எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

2006 ஒக்டோபர் 18 ம் திகதி: காலி துறைமுக தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட டோலர் படகு, லொறி மீட்பு

nimal_madiwaka.jpg2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி காலி துறைமுகத்தின் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட டோலர் படகு ஒன்றையும் லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலே இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க கூறினார்.

கடந்த 2006 ஒக்டோபர் 18 ஆம் திகதி காலி துறைமுகம் மற்றும் தக்ஷின கடற் படை தளத்தின் மீது புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கடந்த ஜுலை 24 ஆம் திகதி வவுனியாவில் வைத்து கைதானார். மத்திய மாகாண புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்றே இவரை கைது செய்தது.

மேற்படி சந்தேக நபரை தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணையின் போது தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் வெளியானதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர் கூறினார். இதன்படி 32 அடி நீளமான டோலர் படகு ஒன்று அம்பாந்தோட்டை மீன்பிடித்துறை முகத்தில் வைத்து மீட்கப்பட்டது. இதில் ராடார் உபகரணங்களும் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்று அக்கரைப்பற்று பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

மேற்படி சந்தேக நபரை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவின் கண்காணிப்பின் கீழ் பொவெல்ல பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்.

5 இயந்திரப் படகுகளில் வந்த தற்கொலை புலி உறுப்பினர்கள் காலி துறைமுகத்தின் மீது மேற்கொண்ட தற்கொலை தாக்குதல் கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு வந்த அனைத்து புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஒரு மாலுமி இறந்ததோடு மேலும் 24 பேர் காயமடைந்தனர்.

கொழும்பு வந்துள்ளோரின் விபரங்களடங்கிய பதிவு ஆவணமொன்றை தயாரிக்க திட்டம்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வந்து கொழும்பில் தங்கியிருப்போரின் விபரங்களடங்கிய பதிவு ஆவணமொன்றை தயாரிக்கவும் அத்தகையோருக்கு உதவுவதற்குமான திட்டமொன்றை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதன் மூலம் அவ்வாறு தங்கியிருப்போருக்கு தேவையான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

அவ்வாறு தங்கியிருப்போரில் 16 வயதிற்கு மேற்பட்டோர் தமது தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப் படுவதுடன் அது தொடர்பில் அவர்களுக்குத் தபாலட்டை மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பல்வேறு தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கொழும்புக்கு வந்து பல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்கியுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை.

ஏற்கனவே கொழும்பில் குடியிருப்போர் சம்பந்தமான விபரங்கள் திரட்டப்பட்டுள்ள போதிலும் மாதாந்தம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கொழும்புக்கு வந்து தங்குவதுடன் அவ்வாறே கொழும்பிலிருந்தும் வெளிப் பிரதேசங்களுக்குச் செல்கின்றனர்.

இத்தகையோரின் விபரங்களை அப்பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகர்கள் திரட்டி வருகின்றனர். அவ்விபரங்கள் பிரதேச செயலகங்களுக்குக் கையளிக்கப்பட்டு ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தினந்தோறும் அதில் திருத்தங்கள் செய்யப்படும். இதனைக் கொண்டே கொழும்புக்கு வந்து தங்கியிருப்போர் மற்றும் வெளிச் செல்வோரின் விபரங்களடங்கிய பதிவு ஆவணமொன்று ஏற்படுத்தப்படவுள்ளது.

இவர்களில் அடையாள அட்டைகளைப் பெறுவோர் ஓய்வூதியம் பெறுவோர் உட்பட அரசாங்கத்தின் சேவை களை எதிர்பார்ப்போருக்கு உதவுவதற்கும் இந்நடவடிக்கை மூலம் வழிவகை செய்யப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

லாக்கர்பீ: ஸ்காட்லாந்து சட்டங்களுக்கு உட்பட்டே மெக்ராஹிக்கு விடுதலை வழங்கப்பட்டதாக கூறுகிறார் நீதியமைச்சர்

megrahifora.jpgலாக்கர் பியில் 1988 இல் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான லிபிய நபரை விடுதலை செய்வதற்கான தனது முடிவு ஸ்காட்டிஸ் சட்டங்கள் மற்றும் பெறுமானங்களின் அடிப்படியிலானது என்றும், இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு அதில் இடம் கிடையாது என்றும் ஸ்காட்டிஷ் நீதியமைச்சர் கென்னி மக் அஸ்கில் கூறியுள்ளார். அப்தல் பஸத் மெக்ராஹி என்னும் அந்த நபர் விடுதலை செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட வெற்றிவீரருக்கான வரவேற்பு ஆகியவை குறித்து சர்வதேச கண்டனம் எழுந்துள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அந்த வரவேற்பு பொருத்தமற்றது என்று கூறிய மக் அஸ்கில் அவர்கள், வரவேற்பு குறைந்த அளவிலேயே நடக்கும் என்று தமக்கு உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், மனிதாபிமான அடிப்படையில் மெக்ராஹி விடுதலை செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலைகள் ரூ. 460 மில். செலவில் அபிவிருத்தி

north-governor.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 460 மில்லியன் ரூபா செலவில் யாழ். குடா விலுள்ள ஆஸ்பத்திரிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்ரசிறி தெரிவித்தார்.

