யாழ்தேவி ரயில் சேவை இருபது வருட இடைவெளிக்குப் பின்னர் முதற்தடவையாக வவுனியாவுக்கு அப்பால் இடம்பெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக வவுனியாவைக் கடந்து தாண்டிக்குளம் வரை இந்த ரயில் சேவை நடைபெறவுள்ளது.
அதன்படி யாழ்தேவி ரயில் சேவை நாளை மறுதினம் முதல் தாண்டிக்குளம் வரை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவையை வெகுவிரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.