புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்

“உலகதமிழர் பேரவை மற்றும் அதன் கூட்டாளிகளின் துரோக முயற்சியை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.” – புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாக அறிக்கை !

உலகதமிழர் பேரவை மற்றும் அதன் கூட்டாளிகளின் துரோக முயற்சியை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் – அவர்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை-என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கூட்டாக விடுத்துள்ள அறிக்கையொன்றில் புலம்பெயர் அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளதாவது.

 

2009 ஆம் ஆண்டு, தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த உலகளாவிய தமிழ் குடை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உலகளாவிய தமிழ் அமைப்புகள் உணர்ந்தன. ஆரம்பத்தில், அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான மற்றும் அடிப்படை வேணவாக்களை முன்னேற்றுவதற்காக உலகத் தமிழர் பேரவையை (GTF) உருவாக்கினர்.

 

ஒரு சில ஆண்டுகளுக்குள், GTF ஒரு சில நபர்களால் சனநாயகமற்ற முறையில் கையகப்படுத்தப்பட்டதனால், தமிழ் மக்களின் நியாயமான மற்றும் அடிப்படையான வேணவாக்களிலிருந்து விலகியது. இதன் விளைவாக, கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தவிர மற்ற அனைத்து அங்கத்துவ அமைப்புகளும் GTF இலிருந்து தாமாகவே விலகிக்கொண்டதனால் இந்த அமைப்பை அடிமட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவின்றி நிற்க வழிவகுத்தது. இன்றுவரை, GTF மற்றும் CTC ஆகிய இரண்டும் நடந்த இனப்படுகொலைக்காக அல்லது தமிழ் மக்களின் நியாயமான மற்றும் அடிப்படை கோரிக்கைகளுக்காக வாதிட மறுத்துவிட்டதன் மூலம், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தமிழ் மக்களைக் கைவிட்டுள்ளனர்.

பின்னர், GTF இலிருந்து வெளியேறிய 14 நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளில் பெரும்பாலானவை அனைத்துலக ஈழத்தமிழர் அவையை (ICET) உருவாக்கினர். இதில் 2008 முதலாவது மக்களவை ஆரம்பிக்கப்பட்டு இன்று 14 நாடுகளில் மக்களவைகள் இயங்குகின்றன இது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக தொடர்ந்து வாதிட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு முதல், ICET உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைந்துள்ளதுடன், தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியையும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நீண்டகால அரசியல் தீர்விற்காகவும் அங்கம் வகிக்கும் நாட்டு அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்று தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைமை மோசமாகி, அவர்களின் தாயகத்தில் அடிப்படை உரிமைகள் அற்ற திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையினால் ரத்துசெய்யுமாறு பணிக்கப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம், சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை நினைவுகூரும் தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் இலங்கை அரசால் பயன்படுத்தப்படுகிறது.

தொல்பொருள் திணைக்களம் மற்ற மதத் தலங்களை அழித்து, அந்த புனிதத் தலங்களுக்குப் பதிலாக பௌத்த நினைவுச்சின்னங்களைக் இரவோடிரவாக திணித்து அந்த இடங்களை பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு உரிமை கோருகிறது. பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழர் தாயகத்தில் 1000 பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதாக இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

கடந்த ஏழு தசாப்தங்களில் தமிழ்த் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ததற்கான நீண்ட ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

அவ்வாறாயினும், தீர்மானங்களின் பரிந்துரைகள் எதிலும் இதுவரை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உறுதியான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் உள்ள 30 சரத்துக்களையும், இலங்கை தண்டனையின்றி மீறியுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு காரணமான ஒவ்வொரு சிங்கள சிப்பாயையும் பாதுகாப்பதாக சபதம் செய்து இலங்கையில் தற்போதைய தலைமை உட்பட அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தன.

எனவே, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை எந்த வகையிலும் உண்மையான நீதியை நிலைநாட்டும் அல்லது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் என எவரும் எதிர்பார்க்க முடியாது.

2024 ஆம் ஆண்டில், UNHRC க்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறியவற்றின் அடிப்படையில், இலங்கை மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை ஏமாற்ற விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, GTF மற்றும் அதன் சதிகாரர்களின் சில தனிநபர்களின் துரோக முயற்சியானது, ஏமாற்றுக்காரர்களுடன் பேரம் பேசும் போலிக்காரணத்தின் கீழ் இலங்கையை சர்வதேச சமூகத்திலிருந்தும் UNHRC ஆய்விலிருந்தும் பாதுகாக்கும் வெறுக்கத்தக்க முயற்சியாகும்! தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் சீர்குலைக்கும் முயற்சியே இந்த “நிகழ்ச்சி.”

இந்த ஏமாற்று முயற்சிகளை புறக்கணிக்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அரைகுறையான தீர்வு தமிழ் தேசத்தின் பாதுகாப்பை மேலும் சீரழிக்கும். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் பரிகார நீதியை வழங்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் நீண்டகால அரசியல் தீர்வைக் காண உதவ வேண்டும்.

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள் – ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!