ஆளுநர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடங்கலான குழுவினர் சாவகச்சேரி தள வைத்திய சாலை உட்பட்ட அங்குள்ள ஏனைய ஆஸ்பத்திரிகளை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்படி யாழ். போதனா வைத்திய சாலை, சாவகச்சேரி தள வைத்தியசாலை, மானிப்பாய் பிரசவ விடுதி, கரவெட்டி ஆஸ்பத்திரி, இளவாலை மருத்துவ நிலையம் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருவ தோடு மண்டைதீவு, புங்குடுதீவு, ஊர்காவற் றுறை பகுதிகளில் மருத்துவ வசதிகளை மேம் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

சாவகச்சேரி தள வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு நிர்மாணப் பணிகள் 80 வீதம் பூர்த்தி அடைந்துள்ளன. இதற்காக 40.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் விநியோகம் மற்றும் மருத்துவ களஞ் சியம் என்பவற்றுக்காக 10 மில்லியன் ஒது க்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளு நர் கூறினார்.

இதேவேளை மானிப்பாய் பிரசவ விடுதி 11 மில்லியன் ரூபா செலவில் அமைக்க ப்பட்டு வருகிறது. கரவெட்டி ஆஸ்பத்திரி யின் வெளிநோயாளர் பிரிவு 15 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.  50 வீத பணிகள் பூர்த்தியடைந்துள் ளன. இளவாலை மருத்துவ நிலையம் 9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட்டு வருகிறது. இதில் 45 வீத பணிகள் பூர்த்தி பூர்த்தியடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. ஊர்காவற்றுறை, மண்டைதீவு, புங்குடுதீவு மற்றும் வேலணை ஆஸ்பத்திரிகள் 41 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரை நகரில் மருத்துவர்களுக்கான விடுதி 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. தென்மராட்சி, கொடிகாமம் ஆஸ்பத்திரிகளில் 10 மில்லியன் செலவில் பிரசவ விடுதிகள் அமைக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோப்பாய், அச்சுவேலி, ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் 8.2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இவற்றுக்கான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.

இதேவேளை வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் தென்மராட்சி, வடமராட்சி, கோப்பாய், வலிகாமம், சண்டிலிப்பாய் ஆஸ்பத்திரிகளின் சுகதார வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநர் சந்ரசிறி குறிப்பிட்டார். ஆஸ்பத்திரிகளின் நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆளுநர் மேற்படி நிர்மாணப் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முரளிதரன் பந்தை எறிகிறார் – குற்றம் சுமத்துகிறார் மார்க் ரிச்சர்ட்சன்

murali.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் பந்தை எறிவதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ரிச்சர்ட்சன் நியூசிலாந்து பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிகிறார். இதனால் தான் அவரது பந்து வீச்சை அடிக்கவும், எதிர்கொள்ளவும் திணற வேண்டி உள்ளது. ஏற்கனவே சில முறை சந்தேகம் எழுந்ததால் அவரது பந்து வீச்சு குறித்து மீண்டும், மீண்டும் சோதனை நடத்தப்பட்டதும், அதில் அவர் விதிமுறைக்குட்பட்டு பந்து வீசி நிரூபித்து இருப்பதும் எனக்கு தெரியும்.

கிரிக்கெட்டில் இப்போது நிறைய தொழில் நுட்பம் வந்துள்ளது. அதன் உதவியுடன் அவரது பந்து வீச்சை பார்க்கும்போது எனது கருத்தை வலுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமையும். அவரது ஆக்ஷன் காட்சியை டி.வி. ரிப்ளேயில் நுணுக்கமாக பார்க்கும்போது, பந்து வீசுகையில் முழங்கையினை 15 டிகிரிக்கு மேல் வளைக்ககூடாது என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) விதியை மீறுவது தெரியும்.

திருத்தம் தேவை

பந்து வீச்சு பரிசோதனையின்போது அவரது உடல் முழுவதும் ஏதோ பல்புகள் பொருத்தப்பட்ட படத்தை பார்த்து இருக்கிறேன். பந்தை எறியவில்லை என்று அவர் பரிசோதனை கூடத்தில் நிரூபித்து உள்ளார். ஆனால் சோதனை கூடத்தில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. களத்தில் அவரது பந்து வீச்சு வேறு விதமாக இருக்கிறது.

ஐ. சி. சி. யின் மெத்தன போக்கால் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசுபவர்கள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க முடிகிறது. எனவே அதற்கு தகுந்தாற்போல் விதிகளை ஐ. சி. சி. திருத்த வேண்டியது அவசியமாகும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் பந்து எந்த இடத்தில் பிட்ச் ஆகிறது. எப்படி சுழல்கிறது என்பதை எல்லாம் பார்க்கிறோமோ தவிர, அதை வீசியவர் யார், எப்படி வீசுகிறார் என்பதை பார்ப்பதில்லை என்றார்.

கிழக்கில் 149 அரச ஊழியர்களுக்கு அமெரிக்க உதவியில் மொழிப்பயிற்சி

tri0000.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள, பதினோரு உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட 149 அரசாங்க அலுவலர்களுக்கும் பதவியாளர்களுக்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி தமிழ் மொழி, சிங்கள மொழிப் பயிற்சிகளை வழங்குகின்றது.

பிராந்திய ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இத்திட்டத்துக்குமூன்று வருடங்களுக்குத் தேவையான  நிதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சியில் நவீன மொழிப் பயிற்சி நுட்பங்கள்,  அரசாங்க மொழிகள் கொள்கை, மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்பவை பங்குபற்றுநர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் ஏறத்தாழ இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிட்டத்தகக்தாகும். 

புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆயுதங்களை வழங்குமாறு இலங்கையின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்தது

britain.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது சில வகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அரசாங்கம் கோரிய போதிலும், பிரித்தானியா கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக 30மி.மி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளைக் கூட வழங்க பிரித்தானியா மறுத்துள்ளது. ஆரம்பத்தில் 30மிமி துப்பாக்கிகளையும், அதற்கான ரவைகளையும் பிரித்தானியா வழங்கியதாகவும், பின்னர் ஆயுத விநியோகத்தை நிறுத்திக் கொண்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

அரை இறுதிக்கு செரினா தகுதி

serena-williams.jpgரோஜர்ஸ் கோப்பைக டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம் வெற்றிப் பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளார்.

ரோஜர்ஸ் கோப்பைக்கான மகளிர் டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், உலகின் 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக் குடியரசு நாட்டை சேர்ந்த லூசி சபரோவாவை எதிர்கொண்டார்.

இதில், 6 – 3, 6-  2 என்ற நேர் செட்டில் லூசி சபரோவாவை வென்று, செரினா அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்ற கால் இறுதி ஆட்டங்களில் மரியா ஷரபோவா (ரஷியா), எலீனா டெமன்டிவா (ரஷியா), அலிசா கிளைபனோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புபட்டவர் தலிபான் தலைவராக நியமனம்

24082009.jpgபாகிஸ் தானில் புதிய தலிபான் இயக்கத் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் பாரிய ஹோட்டல் தாக்குதல் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கர தாக்குதல் ஆகியன உட்பட பல தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய உயர் கமாண் டோ அதிகாரியாவார். அந்நாட்டில் இயங்கும் அந்நாட்டில் இயங்கும் தலிபான் குழு இன்னமும் சக்திவாய்ந்ததாகவும் தீவிரமானதாகவும் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதால் 28 வயதான ஹக்கிமுல்லா மெஹ்சூத்தின் இந்த நியமனம் அந்நாட்டில் அதிகரித்த தாக்குதல்களுக்கு கட்டியம் கூறலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முன்னாள் பாக் தலிபான் பய்துல்லா மெஹ்சூத் வடமேற்கு பாகிஸ்தானில் அமெரிக்க சி.ஐ.ஏ. ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து அவரது இடத்திற்கு புதிதாக ஒருவரை தெரிவு செய்வது குறித்து தலிபான் கமாண்டர்களுக்கிடையே இடம்பெற்ற உட்பூசல்களை தொடர்ந்து சில வாரங்களாக நிலவிய ஊகங்களின் பின்னர் புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.

பல உயர் தலிபான் கமாண்டர்கள் முன்னாள் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று வலியுறுத்திய போதிலும் அவர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. தாக்குதலில் அவர் அநேகமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அமெரிக்க, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகிறார்கள் 

14 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றிய பிடெல் காஸ்ட்ரோ

castro.jpgகியூபா முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, 14 மாதங்களின் பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சுகவீனமடைந்து அறுவைச் சிகிச்சையொன்றுக்கு ஆளாகிய பிடெல் காஸ்ட்ரோ, அது முதற்கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாது இருந்து வருகிறார்.

வெனிசுலாவைச் சேர்ந்த மாணவர்களுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடும் மேற்படி காட்சியானது கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்டதாக அதிகõரிகள் தெரிவித்தனர்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிடெல் காஸ்ட்ரோ மிகுந்த ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் காணப்பட்டார்.

மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர், அந்நாட்டு அரச ஊடகமான “ஜுவென்டட் ரெபல்டி’ பத்திரிகையானது பிடெல் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது.

அந்த புகைப்படமானது ஈகுவடோரின் இடதுசாரி ஜனாதிபதி ராபயல் கொர்ரியாவுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடுவதை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது