சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

டாக்டர் மீரா மொகிதீன் கொலை : மட்டு. வைத்தியசாலை மருத்துவத்துறை இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

batti-pro.jpgவவுனியா பொது வைத்தியசாலையின் பெண்ணியல் நோய் நிபுணர் டாக்டர் மீரா மொகிதீன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று நண்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவர்களும் ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பாக சுமார் ஒருமணி நேரம் கூடிய மருத்துவர்கள், தாதிகள், துணை மருத்துவ துறையினர் உட்பட பல்வேறு தர ஊழியர்கள் தமது கண்டனத்தையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியிருந்தனர். அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

வைத்தியசாலையின் வழமை நிலை பாதிக்காத வகையில் இந்தப் போராட்டத்தில் மருத்துவர்களும் ஏனைய துறை சார்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

சிவிலியன்கள் வெளியேற்றப்பட்டமைக்கு ஐ.நா. செயலாளர் பாராட்டு!

ban_ki-moon_.jpgபுலிகளின் பிடியிலிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களைப் படையினர் வெளியேற்றியதை தான் பாராட்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. செயலாளரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பி வருவதைத் தடுப்பதற்கு புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வலயத்தினுள் நேற்று படையினர் உட்பிரவேசித்ததையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கு இறுதி கெடு விதிக்க கருணாநிதி கோரிக்கை

karunanithi.jpgஇலங் கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதிக் கெடு விதிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி மறுபடியும் ஒரு தந்தி அனுப்பியுள்ளார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அடித்தார்.

இந்த நிலையில் இன்று இன்னொரு தந்தி அடித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…

இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது. ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும்படி வற்புறுத்தி உள்ளனர்.

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும்படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும்படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

வவுனியா தாண்டிக்குளம் ரயில் சேவை நாளை மறுதினம்

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் சேவை இருபது வருட இடைவெளிக்குப் பின்னர் முதற்தடவையாக வவுனியாவுக்கு அப்பால் இடம்பெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக வவுனியாவைக் கடந்து தாண்டிக்குளம் வரை இந்த ரயில் சேவை நடைபெறவுள்ளது.

அதன்படி யாழ்தேவி ரயில் சேவை நாளை மறுதினம் முதல் தாண்டிக்குளம் வரை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவையை வெகுவிரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

புலிகள் 24 மணிநேர காலக்கெடுவை பயன்படுத்தவில்லை – படை நடவடிக்கைகள் தொடர்வதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

army-attack.jpgஎல்.ரீ.ரீ.ஈ. இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.

பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசாங்கம் வழங்கிய இந்த இறுதிச் சந்தர்ப்பத்தையும் புலிகள் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென இராணுவம் அறிவித்துள்ளது.

புதுமாத்தளன் மற்றும் அம்பலவான்பொக்கனை ஆகிய இடங்களில் தமது நிலையைப் பலப்படுத்தியுள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாக அதிகரிப்பு!

civiling_flee_vanni_01.pngபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட  பொது மக்களில் எண்ணிக்கை இப்போது 49058 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. இவர்களில் 41000 பேர்  இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடல் மார்க்கமாக வந்த ஏனையோரை கடற்படையினர் மீட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தமிழ் மக்கள் அரசியல் உரிமைகள் பெற புலித்தலைமையே தடையாக இருந்தது – அமைச்சர் டக்ளஸ் ஐ.நா. செயலாளருக்கு விளக்கம்

epdp-sec.jpgஇலங்கையில் நெடுங்காலமாக இருந்துவரும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவ்வாறான சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தாது,

அந்த முயற்சிகளுக்குத் தடையாக இருந்து வந்தது புலித்தலமையே என சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன ரீதியாகவும் வறுமை காரணமாகவும் உருவாகி வரும் பாகுபாடுகளை நீக்கும் முகமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற அமைச்சர் அங்கு ஐ.நா. செயலாளரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

புலிகளின் இத்தகைய செயற்பாடுகளால் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் துயரங்களையும் அழிவுகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா இங்கு மேலும் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்ää அவற்றுக்கான மேலதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆரதரவளிக்க வேண்டும் என ஐ.நா. செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அரசியலுரிமைப் பிரச்சினைக்குரிய தீர்வு நோக்கிய முயற்சிகளுக்கு எதிராகக் காணப்படும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படும் பட்சத்தில் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களை அழிவுகளிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மனித அழிவுகளும் அவலங்களும் அற்ற ஒரு சமாதான தேசத்தை உருவாக்கவும் அமைதி, அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்பனவற்றை எமது மக்கள் அனுபவித்து மகிழவும் உதவ வேண்டும் என இச்சந்திப்பின்போது ஐ.நா. செயலாளரிடம் அமைச்சர் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலிகளுக்கு சரணடைய வழங்கப்பட்ட காலக்கெடு இன்று நண்பகல் முடிவு -அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தகவல்

keheliya_rambukwella.jpgஎல்.ரீ. ரீ.ஈ.  இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் 24 மணி நேர காலக்கெடுவுக்குள் புலிகள் சரணடையத் தவறினால் அவர்களுக்கெதிராக படை வீரர்கள் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என பாதுகாப்பு தொடர்பான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளர்.

புலிகள் சரணடைய வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும் தப்பி வரும் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் வருண்காந்தி உறுதிமொழி

india-varun.jpgஉத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பாக போட்டியிடும் வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அவரை, இரண்டு வாரம் பரோலில்’ விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது.

அப்போது, வன்முறையை ஏற்படுத்தும் வகையில் எந்த அவதூறு கருத்துகளையும் பேச மாட்டேன்’ என உறுதி அளிக்குமாறு வருண் காந்தியை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

அதன்படி, வருண் காந்தி அடைக்கப்பட்டு இருந்த எடா சிறையின் சூப்பிரண்டிடம் ஒரு உறுதி மொழி பத்திரத்தை வழங்கினார். அந்த உறுதி மொழியின் நகலை சுப்ரீம் கோர்ட்டுக்கும் வழங்க வேண்டும். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி மொழி பத்திரத்தை வருண் காந்தி நேற்று அளித்தார்.

அந்த உறுதி மொழியில், மத கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசவோ, எழுதவோ மாட்டேன்’ என அவர் தெரிவித்து இருக்கிறார்.