எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலாவது விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

Magazine_Prisonநீண்டகாலமாக தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை பிணையிலாவது விடுதலை செய்யுமாறு அவர்களின் பெற்றோர் உறவினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போது பல்வேறு சந்தாப்பங்களில் நாட்டின் பல பாகங்களிலும் வைத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர். யுவதிகளின் விடுதலை குறித்து பல தடவைகள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் குடும்பத் தலைவர்களாகவிருப்பதால் சம்பத்தப்பட்ட குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில வாடுகின்றமையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பிணையிலாவது இவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கைதிகளின் பெற்றோர். உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிறந்து ஒரு நாளான குழந்தையொன்று வீதியோரத்தில் மீட்பு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்!

பிறந்து ஒருநாளான ஆண் குழந்தையொன்று பையினால் சுற்றப்பட்ட நிலையில் வீதியோர பற்றைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் செம்பியன் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் காலை குறிப்பிட்ட வீதி வழியாக சென்று கொண்டிருந்த கொக்குவில் வாசி ஒருவர் சாக்குப் பைக்குள்ளிருந்து குழந்தையொன்றின் அழுகுரலை அவதானித்துள்ளார். அதனை அவர் அயலவர்களிடம் கூறவே அயலவர்கள் வந்து அக்குழந்தையை மீட்டெடுத்தனர் உடல் நீலம் பாரித்த நிலையில், தெர்ப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் அக்குழந்தை காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பெற்ற தாய் பிறந்த குழந்தையை அனாதரவாக கைவிட்டு விட்டு தலைமறைவான சம்பவம் கிளிநொச்சி மருத்துவமனையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.  பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு விட்டு தாய் தலைமறைவு. கிளிநொச்சி மருத்துவமனையில் சம்பவம்! கடந்த 30 ஆண்டுகால யுத்தம் சமூகத்தின் விழுமியங்களையும் தனிமனித உள்ளுணர்வுகளையும் சிதைத்துள்ளதன் வெளிப்பாடாக இவ்வாறான சம்பவங்களைக் காண முடிகிறது.

குறிப்பிட்டக் குழந்தை யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் அக்குழந்தையின் தாயாரைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கில் புதிதாக 25 கரையோர பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

SL_Navyவடக்கு கிழக்கு கரையோரங்களில் 25 புதிய பாதுகாப்பு முகாம்களை அமைக்கவிருப்பதாக  இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கரையோர பாதுகாப்பிற்காக இ;ம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பாதுகாப்பிற்கு சிக்கலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் தடுப்பதற்காகவே இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் புலிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர்கள் ஆயதங்களுடன் வடக்கு கிழக்கு கடலூடாக ஊடுருவுவதைத் தடுக்க படையினர் ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் சேயலாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னர் படையினர் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகி சொர்ணலதா காலமானார்

suwarna-latha.jpgஇந்தியா வின் பிரபல பாடகி சொர்ணலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா (37)  சிகிச்சைப் பலனின்றி  சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா 25 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார்.

இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும். 1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் “மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய ‘எவனோ ஒருவன்”, பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய ‘உசிலம் பட்டி பெண்குட்டி’ காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கருத்தம்மா’ படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி….’ எனும் பாடாலை பாடியதற்காக சொர்ணலதா தேசிய விருதும் பெற்றார். இவர் ஏறத்தாழ 7500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

‘தளபதி’ பாடத்தில் ‘ராக்கம்மா கையைத் தட்டு…’, ‘சத்திரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘போவோமா ஊர்கோலம்’, ‘நீ எங்கே…’, ‘என் ராசவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…’, ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா…’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘எவனோ ஒருவன்…’, ‘பம்பாய்’ படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா…’, ‘இந்தியன்’ படத்தில் ‘மாயா மச்சிந்ரா…’ போன்றன. இவர் பாடிய பாடல்களுள் பிரபலமானவை.

நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு; அரச ஊழியருக்கு வாய்ப்பு அதிகரிப்பு

அரச சேவை தொழிற்சங்கங்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரச ஊழியர்களின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்பின் போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 20 வீதமான வாய்ப்பு 30 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 2007 ஜுலை மாதத்திற்கு முன் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இரண்டாவது மொழித்தேர்ச்சி நடைமுறையை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற இனிமேல் 30 வீதமான அரச ஊழியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இத்தகையவர்கள் அரச நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு தடவையே தோற்ற முடியும் என்ற நிலை மாறுவதுடன் இவர்கள் நான்கு தட வைகள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அலவி மெளலானாவின் தலைமையில் ஏழு தொழிற்சங்கச் கூட்ட மைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

ஐ. தே. க உட்பூசல்: ரணிலின் அழைப்புக்கு காத்திருக்கும் அதிருப்திக்குழுவின் 25 எம்.பிக்கள்

unp_logo.jpgகட்சித் தலைவரிடமிருந்து அழைப்பு வரும்வரையே காத்திருப்பதாக ஐ.தே.கவில் தனித்துச் செயற்பட தீர்மானித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவிக்கின்றது. இன்றோ நாளையோ அழைப்பு வரலாமென குழு நம்புவதுடன், எவ்வாறெனினும் கட்சித் தலைவருடனான பேச்சுவார்த்தையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க எம்.பி. தலதா அத்துகோரள தெரிவித்தார். கட்சித் தலைவருடனான பேச்சுவார்த் தைக்குப்பின் குழு கூடி கலந்துரையாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க வின் கட்சி உட்பூசலுக்கு ஒரு வாரகாலத்தில் தீர்வு காண தவறுமிடத்து அக்கட்சியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்துச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது அந்த 25 பேரும் தனியான குழுவாக அமரவும் எதிர்பார்த்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இது தொடர்பில் குருநாகல் மாவட்ட ஐ. தே.க எம்.பி. தயாசிறி ஜயசேகர பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். எனினும் இதற்கான தீர்க்கமான பதிலொன்றை ஐ. தே. க. தலைமை நேற்று வரை முன்வைக்கவில்லை.

