ஹிஸ்புல்லா

ஹிஸ்புல்லா

பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா, ஹிஸ்புல்லா போன்ற குறைவிருத்தி அரசியல் வாதிகள் தமிழ் – முஸ்லீம் உறவை சிதைக்கின்றனர் !

பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா, ஹிஸ்புல்லா போன்ற குறைவிருத்தி அரசியல் வாதிகள் தமிழ் – முஸ்லீம் உறவை சிதைக்கின்றனர் !

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா போன்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த போதும் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்கின்றனர் எனக் குற்றம்சாட்டுகின்றார் ஓய்வுபெற்ற சட்டத்தரணியும் அரசியல் செயற்பாட்டாளருமான மொகமட் நிஸ்தார். இவர் தேசம்நெற்க்கு முஸ்லீம் விவாவகம் விவாகரத்து பற்றிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார். ஹிஸ்புல்லா அர்ச்சுனாவை பைத்தியம் என்றும் அவருக்கு வைத்தியம் செய்யப்பட வேண்டும் என்று சொல்வதும் அர்ச்சுனா ஹிஸ்-ஃபுல் என்றும் முளையில் எதுவுமில்லை என்று சொல்வதும் ஒன்பது வயதுப் பெண் பிள்ளையோடு உடலுறவுக்கு அனுமதிப்பவன் படித்தவனா நான் படித்தவனா என்றெல்லாம் பேசவது நாகரீகமாகத் தெரியவில்லை என்றார் மொகமட் நிஸ்தார்.

இலங்கையில் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் என மூன்று தனிநபர் சட்டங்கள் உள்ளன எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் விவாவகம் – விவாகரத்து தொடர்பில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சலீம் மஸ்ரூப் அவர்கள் இந்த முஸ்லீம் சட்டத்தை திருத்துவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளார் அதே போல் தற்போது ரணிலின் கட்சியில் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்றுள்ள பைசர் முஸ்தபாவினுடைய தந்தையும் ஒரு பரிந்துரையை வழங்கியிருந்தார். இதில் எந்த பரிந்துரையை தெரிவு செய்வதென்பதில் முஸ்லீம் சமூகம் ஒரு முடிவுக்கு வரமுடியாதுள்ளனர் என்கிறார் மொகமட் நிஸ்தார்.

அன்றைய பாராளுமன்ற விவாதத்தில் அர்ச்சுனா பேசியது தவறல்ல எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் அவர் விடயத்தை புரியாமல் தெரியாமல் பேசியதே தவறு என்றார். மேலும் முஸ்லீம் சமூகம் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையை இதுவரை நடைமுறைக்கு கொண்டு வராதது தான் இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

ஹிஸ்புல்லாவின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் – அனைத்து கணக்குகளையும் முடக்கும் திட்டம் தீவிரம் !

ஹிஸ்புல்லாவை  ஆதரிப்பதாகக் கூறும் வங்கி கிளைகளைக் குறிவைத்து, லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனான் முழுவதும் அல்-கார்ட் அல்-ஹசன் கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை இலக்கு வைத்து நேற்றையதினம் (21.10.2024) 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெய்ரூட்  விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லெபனானில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்தாகவும் கூறப்படுகின்றது.

எச்சரிக்க வழங்கிய சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு முதல் விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது. ஹிஸ்புல்லாவை ஆதரிப்பதாகக் கூறும் அல்-கார்ட் அல்-ஹசன் வங்கியின் கிளைகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த வங்கியின் கிளைகள் பெரும்பாலும் பரபரப்பான மாவட்டங்களில் குடியிருப்பு கட்டிடங்களின் தரை தளத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் முழுவதும் இந்த வங்கியின் 34 கிளைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“ஹிஸ்புல்லா அமைப்பு அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்த தளங்களை குறிவைத்தது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) நேற்று (21.10.2024) காலை ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

அல்-கார்ட் அல்-ஹசன் ” ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடியாக நிதியளிக்கின்றது. ஆயுதங்கள் கொள்வனவு மற்றும் ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவில் உள்ள செயல்பாட்டாளர்களுக்கு பணம் செலுத்துதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த வங்கியூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக யுத்தத்திற்கு மத்திய கிழக்கு தயாராகின்றது! : த ஜெயபாலன்

கிரிமினல் மோசடிக் குற்றவாளியான இஸ்ரேலின் ஆட்சித் தலைவர் பென்ஜமின் நெத்தன்யாகு தன்னுடைய பதவியைத் தக்க வைக்க, ஆரம்பித்த காஸாவுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம் உலக யுத்தமாக மாறுகின்றது. யுத்தம் நிறுத்தப்பட்டால், தான் ஆட்சியில் இருக்க முடியாது; என்பதை நன்கு உணர்ந்த மேற்கின் நண்பனான பென்ஜமின் நெத்தன்யாகு லெபனானோடும் ஈரானோடும் வலிந்த மோதல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அரசின் முழு ஆதரவையும் பெற்றுள்ள, இஸ்ரேலுடைய இராணுவ பலம் மத்திய கிழக்கில் யாரையும் அடித்து வீழ்த்தும் அசுரபலம் கொண்டது. ஆனால் ஒரே காலகட்டத்தில் இஸ்ரேல் பல யுத்த முனைகளை ஆரம்பித்து இருப்பதும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் ஆதரவைத் தவிர ஏனைய நாடுகளிடம் இருந்து இஸ்ரேல் அந்நியப்பட்டு நிற்பதும் இஸ்ரேலுக்குப் பாதகமான அம்சங்கள்.

