முல்லைத்தீவிலிருந்து அழைத்துவரப்பட்டோரில் 442 பேர் வவுனியாவுக்கு அனுப்பிவைப்பு

trico-hospital.gifநேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிவரை, முல்லைத்தீவிலிருந்து கப்பலில் திருகோணமலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் அழைத்துவரப்பட்ட காயமடைந்த 1212 பொதுமக்களில் 442 பேர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 437. அதன் விபரம் வருமாறு:

பொலன்னறுவை178, கந்தளாய்160, தம்பலகமம்07, கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை32. திருகோணமலை ஆஸ்பத்திரியில் 322 பேரும் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 35 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி 11 தொடக்கம் பெப்ரவரி 19 ஆம் திகதிவரை திருகோணமலை ஆஸ்பத்திரியில் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 490 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு: பெப்ரவரி 11 முதல் 17 வரை 394 பேர், பெப்ரவரி 1868 பேர், பெப்ரவரி1928.

முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை 1212 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு. பெப்.11-368, பெப் 12-404, பெப் 16-440. இவர்களில் இருவர் மட்டுமே திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். ஒருவர் ஆசிரியர் மற்றவர் இன்னும் அடையாளங் காணப்படவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *