விஸ்வலிங்கம் மணிவண்ணன்

விஸ்வலிங்கம் மணிவண்ணன்

தமிழ் தேசிய சட்டத்தரணிகள்: தமிழ்த்தேசியமா? யுரீயூப்பர் கிருஷ்ணாவின் பணமா !

தமிழ் தேசிய சட்டத்தரணிகள்: தமிழ்த்தேசியமா? யுரீயூப்பர் கிருஷ்ணாவின் பணமா !

 

கள்ள உறுதி எழுதும் 10 யாழ் சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையில் எஸ். கே. கிருஷ்ணாவை பிணை எடுக்க மல்லாகம் நீதிமன்றில் மல்லுக்கட்டினர். பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி பிரேமானந்தாவின் சிஷ்யன் சி.வி. விக்னேஷ்வரன் கட்சி, விஸ்வலிங்கம் மணிவண்ணனின் சகோதரனே திருக்குமரன்.

மணிவண்ணன் முன்னாள் யாழ் மேயர். அவருடைய அரசியல் குருவான சி. வி. விக்னேஷ்வரன் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக பார் லைசன்ஸ் கொடுத்த பெருந்தகை. எனவே மணிவண்ணனின் அண்ணாவிற்கு அபலை மக்களின் வறுமையை மலினமாக படம் பிடித்து வீடியோ போட்டு சம்பாதிக்கும் எஸ். கே. கிருஷ்ணா போன்றவர்கள் கதாநாயகனாக தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

சமூக அக்கறையுடைய சட்டத்தரணிகள் பணத்திற்காக சமூகச் சீரழிவுகளுக்கு துணை போக மாட்டார்கள். எஸ். கே. கிருஷ்ணா விவகாரத்தில் பல பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது. தனிநபர் அந்தரங்கங்களை பொதுவெளியில் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டி பணம் சம்பாதித்த ஒரு நபரை பணத்திற்காக காப்பற்ற நீதிமன்றம் வந்த சட்டத்தரணிகளை பொதுமக்கள் கண்டிக்கின்றனர்.

எஸ். கே. கிருஷ்ணா போன்றவர்களால் போடப்படும் ஹெல்ப்பிங் வீடியோக்கள் நவீன வகையான சுரண்டல். உதவி கோரும் காணொளிகள் தோன்றும் பெரும்பாலான அப்பாவிகளுக்கு தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம், சுரண்டப்படுகிறோம் மற்றும் அவமானப்படுத்தப்படுகிறோம் என்பதே தெரிவது இல்லை. எஸ். கே. கிருஷ்ணாவால் பதிவேற்றப்பட்ட அனைத்து காணொளிகளும் யுரீயூப் தளத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். நீதிமன்றம் அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் இளவாலை பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிகின்றன. சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான 10 கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகளுக்கு ஈடுகொடுத்து மல்லாகம் நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ராகவன் திறமையாக வாதாடியிருந்தார்.

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் வாள்வெட்டுக்குழு, போதைப் பொருள் மாபியா, மண் மற்றும் மரக் கொள்ளை மாபியா மற்றும் மருத்துவ மாபியா என அனைத்து மாபியாக்களின் பின்னாலும் நிற்கின்றார்கள். இதிலும் தமிழ்த் தேசியம் பேசி அரசியலில் ஈடுபடும் சட்டத்தரணிகள், தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் பணத்திற்காகவும் குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர். சட்டத்தரணி சையிக்கிள் கட்சி சுகாஷ் வட்டுக்கோட்டை குருவி வாள்வெட்டுக்குழுவை காப்பாற்றி வருகிறார். குருவி குழு வெள்ளாள சாதியின் பெயரால் வட்டுக்கோட்டையில் நிகழ்த்தும் வன்முறைகளின் பின்னால் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது சுகாஷ் சட்டத்தரணியே என்பது ஊரறிந்த ரகசியம்.

யாழ்ப்பாணத்தில் கிளீன் செய்யப்பட வேண்டிய முக்கிய பிரச்சினை வாள்வெட்டு மற்றும் வன்முறைக் கும்பல்களுக்கு முடிவு கட்டுவது தான். என்பிபி அரசாங்கத்தின் கவனத்திற்கு.

பட்ஜட் தோல்வி – பதவி விலகினார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்பதன் அடிப்படையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3
உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவால் வெற்றி பெற்றது என்பதும் இந்த ஆண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.