::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

முல்லைத்தீவுக்கு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் மீண்டும் செல்கிறது

red-cr.jpgநோயா ளிகளையும் காயம்பட்டவர்களையும் அழைத்துவருவதில் செஞ்சிலுவைக்குழு உதவிவருகிறது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றுமொரு தொகுதி நோயாளாகளை அழைத்து வரும் வகையில் சற்று முன்னர் கிறீன் ஓசியானிக் கப்பல் அனைத்துலக செஞ்சிலுவக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என பி.பி.ஸி. செய்திச்சேவை நேற்று அறிவித்துள்ளது. .

இந்தக் கப்பலில் கோதுமை மாவு உள்ளிட்ட ஒரு தொகுதி உணவுப் பண்டங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுமாத்தளன் பகுதியிலிருந்து தொடர்ந்து நோயாளர்கள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் காயங்களுக்கு இலக்கானோர் திருகோணமலைக்கு அழைத்துவரப்படும் நிலையில், சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான மருந்து வகைகள் பெருமளவில் தேவைப்படுவதாகவும், இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் மருத்துவப் பணிகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது பற்றியதான இணைப்புக் குழுவின் கூட்டமும்  நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

புலிகளின் வேண்டுகோள் இராணுவப் பேச்சாளரால் நிராகரிப்பு

uthaya_nanayakara_.jpgசர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரரென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் விடுத்த வேண்டுகோளை இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்துள்ளார்.

நிபந்தனையுடன் கூடிய யுத்த நிறுத்த அறிவிப்புத் தொடர்பான வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிவித்த பிரிகேடியர் உதய நாணயக்கார, தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வித நிபந்தனையுமின்றி ஆயுதங்களை முதலில் கீழே வைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இதுவரை 35,819 பேர் வருகை

uthaya_nanayakara_.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு 35,819 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்திருப்பதாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, புலிகள் புதுக்குடியிருப்பில் 73 சதுர கிலோ மீற்றருக்குள் முடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இத்தகவலை அவர் வெளியிட்டார்.

இராணுவப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; “வன்னி, முல்லைத்தீவு பகுதிகளை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் படையினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். தற்போது புதுக்குடியிருப்பில் 73 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், படையணிகள் தொடர்ந்து மும்முனைகளால் முன்னேறி வருகின்றன. 53 ஆவது படையணி தெற்குப்பக்கமாகவும் 4 ஆவது விசேட படையணியும் 45 ஆவது படையணியும் ஏ 35 வீதியூடாகவும் 58 ஆவது படையணி கிழக்குப் பக்கமாகவும் புதுக்குடியிருப்பு மையப்பகுதியை நோக்கி படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி வரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து 35,819 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். ஜனவரி மாதத்தில் 3,848 பேரே வந்தனர். ஆனால் பெப்ரவரி மாதத்தில் இதுவரையில் 31,971 பேர் வந்துள்ளனர். இவர்களனைவரும் மெனிக் பார்ம் மற்றும் விஷேட இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டு அவசியமான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது’ எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புப் பகுதியில் 2 நாள்களாக கடும் சண்டை

SL_Army_in_Killinochieமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்புக்கு மேற்குப் பகுதியிலும் அம்பலவன்பொக் கணைக்குக் கிழக்குப் பகுதியிலும் நேற்று முன்தினம் தொடக்கம் இராணுவத்தினருக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சண்டை இடம்பெற்று வருகிறது எனப் படைத்தரப்பு நேற்றுச் செய்தி வெளியிட்டது. இச்சமர்களில் நேற்று முன்தினம் வரை 36 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். அவர்களின் 11 சடலங்களைத் தாங்கள் மீட்டனர் என்று இராணுவத்தினர் நேற்றுக் கூறினர்.

புதுக்குடியிருப்பு மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சண்டையில் விடுதலைப் புலிகள் 20 பேர் உயிரிழந்தனர். 18 பேர்வரை காயமடைந்தனர். உயிரிழந்த விடுதலைப் புலிகளில் இருவரின் சடலங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

அதேவேளை, புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்மைப்புத் தளம் ஒன்றையும், ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றையும் இதேவேளை 57 படையணியால் விசுவமடுவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கிளைமோர்க்குண்டுகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 58 ஆவது டிவிசனின் படையணி கைப்பற்றியது என்றும்  அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.அதேசமயம், அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகளில் ஐவர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சண்டையில் படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

முல்லைத்தீவிலிருந்து வெள்ளிக்கிழமை திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் விபரம்

puthumaattalan-hospital.gifமுல்லைத் தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கப்பல் மூலம் திருமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நோயாளர்களின் விபரம் வருமாறு:-

01. ஆர். நசந்தநாயகி, முல்லைத்தீவு, (வயது 57).
02. இராசரத்தினம், முல்லைத்தீவு, (வயது 58).
03. யு. சஜீவன், தேவிபுரம், (வயது 04).
04. யு. கஜீவன், தேவிபுரம், (வயது 06).
05. யு. ராகினி, தேவிபுரம், (வயது 28).
06. யு. பூமிகா, தேவிபுரம், (வயது 18).
07. தவராசா உதயகுமார், கிளிநொச்சி, (வயது 26).
08. மேரி ரீட்டா, மாத்தளன், (வயது 55).
09. ஆர். சுப்பிரமணியம், கிளிநொச்சி, (வயது 77).
10. எப். ஜோர்ஜ், கிளிநொச்சி, (வயது 63).
11. எம். ஜெயமலர், கிளிநொச்சி, (வயது 59).
12. ஜே. அன்னமலர், புதுக்குடியிருப்பு, (வயது 52).
13. ஏ. அற்புதமலர், இரணைப்பாலை, (வயது 30).
14. ரி. யதுர்ஷன், கோம்பாவில், (வயது 07).
15. ரி. வனிதா, கோம்பாவில், (வயது 27).
16. ரி. அர்சிகா, கோம்பாவில், (வயது 03).
17. எஸ். சிவகாமி, முத்தையன்கட்டு, (வயது 03).
18. எம். பொன்னம்பலநாதன், கிளிநொச்சி, (வயது 83).
19. எஸ். நல்லையா, மாத்தளன், (வயது 49).
20. கே. கருணேஸ்வரன், தேவிபுரம், (வயது 41).
21. எஸ். வடிவாம்பாலி, கிளிநொச்சி, (வயது 63).
22. நிரோஜன், மாத்தளன், (07 மாதம்).
23. பிரிங்கி, மாத்தளன், (வயது 29).
24. ஆர். சுந்தரி, நடுகானி, (வயது 47).
25. ஏ. வசந்தி, நாச்சிக்குடா, (வயது 33).
26. ஏ. அனேஜா, நாச்சிக்குடா, (வயது 03).
27. எம். பெரியசாமி, முழங்காவில், (வயது 60).
28. எஸ். சிவதர்சனி, மாத்தளன், (வயது 32).
29. எஸ். பவித்ரன், மாத்தளன், (வயது 01).
30. எஸ். டோசிகா, மாத்தளன், (வயது 04).
31. இராஜரத்னம், (வயது 31).
32. எம்.தயானந்தன், திருகோணமலை, (வயது 34).
33. சிவநாதன், யாழ்ப்பாணம், (வயது 09).
34. எம். இராமன், முள்ளியவளை, (வயது 26).
35. ஐ. நீரஜா, முள்ளியவளை, (வயது 21).
36. எம். தங்கமணி, முள்ளியவளை, (வயது 56).
37. எஸ். கதிரவெளி, பரந்தன், (வயது 80).
38. சந்தசரோஜினி, முள்ளியவளை, (வயது 49).
39. என். பரமேஸ்வரன், விஸ்வமடு, (வயது 59).
40. எஸ். விபுலா, முல்லைத்தீவு, (வயது 08).
41. எஸ். மகாலட்சுமி, மணியங்குளம், (வயது 82).
42. கே. பிரியா, மாத்தளன், (வயது 03).
43. கே. பரமலோஜினி, மாத்தளன், (வயது 38).
44. கே. சுப்பிரமணியம், மாங்குளம், (வயது 64).
45. எம். சீதாதேவி, யாழ்ப்பாணம், (வயது 66).
46. கே. கத்திரினா, ஆண்டான்குளம், (வயது 66).
47. எம். சக்திவேல், பாண்டியங்குளம், (வயது 71).
48. கே. நாகமுத்து, பரந்தன், (வயது 73).
49. பி. செல்லக்கண்டி, பொக்கணை, (வயது 67).
50. கே. சுரேஷ், கிளிநொச்சி, (வயது 33).
51. பி. நிதர்சன், முள்ளியவளை, (வயது 26).
52. ஆர். கவிதா, வற்றாப்பளை, (வயது 35).
53. ஆர். மதுசுதன், வற்றாப்பளை, (வயது 04).
54. ரி. கார்த்திகா, வற்றாப்பளை, (வயது 02).
55. எஸ். பாலசுந்தரன், கிளிநொச்சி, (வயது 53).
56. சி. கோவிந்த பிள்ளை, வட்டக்கச்சி, (வயது 70).
57. ரி. கீர்த்திகா, பூநகரி, (வயது 12).
58. தமிழ்நேசன், கிளிநொச்சி, (வயது 42).
59. என். நந்தகுமார், கிளிநொச்சி, (வயது 17).
60. எஸ். கிருபாஜினி, இரணைப்பாலை, (வயது 31).
61. எஸ். லக்ஷணா, இரணைப்பாலை, (வயது 2.5).
62. ரி. கனகசபை, முத்தையன்கட்டு, (வயது 82).
63. பி. இராமன், முத்தையன்கட்டு, (வயது 70).
64. எஸ். விஸ்வரூபி, பாலமோட்டை, (வயது 18).
65. எம். மதிவதனி, கிளிநொச்சி, (வயது 26).
66. லிகிர்தன், கிளிநொச்சி, (வயது 40).
67. யு. விச்சன், புதுக்குடியிருப்பு, (வயது 04).
68. யு. நிசாதினி, புதுக்குடியிருப்பு, (வயது 24).
