எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பாசிக்குடா

srilanka_passikuda.jpgஇலங் கையின் கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையில் பிரபலமான பெற்றுள்ள கடலோர பிரதேசங்களிலொன்றான பாசிக்குடா சுமார் 25 வருடங்களின் பின்பு தற்போது மீண்டும் தொடங்கியுளள்து.

கடற் குளிப்பிற்கு சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடாவிற்கு உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று தமது பொழுதைக் கழித்து திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

உல்லாசப் பயணிகளின் வருகை காரணமாக தமது பொருளாதாரம் தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரதேசத்தில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், நிலங்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கூறும் உள்ளுர்வாசியொருவர், கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக வெளியாட்கள் இங்கு வரவில்லை என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டிருந்த தமது தொழில் கூட தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக விருந்தினர் விடுதியொன்றின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நவம்பரில் சீனா செல்வார்

000-obama.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நவம்பர் மாதத்தில் சீனா செல்லவுள்ளதாக சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் தெரிவித்தார். ஏப்ரல் மாத அழைப்பை ஏற்று பராக் ஒபாமா சீனா செல்வார். சிங்கப்பூரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வரும் அமெரிக்க ஜனாதிபதி மாநாடு முடிவடைந்ததும் சீனா செல்வார். இவரின் இந்த விஜயத்தால் அமெரிக்க- சீன உறவுகள் இந்த ஆண்டுக்குள் உறுதியடையும் எனவும் சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் சொன்னார்.

பராக் ஒபாமாவை சீனா வருமாறு ஜனாதிபதி ஜுஹிண்டாவோ அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பராக் ஒபாமா ஏற்றுக் கொண்டதையடுத்து இந்த விஜயம் ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதியின் முதல் விஜயமாக இது அமையவுள்ளது. பெரும்பாலும் நவம்பர் 14-15ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி சீனா செல்வாரென நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சீனாவும் அமெரிக்காவும் பாரிய வியாபாரக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்றன. வர்த்தகம், வியாபாரம் காலநிலை மாற்றம் எரிவாயு பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி இரு தலைவர்களும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர்.

தாய்வானுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியதால் ஆத்திரமடைந்த சீனா 2008ம் ஆண்டு 6.5 பில்லியன் பெறுமதியான ஆயுதப் பரிமாற்றங்களை அமெரிக்காவுக்கு வழங்காமல் நிறுத்திக் கொண்டது இது தவிர சீனாவின் கடல் எல்லைக்குள் அமெரிக்கக் கப்பல் ஊடுருவியதால் இரு நாடுகளிடையேயும் முறுகல் ஏற்பட்டது. இந்நிலைமைகளைச் சீர்செய்வது பற்றி முக்கிய பேச்சுக்களிலும் அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் ஈடுபடுவர். தாய்வான் எப்போதும் சீனாவின் இறைமைக்குக் கீழ் உள்ள ஒரு பகுதி என்பதை பராக் ஒபாமாவுக்கு இச்சந்திப்பின் போது வலியுறுத்தவும் சீன ஜனாதிபதி தயாராகவுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்

ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் வல்லமை எனக்குள்ளது : எஸ்.பி.திஸாநாயக்க

dissanayake.jpgஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய வல்லமை தம்மிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கப்பட்டால் தயங்காது அந்த அழைப்பைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், கட்சித் தலைமைத்துவத்தின் ஆளுமையின்மையே தேர்தல் தோல்விகளுக்குக் காரணம் எனக் கட்சி உறுப்பினர்கள் கருதவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் ஒருவர் தமக்கு இருப்பதாகவும், பிரச்சினைகளைக் கட்சிக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளவே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்வைன்: இந்தியாவில் 76 பலி

10092009.jpgஇந்தியா வில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இன்று பெங்களூர், டெல்லியில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,900யை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 205 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

.உல்லாச பயணம் வேண்டாம்-அரசு அறிவுரை:

இந்த நிலையில், பள்ளிகளில் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கடும் அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை மூலம் சுகாதாரத்துறை அனுப்பி உள்ள அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவுரைகள்:

– எந்த ஒரு மாணவருக்கோ, பணியாளருக்கோ, ஆசிரியருக்கோ பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

– பள்ளியில் பணிபுரிவோர், படிப்பவர் யாராக இருந்தாலும் உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

– தும்மல், இருமல் இருந்தால் கைக்குட்டை அல்லது சிறிய துண்டு அல்லது டிஸ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்.

– ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும்.

– பன்றி காய்ச்சல் பாதிப்புள்ள வெளிநாடுகள் மற்றும் ஊர்களுக்கு செல்ல அவசியம் ஏற்பட்டால் ஒழிய மற்றபடி பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கலாம். உல்லாச பயணம், மாநாடுகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

– சரியான அறிவியல் பூர்வமான தகவல்களையும், செய்திகளையும் 044-24321569 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும் சுகாதாரத்துறை இணையதளத்திலும் தகவல் பெறலாம்.

– வீண் வதந்திகளை நம்பி பள்ளிகளில் பீதி ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– பள்ளியில் பணிபுரிவோர் மற்றும் மாணவர்கள்  மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

– பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனைக்குப் பின் போதிய விடுமுறை வழங்கி வீடுகளில் இருக்கும்படி செய்ய வேண்டும். விடுதி மாணவர்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சேர்த்திட வேண்டும்.

– நோய் வராமல் தடுக்க தும்மல் மற்றும் இருமலின்போது கைக்குட்டையால் வாய் மற்றும் மூக்குப்பகுதியை மூடிக்கொள்ள வேண்டும்.

– அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கக்கோரும் மனு அமெரிக்க நீதிமன்றால் நிராகரிப்பு

usa000.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கக் கோரும் மனுவினை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 2001 ஆம் ஆண்டில் சில குழுக்களை பயங்கரவாதக் குழுக்களெனப் பிரகடனம் செய்யவும் அவற்றின் சொத்துக்களை முடக்கி வைக்கவும் . அவற்றுக்கான உதவிகளையும் சேவைகளையும் தடை செய்யவும் அமெரிக்க அரசாங்கத்திற்கு அதிகாரமளித்து நிறைவேற்று கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதற்கு எதிராக அமைப்பு ஒன்று பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கிவிடுமாறு தாக்கல் செய்த மனுவை அமெரிக்க லொஸ் ஏஞ்ஜல்ஸ் மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

வடமராட்சியில் இன்று 75 வீடுகள் கையளிப்பு

home.jpgவடமராட்சி அல்வாயில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஹரித்தாஸ் கியூ டெக் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 75 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு சக்கோட்டையில் நடைபெறவுள்ளது. நிறுவன இயக்குநர் அருட்பணி கி.யோ.ஜெயக்குமார் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் யாழ்.ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், யாழ்.மாநகர சபை ஆணையாளர் மு.செ.சரவணபவ மற்றும் பருத்தித்துறை உதவிப் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கையளிக்கப்படவுள்ள ஒவ்வொரு வீடுகளும் சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்தால் நாம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதே உண்மையான வெற்றி – பாதுகாப்புச் செயலாளர் கருத்து

gothabaya.jpgபுலிப் பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்தது மட்டுமே எமக்குக் கிடைத்த உண்மையான வெற்றியென நாம் நினைத்துவிடக் கூடாது. நாம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதே உண்மையான வெற்றியாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் முடிவும் சமாதானத்தின் உதயமும் எம்மத்தியில் சுபமான எண்ணங்களை ஏற்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘பிஸ்னஸ் டுடே’ சஞ்சிகை கொழும்பில் நடத்திய “பிஸ்னஸ் டுடே டொப் டென்’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னரான சமாதானத்தைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப நாமனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.

தம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பதாக நாட்டைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். அப்போது தான்,  நாட்டுக்கான எமது கடமையைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில்,  பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து,  நிலையான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தால் எமது நாட்டில் வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனால்,  எமது தொழிற்றுறைகளில் அபிவிருத்தியைக் காணமுடியவில்லை. புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். எனவே,  அவர்களால் கிடைக்க வேண்டிய நன்மைகள்,  பங்களிப்புக்கள் என்பவற்றை நாடு இழந்தது.

எமது சமூக வியூகம் மாற்றமடைந்து, நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நின்றுபோய்,  வன்முறைக் கலாசாரம் பயங்கரவாதத்தால் எமது நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே,  நாம் இழந்ததை,  மீண்டும் பெற்றுக்கொள்ளும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே உண்மையான வெற்றியாகும் என்றும் அவர் கூறினார். 

மீள் குடியேற்றத்துக்கு முன்னர் நீதி மன்றங்கள் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அமைக்க முடிவு

court222.jpgகிளிநொச்சி மற்றம் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள் குடியேற்றம் இடம்பெறமுன்னர் அவ்விரு மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் அமைக்கடவுள்ளதாக நீதியமைச்சு அறிவித்துள்ளது. கிளிநொச்சியில் உயர் நீதி மன்றமொன்றும் ஒரு மாஜிஸ்திரேட் நீதி மன்றமும் அமைக்கப்படும் அதேவேளை முல்லைத்தீவில் ஒரு மாஜிஸ்திரேட் நீதி மன்றம் அமைக்கப்படும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இப்போது இப்பிரதேசத்தில் எழும் பிணக்குகள் வவுனியாவிலுள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்ளிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துபோது பொது மக்கள் புலிகளின் நீதி மன்றங்களை நாடிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செயலாளரை படுகொலை செய்ய தயார் நிலையில் இருந்த தற்கொலை அங்கி மீட்பு

nimal_madiwaka.jpgபாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது தற்கொலை தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட பெருமளவு வெடி பொருட்கள் நேற்று கொழும்பிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மோதரை, மட்டக்குளிய வீடமைப்புத் தொகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலிருந்து தேசிய புலனாய்வுப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

தற்கொலை குண்டுதாரி மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்தும் விதத்திலேயே புலிகளினால் திட்டம் தீட்டப்பட்டிருந்தது அம்பலத்துக்கு வந்துள்ளதுடன் அதற்கேற்ற வகையில் அதி சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மற்நும் தற்கொலை அங்கிகளை கொழும்புக்கு கடத்தியிருப்பதாகவும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மெதிவக்க சுட்டிக் காட்டினார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாகன அணிவகுப்பை இலக்கு வைத்தே இத்தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது பாதுகாப்புச் செயலாளர் காயங்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவரை எடுத்துச் செல்வதற்காக தயார் நிலையிலிருக்கும் அம்பியுலன்ஸ் வண்டி மீதும் குண்டுத் தாக்குதலை நடத்தவும் புலிகள் ஏற்பாடுகளை முன்னெடுத் திருந்தமையும் அம்பலமாகியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். தற்கொலையங்கி உள்ளிட்ட அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்ட தையடுத்து அவ்வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கிருந்த பிரதான சந்தேக நபரான தற்கொலை குண்டுதாரியையும் மோட்டார் சைக்கிளையும் தேடி பொலிஸ் வலை விரித்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஒரு மாதகாலமாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மேற்கொண்டுவரும் தேடுதல்களை அடிப்படையாக வைத்தே பொலிஸாரினால் நேற்று இந்த வீடு முற்றுகையிடப்பட்டு மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து கிலோ நிறைகொண்ட தற்கொலையங்கி, இயந்திரத் துப்பாக்கி, அதற்குப் பயன் படுத்தப்படும் 125 ரவைகள், இரண்டு தோட்டா கேசுகள், 05 கிரனேற் கைக்குண்டுகள், 13 சயனைற் குப்பிகள், தற்கொலையங்கியில் பொருத்தும் 05 பற்றரிகள், ஒரு ரிமோட் கருவி, பல இடங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய 02 ரிமோட் கருவிகள், 50 அடி நீளமான வயர் மற்றும் ஒரு டெட்டனேட்டர் ஆகியனவே நேற்று மட்டக் குளியிலுள்ள மேற்படி வீட்டின் அலுமாரிக்குள்ளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக விசேட பொலிஸ் குழு புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆண் தற்கொலை குண்டுதாரியினால் நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் பாதுகாப்புச் செயலாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். இதன்போது இருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஈரான் உதவி!

iranflags.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் பாவனைக்காக ஈரானிய அரசாங்கம் 500 கூடாரங்களையும் 500 பாய்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் எம்.எம்.ஸ{ஹைர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்தக் கூடாரங்களும் பாய்களும் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்து வரும் சில தினங்களில் விமானமூலம் இந்த உதவிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.