எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இஸ்ரேல் மீது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பாலத்தீனர்களின் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் தொடர்ச்சியாக ஈடுபடுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இஸ்ரேலிய கொள்கையை மிகவும் கடுமையாக விமர்சிக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு அறிக்கை, சுமூகமான வாழ்க்கையை வாழ்வது என்பது பல பாலத்தீனர்களுக்கு அங்கு முடியாத காரியமாகிவிட்டிருக்கிறது என்று கூறுகிறது.

டொயோட்டா மேலும் சில கார்களை திரும்பப் பெற ஆலோசனை

toyota-corolla.jpgஜப்பானிய டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனம் தமது கார்களில் சிலவற்றை மீளப்பெறும் மற்றுமொரு நடவடிக்கை குறித்து தாம் கவனம் செலுத்துவதாக கூறுகிறது.

இந்தத்தடவை தமது பிரபலமான டொயோட்டா கொரலா கார்களில் பவர் ஸ்டியரிங்குகளில் ஏற்பட்ட பிரச்சினைகளாலேயே கார்கள் திரும்பப்பெறப்படவுள்ளன.

என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்ற விபரம் இன்னமும் தெளிவாகவில்லை என்று கூறியுள்ள ஒரு மூத்த டொயோட்டா அதிகாரி, அவை குறித்து நூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகளே வந்துள்ளதாகவும் கூறுகிறார்.

தமிழ் மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எதற்கும் விலைபோக முடியாத கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்களே தேவை.- முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்

அரசியலில் இறங்கும் உத்தேசம் எதுவும் தனக்கு இல்லையென்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் புதுமுகங்களைக் களமிறக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாகவும் அதில் நீதியரசர் விக்னேஸ்வரன் , பேராசிரியர் சி.கே.சிற்றம்பலம் மற்றும் யாழ்.மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் அடங்கியிருப்பதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பாக தற்போது தமிழகத்தில் இருக்கும் முன்னாள் நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் சார்பிலான பொது வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு தன்னிடம் கேட்கப்பட்டதைப் போன்றே பொதுத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்வருமாறு கேட்கப்பட்டதாகவும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடும் உத்தேசம் தனக்கு இல்லையென்றும் திட்டவட்டமாகப் பதிலளித்துவிட்டதாகவும் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுதாபிகளான முக்கியஸ்தர்கள் சிலர் தன்னை அணுகி தேர்தலில் போட்டியிட முன்வருமாறு கேட்டபோது அவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய அளவுகோல் குறித்து சில ஆலோசனைகளை முன்வைத்ததாகக் கூறிய விக்னேஸ்வரன் “பெரும் இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எதற்கும் விலைபோக முடியாத கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்களே தேவை. அதனால், அத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட கற்றறிந்த பிரமுகர்களையே வேட்பாளர்களாக தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது: குற்றத் தடுப்புப் பிரிவினர்

sarath.jpgஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இருந்து வாக்கு மூலத்தினை பதிவு செய்துள்ளதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் கடமையாற்றிய வேளை 4 ஆயுதக் கொள்வனவுகளில் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்தே குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு மோசடி தொடர்பான வழக்கினை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் லங்கா ஜெரத்ன நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இருந்து கடந்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்ததாகத் தெரிவித்த குற்றத்தடுப்புப் பிரிவினர்,பிரிடிஷ் போர்னியோ டிபன்ஸ் கம்பனி மற்றும் ஹய் கோப் கம்பனிகள் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் 4 ஆயுதக் கொள்வனவுகளின் போதும் தாம் முறையான விதிமுறைகளை பின்பற்றியுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா வாக்குமூலத்தல் தெரிவித்ததாக குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளருக்கு அனுமதி?