69. ஐ. புவனலோஜன், யாழ்ப்பாணம், (வயது 29).
70. ஐ. கீர்த்திகா, புதுக்குடியிருப்பு, (வயது 03).
71. ஐ. கோகிலா, புதுக்குடியிருப்பு, (வயது 26).
72. தர்சிகன், புதுக்குடியிருப்பு, (வயது 4.5).
73. கணேஸ்வரி, கொக்குத்தொடுவாய், (வயது 29).
74. பி. நாகலிங்கம், வட்டக்கச்சி, (வயது 72).
75. ஆர். பிரியா, புதுக்குடியிருப்பு, (வயது 10).
76. ஆர். ரேஷ்வரி, புதுக்குடியிருப்பு, (வயது 35).
77. ஆர். குமரன், புதுக்குடியிருப்பு, (வயது 11).
78. ரி. சுப்பிரமணியம், முள்ளியவளை, (வயது 48).
79. எஸ். மனோரஞ்சிதம், பாலமோட்டை, (வயது 46).
80. எம். சரோஜினி, முள்ளிக்குளம், (வயது 55).
81. கே.சீதாவிப்பிள்ளை, வட்டக்கச்சி, (வயது 60)
82. ஜே.ராகல், கிளிநொச்சி, (வயது 06)
83. சாந்தி, கிளிநொச்சி, (வயது 37)
84. ஆர். தனுஷன், கிளிநொச்சி, (வயது 1.5).
85. ஆர். தனுஷன், கிளிநொச்சி, (வயது 10).
86. ஆர். அபிஷா, (வயது 13).
87. எஸ். ரவிராசன், கிளிநொச்சி, (வயது 38).
88. எஸ். கௌரி, கிளிநொச்சி, (வயது 33).
89. எஸ். வசந்தாதேவி, கிளிநொச்சி, (வயது 50).
90. அனோஜா, கிளிநொச்சி, (வயது 1.5).
91. பி. புஷ்பலதா, திருகோணமலை, (வயது 14).
92. என். நாகல காண்டீபன், மல்லாவி, (வயது 23).
93. என். தனலட்சுமி, புதுக்குடியிருப்பு, (வயது 53).
94. சிவமயம், கிளிநொச்சி, (வயது 70).
95. சிந்துஜன், கொடிகாமம், (வயது 09).
96. சிரஜீவி, கொடிகாமம், (வயது 07).
97. எஸ். ரங்குமார், வற்றாப்பளை, (வயது 40).
98. எம். சிவகரன், கொடிகாமம், (வயது 38).
99. சிவசெந்தூரன், கொடிகாமம், (வயது 05).
100. ஆர். கமலேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 58).
101. எம். விகேஸ்வரி, முறிகண்டி, (வயது 28).
102. எஸ். கமலாதேவி, கிளிநொச்சி, (வயது 65).
103. கனகதுரைசிங்கம், நீர்வேலி.
104. ஐ.நாகதர்ஷினி, கிளிநொச்சி, (வயது 26).
105. கே.தர்சன், நீர்வேலி, (வயது 07).
106. ரி. விஜயகுமார், வவுனிக்குளம், (வயது 33).
107. வி. விதுர்ஷிகா, வவுனிக்குளம், (வயது 03).
108. வினாயகமூர்த்தி, மல்லாவி, (வயது 63).
109. வி. சுகிர்தா, வவுனிக்குளம், (வயது 30).
110. ரி. சுபாஷினி, (வயது 35).
111. எஸ். சிவாஜினிதேவி, விஸ்வமடு, (வயது 35).
112. எஸ். சிவச்செல்வம், விஸ்வமடு, (வயது 03)
113. எஸ். தனபாலசிங்கம், தேவிபுரம், (வயது 62).
114. தங்கமுத்து, இரணைப்பாலை, (வயது 67).
115. கொரிஸா,
116. ஐ. ரவீந்திரா, கருயுக்கேணி, (வயது 43).
117. ஆர். ரதன், கருயுக்கேணி, (வயது 02).
118. எம். உதயசந்திரா, கொழும்பு, (வயது 42).
119. வி. உமா, கொழும்பு, (வயது 16).
120. கே.சிவபாலன், புதுக்குடியிருப்பு, (வயது 60).
121. ஆர்.ராஜன், மல்லாவி, (வயது 25).
122. ஆர்.திலக்ஷி, மல்லாவி, (வயது 1.5).
123. ஆர்.மலர்விழி, திருகோணமலை, (வயது 19).
124. எம்.தியாகராஜன், புத்தூர், (வயது 64)
125. கே.வட்டியம்மா
126. பெயர் குறிப்பிடப்படவில்லை.
127. வை.இமிலியான் பிள்ளை, மன்னார், (வயது 53).
128. ஐ.எலிசபத், மன்னார், (வயது 50).
129. பி.சசிதரன், புதுக்குடியிருப்பு, (வயது 31).
130. ரி.பேரின்பநாதன், புதுக்குடியிருப்பு, (வயது 58).
131. பி.சுதர்ஷன், மல்லாவி, (வயது 05).
132. பி.ஜானி, மல்லாவி, (வயது 04).
133. பி.சுசீலாதேவி, மல்லாவி, (வயது 30).
134. பி.ரேணுகா, மல்லாவி, (வயது 03).
135. ரி.பரமலிங்கம், இறைப்பைக்குளம், (வயது 30).
136. வி.நிகதன், ஜெயந்திநகர், (வயது 11).
