ராஜபக்ஷ கோ ஹோம் (go home)’ அன்று ‘யூலி ஜங் கோ ஹோம் (go home)’ இன்று – நாமல் ராஜபக்சவை சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர் !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் பொதுஜன பெரமுன இ கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பும் நடைபெற்றது. சீன சார்பு ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் அமர்த்தியதில் யூலி ஜங்கின் ஈடுபாடு கணிசமானது எனத் அன்று செய்திகள் வெளிவந்திருந்தது.
இதன் பின்னணியில் யூஎஸ்எய்ட் ஓரினச்சேர்க்கையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு நிதி வழங்கியதை கலாச்சாரச் சீரழிவாகக் காட்டி தீவிர சிங்கள தேசியவாதிகள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தற்போதைய டொனால் ட்ரம்மின் அரசு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை திருப்பி அழைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ‘யூலி ஜங் கோஹோம்’ என்ற பதாகைகளையும் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, கோட்டபாய ராஜபக்ச பதவியிறக்கப்பட்டதற்குப் பின்னால் அமெரிகத் தூதுவர் யூலி ஜங் நின்றார் என்றும் குற்றச்சாட்டுக்களை போராட்டகாரர்கள் முன்வைத்தனர். இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க தூதுவர் யூலி ஜங் நாமல் ராஜபக்சவை நேற்றுச் சந்தித்துள்ளார். அனுர அரசின் கரங்கள் ராஜபக்சக்களை நெருக்குவதுடன் அவரை தற்போது குடியிருக்கும் வீட்டிலிருந்து கிளப்பவும் அனுர முயற்சி எடுக்கின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.
இந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ள USAID நிதியுதவி தொடர்பாகவே இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவ்விடயம் பற்றி பேசுவதற்கு இவர்கள் இருவருக்குமே ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் இவர்கள் வேறு விடயங்களையே பேசியிருக்க வேண்டும் என அவதானிகள் கருதுகின்றனர்.
அத்துடன்இ தங்களுடைய ஆட்சியை கலைத்ததை மனதில் இருத்தி, இச்சந்திப்பில்இ அமெரிக்கா தலையிடாத வெளிநோக்குக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும்இ அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் பயன்படுத்தப்படும் விதத்தில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதையும் நாமல ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக இலங்கையின் உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் USAIDஉள்ளிட்ட அமெரிக்க தனியார் நிறுவனங்கள் பாரிய தலையீடு செய்ததாகவும் , அவற்றினுடைய கணக்கு வழக்குகளை இலங்கை அரசாங்கம் முறையான விசாரணைகளுக்குட்படுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ கோரியிருந்த நிலையில், அமெரிக்க தூதுவரின் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.
மேலும் பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் பாரிய பேசுபொருளாக நேற்று மாறியிருந்த நிலையில் , அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனம் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபையில் குறிப்பிட்டுள்ளார்.
10.9: அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் ‘இலங்கை, பங்களாதேஸ்,உக்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 09 நாடுகளின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக யு. எஸ். எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 260 மில்லியன் டொலரை செலவு செய்துள்ளதாக’ பதிவேற்றம் செய்துள்ளார் என்ற தகவல் உலக நாடுகளிடையே பாரிய பேசுபொருளாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தை தேசம்நெற் அரகலய போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது