வடக்கு கிழக்கு கரையோரங்களில் 25 புதிய பாதுகாப்பு முகாம்களை அமைக்கவிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கரையோர பாதுகாப்பிற்காக இ;ம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
பாதுகாப்பிற்கு சிக்கலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் தடுப்பதற்காகவே இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் புலிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர்கள் ஆயதங்களுடன் வடக்கு கிழக்கு கடலூடாக ஊடுருவுவதைத் தடுக்க படையினர் ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் சேயலாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னர் படையினர் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.