இலங்கை கட்டுமான தொழிலாளர்கள்

இலங்கை கட்டுமான தொழிலாளர்கள்

வேலையிழக்கும் 1.2 மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்கள் !

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75% தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 300,000 தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்கு மறைமுகமாகப் பங்களிக்கின்றனர். இருப்பினும் அடுத்த மாதத்துக்குள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.2 மில்லியன் மக்கள் வேலையின்மையை எதிர்கொள்வர் என தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம்.டி. போல் குறிப்பிட்டார்.

தற்போது 90% ஆன கட்டுமானப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

800,000 முதல் 900,000 வரையிலான பணியாளர்கள் கட்டுமானத் துறையின் மூலம் நாட்டுக்கு நேரடியாக பங்களிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பல கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் வேலையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.