137. வி.வினாதா, ஜெயந்திநகர், (வயது 26).
138. எஸ்.ஸ்ரீவதனி, புதுக்குடியிருப்பு, (வயது 36).
139. எஸ்.யதீஷன், புதுக்குடியிருப்பு, (வயது 15).
140. எஸ்.தமிழ்க்குமரன், மாத்தளன், (வயது 10).
141. ஜே.ஜெயலட்சுமி, மாத்தளன், (வயது 56).
142. எஸ்.அன்புக்குமரன், மாத்தளன், (வயது 06).
143. எம்.சண்முகராஜா, அக்கராயன்குளம், (வயது 47).
144. உமாசங்கர்.
145. ஜே.திவ்யன், (வயது 07).
146. ஜே.திலக்ஷன், (வயது 02).
147. ஜே.புஷ்பலதா, மல்லாவி, (வயது 36).
148. ஜே.திலக்சிகா, மல்லாவி, (வயது 05).
149. கே.பூலோகநாயகி, முள்ளியவளை, (வயது 67).
150. எஸ்.டி.ஐராங்கினி, வங்காலை, (வயது 32).
151. எல்.சந்திரதேவி, சம்பூர், (வயது 43).
152. எல்.பிரவீன், சம்பூர், (வயது 06).
153. எஸ்.ராஜவதனி, கிளிநொச்சி, (வயது 29).
154. எஸ்.அருண்கீரன், கிளிநொச்சி, (வயது 07).
155. வி.மதுஷன், கிளிநொச்சி, (வயது 05).
156. வி.விதுஷன், கிளிநொச்சி, (வயது 07).
157. வி.யதுஷன், கிளிநொச்சி, (வயது 04).
158. வி.ஜெயரூபா, மாத்தளன், (வயது 25).
159. ரி.அருள்சோதிநாதன், யாழ்ப்பாணம், (வயது 45).
160. ரி.தருஷன், திருகோணமலை, (வயது 04).
161. ரி.வினுஷன், திருகோணமலை (வயது 3).
162. ரி.தரணி, திருகோணமலை, (வயது 30).
163. பி. நடராஜா, கிளிநொச்சி, (வயது 53).
164. பி. தர்மராஜா, மஸ்கெலியா, (வயது 29).
165. கே.பிரதீபன், புத்தூர், (வயது 33).
166. கே.சரஸ்வதி, கிளிநொச்சி, (வயது 66).
167. ஐ.சின்னத்துரை, கோம்பாவில், (வயது 60).
168. எஸ். சத்தியபாமா, நடுகானி, (வயது 28).
169. எஸ். அங்கணி, நடுகானி, (வயது 03).
170. என். கார்த்திகேசு, இரணைப்பாலை, (வயது 67).
171. ஏ.நடேசகுமார், புதுக்குடியிருப்பு, (வயது 40).
172. ரி.ரேஷ்வரன், பாயக்குளம், (வயது 75).
173. ரி.பாகமன், திருகோணமலை, (09 மாதம்).
174. ரி.தனிநாயகம், கொழும்பு, (வயது 73).
175. என். தயாபாலன், நடுகானி, (வயது 50).
176. ரி. யோகநாதன், புதுக்குடியிருப்பு, (வயது 76).
177. எஸ். மனோன்மணி, கிளிநொச்சி, (வயது 71).
178. பி. பிருந்தா, புத்தூர், (வயது 27).
179. பி. கதிரிச்சில்யன், புத்தூர், (வயது 01).
180. ஜெ. துவராஜன், புதுக்குடியிருப்பு, (வயது 1.5).
181. என். டினோயா, புதுக்குடியிருப்பு, (வயது 08).
182. எம். வசந்தநாயகி, புதுக்குடியிருப்பு, (வயது 31).
183. எஸ். யசோதரன், முத்தையன்கட்டு, (வயது 31).
184. கே. கணேசமூர்த்தி, முல்லைத்தீவு, (வயது 61).
185. ஜே. பானுயா, கிளிநொச்சி, (வயது 06).
186. ஜே. புஷ்பஜீவா, கிளிநொச்சி, (வயது 30).
187. ஜே. பூமிகா, கிளிநொச்சி, (வயது 05).
188. ஜே. பவித்ரா, கிளிநொச்சி, (வயது 09).
189. எஸ். ஜெயரூபன், யாழ்ப்பாணம், (வயது 35).
190. என். செல்லையா, யாழ்ப்பாணம், (வயது 60).
191. எம். விமலகுரு, இரணைப்பாலை, (வயது 56).
192. சின்னையா, கிளிநொச்சி, (வயது 83).
193. என். நடேசமூர்த்தி, முழங்காவில், (வயது 42).
194. எஸ். முத்துலிங்கம், முல்லைத்தீவு, (வயது 78).
195. ஆர். பூரணம், கிளிநொச்சி, (வயது 56).
196. சிவகணநாதன், இரணைப்பாலை, (வயது 65).
197. எஸ். கந்தசாமி, சாவகச்சேரி, (வயது 63).
198. எஸ். பூபதி, கிளிநொச்சி, (வயது 63).
199. எஸ். கந்தசாமி, சாவகச்சேரி, (வயது63).
200. பெயர் தரப்படவில்லை.
201. சர்வேஸ்வரன், முல்லைத்தீவு, (வயது 26).
202. ஜெயமலர், முல்லைத்தீவு, (வயது 25).
203. எஸ். தனுஜன், முல்லைத்தீவு, (வயது 02).

