சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

உலமா சபையின் செயற்பாடுகளில் அரசியல் சாயம் பூசவேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpgஉலமா சபையின் நடவடிக்கைகளில் அரசியல் சாயம் பூச முனைய வேண்டாமென மெளலவி நியாஸ் முஹம்மத் (கபூரி) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

அண்மையில் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இவ்வாறான விஜயங்கள் ஜனநாயக உரிமையாகும்.  அவரவரின் தெரிவுமாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பக்க சார்புகளின்றி நடுநிலைமையாய் சமய, சமயோசித வழியில் வழிநடத்த ப்படும் முஸ்லிம்களுக்கான ஒரு பொது ஸ்தாபனமாகும்.

இது இவ்வாறிருக்க சரத் பொன்சேகா வந்துசென்றதை சிலர் தவறாக விமர்சிக்கின்ற கதையும் அரசியலாக்க முனைகின்ற கதையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இது விடயத்தில் பிழையாக நடந்துகொண்டதாகவும் அதற்காக எதிரணி உலமா சபை ஒன்று உருவாகி உள்ளதாகவும் கதை ஏற்படுத்தி பிரசாரம் செய்வதும் ஒரு வகை அரசியல் இலாபம் ஈட்ட முன¨யும் காரியமாகும்.

உலமா சபை தலைமை பீடத்திற்கு ஜனாதிபதி அபேட்சகராக களமிறங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா வருகை பற்றி கட்சி உணர்வில் உந்தப்பட்டசிலரின் தனிப்பட்ட வித்தியாசமான கருத்துகளின்றி அது மேல் மட்டத்தில் வெளியான கருத்தல்ல. 16.12.2009ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்து இது விடயமாக உலமா சபையின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்திய போது ஜனாதிபதி புன்னகை பூத்தவராக ‘மெளலவி அவர்களே இதுவெல்லாம் யார் சொன்னகதை’ அப்படி நான் கருத்துக்கள் கொண்டவனுமல்ல இதற்கு எதிராக விமர்சனம் செய்பவனுமல்ல.

உலமா சபை என்பது உலமாக்களின் சமயத்துடன் இணைந்த ஒரு முஸ்லிம் மத ஸ்தாபனமாகும். அங்கு எவரும் வரலாம், வாழ்த்தும் பெறலாம். அவர்களுக்காக ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்த எனக்கு அவர்கள் நன்றி சொன்னதும் வாழ்த்து தெரிவித்ததும் எனக்கு நன்கு தெரியும். எனக்கும் அந்த உலமா சபை தலைமையகத்துக்குச் செல்ல ஆசைதான். பாதுகாப்பு நலன் கருதி நான் அங்கு செல்ல முடியவில்லை. உங்கள் மூலம் உலமா சபை உலமாக்களை எனது இல்லத்தில் சந்திக்கவும் நான் ஆவலுடன் இருக்கின்றேன்.

இது ஒரு பெரிய விவகாரமும் அல்ல. இதை எனது சார்பில் உலமா சபைக்கு அறிவிக்க தாங்களுக்கு அனுமதி தருகிறேன் என ஜனாதிபதி கூறியதை நினைவூட்டி உலமா சபையை பிரிக்க முனைகிறார்கள் என்ற பிரசாரங்களை விளங்கிக் கொள்வது நல்லது என கருதுகிறேன். எவருக்கும் அரசியல் செய்ய உரிமையுண்டு. ஆனால் உலமா சபையையும் உலமாக்களையும் அடகு வைக்காமல் கீழ்த்தரமாக விமர்சிக்காமல் அவரவரின் அரசியலைத் தொடரட்டும்.’ என அறிவுரை வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி கூறியதை நியாஸ் மெளலவி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புனித முஹர்ரம் மாத ஆரம்பம்

வியாழன் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் புனித முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை வியாழன் மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இம் மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ. ரஸா (மேமன் சங்கம்) முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜும்ஆ பள்ளி வாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள் ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ‘புனித ஸபர்’ மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் (புனித முஹர்ரம் 29) 16.01.2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை போராடி 3 ஓட்டங்களுக்குத் தோல்வி

dilshan.bmpஇந்தியா வுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3  ஓட்டங்களுக்குத் தோல்வி கண்டது.

