ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ

இலங்கைக்கு உதவ சர்வதேசநாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை – கோத்தாபாய என்ன செய்ய போகிறார்..?

மோசமான பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பதவியில் இருக்கும் வரை அந்த நிதியுதவிகளை வழங்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி  இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து  மீண்டு வருவதற்கு தீர்வாக அப்போதைய நிதியமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் டொலர் நிதி உதவி கோரியிருந்தார்.

எனினும் அந்த நிதி உதவி கோட்டாபய ராஜபக்ச இல்லாத அரசாங்கத்திற்கே வழங்கப்படும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதென உங்களுக்கு தெரியுமா? புதிய அரசாங்கத்திற்கே நாங்கள் உதவுவோம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தற்போது புதிய வைன் பழைய போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ளது. இன்னமும் அமைச்சரவை ஒன்று நியமிக்க முடியாமல் போயுள்ளது. கோட்டாபய இல்லாத அரசாங்கம் ஒன்றிற்கே உதவிகள் கிடைக்கும். எனினும் தற்போது அரசாங்கம் ஒன்றே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

“2006 முதல் என்னிடம் கைத்துப்பாக்கியொன்று இருப்பது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு தெரியும்” – சம்பிக்க ரணவக்க

“2006 முதல் என்னிடம் கைத்துப்பாக்கியொன்று இருப்பது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு தெரியும்” என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தன்னிடமுள்ள கைத்துப்பாக்கி குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவர் சட்டவிரோத ஆயுதமொன்றை வைத்திருக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சம்பிக்க ரணவக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்றவேளை 2006 இல் தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கியொன்றை கொள்வனவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவ்வேளை நான் நிறுவனமொன்றின் இயக்குநராக ஜனாதிபதியாக பதவிவகித்த மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டேன். இதனை தொடர்ந்து எனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது இது கோத்தபாய ராஜபக்சவிற்கு தெரியும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ

“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது” என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முனையத்தை விற்க முன்னைய அரசாங்கம் ஓர் உடன்படிக்கை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டினுள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு அல்லது சுயாதீனத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படுவதாக குற்றம் சாட்டி வர்த்தக சங்கத்தினர் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.