எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!!! – ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி : ரி சோதிலிங்கம்

Jan31_London_Protestவன்னியில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் அகப்பட்டு ஒருசிறிய பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையான மக்கள் தவிக்கும் இக்காலத்தில் இம் மக்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்த லண்டனில் ஒழுங்கு செய்ய்பட்டடுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTF) ஒழுங்கு செய்துள்ள போதிலும் இதில் தமிழ் மக்களின் தர்மீக போராட்டத்தை ஆதரிக்கும் பெரும்பாலான மக்களும் அமைப்புக்களும், இயக்கங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த காலங்களில் லண்டனில் நடைபெற்ற பல பொதுவான தமிழ்ரகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தமிழர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடும்படி கேட்டுக் கொண்டபோதும் இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் புலிகளின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களகவும் புலிகள் மட்டும் தனித்த ஏகபோக தலைமை என்ற அங்கீகாரம் கேட்கும் கூட்டங்களாகவே அமைந்திருந்தது. அப்படி ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் எந்தவித பலாபலனும் கிடைக்காமல் போனதும் புலம் பெயர்வாழ்வின் வரலாறாகிவிட்டதை நாம் மறந்துவிட முடியாது.

குறைந்தபட்சம் 40 பேர் கூடும் ஆர்ப்பாட்டங்களை BBC – ITV பெரிய செய்திகளாக்கி தேசிய தொலைக்காட்சில் வெளிப்படுத்தி கொடுக்கும் ஆதரவின் ஒரு துளியைக் கூட 50,000 தமிழ் மக்கள் பங்கேடுத்து நடாத்தும் போராட்டங்களுக்கு கொடுக்காததின் உண்மையை விளங்க முன்வர வேண்டும்.

இப்டியான ஆர்ப்பாட்டங்களில் ஒன்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக கடந்த ஆண்டு யூனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம். இதன் போது எல்லோரும் வருகை தாருங்கள், பழையதை மறவுங்கள், தமிழர்கள் ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொண்டு வாருங்கள் என்றெல்லாம் அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் நடந்த பல சம்பவங்களினால் அதன் பலாபலனை சரியாக வெளிக் கொணர முடியாது போனதும் நாம் தெரிந்து கொண்டதொன்றே. இப்படியான சம்பவங்களக்கு BTF தரும் விளக்கங்களும் வழமைபோல யாரோ வாறாங்கள், என்னவோ செய்யிறாங்கள் அதற்கும் எமக்கும் தொடர்பில்லை என்ற பொறுப்பற்ற பதிலாகும்.

ஏதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலம் அப்படியான சம்பவங்களை எதிர்பார்துள்ள போதிலும் தமது சுதந்திரமின்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிர்ப்பந்தத்திலிருந்து அம் மக்கள் வெளியே அனுமதிக்கும் படியான நிர்ப்பந்தத்தை அடக்குபவர்கள் மீது செலத்தும் நிகழ்வாகவும் அக்கோரிக்கையில் அம்மக்கள் வெற்றி கொள்ளும் படியாகவும் அமைய வேண்டும்.

போர்ச் சூழலில் வன்னி மக்கள் மிகக் குறைந்த பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையாக மிகசெறிவாக வாழ்வது மரணங்களையும் அதிகரிக்வே செய்யும். இந்த மக்களை விடுவிக்கக் கோருவதும் யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் மிகவும் முக்கியமான விடயம். இன்று வன்னியில் ஏற்ப்பட்டுள்ள மிக இக்கட்டான சூழநிலைகளைப் பயன்படுத்தி புலிகள் தமது ஏகபோக பிரதிதநிதித்துவம் பெறுவதற்கு இவற்றை பயன்படுத்தக் கூடாது. இந்த விடயத்தில் எல்லா தமிழர்க்கும் பொதுவானதாகச் செயற்படுவதாகக் கூறும் பிரிட்டிஸ் தமிழ் போரம் (BTF) இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த சில நாட்களாக வன்னி மக்களுக்காக நடைபெற்ற இப்படியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இந்த மக்களின் பிரதிபலிப்புக்கு மேலாக அந்த அந்த ஆர்ப்பாட்டங்களில் பறக்கவிடப்படும் புலிகளின் கொடிகளும் படங்களும் புலிகளுக்கு அங்கீகாரம் தேடும் மற்றும் புலிகளே  ஏகபோக பிரதிநிதித்துவம் பெறும் நிகழ்வாக நடைபெறுவது அவதானிக்கப்படுகிறது. வன்னி மக்களின் பரிதாபகரமான நிலையில் அவர்களின் பரிதாபத்தில் அவர்களின் துன்பத்தில் அவர்களின் உதவிகளற்ற மரண அனுதாபத்தை புலிகளின் தேவைகளுக்கு பாவித்துவிடக் கூடாது. இப்படி செய்யப்படுவதன் மூலம் பெறவேண்டிய பலனை இந்த நிகழ்வு பெறாது போய்விடும்.

புலிகளுக்கு அங்கீகாரம் பெறும் அல்லது புலிகளுக்கு ஏகபோக பிரநிதித்துவம் பெற தனிப்பட்ட தனியான ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதே சாலப் பொருத்தமானதும் அதற்குரிய பலனை பெறக் கூடியதும் ஆகும்.

யாழ்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோதும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஏற்பபாடு செய்து விட்டு ஏற்பாட்டாளர்கள் புலிகளின் கொடியையும் படங்களையும் வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது நினைவிருக்கலாம். அந்த ஆர்பாட்டம் மிகச்சிறிய சலசலப்பைக் கூட ஜரோப்பிய நாடுகளில் ஏற்பபடுத்தாது போனதும் நினைவிருக்கலாம்.

கடந்த காலத்தில் போராட்ட அணுகு முறைகளிலும் மனிதாபிமான நடத்தைகளிலும் எற்ப்பட்ட தவறுகளே இன்று தமிழ் மக்களின் அரசியற் தீர்விற்கான பாதையற்றுப் போன காரணங்களாகும். இப்படியான தவறுகளை தொடர்ந்தும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.

நாளை (ஜனவரி 31) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அந்த வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருத்தல் வேண்டுமே ஒழிய புலிகளின் பிரதி நிதித்துவத்திற்கு அங்கீகாரம் கேட்பதாக இருக்கமாயின் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் நோக்கத்தை அடைய முடியாத போய்விடும். இதுவும் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் போலவே பிரயோசனம் அற்றதாகிவிடும்.

இந்த வாரம் வெளிவந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின், ஜக்கிய நாடுகளின் மன்றத்தின் அறிக்கைகள் யாவும் இதுவரையில் விடுதலைப் புலிகள் முக்கியமாகவும், இலங்கை அரசும் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருப்பதாகவும், காயமடைந்த குழந்தைகள், வயோதிபர்களின் மக்களின் வெளியேற்றத்திற்கு தடையாக இருப்பதாயும் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும் இந்த இருதரப்பினரையும் (விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும்) வன்னி மக்கள் மீதுள்ள தடைகளை நீக்க கோரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும் அம் மக்கள் பலன்பெற வேண்டும்.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு வன்னி மக்களை சுதந்திரமாக செயற்ப்பட புலிகளும் அரசும் அனுமதிக்க வேண்டும்.

.
ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்:

STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS
      MASS PROTEST MARCH
on
SATURDAY, 31st JANUARY 2009

in
Central London
Begins 1:00 PM at MILLBANK
(Nearest station Vauxhall or Pimlico)

இராணுவம் கூறும் “டபிள் கப்’ எமக்குச் சொந்தமானதல்ல

unicef_2301.jpgவிடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதாகக் கூறும், “டொயோட்டா டபிள் கப்’ வாகனம் தமக்கு சொந்தமானதல்ல என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்த வாகனம், யுனிசெப்புக்குச் சொந்தமானதென இராணுவம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளதாகவும் யுனிசெப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான டபிள் கப்வாகனம் எதனையும் யுனிசெப் தனது நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை. ஆயினும், கடந்த காலங்களில் அரச நிறுவனங்களான சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை, சமூக சேவைகள் நலன்புரி அமைச்சு என்பனவற்றுக்கு பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இந்த வாகனங்களை தாம் வழங்கியிருந்ததாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்கவென அரச நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடுமெனவும் அதற்காக தாம் மிகவும் வருத்தமடைவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

பென்டகனுக்கு பராக் ஒபாமா முதல் விஜயம்: ஈராக், ஆப்கானிஸ்தான் குறித்து சிக்கலான முடிவுகள்

obama-pandagan.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோன்பைடன், பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ், முப்படை தளபதி மைகல் முல்லான் ஆகியோர் இராணுவத் தலைமையகமான பெண்டகனில் முக்கிய கூட்டமொன்றில் பங்கேற்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான் சம்பந்தமாக மிகச் சிக்கலான முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக பராக் ஒபாமா பாதுகாப்பு தலை மையகமான பென்டகனுக்கு வந்தார்.

உப ஜனாதிபதி ஜோன் பைடன், பாதுகாப்பு அமைச்சர் றொபேர்ட் கேட்ஸ், முப்படைத் தளபதி மைக்கல் முல்லான் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒபாமா சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆப்கானிஸ்தான், ஈராக் விடயங்கள் பற்றியே முக்கிய கவனமெடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு மேலதிகப் படைகள் அனுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை மைக்கல் முல்லான் ஜனாதிபதி பராக் ஓபாமாவிடம் எடுத்து விளக்கினார். இதற்குத் தீர்வாக ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படைகளை மீளப்பெறுவதென்ற தீர்மானத்துக்கு பராக் ஒபாமா வந்தார். படைகளை 16 மாத காலத்துக்குள் ஈராக்கிலிருந்து வெளியேற்றுவது என்ற ஒபாமாவின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் கவனமாக உள்ளபோதும் அமெரிக்காவின் நலன்களை முன்னிறுத்தியே படை விலக்கல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஈராக்கிலிருந்து படைகளை முற்றாக வெளியேற்றுவதா அல்லது கட்டம் கட்டமாக அழைப்பதா என்பதில் இன்னும் முடிவில்லை. எனினும் மிகக் குறுகிய காலத்துள் படைகள் விலக்கப்படவுள்ளன. சுமார் 36 ஆயிரம் படைகள் விலக்கப்பட்டு அவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என ஒபாமாவின் பேச்சாளர் சொன்னார். உலகெங்கும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மனச்சோர்வடைந்துள்ளது எமக்குத் தெரியும். பொதுமக்கள் அமெரிக்க இராணுவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் படை விலகல்கள் அமையவுள்ளன.

அது எம்மையும் எமது தாய்நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பென பராக் ஒபாமா சொன்னார். அத்துடன் அமெரிக்காவின் அதிகாரங்களை நிலை நிறுத்தவும் அமெரிக்காவுக்கு களங்கம் உண்டுபண்ணவும் இராணுவப் பலமே தூண்டுகோலாகவுள்ளமை தனக்குத் தெரியும் எனவும் ஒபாமா சொன்னார்.

நேட்டோப் படைகளின் சில செயற்பாடுகளால் பொதுமக்கள் பலியாவதும், கற்பழிக்கப்படுவதும் அமெரிக்காவுக்கு கெட்ட பெயர் உண்டு பண்ணியதையும், சில நாடுகளில் படைகள் விலக்கப்பட்டால் தீவிரவாதம் பலமடைவதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.

ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகளின் தளபதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படை அதிகாரிகளுடன் பராக் ஒபாமா கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஈராக்கில் உள்ள படைகளை மிக விரைவாக வாபஸ் பெறவேண்டுமென்ற எண்ணத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா செயற்பட்டார்.

ஆனால் அங்குள்ள படை அதிகாரிகள் தற்போது வழங்கிய தகவல்களால் சற்று ஆழ்ந்து யோசனை செய்வதாக அவரது உரையிலிருந்து புலனாகின்றது. 2008ம் ஆண்டுடன் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென பக்தாத் – வாஷிங்டன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபோதும் பின்னர் 2011ம் ஆண்டுவரை பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் திருத்தப்பட்டமை தெரிந்ததே.  இதனால் ஈராக்கில் உள்ள படைகளை அவசரமாக வெளியேற்ற வேண்டுமென்ற அழுத்தத்தை ஒபாமா வழங்கவில்லை.

விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவலாம்

_bort.jpgஇலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடக்கும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள்  தமிழகத்திற்குள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், விடுதலை புலிகள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 11 மாவட்டங்களில் கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. ஏற்கனவே இங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.தற்போது உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து 24 மணி நேரமும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தோருக்கான போக்குவரத்தை ஐ.நா.வும் சர்வதேச அமைப்புகளும் செய்ய வேண்டும்- நடேசன் கோரிக்கை

hospital.jpgவன்னியில் இடம்பெறும் ஷெல் தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்களுக்கான போக்குவரத்துகளை ஒழுங்கு செய்ய ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடேசன் கூறியதாக “புதினம்’ இணையத்தளம் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களுக்கு ஐ.நா.மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களின் கருத்துகளை சுயாதீனமாக கேட்டறிய வேண்டும். வவுனியாவுக்கு செல்லும் நோயாளிகளை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. வவுனியாவுக்கு நேற்று வியாழக்கிழமை மட்டும் 200 நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துவ, போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்துகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா.உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். சர்வதேச மற்றும் ஐ.நா.விதிகளின் படி, படுகாயமடைந்த பொதுமக்களுக்கான சிகிச்சைகளுக்குரிய போக்குவரத்துகளை அரசு அனுமதிக்காமலிருப்பது பாரிய மீறலாகும்.

தங்களது குடும்பங்களுடன் இணைந்து கொள்ள விரும்புவோரையும் கூட படைத்தரப்பு அனுமதிக்க மறுத்து வருகிறது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற விரும்புவது தனிநபரின் உரிமை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் எந்த தடையும் விதிக்கவில்லை. சர்வதேச சமூகத்தினர் இதனையும் பொதுமக்களின் உரிமையையும் புரிந்துகொள்ள வேண்டும்.

படையினரின் கரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாத தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். பொதுமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

காயமடைந்தவர்களை அப்புறப்படுத்த ஐ.நா. மீண்டும் முயற்சி

redcrose2801.jpgவன்னியில் மோதலில் சிக்கி படுகாயமடைந்திருக்கும் 50 சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கான இரண்டாவது முயற்சிக்கு ஐ.நா திட்டமிடுவதாக பி.ரி.ஐ.செய்திகள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள் அனுமதியளித்தும் மோதல்கள் தணிவடைந்துமிருந்தால் வியாழக்கிழமை (நேற்று) நண்பகல் எல்லைப்பகுதியை தாண்டி வாகனங்கள் காயமடைந்தவர்களை ஏற்றிவரும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கிமூனின் பேச்சாளர் கூறியுள்ளார்.  அதன்பின் காயமடைந்தவர்கள் வவுனியாவிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்க முடியுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களை ஏற்றிவரச் சென்ற வாகனங்கள் புதுக்குடியிருப்பில் பல நாட்களாக நிற்கின்றன. சுமார் 2 1/2 இலட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பரின் பின் சுமார் 5 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணை அலுவலகம் கூறியுள்ளது.

யுத்தம் இடம்பெறும் பகுதிகளிலிருந்து 2 1/2 இலட்சம் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பான் கிமூன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிகளவு முன்னுரிமை கொடுக்குமாறு விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் அவர் அழைப்புவிடுத்திருந்தார்.

புலிகளின் சிறியரக நீர்மூழ்கிப் படகு கண்டுபிடிப்பு

sub-marine-01.jpgதற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் படையினர் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி,  மூன்று சிறிய தற்கொலைத் தாக்குதல் படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.  நேற்று வியாழக்கிழமை காலை உடையார்கட்டுக்குளம் பகுதியில் தேடுதல் நடத்திய விஷேடப் படையணி 3 இவற்றைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் படையினர் இதுவரை காலமும் நடத்திய தாக்குதலின் போது மேற்கொண்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இவையெனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  கட்டுமானப்பணிகள் பூர்த்தியடையாத நிலையிலுள்ள இந்த நீர்மூழ்கி 35 அடி நீளமானதும் கவசத் தகட்டினால் உருவாக்கப்பட்டு வருவதுமாகும்.

இதைவிட இந்த நீர்மூழ்கியைத் தாங்குவதற்கும் அதனை இடத்திற்கிடம் நகர்த்துவதற்குமான சக்கரங்கள் பூட்டப்பட்ட “ரெயிலர்’, கவசத்தகடுகள், ஒட்டுவேலைக்கு பயன்படுத்தப்படும் பாரிய சிலிண்டர்கள், ஒவ்வொன்றும் 20 அடி நீளமான 30 கவசத்தகடுகள், மிதித்துச் செல்லக்கூடிய வகையை சேர்ந்த மூன்று தற்கொலைத்தாக்குதல் படகுகள், டோறா வகையைச் சேர்ந்த வேகத்தாக்குதல் படகொன்றும் பெருமளவு நீரிறைக்கும் கருவிகள் (வாட்டர்பம்), இரு லொறிகள், இரு பஸ்கள், ஒரு ட்ரக், அதிசக்தி வாய்ந்த ஒரு ஜெனரேற்றர், வாட்டபவுசர், இழுவை வண்டி, ஒரு பவுசர், மண்ணெண்ணெய், இரு பெரிய லேத்மெசின்கள், சக்தி வாய்ந்த இரு கொம்புறசர்கள், ஓட்டும் இயந்திரம், ஒரு தொகுதி மின்சார மோட்டார்கள், மிகப்பெரியதொரு உயர்த்தி (ஜய்க்), பலபடகுகள், வாகன இயந்திரங்கள், மிகப்பெரியதொரு கட்டிடம், குளிரூட்டப்பட்ட சிறியரக வீடுகள் 15 என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் நீருக்கடியிலான ஆயுத வகைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்ட முதலாவது அமைப்பாக விடுதலைப் புலிகளே இருப்பது தெரியவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

sub-marine-03.jpg

sub-marine-04jpg.jpg

sub-marine-01.jpg

வன்னி மக்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல இரு தரப்பினரும் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவேண்டும் – ஜயலத் ஜயவர்த்தனா

hospital.jpgவன்னியில் தற்போது தொடர்ந்து இடம் பெற்றுவரும் கொடிய யுத்தத்தின் காரணமாக காயமடைபவர்களுக்கும் ஏனைய குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுக்கும் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கும் வைத்திய சேவைகளுக்கும் பெருந்தட்டுப்பாடு அப்பகுதியில் நிலவுகிறது. இந்நிலையில் அம்மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்லும் அம்புலன்ஸ் வண்டிகள் செல்லும் மார்க்கத்திற்கும் நோயாளர்களை எடுத்துச் செல்லும் மார்க்கத்திற்கும் விடுதலைபுலிகளும் அரசாங்கமும் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது. இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு இணங்க நடந்துகொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தற்போது நடைபெறும் இந்த யுத்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட சுதந்திரபுனம், வள்ளிபுரம், உடையார்கட்டு பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் காயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் பல வைத்தியசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதோடு, சேவையில் இருக்கும் சில வைத்தியசாலைகளின் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள், வைத்திய சேவைகள் உட்பட பல வைத்திய செயற்பாடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவசர நிலையிலுள்ள நோயாளர்களுக்குக் கூட உடனடியாக சிகிச்சையளிப்பதற்கான மருந்துப் பொருட்கள் கூட போதியளவு அவ்வைத்தியசாலைகளில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. எனவே வன்னியில் அல்லல்படும் அப்பாவி மக்களுக்கு அவசிய மருத்துவ சேவையை வழங்குவதற்கு பொறுப்பிலுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

வன்னி அப்பாவி மக்களின் இன்னல் அறிந்து விஷேடமாக இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகம் முன்வந்து அக்கறை செலுத்த வேண்டும். அவ்வாறில்லையாயின் வன்னியில் தற்போதுள்ள 4 இலட்சம் மக்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையே தோற்றுவிக்கப்படும். இவர்களுள் கர்ப்பிணித்தாய்மார்கள், சிறுவர்கள், முதியோர் போன்றோரும் உள்ளமை கவனிக்கவேண்டியது.

வன்னி மக்களுக்குத் தேவையான தட்டுப்பாட்டிலுள்ள மருந்துப் பொருட்களை அன்பளிப்புச் செய்ய விரும்பும் தனிநபரோ, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்போ விரும்பினால் தயவு கூர்ந்து என்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அவர்கள் 0112507799, 0114527297 என்ற தொலைபேசி இலக்கத்தினூடோ என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

152 மி.மீ. ரக ஆட்டிலறியும் படையினரால் மீட்பு

_army.jpgபுலிகள் பாவித்து வந்த 152 மி. மீ. ரக ஆட்டிலறி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். விசுவமடு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர். இந்த ஆட்டிலறியை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசுவமடு கிழக்கு பிரதேசத்தில் இந்த ஆட்டிலறியும் 70 வெற்று ரவைகளும் புதைக்கப்பட்டிருந்த நிலையிலே படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 58வது படைப் பிரிவின் 10வது கஜபா படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜனக உடுவோவிட்ட தலைமையிலான படைப் பிரிவினர் இந்த ஆட்டிலறியை கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்டிலறி மூலம் 17 கி. மீ. தொடக்கம் 24 கிலோ மீற்றர் தூரம்வரை தாக்குதல் நடத்த முடியும்.

சார்க் மின்வலு அமைச்சர்களின் தலைவராக ஜோன் செனவிரட்ன

senaviratn.jpgசார்க் நாடுகளின் மின்வலு எரிசக்தி அமைச்சர் குழுவின் தலைவராக அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். சார்க் நாடுகளின் மின்வலு எரிசக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது. சார்க் நாடுகளின் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மாநாட்டின்போதே அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கு இத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் சார்க் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நெருக்கடிகள் தொடர்பாக நேற்றைய இம் மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அதனை நிவர்த்திக்கும் வகையிலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

2008ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மின்சாரத்துறை சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் நேற்றும் விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாகவும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பரிமாறப்பட்டுள்ளன. நேற்றைய இம்மாநாட்டில் பூட்டான் பொருளாதாரத்துறை அமைச்சர் லியன்யோ காண்டுவெஞ்சுக், இந்திய மின்வலுத்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே, மாலைதீவு வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றாடல் அமைச்சர் மொகமட் அஸ்லாம், நேபாள நீர்வ ளத்துறை அமைச்சர் பிஷ்ணு பிரசாத்பாவுடே, ஆப்கானிஸ்தான் மின்வலு, நீர்வளத்துறை பிரதியமைச்சர் அஹமட் வலி ஷெர்ஷாய், பங்களாதேஷ் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ஹசன் மஹ்மூத், பாகிஸ்தான் பெற்றோலியத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜீ. ஏ. ஷப்ரி, சார்க் செயலாளர் நாயகம் கெண்ட் சர்மா, சார்க் செயலகப் பணிப்பாளர் ஹிலால் ரசாவில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.