விமல் வீரவங்ச

விமல் வீரவங்ச

தையிட்டி விகாரை விவகாரம் – தென்னிலங்கையை உசுப்பிவிடுகிறார் விமல் வீரவங்ச !

தையிட்டி விகாரை விவகாரம் – தென்னிலங்கையை உசுப்பிவிடுகிறார் விமல் வீரவங்ச !

பௌத்தத்துக்கு எதிரான தம்புத்தேகம வெள்ளையரே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச மேலும் குறிப்பிடுகையில், “தேர்தல் நெருங்கும் போது விகாரைகளுக்கு சென்ற ஜனாதிபதி, தன்னை ஒரு பௌத்த ஆதரவாளராக காட்டிக்கொண்டார். ஆனால், மறுபுறம் தையிட்டி விகாரையை சுற்றியிருந்த இராணுவத்தினரை உடனடியாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படாமையால் வெள்ளையர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தம்புத்தேகமவில் இருந்து வந்திருக்கும் வெள்ளையருக்கு எதிராகவும் அதுவே நடக்கும். நீங்கள் செய்த தவறுக்கு புத்த சாசனத்தின் முன் விழுந்து மன்னிப்பு கோருங்கள். நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோருங்கள். பௌத்தர்களின் புராண கால விகாரையான தையிட்டி விகாரை மீது கை வைக்க நினைக்க வேண்டாம். தையிட்டி திஸ்ஸ விகாரை மீது கை வைப்பதற்கு ஜனாதிபதி உட்பட யாருக்கும் உரிமை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கலாச்சார அழிப்புக்கும் மக்கள் தொகையை குறைக்கும் திட்டங்களுக்கும் யு.எஸ் எய்ட் நிதியளிப்பு – விமல் வீரவன்ச

கலாச்சார அழிப்புக்கும் மக்கள் தொகையை குறைக்கும் திட்டங்களுக்கும் யு.எஸ் எய்ட் நிதியளிப்பு – விமல் வீரவன்ச

இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச,

“யு.எஸ் எய்ட்டினர் பல்வேறு வகையான மாற்றங்களை ஊக்குவித்தனர், குறிப்பாக இளைஞர்களிடையே LGBTQ சமூகப் பிரச்சாரம் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பில் பெரும் ஊக்குவிப்புகளில் ஈடுபட்டனர். 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது ஒரு பெரிய தொகை. இந்த திட்டங்கள் பாலின மாற்றத்தை ஊக்குவிக்கவும் இறுதியில் மக்கள் தொகையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நமது கலாச்சாரத்தை அழிக்க வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சிகள் மூலம் இந்த நாட்டு மக்கள் விலைக்கு வாங்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களும் நிதியளிக்கப்பட்டுள்ளனர்,” என்று கூறியதுடன் எதிர்காலத்தில் அவர்களின் பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ USAID இலங்கையின் உள்ளூர் அரசியல் விடயங்களில் தலையீடு செய்ததாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பெயரில் உள்ள எக்ஸ் கணக்கை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியை தமிழர்கள் ஆதரிப்பது பிரிவினைவாதத்துக்காகவே – விமல் வீரவங்ச எச்சரிக்கை!

தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இருந்து கிடைத்துள்ள ஆதரவானது இனவாதத்துக்கு எதிரானது மட்டுமல்ல பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  பிரிவினைவாதத்துக்கு சார்பாகச் செயற்பட்டுவந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக , தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு தாம் எதிரானவர்கள் என்ற செய்தியை இதன்மூலம் மக்கள் வழங்கியுள்ளனர் . ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிட்டும் வகையிலான பயணம் தொடர வேண்டும் என்பதற்குரிய ஆணையே இந்த அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கான எமது பொறுப்பை நாம் என்றும் கைவிடப்போவதில்லை . அந்தப் பயணம் தொடரும். பிரபுக்கள் அல்லாத தரப்புகள் வசம் ஆட்சி சென்றுள்ளது . அதை வரவேற்கின்றோம். டயஸ்போராக்கள் மற்றும் அந்நிய சக்திகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல் பயணித்தால் ஆதரவளிக்கப்படும் . அவ்வாறு இல் லையேல் அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் என்றார்.