உதித லொக்கு பண்டார மஹிந்த

உதித லொக்கு பண்டார மஹிந்த

மஹிந்த ராஜபக்ஷவின் போலி கையெழுத்தை வைத்து 30 மில்லியன் ரூபா வரை மோசடி !

முன்பு ஜனாதிபதியாக இருந்த போது  மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் சம்பளக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்போது பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரதமர் மஹிந்தவின் கையொப்பத்தை போலியாக இட்டு ஏ.ரி.எம் அட்டையினூடாகவே இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் உதித லொக்கு பண்டார மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகக் கடமையாற்றினார்.

இந்நாட்டில் வாழ்ந்து மறைந்த புகழ்பெற்ற அரசியல்வாதியான விஜேமு லொக்கு பண்டாரவின் புதல்வனான உதித லொக்கு பண்டார ஒருமுறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதுடன் கடந்த பொதுத் தேர்தலில் அப்புத்தளை பிரதேசத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.