முதலில் துடுப்பாடிய இந்தியா 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் எடுத்தது. ஷேவாக் 146 ஓட்டங்கள் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

அடுத்து துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்கள் எடுத்தது.  இதையடுத்து 3 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது

India 414/7 (50 ov)
Sri Lanka 411/8 (50.0 ov)
India won by 3 runs

Sri Lanka in India ODI Series – 1st ODI
ODI no. 2932 | 2009/10 season
Played at Madhavrao Scindia Cricket Ground, Rajkot

India innings (50 overs maximum) 
 V Sehwag  c Dilshan b Welegedara  146 
 SR Tendulkar  b Fernando  69 
 MS Dhoni*†  c Mathews b Fernando  72 
 SK Raina  c Jayasuriya b Kulasekara  16
 G Gambhir  c †Sangakkara b Kulasekara  11 
 Harbhajan Singh  c Kulasekara b Mathews  11 
 V Kohli  b Welegedara  27 
 RA Jadeja  not out  30  
 P Kumar  not out  5  
 Extras (b 5, lb 4, w 12, nb 6) 27     
      
Total (7 wickets; 50 overs) 414 (8.28 runs per over)
Did not bat Z Khan, A Nehra 
Fall of wickets1-153 (Tendulkar, 19.3 ov), 2-309 (Sehwag, 35.3 ov), 3-311 (Dhoni, 36.1 ov), 4-325 (Gambhir, 38.3 ov), 5-347 (Raina, 42.1 ov), 6-352 (Harbhajan Singh, 43.1 ov), 7-386 (Kohli, 47.2 ov) 
        
 Bowling O M R W Econ  
 KMDN Kulasekara 10 0 65 2
UWMBCA Welegedara 10 0 63 2
CRD Fernando 9 0 66 2 
 AD Mathews 7 0 60 1 
 ST Jayasuriya 7 0 76 0
 SHT Kandamby 5 0 49 0 
 TM Dilshan 2 0 26 0  
       
 Sri Lanka innings (target: 415 runs from 50 overs)
 WU Tharanga  st †Dhoni b Raina  67 
 TM Dilshan  b Harbhajan Singh  160 
 KC Sangakkara*†  c Jadeja b Kumar  90 
 ST Jayasuriya  st †Dhoni b Harbhajan Singh  5 
 DPMD Jayawardene  run out (Kohli/†Dhoni)  3 
 SHT Kandamby  run out (Tendulkar/Khan)  24 
 AD Mathews  c Tendulkar b Nehra  38 
 TT Samaraweera  run out (Raina/Kumar)  0
 KMDN Kulasekara  not out  2 
UWMBCA Welegedara  not out  1
 Extras (lb 7, w 13, nb 1) 21     

Total (8 wickets; 50 overs) 411 (8.22 runs per over)
Did not bat CRD Fernando 
Fall of wickets1-188 (Tharanga, 23.6 ov), 2-316 (Sangakkara, 36.3 ov), 3-328 (Jayasuriya, 37.3 ov), 4-339 (Dilshan, 39.1 ov), 5-345 (Jayawardene, 40.2 ov), 6-401 (Kandamby, 48.2 ov), 7-404 (Samaraweera, 48.6 ov), 8-409 (Mathews, 49.4 ov) 
        
 Bowling
 P Kumar 9 0 67 1
 A Nehra 10 0 81 1
 Z Khan 10 0 88 0  
 RA Jadeja 8 0 73 0
SK Raina 3 0 37 1
 
Match details
Toss Sri Lanka, who chose to field
Series India led the 5-match series 1-0
 ODI debut UWMBCA Welegedara (Sri Lanka)
Player of the match V Sehwag (India)
 
Umpires M Erasmus (South Africa) and SK Tarapore
TV umpire SS Hazare
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire UV Gandhe
 

ஒருநாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் 50 ஓவர்களை 40 ஆகக் குறைக்கத் திட்டம்

ஒருநாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. தற்போது உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி. ஆலோசித்து வருகிறது. கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான “ருவென்ரி20” போட்டிகளின் வருகைக்குப் பின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமில்லை. இதனால் புதிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) உள்ளது.

