வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் பொது வடமாராட்சிக்கிழக்கு மக்களும் இடம்பெயர்ந்தனர். அவாகள் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி மக்களின் பிரச்சினைகளையும் அவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும் தான் உணர்ந்துள்ளதாகவும் அம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சிடம் ஏற்கனவே வடமாரட்சிக்கிழக்க மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.