204. சரஸ்வதி, மாங்குளம், (வயது 51)
205. கே.தங்கசொரூபி, சாவகச்சேரி (வயது 55)
206. பி.வசந்தமலர், இராமநாதபுரம் (வயது 31)
207. பி.நிவேதா, இராமநாதபுரம் (வயது 06)
208.பி.ஜிதுஷன், இராமநாதபுரம் (வயது 05)
209. வை.தர்மசீலன், தர்மபுரம், (வயது 16)
210. வை.விக்னேஸ்வரி, தர்மபுரம் (வயது 33),
211. ஆர்.யோகேஸ்வரி, மாங்குளம் (வயது 50)
212. ஏ.பெர்னாண்டோ, கிளிநொச்சி, (வயது 54)
213. ஏ.பாக்கியம், கிளிநொச்சி, (வயது 67)
214. எஸ்.கனகாம்பிகை, முத்தையன்கட்டு (வயது 63)
215. ரி.செல்வரஞ்சிதம், தாளையடி (வயது 60)
216. எஸ்.சின்னம்மா, உடையார்கட்டு (வயது 68),
217. எஸ்.சிவராணி, உடையார்கட்டு (வயது 50),
218. வி.ராசமலர், மல்லாவி (வயது 55),
219. எஸ்.சண்முகம், உருத்திரபுரம், (வயது 54),
220. பெயர் தரப்படவில்லை
221. பெயர் தரப்படவில்லை
222. ஆர்.பொன்னுத்துரை, யாழ்ப்பாணம், (வயது 70),
223. பெயர்தரப்படவில்லை.
224. பெயர் தரப்படவில்லை.
225. பி.கனகமணி, முள்ளியவளை (வயது 62)
226. வி.சிவகுரு, நெடுங்கேணி, (வயது 57),
227. வி.சிந்துஜன், மல்லாவி (வயது 1.5)
228. ஆர்.சிவஞானம், மல்லாவி (வயது 57)
229. வி.மிர்துளா, இரணைப்பள்ளி (வயது 44),
230. பி.அபிஷங்கா, இரணைப்பள்ளி (வயது 09)
231. எம்.சின்னத்தம்பி, முத்தையன்கட்டு (வயது 72)
232. வி.பேச்சிமுத்து, முழங்காவில், (வயது 69),
233. சின்னராசா, ஆனந்தபுரம் (வயது 36),
234. எஸ்.விஜயதர்சினி, ஆனந்தபுரம் (வயது 27),
235. கே.சசிகுமார், முல்லைத்தீவு (வயது 34)
236. பி.கடம்பஜனனி, இரணைப்பாலை (வயது 36)
237. பி.அபினியா, இரணைப்பாலை, (வயது 03)
238. பி.காந்திமதி, வவுனிக்குளம் (வயது 69)
239. சங்கராசா யாழ்ப்பாணம் (வயது 39),
240. செந்துஜன், விசுவமடு (வயது 17)
241. எஸ்.தயாநதினி, ஆனந்தபுரம், (வயது 31),
242. தமிழரசி, ஆனந்தபுரம், (9 மாதம்)
243. தனுஷாந்தன், ஆனந்தபுரம், (வயது 09)
244. கே.அஸின்திரா, விசுவமடு, (வயது 1.5)
245. கே.தர்ஷினி, விசுவமடு, (வயது 30)
246. கே.ஆதித்யா, விசுவமடு (வயது 04)
247. பி.மதுயன்னை, வவுனிக்குளம் (வயது 35)
248. ரி.விமலாதோவி, கிளிநொச்சி, (வயது 61)
249.சிவபாக்கியம், கிளிநொச்சி (வயது 84)
250. கமலசிங்கம், யாழ்ப்பாணம், (வயது 56)
251. சூரியகுமார், கிளிநொச்சி, (வயது 32)
252. கே.விமலா, விசுவமடு, (வயது 24)
253. எம். நிரஜனி, மிருசுவில், (வயது 31)
254. எஸ். அனுஸ்டன், மிருசுவில், (வயது 01)
255. எஸ். தினோஷன், கிளிநொச்சி,
256. சந்திரவதனி, கிளிநொச்சி, (வயது 34)
257. ஏ.பிரகாஷ், உடையார்கட்டு, (வயது 14)
258. ஏ.வாசுகி, மூங்கிலாறு,(வயது 30)
259. ஏ.சனுஜா, மூங்கிலாறு,(வயது 02)
260. ஏ.பிரதீபன், மூங்கிலாறு, (வயது 07)
261. ஜெயபாலன், முழங்காவில், (வயது 30)
262. எஸ். சசிகுமார், (வயது 37)
263. எஸ். சனோஜ், (வயது 05)
264. கணபதிப்பிள்ளை, முள்ளியான், (வயது 58)
265. புஷ்பலதா, யாழ்ப்பாணம், (வயது 38)
266. சதீஷ், கோண்டாவில், (வயது 7.1/2)
267. எஸ். அபிநிலா, கோண்டாவில்,
268. சதீஷ் கொட்வின், யாழ்ப்பாணம்,