ஒருநாள் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர ஐ.சி.சி. குழு முடிவு செய்துள்ளது. 12 பேர் கொண்ட இக் குழுவின் தலைவராக முன்னாள் மேற்கிந்திய கப்டன் கிளைவ் லொயிட் உள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள 50 ஓவர்களை 40 ஆகக் குறைக்க ஐ.சி.சி. ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் 25 ஓவர் முதல் 40 ஓவர் வரை உள்ள மந்த நிலையை மாற்ற முடியும். தவிர “ருவென்ரி20” போட்டிகளைப் போல துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 10 ஓவர் மட்டுமே வீச முடியும். இதனை மாற்றம் செய்து இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டும் தலா 12 ஓவர்களை வீச அனுமதி வழங்க முடிவு செய்யப்படவுள்ளது. அடுத்த இரண்டு பந்துவீச்சாளர்களுக்குத் தலா 10 ஓவர்களும் ஐந்தாவது பந்துவீச்சாளர் 6 ஓவர் மட்டுமே வீச முடியும்.

இதன் மூலம் திறமையான பந்துவீச்சாளர்களை அணியின் கப்டன்கள் கூடுதலாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் 25 ஓவர்களுக்கு ஒருமுறை புதிய பந்தைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி. கிரிக்கெட் குழு எடுத்துள்ள இம் முடிவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட அதிக வாய்ப்புகளுள்ளது.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.

3-test.jpgஇலங் கைக்கு எதிரான 3 வது டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் சகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய, இலங்கை அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 393 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 726 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா 333 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 3 ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பரணவித்தாரன 8 ஓட்டங்களுடனும், டில்ஷன் 3 ஓட்டங்களுடனும் ஆட்டத்தைத் துவங்கினர். 4 ஆம் நாள் ஆட்டம் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தலைவர் தோனி எதிர்பார்த்தார்.

அவரது எதிர்பார்ப்புக்கு பலனும் கிடைத்தது. ஆரம்பம் முதலே ஹர்பஜனும், பிரக்யான் ஓஜாவும் பந்து வீசினர். இன்னிங்ஸின் 9 வது ஓவரிலேயே இதற்கு பலன் கிடைத்தது. ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி டில்ஷானை ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 16 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து பரணவித்தாரனவுடன் அணியின் தலைவர் சங்கக்கார ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் பொறுமையாக விளையாடி இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்தனர். பரணவித்தாரன நிதானமாக விளையாடி அரைச் சதம் எடுத்தார். அவர் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளையில் ஸ்ரீசாந்த் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சங்கக்காரவுடன் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஜோடி சேர்ந்தார்.

ஜயவர்தன-சங்கக்காகர ஜோடி, அனுபவ ஜோடி என்பதால் தோனி பந்து வீச்சை மாற்றி மாற்றி இருவரையும் ஆடுகளத்தில் நிலைத்திருக்க விடாமல் தடுக்க முனைந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஜயவர்தன விக்கெட்டை சகீர் கான் வீசிய பந்து பறித்தது. அவர் 12 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தார்.

இதைத் தொடர்ந்து ஆடவந்த சமரவீரவும் ஓட்ட கணக்கைத் துவங்காமலேயே சகீர் கான் பந்தில் வீழ்ந்தார். பின்னர் வந்த மெத்யூஸ் 10 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

4 ஆம் நாள் ஆட்டதிலேயே இலங்கையை சுருட்டிவிடலாம் என்று தோனி மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் 6 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரசன்ன ஜயவர்தனவும் சங்கக்காரவும் அபாரமாக விளையாடினர். ஜயவர்தன அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 32 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். அவரும் ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிவதைக் கண்ட சங்கக்கரா அணியை சரிவிலிருந்து மீட்க நங்கூரமிட்டார்.

மிகவும் நிதானமாக விளையாடிய அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 21 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆட்டநேர இறுதியில் சங்கக்கார 133 ஓட்டங்களுடனும், குலசேகர 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இறுதிநாள் ஆட்டம் நேற்று நடந்தது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்கிற நிலையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அபாரமாகப் பந்து வீசினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சங்கக்கார ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த யாரும் நிலைத்து நின்று ஆடாததால், இலங்கை அணி 309 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் சகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

டோணி சதம் போட்டதும் இந்தியா ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது

3-test.jpgஇந்திய அணியின் தலைவர் டோணி மும்பை டெஸ்ட் போட்டியில் 100 ஓட்டங்கள் எடுத்ததும் இந்தியா தனது முதல் இனிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது

மும்பை டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 393 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா அபாரமாக ஆடி பெரும் ஓட்டங்களை எடுத்தது. எட்டியது.

வீரேந்திர ஷேவாக் 293 ஓட்டங்களையும், முரளி விஜய் கிருஷ்ணா 87, டிராவிட் 74, சச்சின் 53, வி.வி.எஸ்.லட்சுமண் 62 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இவர்களின் ஆட்டத்தால் இந்தியா வலுவான நிலையடைந்தது.  இந்த நிலையில்  டோணி நிதானமாக ஆடி 100 ஓட்டங்களைப்பெற்றார்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது.

சாதனையைத் தவற விட்ட ஷேவாக்…

இன்று வீரேந்திர ஷேவாக் முச்சதம் அடித்து புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை தவற விட்டார். இதற்கு முன்பு பிராட்மேன்இ லாரா ஆகியோர் 2 முச்சதங்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதேபோல ஷேவாக்கும் 2 முச்சதங்களைப் பெற்றுள்ளார். இன்று மூன்றாவது முச்சதம் எடுத்திருந்தால் புதிய உலக சாதனையாக அது அமைந்திருக்கும்.

Sri Lanka in India Test Series – 3rd Test
Sri Lanka 393 & 11/0 (3.0 ov)
India 726/9d

Sri Lanka 1st innings
 NT Paranavitana  c Dravid b Harbhajan Singh  53 
 TM Dilshan  c Vijay b Harbhajan Singh  109 
 KC Sangakkara*  c †Dhoni b Ojha  18 
 DPMD Jayawardene  c Sehwag b Sreesanth  29 
 TT Samaraweera  c Vijay b Harbhajan Singh  1 
 AD Mathews  run out (Tendulkar/†Dhoni)  99
 HAPW Jayawardene†  c Harbhajan Singh b Ojha  43
 KMDN Kulasekara  c †Dhoni b Khan  12 
 HMRKB Herath  c Dravid b Harbhajan Singh  1
 M Muralitharan  not out  4  
 UWMBCA Welegedara  lbw b Ojha  8 
 Extras (b 4, lb 6, w 2, nb 4) 16     
      
 Total (all out; 94.4 overs; 415 mins) 393 (4.15 runs per over)
Fall of wickets1-93 (Paranavitana, 19.5 ov), 2-128 (Sangakkara, 30.5 ov), 3-187 (DPMD Jayawardene, 47.4 ov), 4-188 (Samaraweera, 48.1 ov), 5-262 (Dilshan, 64.6 ov), 6-329 (HAPW Jayawardene, 79.6 ov), 7-359 (Kulasekara, 84.6 ov), 8-362 (Herath, 87.2 ov), 9-379 (Mathews, 92.4 ov), 10-393 (Welegedara, 94.4 ov) 
        
 Bowling
 Z Khan 19 2 70 1
 S Sreesanth 16 1 82 1
 Harbhajan Singh 32 3 112 4 
 PP Ojha 23.4 1 101 3
 Yuvraj Singh 4 0 18 0        
 
India 1st innings
 M Vijay  lbw b Herath  87 
 V Sehwag  c & b Muralitharan  293 
 R Dravid  c †HAPW Jayawardene b Welegedara  74 
 SR Tendulkar  b Kulasekara  53 
 VVS Laxman  c Kulasekara b Muralitharan  62
 Yuvraj Singh  c Mathews b Herath  23
 MS Dhoni*†  not out  100  
 Harbhajan Singh  b Muralitharan  1
 Z Khan  c Kulasekara b Muralitharan  7 
 S Sreesanth  lbw b Herath  8 
 PP Ojha  not out  5
 Extras (lb 3, nb 10) 13     
      
 Total (9 wickets dec; 163.3 overs; 705 mins) 726 (4.44 runs per over)
Fall of wickets1-221 (Vijay, 39.1 ov), 2-458 (Sehwag, 82.2 ov), 3-487 (Dravid, 89.6 ov), 4-558 (Tendulkar, 114.2 ov), 5-591 (Laxman, 122.4 ov), 6-610 (Yuvraj Singh, 127.2 ov), 7-615 (Harbhajan Singh, 128.2 ov), 8-647 (Khan, 144.6 ov), 9-670 (Sreesanth, 151.4 ov) 
        
 Bowling 
 UWMBCA Welegedara 30 3 131 1
 KMDN Kulasekara 20 1 105 1
HMRKB Herath 53.3 2 240 3
 M Muralitharan 51 4 195 4
AD Mathews 6 0 36 0  
 TM Dilshan 3 0 16 0 
  
  Sri Lanka 2nd innings  
 NT Paranavitana  not out  8  
 TM Dilshan  not out  3 
  Extras  0     
      
 Total (0 wickets; 3 overs) 11 (3.66 runs per over)
        
 

இலங்கை-இந்தியா இடையிலான 3ஆவது டெஸ்ட் – இலங்கை அணி 366/8

3-test.jpgமு‌ம்பை‌யி‌ல் நடைபெற்ற இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 3ஆவது டெஸ்ட் போட்டி‌யி‌ல், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இல‌ங்கை அ‌ணி முத‌லி‌ல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தொட‌க்க ஆ‌ட்ட‌க்கார‌ர்களாக ‌டி‌ல்ஷா‌ன், பரணவிதாரன ஆ‌கியோ‌ர் கள‌ம் இற‌ங்‌கின‌ர். நேற்றைய ஆட்ட முடிவில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை எடுத்துள்ளது.

தனது தங்கையின் திருமணத்தையொட்டி நேற்றைய ஆட்டத்தில் கா‌ம்‌பீர் விளையாடவில்லை. அவருக்குப் ப‌தி‌‌ல் த‌மிழக ‌வீர‌‌‌ர் முர‌ளி ‌விஜ‌ய் அ‌ணி‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ம‌ற்றபடி இ‌ந்‌திய அ‌ணி‌யி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை. 3 டெ‌ஸ்‌ட் கொ‌ண்ட தொட‌ரி‌ல் இ‌ந்‌திய அ‌‌ணி 1-0 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது.

Sri Lanka in India Test Series – 3rd Test
Sri Lanka 366/8 (89.0 ov)
Sri Lanka won the toss and elected to bat
Stumps – Day 1
Test no. 1937 | 2009/10 season
Played at Brabourne Stadium, Mumbai
2,3,4,5,6 December 2009 (5-day match)
       
 Sri Lanka 1st innings
 NT Paranavitana  c Dravid b Harbhajan Singh  53 
 TM Dilshan  c Vijay b Harbhajan Singh  109 
 KC Sangakkara*  c †Dhoni b Ojha  18
 DPMD Jayawardene  c Sehwag b Sreesanth  29 
 TT Samaraweera  c Vijay b Harbhajan Singh  1 
 AD Mathews  not out  86  
 HAPW Jayawardene†  c Harbhajan Singh b Ojha  43 
 KMDN Kulasekara  c †Dhoni b Khan  12 
 HMRKB Herath  c Dravid b Harbhajan Singh  1 
 M Muralitharan  not out  0  
 Extras (b 4, lb 4, w 2, nb 4) 14     
      
Total (8 wickets; 89 overs) 366 (4.11 runs per over)
To bat UWMBCA Welegedara 
Fall of wickets1-93 (Paranavitana, 19.5 ov), 2-128 (Sangakkara, 30.5 ov), 3-187 (DPMD Jayawardene, 47.4 ov), 4-188 (Samaraweera, 48.1 ov), 5-262 (Dilshan, 64.6 ov), 6-329 (HAPW Jayawardene, 79.6 ov), 7-359 (Kulasekara, 84.6 ov), 8-362 (Herath, 87.2 ov) 
        
 Bowling O M R W  
 Z Khan 19 2 70 1
 S Sreesanth 14 1 66 1
 Harbhajan Singh 29 2 107 4 
 PP Ojha 23 1 97 2
Yuvraj Singh 4 0 18 0
 
India team    
V Sehwag, M Vijay, R Dravid, SR Tendulkar, Yuvraj Singh, VVS Laxman, MS Dhoni*†, Harbhajan Singh, PP Ojha, Z Khan, S Sreesanth 

செரீனா வில்லியம்ஸுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடை

serena-williams.jpgஉலக மகளிர் டென்னிஸ் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸுக்கு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்குபெற மூன்று ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தின் போது பெல்ஜியம் நாட்டின் கிம் கிளைஸ்டருக்கு ஆதரவான ஒரு முடிவை போட்டியின் ஒரு நடுவர் தெரிவித்ததற்காக, அவரை ஆடுகளத்திலேயே ஏசிய குற்றத்துக்காக இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் இதே போன்று ஒரு பெரிய தவறை மீண்டும் செய்வாராக இருந்தால் இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வரும்.

இனங்களுக்கிடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இன்றைய தேவை – பிரதமர்

061109pm.jpgஉலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் வருடந்தோறும் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். அவர்களில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் இல்லை.

அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். ஒத்துழைப்பும் ஒற்றுமையுமே அதன் அர்த்தம் என்று பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :-

இன்று எமக்கு தேவையாக இருப்பது இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பும் ஒன்றுமையுமேயாகும். எமக்கிடையில் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் இல்லாமற் போனதன் விளைவாக நாம் வருடக்கணக்கில் வருந்த வேண்டியிருந்தது. சமாதானம் மகிழ்ச்சிக்கு பதிலாக சந்தேகம் வேறூன்றியதால் தான் சமாதான தேசமாகிய இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்கியது- அதன்காரணமாக நாட்டிலுள்ள இளைஞர்கள் பலரின் பெறுமதியான உயிர்கள் எமக்கு இல்லாமற் போயின. அந்த நிலையை மாற்றி நாட்டில் சமாதானம் எற்படுத்த இப்போது எம்மால் முடிந்துள்ளது.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் ஏற்பட்டுள்ள இலங்கையில் இருந்து முதல்முறையாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கும், உலகளாவிய ரீதியில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கும் எமது பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று பிரதமரின் வாழ்த்துச் செய்தி கூறுகிறது.

சமாதானம், சுபீட்சம் நிறைந்த வாழ்க்கை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி ஹஜ் வாழ்த்து

mahinda0.jpgவடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ் லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஹஜ் யாத்திரையையும் தியாகத்தையும் நினைவூட்டும் இப்பெருநாள் உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய வருடாந்த நிகழ்வாகக் காணப்படுகின்றது.

இன்றைய நாளில் இலங்கையி லிருந்து சுமார் 500 பேர்கள் உட்பட சுமார் நான்கு மில்லியன் முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஒன்றுகூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் யாத்திரையானது பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியத்தோடும் சகோதரத்துவ உணர்வுடனும் தமது கிரியைகளை மேற்கொள்வதை அடையாளப்படுத்தி நிற்கின்றது. இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களுடனும் மானிட சகோதரத்துவ உணர்வுடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்கள் வரலாற்று நெடுகிலும் எமது நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தும் வருகின்றனர். மூன்று தசாப்தகால பயங்கரவாதம் முற்றுப் பெற்றுள்ள இச் சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களோடு அச்சமின்றி வாழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நாளில் முஸ்லிம்கள் தமது விசேட சமயக் கிரியைகளின் போது கேட்கின்ற பிரார்த்தனைகளில் எம் எல்லோருக்கும் கெளரவமான சமாதானம் கிடைப்பதற்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் மிக்க நன்நாளாக இருக்க எனது நல்வாழ்த்துக்கள்.