ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பாலத்தீனர்களின் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் தொடர்ச்சியாக ஈடுபடுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
இஸ்ரேலிய கொள்கையை மிகவும் கடுமையாக விமர்சிக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு அறிக்கை, சுமூகமான வாழ்க்கையை வாழ்வது என்பது பல பாலத்தீனர்களுக்கு அங்கு முடியாத காரியமாகிவிட்டிருக்கிறது என்று கூறுகிறது.