270. தனுஷன், ஆனந்தபுரம்
271. எம். கௌரிநாதன், வவுனியா, (வயது 26)
272. சிவராணி, கிளிநொச்சி, (வயது 29)
273. குகப்ரியா, கிளிநொச்சி,
274. குபேந்தன், கிளிநொச்சி, (வயது 06)
275. குகப்ரியன், கிளிநொச்சி, (வயது 09)
276. லூர்தம்மா, (வயது 55)
277. குணபாலசிங்கம், வட்டக்கச்சி, (வயது 34)
278. பி. செல்வராணி, முல்லைத்தீவு, (வயது 51)
279. தர்ஷினி, கனகபுரம், (வயது 30)
280. எஸ். சயந்தன், கிளிநொச்சி, (வயது 02)
281. ஸ்ரீவித்தியா, புதுக்குடியிருப்பு, (வயது 30)
282. உதயகுமார், கிளிநொச்சி, (வயது 40)
283. கணபதிப்பிள்ளை, விசுவமடு, (வயது 52)
284. கணகப்பிள்ளை, மருதங்கேணி, (வயது 57)
285. யோகேஸ்வரி, தாளையடி, (வயது 56)
286. கே.சதாசிவம்,
287. பெயர் தரப்படவில்லை
288. தர்மரட்ணம், கிளிநொச்சி, (வயது 87)
289. விநாயகரன், கிளிநொச்சி, (வயது 21)
290. தினுஷன், முல்லைத்தீவு, (வயது 15)
291. சந்திரசேகரம், யாழ்ப்பாணம், (வயது 31)
292. கேதீஸ்வரன், ஸ்கந்தபுரம், (வயது 57)
293. கே.ஜெயந்தன், இரணைப்பாலை, (வயது 60)
294. நாகேஸ்வரி, இரணைப்பாலை, (வயது 56)
295. யதுர்ஷனா, இரணைப்பாலை, (வயது 5)
296. ஜயந்தன், கிளிநொச்சி, (வயது 5)
297. கிருஷ்ணபிள்ளை, கிளிநொச்சி, (வயது 62)
298. துஷித்ரா, கிளிநொச்சி, (வயது 12)
299. தொம்சன், கிளிநொச்சி, (வயது 03)
300. எம்.அன்ரனி, முள்ளியவளை, (வயது 50)
301. நவரத்னராசா, முல்லைத்தீவு, (வயது 50)
302. புஷ்பவதி, கிளிநொச்சி, (வயது 47)
303. துஷ்யந்தன், கிளிநொச்சி, (வயது 06)
304. லில்லி அக்னேஸ், புதுக்குடியிருப்பு, (வயது 62)
305. மதுஷாந்தி, புதுக்குடியிருப்பு, (வயது 13)
306. இசைக்கீதன், கிளிநொச்சி, (வயது 08)
307. எம்.நதீஷ்கலா, கிளிநொச்சி, (வயது 17)
308. எம். சுஜீவன், கிளிநொச்சி, (வயது 14)
309. வசந்தராணி, கிளிநொச்சி, (வயது 43)
310. பி.தயாபரன், கிளிநொச்சி, (வயது 31)
311. திருமதி.சின்னத்துரை, நெடுங்கேணி, (வயது 36)
312. குமாரசாமி, நெடுங்கேணி, (வயது 58)
313. ராசேந்திரன், யாழ்ப்பாணம், (வயது 31)
314. என்.சமோதா, முல்லைத்தீவு, (வயது 27)
315. ரி.குமாரதேவி, கிளிநொச்சி, (வயது 42)
316. கௌசிகன், முல்லைத்தீவு, (வயது 13)
317. எவறெஸ்டா, முல்லைத்தீவு, (வயது 43)
318. அருள்சேகரம், முல்லைத்தீவு, (வயது 29)
319. பேதுருப்பிள்ளை, முல்லைத்தீவு, (வயது 51)
320. கதிரமலை, வெள்ளாங்குளம், (வயது 46)
321. ஜெயந்தினி, முல்லைத்தீவு, (வயது 31)
322. சசிகரன், ஆனந்தபுரம், (வயது 20)
323. தவதர்ஷன், முல்லைத்தீவு, (வயது 16)
324. ராசையா, மருதங்கேணி, (வயது 63)
325. அசோகமாலா, ஓமந்தை, (வயது 30)
326. அன்னலட்சுமி, பரந்தன், (வயது 53)
327. இந்திகா, வெள்ளாங்குளம், (வயது 13)
328. சுஜாதா, பரந்தன், (வயது 27)
329. சிவபாக்கியம், புங்குடுதீவு (வயது 66)
330. விதுஷன், செம்பியன்பற்று (வயது 9)
331. தயானி, செம்பியன்பற்று (வயது 13)
332. ஜெயலட்சுமி, செம்பியன்பற்று, (வயது 42)
333. அடையாளம் காணப்படவில்லை.
334. பிரதீக், முல்லைத்தீவு, (வயது 15)
