ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

“இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள்.” – சரத் பொன்சேகா விசனம் !

“இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நாட்டை சீரழித்தவர்களில் முன்னணியில் இருப்பவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. அவரது பெயர் நினைவுக்கு வரும் போதெல்லாம் குமட்டல் வருகிறது.

கராத்தே பயிற்சியில் கறுப்பு பட்டியை பெற்றவர், ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளார். அந்த கறுப்புப்பட்டி பெற்றவர் தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்.அத்துடன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள். நாடாளுமன்றத்தில் எம்மை காணும் போது புன்னகை செய்வார்கள்.

நாங்களும் கைக்காட்டி விட்டு செல்வோம். எனினும் அருவருப்பு, இவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க வேண்டும். போராட்டம் அதிகரித்து வந்த நேரத்தில் மோசடியான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அச்சத்தில் நாடாளுமன்றத்திற்கும் செல்லவில்லை. வீ.8, பீ.எம்.டப்ளியூ போன்ற வாகனங்களை காண முடியாமல் போனது.

மலர் மாலைகளை அணிந்துகொள்ள எங்கும் செல்லவுமில்லை. எங்கும் பட்டாசும் வெடிக்கப்படவில்லை. பெயர் பலகைகளில் பெயர்களையும் காட்சிப்படுத்தவில்லை. போராட்டம் இவர்களுக்கு செய்தி ஒன்றை வழங்கியதே இதற்கு காரணம். இந்த மோசடியான கலாசாரத்தை மாற்ற வேண்டுமாயின் அந்த செய்தி சென்றே ஆக வேண்டும்.

மோசடியாளர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருக்க வேண்டுமாயின் போராட்டத்தின் சமிக்ஞை நாட்டுக்கு செல்ல வேண்டும்” எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ !

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட இருவருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 04ஆம் திகதி அறிவித்தல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தம்மை கைது செய்வதைத் தவிர்க்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம். தயாராக இருக்குமாறு எதிர்க்கட்சிக்கு ஆளுந்தரப்பு சவால் !

நாம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் அதற்கு எதிர்கட்சிகள் தயாராக இருங்கள் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மாகாணசபை தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை எதிர்கட்சியினர் தேர்தலை நடத்தக்கோரினால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கமும் தயாராக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இதே நேரம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல் நிலை காரணமாக விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்து வருகின்றது என வெளியாகியுள்ள செய்தி குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ , “

எந்தத் தேர்தலையும் எந்த வேளையிலும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. ஆனால், ராஜபக்ச அரசுக்கு தேர்தலை எதிர்கொள்ளும் திராணி இல்லை. அதனால்தான் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு இந்த அரசு நீடித்தது. இப்போது விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்து வருகின்றது என வெளியாகியுள்ள செய்தி வேடிக்கையாகவுள்ளது.எந்தத் தேர்தல் நடந்தாலும் ராஜபக்ச அரசு படுதோல்வியடைவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் தெிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை பாராளுமன்றில் பைத்தியம் என அழைத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ !

இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பைத்தியம் என அழைத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பின்னர் அதனை மீள பெற்றார்.

பாடசாலை மாணவர்களிற்கு சீருடையை விநியோகிப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியவேளையே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சஜித் பிரேமதாசவை பைத்தியம் எனக் குறிப்பிட்டார்.

UPDATE : Johnston Fernando acquitted

குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதிலளித்த பின்னரும் எதிர்க்கட்சித் தலைவர் அது குறித்து தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

தன்னை அமைச்சர் அவ்வாறு அழைத்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது கருத்தினை வாபஸ் பெற்ற அதேவேளை ரணில் விக்கிரமசிங்க ஒரு முறை சஜித் பிரேமதாசவை முட்டாள் எனத் தெரிவித்தார் எனக் குறிப்பிட்டார்.

எனினும் அதற்கு பதிலளிக்காத சஜித் பிரேமதாச அரசாங்கம் பாடசாலை சீருடை விடயத்தில் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகின்றது எனக் குறிப்பிட்டார்.