விஜித ஹேரத்

விஜித ஹேரத்

 “பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத் 

“பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத்

 

காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து, மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இது தொடர்பில் உரையாற்றியிருந்த அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதை கண்டு அரசாங்கம் கலக்கமடைய போவதில்லை. மக்களுக்க வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுவோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் காலாவாதியடைந்துள்ள இந்த அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்கு அமைய இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும். அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

59 இலங்கையர், ரஷ்ய இராணுவத்தில் உயிரிழப்பு! இன்னமும் 500 பேர் யுத்தத்தில் !

59 இலங்கையர், ரஷ்ய இராணுவத்தில் உயிரிழப்பு! இன்னமும் 500 பேர் யுத்தத்தில் !

 

ஜனவரி 20ஆம் திகதி வரையில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளனர். அவர்களில் 59 பேர் உக்ரைன் போர்முனையில் கொல்லப்பட்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட இலங்கையர்களின் நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டமை தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் நாட்டிலுள்ள உறவினர்களுடன் அவர்கள் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் இராணுவ வீரர்கள் எனவும் அவர்கள் அதிக சம்பளம் தரப்படும் எனக் கூறி இணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய கூலிப்படை நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு முகவர்களாக செயல்பட்டதற்காக ஓய்வுபெற்ற இரண்டு ஜெனரல்கள் மற்றும் ஆறு பேரை இலங்கை பொலிசார் கடந்த ஆண்டு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இஸ்ரேல் இராணுவத்திலும் இலங்கை இந்திய முன்னாள் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் மயமாக்கலின் மற்றுமொருகட்டமாக இராணுவத்தை வெளியேயிருந்து எடுக்கும் நவகாலனித்துவச் சிந்தனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க உள்ளது. மேற்கு நாடுகள் தங்கள் நலனுக்காக தங்களுடைய படைகளை இறக்காமல் கூலிப்படைகளைக் களமிறக்கி யுத்தத்தை நடாத்தும் கைங்கரியம் வரும்காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பயிற்றப்பட்ட இந்தக் கூலிப் படைகள் நாட்டிற்குத் திரும்பி வருகின்ற போது அவர்கள் வன்முறையாளர்களாகவும் சர்வதேசத்தின் புலனாய்வு முகவர்களாகவும் சொந்த நாட்டிற்கு எதிராக சதி செய்பவர்களாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. இவை பற்றிய சட்டமூலங்கள் இயற்றப்படுவதுடன் இவர்கள் பற்றிய விபரங்களையும் அரசு உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோக மையமாக இலங்கை – அமைச்சர் விஜித ஹேரத் !

உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோக மையமாக இலங்கை – அமைச்சர் விஜித ஹேரத் !

உலக நாடுகளுக்கு எரிபொருளினை விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போதுஇ ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதன்மூலம் உள்ளுர் சந்தைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து சினோபெக் நிறுவனமே இறுதி முடிவுகளை எடுக்கும் என தெரிவித்தார்.

சிங்கப்பூர் எந்தவொரு எரிபொருளையும் உற்பத்தி செய்யாத ஒரு நாடாக உள்ளது. எனினும்இ அந்த நாடு இன்று உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒரு மையமாகச் செயற்படுகிறது என குறிப்பிட்ட விஜித ஹேரத்இ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையும் அவ்வாறானதொரு எரிபொருள் மையமாக மாற்றமடையும் என்றார்.

டிஜிட்டல் இலங்கையின் புதிய பரிணாமம் – புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

டிஜிட்டல் இலங்கையின் புதிய பரிணாமம் – புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும்  நாடுகளில் உள்ள  இலங்கை தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் இன்று  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஜப்பான், கட்டார், குவைத் தூதரகங்கள், மிலானோ, டொறொன்டோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்கள் ஊடாக அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மேற்படி ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அனைத்து தூதரகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா..? – விசாரணைகளுக்காக புதிய குழு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது வீடுகளில் பணிபுரியும் குழுவாக மாறியுள்ளமை பொலிஸ் அதிகாரிகளை அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு தேவையான உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.