USAID

USAID

ராஜபக்ஷ கோ ஹோம் (go home)’ அன்று ‘யூலி ஜங் கோ ஹோம் (go home)’ இன்று – நாமல் ராஜபக்சவை சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர் !

ராஜபக்ஷ கோ ஹோம் (go home)’ அன்று ‘யூலி ஜங் கோ ஹோம் (go home)’ இன்று – நாமல் ராஜபக்சவை சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர் !

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் பொதுஜன பெரமுன இ கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பும் நடைபெற்றது. சீன சார்பு ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் அமர்த்தியதில் யூலி ஜங்கின் ஈடுபாடு கணிசமானது எனத் அன்று செய்திகள் வெளிவந்திருந்தது.

இதன் பின்னணியில் யூஎஸ்எய்ட் ஓரினச்சேர்க்கையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு நிதி வழங்கியதை கலாச்சாரச் சீரழிவாகக் காட்டி தீவிர சிங்கள தேசியவாதிகள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தற்போதைய டொனால் ட்ரம்மின் அரசு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை திருப்பி அழைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ‘யூலி ஜங் கோஹோம்’ என்ற பதாகைகளையும் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, கோட்டபாய ராஜபக்ச பதவியிறக்கப்பட்டதற்குப் பின்னால் அமெரிகத் தூதுவர் யூலி ஜங் நின்றார் என்றும் குற்றச்சாட்டுக்களை போராட்டகாரர்கள் முன்வைத்தனர். இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க தூதுவர் யூலி ஜங் நாமல் ராஜபக்சவை நேற்றுச் சந்தித்துள்ளார். அனுர அரசின் கரங்கள் ராஜபக்சக்களை நெருக்குவதுடன் அவரை தற்போது குடியிருக்கும் வீட்டிலிருந்து கிளப்பவும் அனுர முயற்சி எடுக்கின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.

இந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ள USAID நிதியுதவி தொடர்பாகவே இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவ்விடயம் பற்றி பேசுவதற்கு இவர்கள் இருவருக்குமே ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் இவர்கள் வேறு விடயங்களையே பேசியிருக்க வேண்டும் என அவதானிகள் கருதுகின்றனர்.

அத்துடன்இ தங்களுடைய ஆட்சியை கலைத்ததை மனதில் இருத்தி, இச்சந்திப்பில்இ அமெரிக்கா தலையிடாத வெளிநோக்குக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும்இ அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் பயன்படுத்தப்படும் விதத்தில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதையும் நாமல ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக இலங்கையின் உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் USAIDஉள்ளிட்ட அமெரிக்க தனியார் நிறுவனங்கள் பாரிய தலையீடு செய்ததாகவும் , அவற்றினுடைய கணக்கு வழக்குகளை இலங்கை அரசாங்கம் முறையான விசாரணைகளுக்குட்படுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ கோரியிருந்த நிலையில், அமெரிக்க தூதுவரின் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

மேலும் பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் பாரிய பேசுபொருளாக நேற்று மாறியிருந்த நிலையில் , அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனம் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபையில் குறிப்பிட்டுள்ளார்.

 

10.9: அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் ‘இலங்கை, பங்களாதேஸ்,உக்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 09 நாடுகளின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக யு. எஸ். எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 260 மில்லியன் டொலரை செலவு செய்துள்ளதாக’ பதிவேற்றம் செய்துள்ளார் என்ற தகவல் உலக நாடுகளிடையே பாரிய பேசுபொருளாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தை தேசம்நெற் அரகலய போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது

கலாச்சார அழிப்புக்கும் மக்கள் தொகையை குறைக்கும் திட்டங்களுக்கும் யு.எஸ் எய்ட் நிதியளிப்பு – விமல் வீரவன்ச

கலாச்சார அழிப்புக்கும் மக்கள் தொகையை குறைக்கும் திட்டங்களுக்கும் யு.எஸ் எய்ட் நிதியளிப்பு – விமல் வீரவன்ச

இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச,

“யு.எஸ் எய்ட்டினர் பல்வேறு வகையான மாற்றங்களை ஊக்குவித்தனர், குறிப்பாக இளைஞர்களிடையே LGBTQ சமூகப் பிரச்சாரம் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பில் பெரும் ஊக்குவிப்புகளில் ஈடுபட்டனர். 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது ஒரு பெரிய தொகை. இந்த திட்டங்கள் பாலின மாற்றத்தை ஊக்குவிக்கவும் இறுதியில் மக்கள் தொகையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நமது கலாச்சாரத்தை அழிக்க வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சிகள் மூலம் இந்த நாட்டு மக்கள் விலைக்கு வாங்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களும் நிதியளிக்கப்பட்டுள்ளனர்,” என்று கூறியதுடன் எதிர்காலத்தில் அவர்களின் பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ USAID இலங்கையின் உள்ளூர் அரசியல் விடயங்களில் தலையீடு செய்ததாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பெயரில் உள்ள எக்ஸ் கணக்கை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை – USAID நிதி முடக்கம்: நெருக்கடியில் அரச சார்பற்ற அமைப்புகள்

வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை – USAID நிதி முடக்கம்: நெருக்கடியில் அரச சார்பற்ற அமைப்புகள்

யு.எஸ்.எய்ட் (United States Agency for International Development) வழங்கும் நிதியை முடக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் அறிவிப்பால், இலங்கையின் சமூக மற்றும் மனித உரிமை சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் 1,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

யு.எஸ்.எய்ட் ஆதரவில் செயற்படும், மக்களாட்சி, மனித உரிமைகள், நல்லாட்சி, பெண்கள் உரிமைகள், LGBTQ உரிமைகள் போன்ற சமூக நீதியை முன்வைக்கும் பல்வேறு அமைப்புகள் தற்போது இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல அமைப்புகள் பணியாளர்களை நீக்கி, திட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய சூழ்நிலையை சந்திக்கவுள்ளன. அரசு சார்பற்ற நிறுவன செயலகத்தின் மதிப்பீடுகளின்படி, இலங்கையில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பெற்ற மொத்த நிதியில் கிட்டத்தட்ட அரைவாசி யு.எஸ்.எய்ட் வழங்கிவந்துள்ளது. இது கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 15 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணாங்களிலும் பல்வேறு செயற்திட்டங்கள் கருத்தரங்குகள் யு.எஸ்.எய்ட்டின் உதவியால் இடம்பெற்றுவருகின்றன.

