சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

அதிக ஓட்டமற்ற ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர் – முரளிதரன் சாதனை

murali.jpgஅதிக ஓட்டமற்ற ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பினை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 37 வயதான முரளிதரன் நேற்று முன்தினம் பெற்றார். இதுவரை அப்பெருமையை தக்க வைத்திருந்த அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன்வோர்ன் 145 டெஸ்ட் விளையாடி மொத்தம் 1761 ஓவர்களை மெய்டன்களாக வீசியிருந்தார்.

முரளிதரன் நேற்றைய டெஸ்டில் 9 ஓவர்களை ஓட்டமற்ற ஓவராக வீசி அதன் மூலம் வோர்னின் சாதனையை கடந்தார். 128 வது டெஸ்டில் இறஙகி உள்ள முரளிதரன் இதுவரை 1763 ஓட்டமற்ற ஓவர்கள் வீசி இருக்கிறார்.

ஆட்டத்தின் 79-வது ஓவரை முரளிதரன் ரன்கள் கொடுக்காமல் மைடன் ஓவராக வீசி இந்த சாதனையை நேற்று முன்தினம் முரளி நிகழ்த்தினார்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனையை வைத்துள்ள முரளிதரன் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கவுதம் கம்பீர் விக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வீழ்த்தி 503 விக்கெட்டுகளை வீழ்த்தி வாசிம் அக்ரமின் ஒரு நாள் கிரிக்கெட் வாழ் நாள் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான டெஸ்ட்: நியூஸிலாந்து அணிக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்கு:

dilshan.jpgநியூஸி லாந்து அணி 413 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என 2 வது இன்னிங்ஸிற்காக விளையாடிய அவ்வணி 1 விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்களைப் பெற்றபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் திலகரட்ன டில்ஷான் ஆட்டமிழக்காமல் பெற்ற 123 ஓட்டங்களால் 4 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டத்தை இடை நிறுத்துவதாக அறிவித்தார்கள்.

பின்னர் நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாட வரும் போது மழை குறுக்கிட்டதால் போட்டி சில நிமிடங்கள் தாமதமாக ஆரம்பமானது.

இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார 46 ஓட்டங்களையும் ஜயவர்தன 27 ஓட்டங்களையும் சமரவீர 20 ஓட்டங்களையும் பிரசன்ன ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஒப்ரைன், விட்டோரி, பட்டேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கை- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 452 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டிம்மெக் இன்தோஷ் 36 ஓட்டங்களுடனும், ஜீத்தன் பட்டேல் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தார்கள்.

இந் நிலையில் தொடர்ந்து 3வது நாளான நேற்றுமுன்தினம் காலையும் மழை பெய்தது. இதனால் 90 நிமிடங்கள் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. மெக் இன்தோஷ் பொறுமையாக ஆடினார். துஷாராவின் வேகப் பந்து வீச்சில் ஒரு முறை ஹெல்மெட்டையும், மற்றொரு முறை தோள்பட்டையையும் தாக்கியது. அவற்றை சமாளித்து தனது முதலாவது அரைசதத்தை மெக்இன்தோஷ் கடந்தார்.

முந்தைய நாள் விக்கெட் காப்பாளராக இறக்கி விடப்பட்ட ஜீத்தன் பட்லேட் 26 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ரோஸ் டெய்லர் இரண்டு முறை பிடியில் இருந்து தப்பித்ததால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்த நியூசி லாந்து மேற்கொண்டு 43 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் மேலும் 4 விக்கெட்டுகளை இழந்து சிக்கலுக்குள்ளானது. டெய்லர் 35 ஓட்டத்துடனும், மெக்இன்தோஷ் 69 ஓட்டங்ளுடனும் (226 பந்து), மெக்கல்லம் ஒரு ஓட்டங்களிலும், ஓரம் 12 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

பாலோ-ஆனை தவிர்க்க 253 ஓட்டங்களை தொடவேண்டிய நிலையில், 8வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெஸ்ஸி ரைடரும், கப்டன் வெட்டோரியும் அணியை பாலோ-ஆன் ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்கள். ரைடர் தனது பங்குக்கு 42 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

3வது நாள் ஆட்ட நேரமுடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் எடுத்திருந்தது. விட்டோரி 33 ஓட்டங்களுடனும், ஓ பிரையன் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் துஷாரா, முரளிதரன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதேவேளை 4வது நாள் ஆட்ட நேரத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி 299 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

SRI LANKA
1ST INNINGS 452

NEW ZEALAND
1ST INNINGS
(overnight 281-8)

J. Oram c sub b Muralitharan   12
D. Vettori b Thushara    42
I. O’Brien c P. Jayawardene b Muralitharan  9
C. Martin not out     2
Extras: (b6, lb5, w1, nb11)   23
Total (all out, 116 overs)   299
Fall of wickets: 1-45, 2-80, 3-129, 4-180, 5-188, 6-195, 7-223, 8-259, 9-290, 10-299.
Bowling: Kulasekara 10-2-41-1 (nb1), Thushara 23-2-81-4 (nb6, w1),
Mendis 39-8-85-1 (nb4), Muralitharan 42-10-73-4, Paranavitana 2-0-8-0.

SRI LANKA
2nd innings
T. Paranavitana c Taylor b O’Brien  5
T. Dilshan not out   123
K. Sangakkara run out   46
M. Jayawardene c and b Patel  27
T. Samaraweera c Taylor b Vettori 20
P. Jayawardene not out  30
Extras: (b5, lb3)    8
Total (for 4 wkts decl,49 overs) 259
Fall of wickets: 1-19, 2-120, 3-174, 4-205.
Bowling: Martin 5-1-25-0, O’Brien 8-1-45-1, Oram 5-0-31-0, Vettori 19-3-81-1, Patel 12-0-69-1.

NEW ZEALAND
2ND INNINGS

M. Guptill not out    17
D. Flynn c M. Jayawardene b Kulasekara   0
R. Taylor not out     8
Extras: (b4, lb1)     5
Total (for one wkt, 13 overs)   30
Fall of wicket: 1-1 (Flynn).
Bowling: Kulasekara 3-0-10-1, Thushara 2-2-0-0, Mendis 4-1-9-0, Muralitharan 4-2-6-0.

இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேட்டி

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 63 வது சுதந்திர தின விழா கடந்த 15ம் திகதி டில்லியில் நடந்தது. அப்போது டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமரின் பேச்சை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. அது தொடர்பாக தகவல் இருந்தால் எங்களிடம் சொல்லலாம்.

நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தனது நாட்டு தூதரகம் மூலம் டில்லிக்கு தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கும் பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே இது தொடர்பாக நம்பத் தகுந்த தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்கள் அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் தங்களது கடுமையான உணர்வுகளையும் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு குரேஷி தனது நாட்டு வெளியுறவு செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று மீண்டும் ஒருமுறை அவர் வலியுறுத்தி கூறினார். எனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றி தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்களிடம் கொடுக்கலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி கேட்டுக்கொண்டார்.

இடம்பெயர் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை – ரவூப் ஹக்கீம்

akime-2.jpgஇடம் பெயர் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறிப்பாக மன்னார் முசொலிப் பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், முஸ்லிம்கள் தமது சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. யுத்த காலத்தில் வடக்கு பகுதி முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களைத் தற்போது மீளக் குடியமர்த்த முடியும்.

ஆனால், என்ன காரணத்திற்காக முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது புதிராகவே உள்ளது.

பெருந் தொகையான முஸ்லிம்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்றார். 

முரளிதரன் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்

murali.jpgநியூசி லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலி மைதானத்தில் நடைபெறுவரும் டெஸ்ட் போட்டியில் முத்தையா முரளிதரன் காலி டெஸ்ட் மைதானத்தில் 100 விக்கெட்டுக்களைப் பெற்று மற்றுமொரு சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

தென் மாகாண சபை தேர்தல் – வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் 28 வரை

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுகொள்ளப்பட உள்ளன. தென் மாகாண சபைத் தேர்தலில் 53 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். காலி மாவட்டத்தில் இருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்தில் இருந்து 18 பேரும் அம்பாந்தோட்டையில் இருந்து 12 பேருமாகத் தெரிவு செய்யப்பட  உள்ளனர்.

2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரமே இம்முறை தென் மாகாண சபைத் தேர்தல நடத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

சயீட் அன்வரின் சாதனையை சமன்செய்த கொவென்ட்ரி தரவரிசையில் முன்னேற்றம்

17-charles-coventry222.jpgஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சயீட் அன்வரின் சாதனையை சமன் செய்த சிம்பாப்வே வீரர் சால்ஸ் கொவென்ட்ரி ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

பங்களாதேஷடனான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 194 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்த 26 வயதான கொவென்ட்ரி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி. இன் புதிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் முன்னேறினார். இதன்படி 103 ஆவது இடத்தில் இருந்த கொவென்ட்ரி 83 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இது தவிர, பங்களாதேஷடனான ஒருநாள் தொடரில் சோபித்த சீன் வில்லியம்ஸ், எல்டன் சிகும்புரா ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் சீன் வில்லியம்ஸ் 9 இடங்கள் முன்னேறி 47 ஆவது இடத்தையும் சிகும்புரா 6 இடங்கள் உயர்ந்து 50 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த இருவரும் மாத்திரமே ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் சிம்பாப்வே வீரர்களாவர்.

அதேபோன்று சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற பங்களாதேஷ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் இரண்டு இடங்கள் முன்னேறி 36 ஆவது இடத்தை பிடித்தார்.