இதேவேளை, சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளரெனத் தெரியவருகிறது. இதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவருகிறது. ஏற்கனவே 60 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 17 உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துவிட்டனர்.

இதனையடுத்து தற்போது 43 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் மேலும் 25 பேர் விலகினால் 18 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பர் என ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அதிருப்தி குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கட்சியை விட்டு தனித்து இயங்கப் போவதாக எச்சரித்துள்ளனர். தமது கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் சிறந்த நாடு இலங்கை – பிரிட்டிஷ் ஆய்வில் உலகில் 8வது இடம்

sri-lanka000.jpgதியாக மனப்பான்மையுடன் தான உணர்வும் புன்னகையும் கொண்ட மக்கள் வாழும் உலக நாடுகளில் இலங்கை எட்டாவது இடத்தில் உள்ளது. Charities aid foundation என்ற பிரிட்டிஷ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இருந்து இது தெரியவந்து ள்ளது.

தியாக மனப்பான்மையுடன் கூடிய மக்கள் வசிக்கும் உலக நாடுகளில் எட்டாம் இடத்தில் உள்ள இலங்கை ஆசிய நாடுகளிடையே முதலாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் உலகில் முதல் 18 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வருமாறு,

1. அவுஸ்திரேலியா, 1. நியூசிலாந்து 3. அயர்லாந்து, 3. கனடா, 5. சுவிட்சர்லாந்து, 5. அமெரிக்கா, 7. நெதர்லாந்து, 8. பிரிட்டன், 8. இலங்கை, 10. ஆஸ்திரியா, 11. லாகோஸ், 11. சியராலியோன், 13. மோல்டா, 14. ஐஸ்லாந்து, 14. துர்க்மெனிஸ்தான், 16. கயானா , 16. கட்டார், 18. ஹொங்கொங், 18. ஜெர்மனி, 18. டென்மார்க், 18. கினி.

மட்டு. மாவட்டத்தில் – ஒரு இலட்சத்து 40,000 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை

paddy-field.jpgஇலங்கையின் அதிக நெல் உற்பத்தியைத் தரும் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடை வெளிக்குப் பின்னர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருஷாங்கன் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கொக்கொட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி, செங்கலடி, கிரான், வாகரை ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமான விவசாயிகள் பெரும்போக நெற் செய்கையில் ஈடுபடவுள்ளனர். வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை 13 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் வெள்ளி மாலை நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருஷாங்கன், கிழ க்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் உட்பட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், விவசாய அதிகாரிகள், விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இம் மாவட்டத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் பெரும்போக நெற் செ ய்கை ஆரம்பமாகி எதிர்வரும் 2011ல் மார்ச் மாத இறுதிப் பகுதியில் அறுவடை நடைபெறும்.

ஒட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை

ஓட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கல் உற்பத்தித் துறையை துரிதமாக மேம்படுத்தும் பொருட்டு ஐம்பது தொழிலாளர்களை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானிலுள்ள செங்கல் உற்பத்தி சூளையை சென்று பார்வையிட்ட ஆளுநர் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.  தற்பொழுது, நாளொன்றுக்கு 8000 செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் 23 தொழிலாளர்களே சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவித்த அவர்,  தற்பொழுது இதன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் அதிகரிக்கத் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப் பிட்டார்.

செங்கல் உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்காக வட மாகாண சபை 20 இலட்சம் ரூபாவை ஏற்கனவே வழங்கியதாகத் தெரிவித்த அவர் தற்பொழுது இதன் செயற்பாடுகள் திருப்தியாகக் காணப்படுகிறதென்றார்.  வட மாகாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டும் பணிகளுக்கு இங்கிருந்தே செங்கற்களை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் மூலம், இந்தப் பிரதேச தொழிலாளர்கள் மேலும் நன்மையடைபீயவுள்ளனர் என்றும் சுட்டிக் காட்டினார். ஆளுநரின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் நேரடி கண் காணிப்பின் கீழ் கைத்தொழில் திணைக்களத்தின் கூட்டிணைப்பின் மூலம் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

1312 கைதிகள் நேற்று விடுதலை

0010.jpgசர்வதேச கைதிகள் தினத்தையொட்டி நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1312 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 37 பேர் பெண்களாவர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ. ஆர். த சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சிறிய குற்றங்கள் புரிந்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்தோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு ள்ளனரெனவும், நேற்றுக்காலை, பல்வேறு சிறைச்சாலைகளிலும் இக்கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட கைதிகள் தினத்தை சிறப்பாக்கும் வகையில் விசேட நிகழ்வொன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரத்னவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.