எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

முதல்வர்கள் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவும் முடிவு

மாகாண சபைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதிகளைப் பெற்றுக் கொள்வதுடன் சில விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். மாகாண முதலமைச்சர்களின் 26வது மாநாடு நேற்று (19) ஆம் திகதி ஹபரன விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாநாடு நடைபெற்ற ஹோட்டல் முன்பாக ஏழு மாகாண சபைகளின் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. மாகாண சபையின் பிரதான செயலாளர்கள், திறைசேரி மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

விவசாயத்துறை, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவ் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்குத் தேவையான கூடுதலான நிதியைப் பெறுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக 13ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அமைச்சின்அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் “நாம் பயிர் வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம்” தேசிய வேலைத் திட்டம் ஊடாக விவசாயிகளின் பொருளாதார துறையை முன்னேற்றுவதற்கு மாகாண சபைகள் முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

சமூக சேவைத் திணைக்களத்தின் மூலம் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கும் மாகாண சபையின் கீழுள்ள குளங்களை புனரமைப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மாகாண சபையின் கீழுள்ள வீதிகள் புனரமைப்பில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான ஆயுர்வேத மத் திய மருந்தகங்களை மீள வடமத்திய மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனோடு பேசியுள்ள தாகவும் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். இறுதியாக 27 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டை வடமேல் மகாணத்தில் நடத்துவதற்கும் அதன் தலைவர் பொறுப்பை மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்கவுக்கு வழங்கவும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை தமிழர்களை காக்க கோரி பல நகரங்களில் கிறிஸ்தவர் ஊர்வலம்

200909.jpgஇலங்கையில் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை தங்கள் பூர்வீக இடங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 17 மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் பேரவை சார்பில் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது.

13வது திருத்த சட்டத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இருந்தபோதும் பல்வேறு தடைகள்

cheif_ministers_meeting.pngஅரசியல மைப்பின் 13வது திருத்த சட்டத் தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதி காரங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அவற்றை செயற்படுத்தும் போது பல்வேறு தடைகள் ஏற்பட்டு உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார்.

மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நேற்று (19 ஆம் திகதி) ஹபரண விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, கிழக்கு ஆகிய ஏழு மாகாண சபைகளினதும் முதல மைச்சர்கள் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து உரைநிகழ்த்திய மாகாண முதலமைச்சர்: மாகாண சபைகள் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனாலும் மத்திய அரசாங்கத்தினால் அதற்குத் தேவையான நிதி வழங்கப்படா மையினால் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது. இவ்விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்ல ப்பட்டுள்ளது. அவற்றைத் தீர்ப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி சம்பந்தமான அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. காணி சம்பந்தமான அதிகார ங்களில் சில பிரச்சினைகள் உள்ளன. பொலிஸ் அதிகாரம் பற்றி தற்போது எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு: 28 கிராமங்களில் 1000 குடும்பங்கள் இன்று மீள்குடியமர்வு

101009displacedidps.gifவவுனியாவில் இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களுள் ஆயிரம் குடும்பங்கள் இன்று (20) தமது சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்படுகின்றன. இதேவேளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 25ம் திகதி முன்பதாக சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக இனங்காணப்பட்ட 35 கிராமங்களில், 28 கிராமங்களுக்கே ஆயிரம் குடும்பங்கள் இன்று அனுப்பிவைக்கப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் நாலாயிரம் பேரை சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நிகழ்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தலைமையில் வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்களென அரச அதிபர் தெரிவித்தார்.

வவுனியாவில் பல்வேறு கிராமங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து உறவினர்களின் இல்லங்களிலும், வேறு இடங்களிலும் தங்கியுள்ளவர்களே இன்று தமது சொந்தக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக அரச அதிபர் திருமதி சார்ன்ஸ் தெரிவித்துள்ளார். சொந்த இடம் திரும்புவோருக்கு, அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் உலருணவுப் பொதிகளை வழங்குகின்றது. மக்கள் மீளக் குடியமர்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் நாளை (21) திங்கட்கிழமை திறந்துவைக்கப்படுகின்றது. இதுவரை காலம் வவுனியாவில் இயங்கிய இந்த அலுவலகம் தற்போது உரிய இடத்தில் இயங்கவிருக்கின்றது.

இதற்கான பாதுகாப்பு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் எதிர்வரும் 25ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு அனுமதி நாளை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் வவுனியாவிலிருந்து காலை கிளிநொச்சி சென்று மாலையில் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு வார காலத்திற்குள் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை நாடுகளுக்கு உதவ 403 டன் தங்கத்தை விற்கும் ஐஎம்எப்!

19-gold-bars.jpgஏழை நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்காக தன்னிடம் உள்ள தங்க இருப்பிலிருந்து 403 டன்னை விற்கிறது சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப்.  இதன் மூலம் 13 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டு, அது ஏழை நாடுகளுக்குப் பிரித்து அளிக்கப்படும். ஐஎம்எப்பின் இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை அதன் செயற்குழு வழங்கியுள்ளது.

ஏற்கெனவே ஜி 20 உச்சி மாநாட்டின் போது, ஐஎம்எப்பிடமுள்ள தங்க இருப்பை விற்று நிதி ஆதாரத்தைப் பெருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில் இப்போது தங்கத்தை விற்பனை செய்து, அதன் மூலம் திரளும் தொகையை ஏழை மற்றும் வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வசதியை மேம்படுத்த கடனாகத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று வாஷிங்டனில் நடந்தது. அதில் கை இருப்பில் உள்ள தங்கத்தில் 403 டன் தங்கத்தை விற்பதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 186 உறுப்பு நாடுகளில் 85 சதவீத நாடுகள் இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. மேலும் கடன் வாங்கிய சில நாடுகள் வட்டி தொகை செலுத்த இயலவில்லை என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த வட்டி தொகையை சர்வதேச நிதிக்கழகம் ரத்து செய்வதாக ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் தெரிவித்தார்.

ஐஎம்எப்பிடம் தற்போது 3217 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது!

மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் வாக்குறுதி கூர்ந்து கவனிக்கப்படும் – ஐ.நா

170909-pascoe.jpgஇலங்கையின் வடக்கே யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டு கொழும்பு திரும்பிய அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோவிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்த அகதிகளில் எழுபது சதவீதம் பேர் வரும் நவம்பர் மாதத்துக்குள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், மீதமுள்ளவர்கள் வரும் ஜனவரி மாத முடிவிற்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதிகள் காப்பாற்றப்படுகிறதா என்பதை ஐ.நா. கூர்ந்து கவனிக்கும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.மன்ற துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கூறியுள்ளார். மேலும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் எவரும் முகாம்களுக்குள் ஒளிந்திருக்கவில்லை என்று உறுதிசெய்வதை இலங்கை அரசாங்கம் விரும்புகிறது என்றாலும்கூட முடிந்த அளவுக்கு சீக்கிரமாக மக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுவது முக்கியம் என்று அவர் கூறினார்.

அத்தோடு இலங்கையில் ஐ.நா. தனது மனிதாபிமான உதவிப் பணிகளை நிறுத்திக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ, இலங்கை தனது கடந்த காலத்துக்கு பதில் சொல்லா விட்டால் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய அமைதி அங்கு ஏற்படுவது சிரமம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆஸ்ட்ரேலியா மீண்டும் முதலிடம்

999cri.jpgடெஸ்ட் போட்டித் தரவரிசையில் முதலிடத்தை இழந்த ஆஸ்ட்ரேலியா தற்போது ஒரு நாள் கிரிக்கெட் ஐ.சி.சி. தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் இந்தியா 3-வது இடத்திற்கு கீழிறங்கியது. தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.

நாட்டிங்காமில் நடைபெற்ற 6-வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்காவும், ஆஸ்ட்ரேலியாவும் புள்ளிகள் அளவில் 127 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளதால் 7-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியாவை வெற்றி பெறாமல் செய்து விட்டால் ஆஸ்ட்ரேலியா மீண்டும் 3-வது இடத்திற்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.

தரவரிசை விவரம்:

ஆஸ்ட்ரேலியா – 127 புள்ளிகள்
தென் ஆப்பிரிக்கா – 127 புள்ளிகள்
இந்தியா – 126 புள்ளிகள்
பாகிஸ்தான் – 109 புள்ளிகள்
இலங்கை – 108 புள்ளிகள்
நியூஸீலாந்து – 105 புள்ளிகள்
இங்கிலாந்து – 102 புள்ளிகள்
வெஸ்ட் இண்டீச் – 78 புள்ளிகள்
வங்கதேசம் – 55 புள்ளிகள்
ஜிம்பாப்வே – 26 புள்ளிகள்.

நாளை நோன்புப் பெருநாள்

ramadan-mosque.jpgஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்படாததால் புனித ரமழானை 30ஆக பூர்த்திசெய்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளை நாளை திங்கட்கிழமை கொண்டாடுவது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இணைந்து கூட்டாக அறிவித்துள்ளது.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று (19) மஃரிப் தொழுகையைத் தொட ர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலை வரும், மதீனதுல் இல்ம் அரபுக் கல்லூரியின் அதிபரு மான மெளலவி உஸ்தாத் ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலை வர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் கூட்டாக இணைந்து ஏகமனதாக உத்தியோகபூர்வமாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, கலீபதுஷ் ஷாஸ¤லி மெளலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி), மெளலவி அரூஸ் உட்பட உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள் ளிவாசல் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா, முஸ் லிம் சமய கலாசார திணைக்களம், ஸாவியாக்கள், தக்கி யாக்கள், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய ஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்

flood1111.jpgஎதிர் வரும் நாட்களில் இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென இலங்கை வளிமண்டலவியல்  திணைக்களத்தின் பணிப்பாளர் ஜீ.பி. சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளமக்களிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மண்சரிவு, வெள்ளம், இடி மின்னல் மற்றும் சுழற்காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் நாட்களில் தாழமுக்க நிலை காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் காரணமாக, பொதுமக்கள் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டி

190909images-sports-games.jpgஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளை இம்மாதம் 23ம் திகதி தொடக்கம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வியமைச்சின் உடற்கல்வி விளையாட்டுப் பிரிவி மேற் கொண்டுள்ளது.

கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் தொடர்ச்சியாக 5 தினங்கள் நடத்தப்படவுள்ள இந்த போட்டி நிகழ்ச்சிகள் 27ம் திகதி நிறைவடைய உள்ளதாக உடற் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எல்.கே. ஜயவீர அறிவித்துள்ளார்.

மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.

போட்டியாளர்கள் அனைவரும் தமது வயது மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையையும், பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். மாகாண மட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டியாளர்களை தவிர பட்டியலில் வேறு எவரையும் மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

போட்டியாளர்களின் பெயர் மாற்றம் மற்றும் நிகழ்ச்சி மாற்றம் செய்ய வேண்டுமாயின் முன்கூட்டியே தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.