புலிகளின் பிடியிலிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களைப் படையினர் வெளியேற்றியதை தான் பாராட்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. செயலாளரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பி வருவதைத் தடுப்பதற்கு புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வலயத்தினுள் நேற்று படையினர் உட்பிரவேசித்ததையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.