electionவாக் கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கும் படி தேர்தல் ஆணையாளரிடம் கோர பெப்ரல் அமைப்பும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையமும் தீர்மானித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளருடன் அடுத்துவரும் தினங்களில் கலந்துரையாடவிருப்பதாக அந்த அமைப்பு க்களின் முக்கியஸ்தர்கள் நேற்றுக் கூறினர். எமது இக்கோரிக்கைக்குத் தேர்தல் ஆணையாளர் திருப்திகரமான பதிலை அளிப்பார் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையாளர் இவ்விரு அமைப்புக்களுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கி இருப்பது தெரிந்ததே. இதேநேரம் பெப்ரல் அமை ப்பு நாளை மறுதினம் சனிக்கிழமை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

வடக்கு, கிழக்கில் தொ. நு. கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் – கொரிய வங்கி 9 கோடி டொலர் கடனுதவி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் அமைப்பதற்காக கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி 9 கோடி அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள் ளதாக தொழில் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு தெரிவித்தது.

இந்தத் கடனுதவியினூடாக கல்குடா, மன்னார் ஆகிய இடங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதோடு திருகோணமலை, வவுனியா, சேருநுவர ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

மேற்படி கடனுதவியை பெறுவது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, வடக்கு கிழக்கில் புதிதாக பல தொழில் நுட்பக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான இடங்களை அடையாளங்கண்டு சாத்தியக் கூற்று அறிக்கை தயாரிப்பதற்காக கொரியாவில் இருந்து குழுவொன்று விரைவில் இலங்கை வர உள்ளதாகவும் அமைச்சு கூறியது. மோதல் காரணமாக வடக்கு, கிழக்கில் இருந்த தொழில் பயிற்சி நிலையங்கள் சேதமாகின.

தேர்தல், சம்பளம் பற்றி சிந்திக்காது நாட்டு நலனை கருத்தில் கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

mahindaதேர்தல் மற்றும் சம்பளம் பற்றிச் சிந்திக்காது நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனைக் கருத்திற் கொண்டு சிறந்த சேவையாற்றுவதற்கு அரசியல் தலைவர்களும் அரச அதிகாரிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகள் என்ற வகையில் தமக்கு படைக்கப்பட்ட பொறுப்புக்களை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

குறைந்த வசதியுடைய வீட்டுத் தொகுதிகள், சேரிப்புற வீடுகள் மற்றும் தோட்டப்புற வீடுகளை அபிவிருத்தி செய்யும் ‘நகரைக் கட்டியெழுப்புவோம்’ கருத்திட்டத்தின் முதற் கட்டக் கலந்துரையாடல் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நகரை அண்டிய சேரிப்புற வீடுகள், குறைந்த வசதிகளைக் கொண்ட வீட்டுத் தொகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.

நகரைக் கட்டியெழுப்புவோம் எனும் இத்துரித அபிவிருத்தி செயற்றிட்டம் எதிர்வரும் 21ம் திகதி சுபவேளையில் கொழும்பு நகரைக் கேந்திரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன் முதற் கட்ட நடவடிக்கையாக கொழும்பு நகரை அண்டிய தோட்டங்கள் மற்றும் குறைந்த வசதிகளையுடைய வீட்டு தொகுதிகளுக்கான புனரமைப்பு இடம்பெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 354 வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

குடிநீர், குளியல் வசதிகள், கழிவுப் பொருட்கள் அகற்றல், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் இதனூடாகப் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் இத்திட்டத்துக்குச் சமகாலத்தில் கொழும்பு நகரை அண்டிய பிரதேசங்களின் பாதைகளைத் திருத்தி பராமரித்தல், மாடி வீடுகளின் பராமரிப்பு, நகரின் அடிப்படை வசதிகளை யும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன.

கொழும்பு நகரைக் கேந்திரமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தும் இச் செயற்திட்டத்தை 5 வார காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார். நேற்றைய இந்நிகழ்வில் தேசநிர்மாண அமைச்சின் செயலாளர், மின்வலு எரி சக்தி அமைச்சின் செயலாளர் உட்பட நகர அபிவிருத்தி-நீர்வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மாத்தளையில் சத்துணவு நஞ்சாகிய விவகாரம்: ஒப்பந்தக்காரரும் மனைவியும் தலா ரூ. 2 இலட்சம் பிணையில் விடுதலை

மாத்தளையில் பாடசாலை மாணவர்களுக்கு வங்கிய சத்துணவு நஞ்சாகி பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்தமை 129 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக சத்துணவு வழங்கிய ஒப்பந்தக்காரரையும், உதவியாளரான அவரது மனைவியையும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல மாத்தளை மாவட்ட மேலதிக நீதவான் சாலிய பெரேரா உத்தரவிட்டார்.

இதேவேளை மரணமான பாடசாலை மாணவி கல்வி கற்ற மாத்தளை புத்தகோஸ சிங்கள வித்தியாலய அதிபர் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர், உணவு ஒப்பந்தத்துக்கு சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் எதிர்வரும் மார்ச் 02 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யும் படியும் நீதவான் உத்தர விட்டார்.

மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ வித்தியாலம் தொம்பவெல மற்றும் கவட்டயாமுன கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு, வழங்கிய பகல் சத்து ணவு நஞ்சாகி புத்தகோஸ மாணவியின் மரணம், 129 மாணவர்கள் நோய்வாய்ப் பட்டமை சம்பந்தமான வழக்கு விசாரணை க்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாத்தளை மேலதிக நீதவான் சாலிய பெரேரா மேற்படி உத்தரவை விதித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு விடயத்தில் பாடசாலை நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறிய மேலதிக நீதவான் சாலிய பெரேரா பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மாணவர்களுக்கு வழங்குவதற்கு உகந்ததா என்பதை பரீட்சித்து உறுதிப்படுத்தியதன் பின் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நீதவான் கூறினார்.

கவனயீனமாக உணவு தயாரித்தமை, பரிமாற்றம் செய்தமை போன்ற குற்றச் சாட்டின் பேரில் குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் 298 ஆம் பிரிவின்படி மஹவெல பொலிஸாரினால் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் பீ. அறிக்கை சமர்பிக் கப்பட்டது. தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக் கப்பட்டோர் மாத்தளை தொம்பவயைச் சேர்ந்த ஜி.பீ.எம். சமர கோன் பண்டா, இந்திரலதா சமன் தி விஜேரத்ன ஆகிய கணவன்-மனைவி இருவருமாவர்.

மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிறிவர்தனாவின் பணிப்பின் பேரில் மாத்தளை மஹவெல பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் அதிரடிக்கு சனத் ஜயசூரிய ஆயத்தம்!

sanath-jayasuriya.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மாத்தறையில் பிரசித்தி பெற்ற மகாபோதி விகாரையில் இன்று முற்பகல் மதவழிபாடுகளில் ஈடுபட்டார்.

அங்கு பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு அவருக்கு பெரு வரவேற்பளித்தனர். அதன் பின்னர் அங்கு கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய,  மாத்தறை மக்களுக்கு சேவையாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  வேண்டுகோளின் பேரில்  அரசியலில் காலடி எடுத்து வைக்கிறேன். அரசியலில் பிரவேசித்தலும் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தமாட்டேன். மாத்தறை மக்களின் நன்மைக்காக பாடுபடுவேன். நாட்டுக்காக விளையாடுவதிலும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதிலும் மகிழ்வடைகிறேன் என்று கூறினார்.

அவுஸ்திரேலியா நிலக்கண்ணிகளை அகற்ற தன்னியக்க இயந்திரங்கள் அன்பளிப்பு!

aus.jpgஅவுஸ் திரேலிய அரசாங்கம் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள  சுமார் 250 மில்லியன் ரூபா பெறுமதியான் ஐந்து தன்னியக்க இயந்திரங்களை அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள்ää மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லோவேக்கியா நாட்டுத் தயாரிப்பான பொஸேனா 4ரக ஐந்து இயந்திரங்களும் நேற்று தேச நிர்மாண அமைச்சின் செயலாளரிடம் இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதுவர் கையளித்தார்.

கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கருகே கையளிப்பு வைபவம் நடைபெற்றது.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கää ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே உட்பட. ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்படää அவுஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர்.