59 இலங்கையர், ரஷ்ய இராணுவத்தில் உயிரிழப்பு! இன்னமும் 500 பேர் யுத்தத்தில் !

59 இலங்கையர், ரஷ்ய இராணுவத்தில் உயிரிழப்பு! இன்னமும் 500 பேர் யுத்தத்தில் !

 

ஜனவரி 20ஆம் திகதி வரையில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளனர். அவர்களில் 59 பேர் உக்ரைன் போர்முனையில் கொல்லப்பட்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட இலங்கையர்களின் நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டமை தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் நாட்டிலுள்ள உறவினர்களுடன் அவர்கள் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் இராணுவ வீரர்கள் எனவும் அவர்கள் அதிக சம்பளம் தரப்படும் எனக் கூறி இணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய கூலிப்படை நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு முகவர்களாக செயல்பட்டதற்காக ஓய்வுபெற்ற இரண்டு ஜெனரல்கள் மற்றும் ஆறு பேரை இலங்கை பொலிசார் கடந்த ஆண்டு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இஸ்ரேல் இராணுவத்திலும் இலங்கை இந்திய முன்னாள் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் மயமாக்கலின் மற்றுமொருகட்டமாக இராணுவத்தை வெளியேயிருந்து எடுக்கும் நவகாலனித்துவச் சிந்தனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க உள்ளது. மேற்கு நாடுகள் தங்கள் நலனுக்காக தங்களுடைய படைகளை இறக்காமல் கூலிப்படைகளைக் களமிறக்கி யுத்தத்தை நடாத்தும் கைங்கரியம் வரும்காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பயிற்றப்பட்ட இந்தக் கூலிப் படைகள் நாட்டிற்குத் திரும்பி வருகின்ற போது அவர்கள் வன்முறையாளர்களாகவும் சர்வதேசத்தின் புலனாய்வு முகவர்களாகவும் சொந்த நாட்டிற்கு எதிராக சதி செய்பவர்களாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. இவை பற்றிய சட்டமூலங்கள் இயற்றப்படுவதுடன் இவர்கள் பற்றிய விபரங்களையும் அரசு உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *