடைமுறை என்பதையே கவனத்தில் எடுக்க வேண்டும்.

சாதாரணமாக சொல்வோமானால் இன்று வட கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் பள்ளிக் கூடங்களில் 600க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளன. ஆனால் மாறிமாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் சிங்களவர்களுடைய வெற்றிடங்களை நிரப்புகின்றனவே அன்றி தமிழ்பேசும் மக்களிடையேயான வெற்றிடங்களை நிரப்பத் தயாரில்லை. எனவே இதை தமிழர் முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்துப் பார்த்து தீர்க்கவும் முடியாது.

முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்களே என்ற கருத்து பல முஸ்லிம்களிடம் இன்றும் உள்ளது. பலர் இதில் தெளிவாக உள்ளார்கள்.

இந்த தேர்தல் வாக்குகளுக்காக முஸ்லிம்கள் செறிந்த இடங்களின் வாக்குகளுக்காக முஸ்லிம் என்ற அடையாளர் உயர்த்தப்பட்டதே தவிர இது சரியாக தெளிவாக யதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. அப்படியான முடிவாகவும் இருக்க முடியாது. இந்த சரியான கருத்தை முஸ்லிம்களிடையே தெளிய வைக்க வேண்டியதும் எமது கடமையாகும்.

வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும். அதேபோல வட கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட  தமிழர்களும் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும். அவர்களது உரிமை இது. 

வட கிழக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய அத்தனை மக்களும் மீள குடியமர்த்துவது எமது ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு அம்சமாகும். அந்த மக்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பிப் போவது என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும்.

Apuysef_Sri_TELOதேசம்நெற் : இன்றைய இலங்கை அரசு பற்றிய உங்களது மதிப்பீடு என்ன ?

அபுயுசுப் : இலங்கை அரசு ஒரு முதலாளித்துவ அரசு. நான் ஒரு கமியூனிஸ்ட் இப்படித்தான் சொல்வேன். இனிவரப் போகும் யுஎன்பி அரசம் முதலாளித்துவ அரசுதான். முதலாளித்துவ நடைமுறைகளை கொண்ட அரசு. இந்த முதலாளித்துவ அரசில் முதலாளித்துவ வாதிகள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதல்ல. இந்த அரசுகள் சமாதானப்படுத்தப்ப முடியாத வர்க்க முரண்பாடு காரணமாக தோன்றி விஸ்வரூபம் எடுத்திருக்கிறதொன்று.

ஆளும் அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கத்தின் அடக்குமுறை யந்திரம்தான் அரசு என்று எமக்கு தெரியும். அதை பல்வேறு விதமாக ஜனநாயக அரசு என்று சொல்லிக் கொள்வார்கள். இந்த நாட்டடில் முதலாளித்துவம் இருக்கும் வரையில் முதலாளித்துவ அரசாகத்தான் இருக்கும். அது தனது நலனை பாதுகாக்கவே முற்படும். அது அந்த வர்க்க நலனுக்காக இனப்போராட்டத்தையும் தீவிரமடைய வைக்கும். தமிழர்கள் சிங்களவர்கள் இடையே இனக்குரோதத்தை வளர்த்தால்தான் தனது நலன் பேணப்படும் என்றால் அதை தந்திரமாகவும் நளினமாகவும் அது செய்து கொண்டிருக்கும். அதைத்தான் இவ்வளவு காலமும் செய்து கொண்டுவந்தது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை மக்களின் தேசிய ஜனநாயக உரிமைக்காக தமிழபேசும் மக்களைத் தயார்படுத்துவதும் சிங்கள மக்களை தயார்படுத்துவதும் அவசியம். இதற்கு ஜனநாயக சக்திகளை நாம் இனம் கண்டு அந்த சக்திகளடன் இணைந்து செயற்பட வேண்டும். இலங்கையிலுள்ள ஒட்டுமொத்தமாக அனைத்து அல்லல்படுகின்ற துன்பப்படுகின்ற மக்களுக்காக செயற்ப்படுவதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டம் மேலும் வீரியமடையும் என்பது எமது கருத்து.

தேசம்நெற் : நீங்கள் உங்களை கம்யுனிஸ்ட் இடதுசாரி என்று கூறுகிறீர்கள். அப்படியான பின்னணி உடைய நீங்கள் ரெலோ என்ற அமைப்புடன் எப்படி உங்களை அடையாளம் காண்கிறீர்கள்?

அபுயுசுப் : நான் ரெலோ என்பதற்கு முன்பாக ஈபிஆர்எல்எப் டன் என்னை அடையாளம் கண்டு கொண்டேன் அங்கிருந்து தான் ரெலோவிற்கு வந்தேன். சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும்.

தேசம்நெற் : கம்ய+னிச சித்தாந்த பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் ஈபிஆர்எல்எப் இடமிருந்து ரெலோவிற்கு வருவதன் காரணம் என்ன?

அபுயுசுப் : அடிமைப்பட்ட மக்கள் அல்லவா? அந்த மக்களுக்காக போராடுவது கம்யூனிஸ்டின் கடமையல்லவா? சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும். கம்யூனிஸ்ட் அந்த பங்களிப்பை நிராகரிக்க முடியாதே கண்மூடித்தனமாக பார்க்காமல் இருக்க முடியாதே.

இலங்கையில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கா தமிழ்பேசும் மக்களின் பாட்டாளிகளையும் அழைக்க வேண்டிய கடமை உண்டல்லவா. தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் செயற்ப்பாட்டை முதலாளித்துவ வழியில் செல்லவிடாது இழுத்துச் செல்லும் கடமையை கம்யூனிஸ்ட் செய்ய வேண்டும் அல்லவா. அதற்காக நாங்கள் இந்த அமைப்புகளினுள்ளும் சென்று அரசியல் வேலைகளை செய்வதன் மூலம்தானே அது சாத்தியப்படும்.

தேசம்நெற் : ஆனால் துர்திஸ்டவசமாக அது நடக்கவில்லையே?

அபுயுசுப் : நடக்கவில்லை. சில தமிழ் மார்க்ஸிஸ்ட்டுக்கள் முயற்ச்சித்தார்கள். பலர் அதை கண்டு கொள்ளவில்லை அதே போல சிங்கள மார்க்ஸிஸ்ட்டுக்களும் இவர்களுடன் செயற்ப்படவில்லை. அது அவர்களடைய தப்பு. நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தான் ஈபிஆர்எல்எப் க்கு ஒரு அமைச்சராக போனேன்.

தேசம்நெற் : எந்த கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து?

அபுயுசுப் : இலங்கை மாஸ்கோ சார்பு கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து அந்த கட்சியின் அரசியல் குழு அங்க்த்தவனாக இருந்தவன். அங்கு இருக்கும் போது தோழர் நாபா நீங்கள் எமது அமைச்சரவைக்கு வாருங்கள் என்று கேட்டார். நானும் சென்றேன். தமிழ் பாட்டாளி வர்க்கத்தை உலக பாட்டாளி வர்க்கத்துடன் இணைத்து செயற்ப்படும் கடமை ஒன்று இருந்தததை உணர்ந்து தான் அவர்களுடன் இணைந்து செயற்ப்பட சென்றேன். இந்த மக்களை சர்வதேச பாட்டாளி வர்க்கத்துடன் இணைக்க வேண்டும் என்று தான் செயற்ப்பட்டடேன்.

தேசம்நெற் : இன்று வன்னியில் நடைபெறும் யுத்தம் இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடையேயான இனவாதத்தை அதன் உச்ச அளவிற்கு தூண்டியுள்ளதே?

அபுயுசுப் : இருபக்மும் உள்ள இனவாதிகள் தமது சுயநலன்களுக்காக இனவாதமாக  மாற்றிவிட்டார்கள். இந்த யுத்தத்தை தமிழர்க்கும் சிங்களவர்க்கு மிடையிலான யுத்தமாக மாற்றிவிட்டார்கள்.

தேசம்நெற் : இந்த இனவாதத்ததை கடந்து தமிழ் முஸ்லீம் மலையக சிங்கள மக்கள் ஒன்னிணைந்த போராட்டத்தை நடாத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

அபுயுசுப் : நிச்சயமாக. இன்னும் ஆழமாக நம்புகிறேன். அதுதான் ஒரே வழி. இலங்கையின் விமோசனத்திற்கு தமிழ் மக்களின் சிங்கள மக்களின் முஸ்லீம் மக்களின் விமோசனத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கையின் விமோசனத்திற்காக இலங்கையில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கான சமானிய அன்றாட ஜீவியத்திற்க்காக பாடுபடும் மக்களின் விமோசனத்திற்கு அனைத்து மக்களும் சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையிலான கொள்கையில் செயற்ப்பட வேண்டும். அது இப்போது செய்ய முடியாது. இப்போது அழைக்க முடியாத. அழைத்தால் சிரித்துவிட்டுப் போவார்கள்.

இப்போது யுத்தம் நடக்கிறது. இந்த யுத்த்தின் விளைவு என்ன? இதிலிருந்து நாம் மக்களை அரசியல் மயப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது என்பது ஒரு பாரிய பணியாகும். ஒரு பாரிய காரியமும் ஆகும.; அந்த காரியத்தை சித்தாந்த தெளிவு உள்ளவர்களாலேயே நடாத்த முடியும். அது மட்டுமல்ல அவை அன்றாடம் செய்யப்பட வேண்டியவைகளுமாகும்.

இந்த நாட்டிலே உண்மையான  தேசிய ஜக்கியம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ்பேசும் மக்களும் சிங்கள மொழிபேசும் மக்களும் அந்த மக்கள் மத்தில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்க மக்களும் ஒன்னிணைய வேண்டும். அப்போது தான் தேசியங்களின் விடுதலை பற்றி பேச முடியும். அப்போதுதான் தமிழ் பேசும் மக்களும் சுபீட்சம் பெறமுடியும்.

அதற்காக போராடுவோம் எமது போராட்டத்தில் அதுவும் ஒரு அம்சம். தமிழ்பேசும் மக்கள் படும் கஸ்டம் போலவே பெரும்பாலான சிங்கள மக்களும் கஸ்டப்படுகிறார்கள் அவர்களக்காகவும் போராட வேண்டியது தெளிவடைந்த அரசியற் கட்சிகளின் கடமையாகும். இது இந்த யதார்த்த்ததை புரிந்து கொண்ட மக்கள் சிந்தனையாளர்களைக் கொண்ட கட்சியால்த்தான் அது முடியும்.

தேசம்நெற் : இறுதியாக தேசம்நெற் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்களா ?

அபுயுசுப் : சொல்வதற்கில்லை. இனி செய்தாக வேண்டும். செய்ய நிறையவே உண்டு. செய்ய வேண்டிய கடமைகளைப் புரிந்து கொண்டு தெளிவான பார்வையுடன் தெளிவான போராட்டததை தியாக மனப்பானமையுடனும் முன்னெடுத்துச் செல்வோமேயானால் தமிழ்பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மொழி பேசும் மக்களும் ஜக்கியமாகவும் சந்தோசமாகவும் இங்கே வாழ முடியும்.

எங்கள் போராட்டம் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினருடன் இணைந்து நடத்தப்பட்டு இருந்தால் எங்கேயோ போயிருக்கும். ஜேவிபி கூட அந்த தவறை செய்துள்ளது.

ஜேவிபி யின் திட்டமே ‘சிங்கள இனவெறியைத் தூண்டி பதவிக்கு வந்து நியாயமான விடயங்களை செய்வோம். அதில் தமிழ் மக்களுக்கும் நியாயம் கிடைக்க வைப்போம்’ என்ற உபாயம். அவர்கள் குட்டிப்பூர்சுவாக்கள் தானே இப்படியான உபாயங்களைத் தான் அவர்கள் வளர்ப்பார்கள். குட்டிப்பூர்சுவாக்களின் உபாயம் அப்படித்தான் இருக்கும்.

அவர்கள் பாரிய பின்னடைவை சந்தித்தார்கள் அவர்களே இரண்டாக பிளவடைந்து மக்களால் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்த தேர்தலில் மக்கள் இவர்களின் பேச்சை நம்பவில்லை. எந்த சிங்கள மக்களை நம்பி போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த மக்கள் கடந்த தேர்தலில் அவர்களை நிராகரித்து விட்டனர்.

அந்த இருதரப்பு ஜேவிபி யினரையும் மக்கள் நிராகரித்தது விட்டனர். உபாயத்தை சரியாக வகுக்காதுவிட்டால் அந்த உபாயம் வர்க்க எதிரியின் கையில் ஒரு ஆயுதமாகிவிடும்.

தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கும் எந்த இனவாத உபாயத்தை எடுத்தார்களோ அந்த உபாயம் இவர்களுக்கு எதிராக போய்விட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்திக்காது! கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் அறிவிப்பு

sampandar-pr-con.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளார்.
 
தமிழ்க் கட்சிகளின் பிரதிநதிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது எனவும் ஆர். சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு ஜானகி ஹொட்டலில் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் 300,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். மோதல் இடம்பெறும் பகுதிகளில் ஷெல் தாக்குதல்களினாலும், விமானத் தாக்குதல்களினாலும் தினமும் பல பொது மக்கள் உயிரிழக்கின்றனர்.காயமடைகின்றனர். முல்லைத்தீவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு போதுமான உணவு இல்லை, குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை, மருந்துகள் இல்லை. இதன் காரணமாக இறப்புக்கள் கூட சம்பவிக்கின்றது.

மக்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடுவது அர்த்தமற்றது. எனவே முல்லைத்தீவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறான சூழ் நிலையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையடுவது அர்த்தமுள்ளதாகும்” என தெரிவித்தார்.

அரசியல் தீர்வு மூலம் தமிழர்களின் பிரச்சினைகளிற்கு சாதகமான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் சம்பந்தன் எம்.பி தெரிவித்தார். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் ,அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் மோதல்கள் இடம்பெறுவதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

எனினும் இவ்வலயத்தின் மீது விமானத்தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்களிம் மேற்கொள்ளப்படுவதால் சாராசரியாக தினமும் 40 முதல் 50 வரையான பொதுமக்கள் உயிரிழப்பதுடன்,காயமடைகின்றனர். அப்பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் வெளியேற்றியுள்ளதுடன் உணவு, மருந்து, தற்காலிக குடில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை

மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளமையால் செயற்பட முடியாதுள்ளனர்.மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அரசாங்கம் அப்பகுதிகளுக்கு போதுமான மருந்துப் பொருட்களை அனுப்பவில்லை.தற்காலிக குடில்கள் கூட மோசமான காலநிலையால் பாதிக்கபடுகின்றது.

இப்பகுதிகளில் 300,000 பொதுமக்கள் இருக்கின்றனர்.ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கணிப்பின் படி 200,000 மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர்.அரசாங்கம் 70,000 பொதுமக்கள் இருப்பதாக தெரிவிக்கின்றது .எனவே அரசாங்கத்தால் அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் பட்டினிச் சாவு ஏற்பட்டு பல் சிறுவர்கள் கூட உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடம் ஏற்கொள்ளப்பட்ட விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 3000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 8000 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.எனவே பொதுமக்கள் வெளிப்படையாக தாகுதல்களுக்கு இலக்காகின்றமை தெரியவருகின்றது.இம்மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்து அனுப்பாமல் அவற்றை தமிழ் மக்களிற்கு எதிரான போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இவ் மனிதாபிமான அவலங்களை கருத்திற் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும், போதுமான உணவு, மருந்துப்பொருட்கள் போதுமானளவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும், ஐ.நா மற்றும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களை அப்பகுதிகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்” என ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும், அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

அங்கே மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் காரணமாகவே மக்கள் வெளியேறுகின்றனர்.சர்வதேச சட்ட விதிகளிற்கு அமைவாக மோதல்களின் போது பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என சம்பந்தன் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

dalas_alahapperuma.jpgயாழ். பிராந்தியத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் மாத முதல்வாரத்தில் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான பதினொரு பேர் கொண்ட உயர் குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

இவர்கள், கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர் டிப்போக்களுக்கு விஜயம் செய்வதுடன், அமைச்சரின் விஜயத்தின் நல்லெண்ண சமிக்ஞையாக, கோண்டாவில் டிப்போ முதல்தர டிப்போவாக தரமுயர்த்தப்பட்டு பத்து புதிய பஸ்கள் டிப்போவுக்கு வழங்கப்படவுள்ளன.