335. தேவராஜ்சிங்கம், ஓமந்தை, (வயது 52)
336. உதயகுமார், ஓமந்தை, (வயது 46)
337. சிந்துஜன், ஓமந்தை, (வயது 10)
338. புஷ்பலதா, முல்லைத்தீவு, (வயது 59)
339. செல்வராணி, வட்டுக்கோட்டை, (வயது 49)
340. செந்தில்வேல், முல்லைத்தீவு, (வயது 32)
341. பிரியங்கா, செம்பியன்பற்று (வயது 16)
342. வள்ளிப்பிள்ளை, முள்ளியவளை, (வயது 69)
343. விஜயகுமாரி, புதுக்குடியிருப்பு, (வயது 46)
344. வள்ளியம்மா, உவர்மலை, திருகோணமலை, (வயது 36)
345. லோகவர்ஷனி, உவர்மலை, திருகோணமலை, (வயது 02)
346. வன்னியசூரியன், செம்பியன்பற்று, (வயது 06)
347. ராசபாலன், இலாச்சி, (வயது 59)
348. நாகேஸ்வரி, (வயது 51)
349. அரவிந்தன், முல்லைத்தீவு, (வயது 31)
350. ஏ.ரத்தனியா, முல்லைத்தீவு, (வயது 29)
351. ஏ.அனுஷன், முல்லைத்தீவு, (வயது 08)
352. ராசமணி, அராலி, (வயது 60)
353. மங்களேஸ்வரி, சுன்னாகம், (வயது60)
354. அனுஷியா, இலாச்சி, (வயது 15)
355. அனுஷாந்த், சின்னவராயன்குளம், (வயது 07)
356. அர்ச்சனா, சின்னவராயன்குளம், (வயது 09)
357. மனுராஜா, செம்பியன்பற்று, (வயது 14)
358. செல்லம்மா, பொன்னாலை, (வயது 65)
359. ஸ்ரீகண்டி, வள்ளிபுனம், (வயது 30)
360. ரி.கஜீவன், சுன்னாகம், (வயது 11)
361. விஜயலட்சுமி, முல்லைத்தீவு, (வயது 45)
362. ரஜனி, சின்னவராயன்குளம், (வயது 32)
363. சுரேஷ்குமார், தாளையடி, (வயது 22)
364. தபோதினி, முள்ளியவளை, (வயது 04)
365. ரஜனி, முல்லைத்தீவு, (வயது 36)
366. சங்கீதன், முல்லைத்தீவு, (வயது 08)
367. கார்த்திகேஸ்வரி, இரணைப்பாலை, (வயது 40)
368. விஜிதரன், மல்லாவி, (வயது 23)
369. தினேஸ்கரன், மல்லாவி, (வயது 05)
370. சரோஜினிதேவி, முள்ளியன்கா, (வயது 61)
371. கிரிஷாந்த், ஆனந்தபுரம், (வயது 11)
372. விதுஷா, இயக்கச்சி, (வயது 06)
373. நவரத்தினம், இயக்கச்சி, (வயது 35)
374. என். திலுஜன், இயக்கச்சி, (வயது 09)
375. புவனா, தெல்லிப்பழை, (வயது 05)
376. சசிகரன், கிளிநொச்சி, (வயது 12),
377. கிருஷ்ணகுமாரி, கிளிநொச்சி, (வயது 10)
378. சுலஜா, முழங்காவில், (வயது 23)
379. உமாசங்கர், கிளிநொச்சி, (வயது 05)
380. புவனேஸ்வரி, இயக்கச்சி, (வயது 08)
381. திவ்யா, இயக்கச்சி, (வயது 02)
382. யோகநாதன், வவுனியா (வயது 49)
383. பிரதீபா, மடு, (வயது 04)
384. வளர்மதி, மடு, (வயது 28)
385. அழகர், கிளிநொச்சி, (வயது 53)
386. எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா, இணுவில், (வயது 41)
387. விமலாதேவி, முள்ளியவளை, (வயது 57)
388. பொன்னம்மா, இயக்கச்சி, (வயது 53)
389. சாகித்யா, மாங்குளம், (வயது 07)
90. நாகேஸ்வரி, மாங்குளம், (வயது 60)
391. தவம், புதுக்குடியிருப்பு, (வயது 50)
392. பாலசிங்கம், மாங்குளம், (வயது 52)
393. ஐங்கரன், புதுக்குடியிருப்பு, (வயது 24)
394. பாமினி, மாங்குளம், (வயது 27)
395. பெயர் தரப்படவில்லை.
396. அனடநீதன், மடு, (வயது 28)
397. செல்வநாயகம், யாழ்ப்பாணம், (வயது 52)
398. தவனேஸ்வரி, புதுக்குடியிருப்பு, (வயது 14)

