எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

சிறுவர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை சட்ட ரீதியான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் முறையான வேலைத் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த வசதிகளுடன் உள்ள மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் வகையில் உள்ள சிறுவர் இல்லங்களை இனங்கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்  (09) அலரி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கூறிய பணிப்புரையை விடுத்தார்.

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நலன் பேணல் பற்றி கண்டறிய சகல சிறுவர் இல்லங்களின் அருகிலும் சிவில் கமிட்டியொன்றை நியமிப்பதன் அவசியம் பற்றியும் அவ்வாறான கமிட்டியில் கிராமப்புற விஹாரையின் தேரர், பொலிஸ் அதிகாரி மற்றும் பிரதேச அரச அதிகாரியொருவரும் உள்ளடங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

வெளிநாடு செல்லும் தாய்மாரின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் தடுப்புக் காவலில் உள்ள நிலையில் அவர்களது பிள்ளைகளின் மன நிலையை கட்டியெழுப்புவதற்கான விசேட திட்டங்களை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளைப் பணித்தார்.

அதேவேளை பெண்கள் எவ்வித இம்சையும் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண்களை தைரியமூட்டும் மற்றும் அவர்களது நலன் பேணுவது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ள தாகவும் குறிப்பிட்டார். சமூகத்தில் தாய், மனைவி மற்றும் சகோதரி ஆகியோருக்கு உரிய இடத்தை வழங்குவதுடன் சிறுவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் அளிக்க வேண்டிய பொறுப்புகளை வழங்குவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அங்கு விளக்கினார்.

முன்பள்ளி சிறுவர்களுக்கு ஒரு குவளை பால் வழங்கும் திட்டத்தை செயற்படுத்துமாறும், பாடசாலை செல்லாத சிறுவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளில் சேர்க்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறும் சகல சர்வதேச பாடசாலைகளிலும் சரித்திரத்தை படிப்பிக்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார். அத்துடன், சிறுவர் குற்றவாளிகள் மற்றும் சத்தேகநபர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் தொடர்பான திட்டத்தை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேர்வின் சில்வா பதவி நீக்கம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் இடைநிறுத்தம்

mervyn.jpgகம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மேர்வின் சில்வா பிரதி அமைச்சுப் பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலர் விஜயானந்த ஹேரத் நேற்றுத் தெரிவித்தார்.

அத்துடன் மேர்வின் சில்வா எம். பியை ஸ்ரீல. சு. கட்சியிலிருந்தும் இடை நிறுத்துவதற்கு கட்சி நேற்று தீர்மானித்துள்ளது. ஸ்ரீல. சு. கட்சி அதிகாரிகள் குழுவினர் நேற்று இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

களனிப் பகுதி யில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவருடன் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கட்சி அதிகாரிகள் குழு நேற்று கூடி ஆராய்ந்தது. இக்கூட்டத்தின் முடிவிலேயே மேர்வின் சில்வா எம்.பியை கட்சி யிலிருந்து இடைநிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேர்வின் சில்வாவை பிரதி அமைச்சுப் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு முடிவு செய்ததாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்தார். களனி சமுர்த்தி உத்தியோத்தருடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக மேர்வின் சில்வா எம். பிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பமாகவுள்ளன.

பெருந்தெருக்கள் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்த மேர்வின் சில்வா எம். பி களனியில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டிப்போட்ட சம்பவ மொன்று கடந்த வாரம் நடைபெற்றது.  இதனடிப்படையிலேயே இவர் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் இடை நிறுத்தம் செய்யப்பட்டார்.

ஜீப் ஆற்றுக்குள் விழுந்து விபத்து; 3 பொலிஸார் பலி

கலவானை கொஸ்வத்த பகுதியில் நேற்று மாலை 6.30மணியளவில் பொலிஸ் ஜீப்பொன்று குக்குலேகங்க ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் கலவானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் கம்ஹேவா, சார்ஜன்ட் குணபால, பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிமானே ஆகியோரே உயிரிழந்துள்ளனர். கலவானை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் ஜீப் வண்டியில் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது வண்டி கலவானை கொஸ்வத்தையிலுள்ள பள்ளத்திலிருந்து குடைசாய்ந்து ஆறு ஒன்றினுள் விழுந்ததிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: – நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களால் வெற்றி

india.jpgஇலங்கை – இந்தியா – நியூசி லாந்து ஆகிய அணிகளுக்கிடையி லான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நேற்று இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையே தம்புள்ளயில் நடைபெற்ற முதலா வது போட்டியில் நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசி லாந்து அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ரொஸ் டெய்லர் 95 ஓட்டங்களையும் ஸ்கொட் ஸ்டை ரிஸ் 89 ஓட்டங்களையும் நியூசி லாந்து அணிக்கு பெற்றுக் கொடுத்த னர். பந்து வீச்சில் அஸிஸ் நெஹ்ரா 4 விக்கெட்டுகளையும், பிரவீன் குமார் 3 விக்கெட்டுகளையும் பெற்ற னர். பதிலளித்து ஆடிய இந்திய அணி 29.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ரவீந்திர ஜடேஜா 20 ஓட்டங்க ளையும், விரேந்தர் சேவாக் 19 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் டெரல் டஃபி 3 விக்கெட்டுகளையும், கைல் மில்ஸ், ஜேக்கப் ஓராம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பெற் றனர்.

யாழ். குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்களின் தொகை அதிகரிப்பு!