டொனால்ட் ரம்பின் “America First” கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முடக்கம் கருதப்படுகிறது. ட்ரம்ப் சர்வதேச உதவிகளை வெகுவாகக் குறைத்து, அமெரிக்காவின் உள்நாட்டு செலவுகளை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றார்.

இதனிடையே, USAID நிறுவனத்திற்குள் எலோன் மஸ்கின் குழுவினருக்கு அணுகல் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் USAIDஐ “குற்றவியல் அமைப்பு” என விமர்சித்து, “இதை அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என தெரிவித்திருந்தார். இதையடுத்தே இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யு.எஸ்.எய்ட், 2023ஆம் ஆண்டு மட்டும் 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 72 பில்லியன் டொலர் உதவி வழங்கியது. இந்த நிதி நிறுத்தம், இலங்கையில் இயங்கும் பல்வேறு சமூக அமைப்புகளை பொருளாதார ரீதியாக கடும் பாதிக்கக்கூடும். முன்னணி அமைப்புகள், மாற்று நிதி ஆதாரங்களை தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன என தெரியவருகின்றது.

புதிய ஜனாதிபதி டொனால் ட்ரமின் மற்றுமொரு அநீதியான கொள்கையான குடிவரவாளர்களைத் திருப்பி அனுப்பும் நடைமுறையால் 3,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களும் திருப்பி அனுப்பப்படும் நிலை அங்கு தோண்றியுள்ளது.

அமெரிக்காவின் தீவிர வலதுசாரி அரசானது தற்போது உலக ஒழுங்கில் பாரிய மாற்றங்களையும் தவறான முன்ணுதாரணங்களையும் ஏற்படுத்துகின்றது. இது தொடர்பில் கேளீர் ஊடகத்திற்கு தேசம் ஜெயபாலன் வழங்கிய நேர்காணலில் டொனால் ட்ரம் பற்றி வருமாறு தெரிவிக்கின்றார்:

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரத்திற்கு அழுத்தம் – USAID

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்து இலங்கை மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தம் காரணமாக சர்வதேச சமூக வலைத்தள நிறுவனங்கள் குற்றவியல் வழக்குகளுக்கு உட்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு USAID உதவி !

நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் ($42) உதவித்தொகை வீதம்  வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID) முன்வந்துள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாதாந்த வருமானம் 41,500 ரூபாவுக்கும் குறைவாக பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக அந்த மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு இத்தொகையை வழங்குமாறு USAID அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த தொகை ஜனவரி மாதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு 08 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகளுக்கு 10,000 முதல் 20,000 ரூபாய் வரை வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 04 பில்லியன் ரூபாவை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 04 பில்லியன் ரூபா எதிர்வரும் ஜனவரி மாதம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என கமநல மக்கள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், 1 ஹெக்டேர் வரை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, 10,000 ரூபாயும், 2 ஹெக்டேர் வரை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, 20,000 ரூபாவும் வழங்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து இந்தப் பணம் மீள அறவிடப்பட மாட்டாது என்றும், இந்த சர்வதேச உதவிகள் அனைத்தும் நாட்டின் விவசாயிகளுக்கு இலவச மானியமாக வழங்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் கூறுகிறார்.

இலங்கை விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் – சமந்தா பவர்

நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.

நேற்றையதினம் (10) இலங்கை வந்தடைந்த அவர், ஜா எல பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இங்குள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்ததாகவும், எரிபொருள் நெருக்கடி, உரமின்மை காரணமாக விவசாயிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய, இலங்கை விவசாயிகளின் தேவைகளுக்காக அமெரிக்க மக்களிடமிருந்து மேலதிகமாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளதாகவும், இதன் மூலம் 1 மில்லியன் உள்ளூர் விவசாயிகள் உரம் மற்றும் அவர்களுக்கு அவசியமானவற்றை பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இந்த புதிய நிதியானது, அடுத்த பயிர்ச்செய்கைப் பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விவசாயத் தேவைகள் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் பெறுவதற்கும், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவும் வகையிலும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார்.

நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில், இலங்கைக்கு நிதி உதவி வழங்கியதற்காக இந்தியாவைப் பாராட்டியுள்ள சமந்தா பவர், அமெரிக்கா இந்தியா மற்றும் இலங்கை மக்களின் அனைத்து நண்பர்களுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக வலியுறுத்தினார்.

IMF திட்டம் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், IMF உடனான ஈடுபாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்றும், IMF திட்டத்தைப் பெறுவதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாகவும், பூர்வாங்க ஒப்பந்த நிலையை எட்டியுள்ள இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், நாட்டில் கடன் தொல்லைகள் கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகவும், அரசாங்கமும் இலங்கையர்களும் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த தேவையான கடனை எவ்வாறு பெறுவது என்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.