இதனிடையே ஐ.சி.சி. ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தை இழந்தார். சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சோபிக்க தவறிய ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

இதனால் நியூஸிலாந்து வீரர்களான கைல் மில்ஸ் மற்றும் டானியல் விட்டோரி ஆகியோர் முறையே 2, 3 ஆவது இடங்களுக்கும் முன்னேற்றம் கண்டனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க வீராங்கணை ஆணா பெண்ணா?

0000semenyabesar.jpgஜெர்ம னியின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியில் மகளிர் பிரிவின் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தென் ஆப்பிரிக்காவின் காஸ்டர் செமென்யாவிடம் அந்தப் பதக்கம் தங்கியிருக்குமா என்பது குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

அவரிடம் நடத்தப்படவுள்ள பாலியல் பரிசோதனையில் அவர் பெண் அல்ல என்று கண்டறியப்படால் அவர் பதக்கம் இழக்க நேரிடும். பெர்லினில் நடைபெற்று வரும் போட்டிகளில் இந்தப் பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்டன் செமென்யா எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் அற்புதமான அவரது சாதனையும் அவரது உடல் தோற்றமும் பெரிய அளவில் சர்ச்சையை ஈர்த்துள்ளன. போட்டியில் பங்கு பெறும் வீரர்களும், போட்டி அதிகாரிகளும் அவர் ஒரு பெண் தான் என்பதனை நிரூபிக்குமாறு கோரியுள்ளனர். எனவே 18 வயதான இந்த தென் ஆப்பிரிக்கர் சிக்கலான பல பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.

பொது மருத்துவ வல்லுநர், மகப்பேற்று மருத்துவ வல்லுநர், ஒரு உளவில் நிபுணர் மற்றும் பாலியல் சோதனை வல்லுநர் ஆகியோர் அந்த வீராங்கணையை சோதித்து அறிக்கை வழங்குவார்கள்.  எனினும் இது தொடர்பிலான முடிவு வருவதற்கு பல வாரங்களாகும். மேலும் இந்தப் பிரச்சினையில் தற்போது அரசியல் கலப்பும் ஏற்பட்டுள்ளது.

ஊவா முதல்வராக சசீந்திர சத்திய பிரமாணம்: செந்தில் உட்பட 4 அமைச்சர்களும் பதவியேற்பு

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சசீந்திர குமார ராஜபக்ஷ, நேற்று ஆளுநர் நந்தா மெத்யூ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தின் போது ஊவா மாகாண முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சசீந்திர குமார ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குரக்கன் நிற சால்வை ஒன்றையும் அணிவித்தார்.

ஊவா மாகாண சபையின் முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாகாண ஆளுநர் நந்தா மெத்யூவ் ஆகியோர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதே நேரம் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் சகலரும் இவ் வைபவத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கூட்டாக சத்தியப் பிரமாணம் செய்தனர்.

*  சசீந்திர குமார ராஜபக்ஷ முதலமைச்சர், நிதி, திட்டமிடல், சட்டம், ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி மன்றங்கள், கலாசார விவகாரம், போக்குவரத்து, காணி, நீர்ப்பாசனம், பொருளாதார மேம்பாடு, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நிர்மாணத்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* செந்தில் தொண்டமான் – இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமூக சேவைகள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, மின்சக்தி, எரி சக்தி, புடவைக் கைத்தொழில், சிறு கைத் தொழில்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* ஏ.எம். புத்ததாச – சுகாதாரம், உண்ணாட்டு வைத்தியம், சிறுவர் பாதுகாப்பு, நன்நடத்தை, மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* அனுர ரவீந்திர விதான கமகே – விவசாயம், கமநல அபிவிருத்தி, கால் நடை வளர்ப்பு, நன்னீர் மீனவ கைத்தொழில், சுற்றாடல் மற்றும் சுற்றுலா ஆகியதுறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* ஆர்.எம். குமாரசிறி ரத்நாயக்கா – நெடுஞ் சாலை அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், நுகர்வோர் விவகார, கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம் என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சர்.

இதேவேளை மாகாண சபை உறுப்பினர்களான டாக்டர் ரோகண புஷ்பகுமாரவை சபைத் தலைவராகவும், சாலிய சுமேதவை உப தலைவராகவும், ஆளும் கட்சி பிரதம கொறடாவாக ராஜா பந்துசேனவையும், சபை முதல்வராக விஜித பேருகொடவையும் மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இவ் வைபவத்தின் போது ஆலோசனை முன் வைத்தார்.

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சனத்தொகை மதிப்பீடு!

0000sri-lanka-map.jpg இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சனத்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2011 ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை முற்றுப்பெறும் என்றும் சனத்தொகை மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.பீ.பி.எஸ் வைத்தியரத்ன தெரிவித்தார்.

10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கௌளப்பட்டபோதும் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அப்பணி முழுமையடையவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகள் அந்த வீடுகளில் வசிப்பவர்களின் விபரங்கள் என்பன ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.