மத்திய கிழக்கில் தங்களுடைய நலன் பேண, இஸ்ரேல் 1948 இல் உருவாக்கப்பட்டதையடுத்து பலஸ்தீன மண் திறந்த வெளிச்சிறைச்சாலையாகியது. இஸ்ரேலுடைய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக ஹமாஸ் மற்றும் ஈரானின் முழுமையான ஆதரவோடு இயங்கும் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் இஸ்ரேல் தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து வருகின்றது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல், இப்பிரச்சினை மத்திய கிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்தி, மத்திய கிழக்கை ஒரு யுத்தப் பிரதேசமாக வைத்ததுள்ளது. காலத்துக்குக் காலம் யுத்த மேகங்கள் கூடுவதும், கலைவதும் வழமையாகிவிட்டது. அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த கொண்டாட்டம்.

ஹமாஸ் – ஹிஸ்புல்லா அமைப்புகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தாக்குதலைத் தொடுத்து 1,200 பேர் வரையானவர்களை ஓக்ரோபர் 7, 2023 தாக்குதலில் படுகொலை செய்தது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய ஆங்கிலிக்கன், மற்றும் கத்தோலிக்க நாடுகள் தீவிர முனைப்புடன் முஸ்லீம்களான பலஸ்தீனியர்களை கடந்த ஓராண்டாக இனப்படுகொலை செய்து வருகின்றது. இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை என தென்னாபிரிக்க அரசு இஸ்ரேலுக்கு எதிரா சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து, கணிசமான வெற்றியையும் பெற்றது.

இஸ்ரேலின் முஸ்லீம் மக்களுக்கு குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் விரிந்து, பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரானுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

ஈரானின் நெருக்கத்துடன் இயங்கும் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நன்கு திட்டமிட்ட பேஜர் தாக்குதலைத் தொடுத்து ஹிஸ்புல்லாவின் தலைமையை பலீனப்படுத்தியது. அடுத்த சில தினங்களில் கடந்த 30 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவுக்கு தலைமை தாங்கிய ஹஸ்ஸன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். காஸாவில் கடந்த ஒரு வருடத்தில் சிறுவர், பெண்கள் உட்பட அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் ஆதரவுடன் இயங்கும் இஸ்ரேல், நூறாயிரம் பேர்வரை படுகொலை செய்தது. தற்போது இஸ்ரேல் ஈரானையும் யுத்தத்திற்குள் இழுத்துவிட்டுள்ளது. ஒக்ரோபர் முதல்நாள் ஈரான், தனது நண்பனான ஹசன் நஸ்ரல்லாவின் இழப்புக்கு பழிவாங்கும் வகையில் ஈராக் மீது 200 வரையான ஏவுகணைகளை எய்து தாக்குதலை நடத்தியுள்ளது.

இச்சம்பவமானது, மத்திய கிழக்கில் 3வது யுத்தம் ஆரம்பிக்கப் போகின்றது என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் நேற்றைய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி வழங்கும் என பென்ஜமின் நெத்தன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது. அதே போல் பாலஸ்தீனத்தில் குழந்தைகளையும் பெண்களையும் ஹிட்லரிலும் மோசமாகப் படுகொலை செய்து ஹொலக்கோஸ்டை நடத்தும் இஸ்ரேலும் அதற்கு முழு ஆதரவு வழங்கும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகளுக்கும் இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் நிலைமைகள் பாரதூரமாக அமையும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய அரசுக்கு மிக நெருக்கமான பல்கலைக்கழகக் கலாநிதியொருவர் குறிப்பிடுகையில், ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்காவும் அதில் ஈடுபட்டால் இஸ்ரேல் தாக்கப்படுவதுடன் மத்திய தரைக்கடலால் நடைபெறும் பெற்றோலியம் உட்பட்ட வர்த்தகங்கள் நிகழமாட்டாது என்றும் மேற்கினதும் உலகினதும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் சில நாட்களில் மூன்றாம் உலக யுத்தமொன்றை நோக்கி உலகம் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கும். இதனால் உலகம் பெரும் பொருளாதார நெருக்கடியொன்றைச் சந்திக்கக வாய்ப்புள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பலி – உறுதிப்படுத்தியது ஹிஸ்புல்லா !

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பெய்ரூட்டில் நேற்றிரவு நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

தமது தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்புஉறுதிப்படுத்தியுள்ளது. அவர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இறந்துவிட்டார் என்று குழு உறுதிப்படுத்தியது, “தெற்கு புறநகர்ப் பகுதியில் துரோகத்தனமான சியோனிசத் தாக்குதலைத் தொடர்ந்து” அவரது மரணம் நிகழ்ந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஸ்ரல்லாவை ஒரு தியாகி என்று விபரித்த ஹிஸ்புல்லா,இஸ்ரேலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்துள்ளது.