யாழ்.குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்களின் தொகை திடீரென அதிகரித்துள்ளது. தெருக்களிலும் ஆலய சுற்றாடல்களிலும், பேருந்துகளிலும் இவர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். தென்பகுதிகளிலிருந்தும் பிச்சைக்காரர்கள்; தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பலர் வன்னி யுத்தத்தில் ஏற்பட்ட காயங்ளைக் காட்டி பொதுமக்களிடம் பிச்சை கேட்கின்றமையiயும் அவதானிக்க முடிகின்றது.  முன்னர் யாழ். குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்கள் குறைவாகவே காணப்பட்டனர். தற்போது யுத்தம் முடிவடைந்து பாதைகள் திறக்கப்பட்ட பின்னர் இவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

யாழ். பேருந்து நிலையத்தில் பிச்சை எடுப்பவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கைகயில் ஈடுபட்டுள்ள போதும் பிச்சைக்காரர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்றமை குறிப்படத்தக்கது.

வடமராட்சிக் கிழக்கு மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என யாழ். அரச அதிபர் தெரிவிப்பு!

imalda.jpgவடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் பொது வடமாராட்சிக்கிழக்கு மக்களும் இடம்பெயர்ந்தனர். அவாகள் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி மக்களின் பிரச்சினைகளையும் அவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும் தான் உணர்ந்துள்ளதாகவும் அம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சிடம் ஏற்கனவே வடமாரட்சிக்கிழக்க மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை

dm.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

மேற்படி மாகாணங்களிலுள்ள தொல்பொருட்கள் கொள்ளையி டப்படுவதுடன் சம்பந்தப்பட்ட விகாரைகள், மத வழிபாட்டுத் தலங்களின் தேரர்கள் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி வருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைத் துள்ளன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்தே பிரதமர் டி.எம்.ஜயரத்ன 2600 வது “சம்புத்தத்வ” ஏற்பாட்டுக்குழுவினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள விஹாரைகள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் அபிவிருத்திக்குள்ளாக்கும் தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதுடன் அதணோடிணைந்ததாக தொல் பொருட்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர், இதன் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 289 பெளத்த விஹாரைகள் உள்ளதுடன் இதில் தொல் பொருட்கள் உள்ள இடங்களென 88 முக்கிய இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மக்களுக்குக் காணி பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளின் போது தொல்பொருள் பிரதேசங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து பிரபா கணேசன் வெளியேற 14 நாட்கள் காலக்கெடு

அரசாங்கத்திலிருந்து வெளியேறி மீண்டும் எதிரணியில் இடம்பெறுவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அரசாங்கத்திலிருந்து வெளியேறி மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் தலைவர் மனோ கணேசனின் ஒப்புதலுடன் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு அதிகாரபூர்வமாக எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரபா கணேசன் எம்.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த அரசாங்கம் பாராளுமன்றத்திலே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும்வகையில் வாக்களிப்பு உட்பட எந்தவித நடவடிக்கையிலும் பிரபா கணேசன் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தற்சமயம் பிரபா கணேசனின்  கட்சி அங்கத்துவம் ஜனநாயக மக்கள் முன்னணியினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தலைவர் மனோ கணேசனினால் பொதுச் செயலாளரின் தலைமையில் பத்து அரசியல் குழு உறுப்பினர்கள் அடங்கிய ஒழுக்காற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபா கணேசன் எம்.பி. தொடர்பிலான ஒழுக்காற்று குழுவில் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன், மாகாணசபை உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், முரளி ரகுநாதன், கங்கை வேணியன், ஏ.ஜெயபாலன், ஜோசப் ஜேகப், எப்.எம்.ஷியாம், வி.முரளிதரன், லே.பாரதிதாசன் மற்றும் எம்.ராஜ்குமார் ஆகியோர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரிகோண கிரிக்கெட் தொடர்; இந்தியா, நியுஸிலாந்து இன்று மோதல்

india.jpgஇந்திய அணி அடுத்து 3 நாடுகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்தப் போட்டி இன்று 10ந் திகதி தொடங்குகிறது. 28ம் திகதி வரை போட்டி நடைபெறுகிறது. 3வது நாடாக நியூசிலாந்து கலந்துகொள்கிறது.

இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். தொடக்க ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான டெண்டுல்கருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற டிராவிட், லட்சுமண், விஜய், அமித் மிஸ்ரா, முனாப் பட்டேல் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். ரவிந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், வீரட் கோக்லி, பிரவின் குமார், நெஹ்ரா, ரோஹித் சர்மா, திவாரி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். காயம் காரணமாக காம்பீர் 3 நாடுகள் போட்டியில் ஆடவில்லை.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றதால் இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது. ஷெவாக், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணிக்குரோஸ் டெய்லர் கப்டனாக பொறுப்பேற்றுள்ளார். முன்னணி துடுப்பாட்ட வீரர் ரைடர் கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.

பிற்பகல் 2.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகின்றது.

இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: டோனி (கப்டன்), ஷெவாக் (துணை கப்டன்), சுரேஷ் ரெய்னா, வீரட் கோக்லி, யுவராஜ்சிங், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவீந்தர ஜடேஜா, ஆர். அஸ்வின், திவாரி, ஆசிஷ் நெஹ்ரா, ஓஜா, இஷாந்த் சர்மா, பிரவீன்குமார், அபிமன்யூ மிதுன்.

நியூசிலாந்து: ரோஸ் டெய்லர் (கப்டன்), குப்தில், ஹொப்சின்ஸ், பீட்டர் இகரம், நாதன் மேக்குல்லம், ஜேக்கப் ஓரம், டபி, வாட்லிங், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜித்திதன் படேல், சவுத்தி, மில்ஸ் எல்லியட், மெக்காய.