வன்னியிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியாவின் உதவியை ஏற்க இலங்கை தயார்

puthumaattalan-hospital.gifமோதல் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இலங்கை தெரிவித்திருக்கின்றது.

பொதுமக்களின் துன்பம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகளவு அக்கறைகொண்டுள்ளது என்றும் இது தொடர்பான இந்தியாவின் உணர்வுகளை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம் எனவும் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் சி.ஆர்.ஜயசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான தனது ஆர்வத்தை இந்தியா முறைப்படி வெளியிட்டுள்ளது. இந்தியா போன்ற நட்பு நாடுகளின் உதவியை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்று ஜயசிங்க கூறியுள்ளார். ஆனாலும் களநிலை யதார்த்தத்திலேயே இது தொடர்பான தீர்மானம் தங்கியிருப்பதாக கொழும்பு தெரிவித்துள்ளது.

வெளியேற்றும் திட்டம் தொடர்பான விபரங்கள் பின்னர் தயாரிக்கப்படும். இது களநிலைவரத்தைப் பொறுத்ததாகும். பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் அரசின் திட்டத்துக்கு புலிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் ஜயசிங்க கூறியுள்ளார்.

சகல பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும் வன்னியில் மோதலுக்கிடையே அகப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவத் தயாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தெரிவித்ததை தூதுவர் ஜயசிங்க வரவேற்றுள்ளார்.

“இதுவொரு ஆக்கபூர்வமான அறிக்கை. களநிலை யதார்த்தத்தை மிகச்சரியாக பிரதிபலிக்கும் அறிக்கையாக அது உள்ளது. சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாக முன்னோக்கிச் செல்வதை வெளிப்படுத்தும் அறிக்கை அதுவெனவும் ஜயசிங்க கூறியுள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து அழைத்துவரப்பட்டோரில் 442 பேர் வவுனியாவுக்கு அனுப்பிவைப்பு

trico-hospital.gifநேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிவரை, முல்லைத்தீவிலிருந்து கப்பலில் திருகோணமலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் அழைத்துவரப்பட்ட காயமடைந்த 1212 பொதுமக்களில் 442 பேர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 437. அதன் விபரம் வருமாறு:

பொலன்னறுவை178, கந்தளாய்160, தம்பலகமம்07, கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை32. திருகோணமலை ஆஸ்பத்திரியில் 322 பேரும் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 35 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி 11 தொடக்கம் பெப்ரவரி 19 ஆம் திகதிவரை திருகோணமலை ஆஸ்பத்திரியில் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 490 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு: பெப்ரவரி 11 முதல் 17 வரை 394 பேர், பெப்ரவரி 1868 பேர், பெப்ரவரி1928.

முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை 1212 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு. பெப்.11-368, பெப் 12-404, பெப் 16-440. இவர்களில் இருவர் மட்டுமே திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். ஒருவர் ஆசிரியர் மற்றவர் இன்னும் அடையாளங் காணப்படவில்லை.

புதுக்குடியிருப்பை கைப்பற்றும் முயற்சியில் படையினர் தீவிரம்

truck.jpgமுல்லைத் தீவில் விடுதலைப்புலிகள் வசமிருக்கும் கடைசி நகரான புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் சுற்றிவளைத்து வருவதாகவும் அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.

பரந்தன் முல்லைத்தீவு வீதிகளில் (ஏ35) பரந்தனுக்கு தென்கிழக்கே சுமார் 35 கிலோமீற்றர் தூரத்தில் புதுக்குடியிருப்பு உள்ளது. இந்த வீதியிலுள்ள புதுக்குடியிருப்பு நகர் மட்டுமே தற்போது புலிகள் வசமிருப்பதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக புதுக்குடியிருப்புக்கு மேற்கே படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் மூலம், புதுக்குடியிருப்புக்கு மேற்கே சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்த அம்பலவன் பொக்கணைப் பகுதியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை படையினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து மேலும் முன்னேறி புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைய முயற்சித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு திசைகளில் சுற்றிவளைத்து வருவதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இந்த மூன்று முனைகளிலும் 58 ஆவது படையணி புலிகளுடன் கடும் சமரில் ஈடுபட்டதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர்.  இப் பகுதிகளில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்ததில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு

human-rights-watch.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகள் மீது அரச இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் வடபுலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயங்களில் சாமானியப் பொதுமக்களை இலங்கை இராணுவம் இரக்கமின்றி கொன்றுவருகிறது என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட அந்தரங்க கள விசாரணைகளின்போது மக்கள் வழங்கிய வாக்குமூலங்களை ஆதாரமாகக்கொண்டு குறிப்பிட்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், “பொதுமக்களைக் குறிவைத்து பாதுகாப்பு வலயங்களையும் மருத்துவமனைகளையும் இலங்கை இராணுவம் ஷெல் குண்டுகளை இறைத்துத் தாக்கிவருகிறது” என்று சாடியிருக்கிறது.

இக்குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவருவதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றம்சாட்டியது.

ஆனால் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே அப்படிச் செய்வதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கிறார்கள்.

படையினர் அம்பலவான்பொக்கனைப் பகுதியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்

ambalawan-pokkana.jpg
இராணுவத்தின் 58வது படையணியினர் இன்று (பெப்:20) பிற்பகல் அம்பலவான் பொக்கனைப் பகுதியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று காலை எல்ரிரிஈயின் பலமான தளங்களை தகர்த்துக்கொண்டு முன்னேறிய 10வது காலால் படைப்பிரிவினரும் 6வது கெமுனு படைப்பிரிவினரும் இப்பகுதியை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் பயங்கரவாதிகளின் 7 சடலங்களையும் அவர்களின் ரி-56 ரக துப்பாக்கிகளையும் கைபற்றியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினர் புதுக்குடியிருப்பு நகருக்கு வடக்காகவும் தெற்காகவும் தாக்குதல் தொடுத்துக் கொண்டு நகரை நோக்கி முன்னேறி வருகின்றனர் எனவும், அம்பலவானன்பொக்கனைக் கிராமம் சாலைக்களப்பு மேற்கில் களப்பு ஓரத்தில் தனிப்பட்ட கிராமமாகும். இது புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்காக 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.